பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஷ்பூ சங்கத்திற்கு ஒரு “தியாக தலைவர்” கிடைத்துவிட்டார்

யாரோ ஒரு நண்பர் குஷ்பூ நினைவாக திருமணம் செய்யாமலே இருக்கின்றார் என்றொரு செய்தி படிக்க நேர்ந்தது. இது முழுக்க அவரின் அறியாமை, அவருக்கு அன்று வழிநடத்த யாருமில்லை போல‌, இது காற்றை வெறும் கையில் பிடிப்பதற்கு சமம். ஆனாலும் குஷ்பூவினால் அவர் வாழ்க்கை பாழாயிற்று என்பது சங்கத்து உறுப்பினர்கள் நெஞ்சில் எல்லாம் ஈட்டியாக பாயும் வலி. தலைவி குஷ்பூ யார் வாழ்வினையும் கெடுப்பவர் அல்ல, பாழக்குவர் அல்ல. இது நண்பருக்கு புரியவில்லை அவரை உடனடியாக கண்டுபிடித்து சில […]

30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான்….

30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் இந்திய அமைதிபடையுடன் புலிகள் மோத தொடங்கினர். முதல் நாளே புலிகளின் அனுதாபிகள் தமிழகத்தில் கத்த தொடங்கினர், அந்நாளைய முதல்வர் ராமசந்திரனிடமிருந்து பதிலே இல்லை ராஜினாமா செய் என யாரும் ராமசந்திரனை கேட்கவுமில்லை, அவர் செய்யவுமில்லை, ராஜிவிற்கும் அவருக்கும் கூட்டணி எல்லாம் இருந்த நேரமது இதற்கு இருமாதங்களுக்கு முன்புதான் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் முரண்டுபிடிக்க அவரை வழிக்கு கொண்டுவர ராமசந்திரனும் சென்றிருந்தார் பின் “என்னை விட்டால் போதும் சாமி” என […]

இப்படி சொன்னால் பரபரப்பு வருமா?

தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கும் அரசுக்கு ஈடான ஊதியத்தை வழங்க வேண்டும்: வேல்முருகன் மனிதருக்கு பரபரப்பிற்கு ஏதாவது பேசிகொண்டே இருக்கவேண்டும் என்றொரு வியாதி வந்துவிட்டது. இப்படி சொன்னால் பரபரப்பு வருமா? வேண்டுமென்றால் தனியார் செவிலியர் வாங்கும் சம்பளம் போல அரசு செவிலியருக்கும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என சொல்லுங்கள் அப்பொழுது ஒரு அதிர்வு உங்கள் உச்சிமண்டையில் தெரியும்

பாஜக பிரமுகரான வழக்கறிஞரை தாக்கிய சந்தாணம் தலைமறைவு

பாஜக பிரமுகரான வழக்கறிஞரை தாக்கிய சந்தாணம் தலைமறைவு சந்தாணம் எத்தனை முறைதான் சினிமாவில் அடிவாங்கிகொண்டே இருப்பார், நிஜத்தில் தன்னாலும் அடிக்க முடியும், சினிமாவில் அது நடிப்பு என காட்ட நினைத்திருக்கின்றார் ஏதோ பணம் சர்ச்சையில் ஒருவரை அடித்துவிட்டார். அவர் அடிவாங்கிய பின்புதான் தான் பாஜக பிரமுகர் என்பதை சொல்லியிருக்கின்றார், சந்தாணம் ஓடிவிட்டார். அது என்னவோ தெரியவில்லை தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாஜக பிரமுகர்களாக அலைகின்றார்கள், வரும் செய்திகளில் பாதி பாஜக பிரமுகர் செய்திதான். அதுவும் அடிவாங்கியபின் நான் […]

உங்களுக்கு என்னடா பிரச்சினை?

அட பதர்களா உஜ்ஜைனி மகா காளியும், கல்கத்தா உக்கிர காளியும் உங்கள் முப்பாட்டிகளில் வரமாட்டார்களா? சின்ன முப்பாட்டி, பங்காளி வகையிலாவது வருவார்கள் அல்லவா? உங்களுக்கு காளி முப்பாட்டி என்றால், இந்தியா முழுக்க உள்ள காளிபக்தர்கள் உங்கள் சகோதரர்கள் அல்லவா? பின் ஏன் எதிர்ப்பு? உங்களுக்கு என்னடா பிரச்சினை? “அம்மா காளி, ஏதோ அறிவில்லா முட்டாளுக்கு ஒரு காலத்தில் நீர் நாக்கில் கீறி அவனை பெரும் அறிவாளி காளிதாசன் ஆக்கிவிட்டீராம் இந்த பயல்களுக்கும் கீறிவிடும் தாயே, சும்மாவே நாக்கை […]

நூறு அடி உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை : யோகி அரசின் அடுத்த திட்டம்

நூறு அடி உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை : யோகி அரசின் அடுத்த திட்டம் கோரக்பூரில் சாகும் குழந்தைகள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகின்றது, ஆம்புலன்ஸ் இல்லாத மருத்துவமனைகள் ஏராளம் பிணத்தை கூட சுமந்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லா அவலம் மொத்தத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லா மிக பின் தங்கிய மாநிலத்தை மாற்ற வந்தவர் என்ன செய்கின்றார் பார்த்தீர்களா? சாமியார்களை முதல்வராக‌ அமர்த்தினால் புத்தி இப்படித்தான் சாமிகளுக்கு சிலை, புனஸ்காரம் என செல்லும் போல‌.. இதில் இவர் […]

தமிழகம் என்று ஒரே இனமாக இருந்தது?

தமிழர்கள் சாதி மதம் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தார்களாம், பின் ஆரியர்கள் வந்து மதத்தை கொண்டுவந்தார்களாம் இதில்தான் பல்லவர், இன்னபிற மன்னர்கள் எல்லாம் தமிழரை அடிமைபடுத்தினார்களாம் பின் நாயக்கர்கள் வந்து பிரித்தார்களாம், கொடுமை படுத்தினார்களாம், அடிமைபடுத்தினார்களாம் சாதியும், மதமும் இருக்கும் வரை தமிழன் பிரிந்தே இருப்பானாம். இல்லாவிட்டால் அவன் ஒற்றுமையில் உலகையே வெல்வானாம் இப்படி ஒரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது, முன்பே சொன்னது போல திருச்சி வளனார் கல்லூரியின் நக்சலைட்டுகள் தயாராகும் இடமான AICUF இதை கண்காட்சியாக சொல்லிற்றாம் இந்த […]

கீழடியில் அகழாய்வினை நிறுத்திவிட்டார்கள்

கீழடியில் அகழாய்வினை நிறுத்திவிட்டார்கள். இரண்டு ஆண்டுகளாக தோண்டினார்கள், அதில் கிடைக்கபெற்ற பொருட்களை ஆய்வுசெய்ததில் அது கிட்டதட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தபின் தோண்டுவதில் ஏனோ இவர்களுக்கு விருப்பமில்லை மெதுமெதுவாக அமைதியாகி மொத்தமாக மூடிவிட்டார்கள் இதில் ஏதோ பெரு மர்மம் உள்ளது என்பதும், எதனையோ சொல்ல விரும்பவில்லை என்பதும் உண்மை ஆதிச்சநல்லூரிலும் இதே கொடுமைதான் அரங்கேறிற்று, அங்கு கிடைத்த பொருட்கள் கிட்டதட்ட 6 ஆயிரம் காலத்திற்கு முற்பட்டவை என செய்திகள் வந்தபின் அதனையும் நிறுத்தினார்கள் இப்பொழுது […]

பிறந்த தின வாழ்த்துக்கள் , வடிவேலு…

  எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான் கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது அவன் அதனை கொண்டாடுகின்றான். மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அவர் நகைச்சுவைகாட்சிகள் நடிப்பதை விட்டு 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட இன்றும் பல டிவி சேனல்கள் அவரால்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன‌ குறிப்பாக ஆதித்த்யா சேனல் மீது அவர் வழக்கே […]

ஜெயக்குமார் சாபம் சும்மா விடாது

  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கருக்கு வழங்கபட்டது : செய்தி என்னது? அமெரிக்கருக்கா? பட்ஜெட்டை, பொருளாதார குற்றவாளியான ஜெயா சமாதியில் வைத்து ஆசிவாங்கிவிட்டு சட்டசபைக்கு சென்ற நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு கொடுக்கபடாத நோபல் பரிசு இல்லாமலே போகட்டும் ஜெயக்குமார் சாபம் சும்மா விடாது. மலையூர் மம்பட்டியான், வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கிகள் காட்சிக்கு வருகின்றன‌ இதனை விட கொடூரமானது போயஸ்கார்டன் வீட்டின் பொருட்கள், அதனை முதலில் காட்சிக்கு வைக்கவேண்டும்.     பரோலில் மகா உற்சாகமாக சுற்றி வருகின்றார் சசிகலா […]