பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களை அளிக்கலாம்: அரசு அறிவிப்பு

எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களை அளிக்கலாம்: அரசு அறிவிப்பு அரசுக்கு மரியாதை கொடுப்பது நம் கடமை, கேட்டுவிட்டார்கள் இதோ கொடுத்துவிட்டோம் இதனை விட ராமசந்திரனின் சிறப்பான படங்கள் கிடைத்தால் அரசுக்கு அனுப்பி வைத்து உங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்றுங்கள்  

இன்று பக்தவச்சலம் பிறந்த நாள்

இன்று பக்தவச்சலம் பிறந்த நாள் சுதந்திர போராட்ட தியாகி , காமராஜருக்கு அடுத்து பதவிக்கு வந்தவர் என பெரும் அடையாளம் அவருக்கு உண்டு ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும் திமுக வளர மிக உதவியவர்கள் இரண்டுபேர் ஒருவர் குமாரசாமி ராஜா (அப்படி ஒரு முதல்வர் இருந்தார்) இன்னொருவர் இந்த பக்தவச்சலம் குமாரசாமிராஜா எடுத்த நடவடிக்கைகளை எதிர்த்து திமுக நடத்திய ரத்தகளறி போராட்டமே மக்களை திமுகபால் இழுத்தது, குமாரசாமி அமைதியாக இருந்தால் திமுக பெரும் பிம்பம் காட்டியிருக்காது. பின்பு […]

தமிழக அரசில் என்ன நடக்கின்றது?

இந்த போலி பாஸ்டர்கள் உடலில் முதலில் டெங்கு கிருமியினை ஏற்றிவிட வேண்டும் ஒரு சொட்டு மருந்தும் கொடுக்காமல் அடைத்துவைத்து முதலில் பரிசோதித்துவிட்டு உயிரோடு இருந்தால் இவர்களின் விஷேச ஜெபத்திற்கு அனுமதிக்கலாம் பூரா பயலுக்கும் இயேசுநாதர் என்றே நினைப்பு மாநிலத்தில் செய்யவேண்டிய காரியம் ஏகபட்டது இருக்கின்றது, டெங்கும் பன்றிகாய்ச்சலும் போட்டு சாத்துகின்றன‌ தீபாவளி நெருங்கும் நிலையில் , மழையும் மிரட்டும் நிலையில் அரசுக்கு செய்யவேண்டிய காரியம் ஏராளம் உண்டு லாரி ஸ்ட்ரைக் என்றொரு போராட்டத்தில் இயல்புவாழ்க்கை முடங்கியிருக்கின்றது ஆனால் தமிழக […]

விஷத்தை தின்றாலும் எனக்கு ஜீரணமாகும் : மோடி

மோடியினை திருமணம் செய்ய டெல்லியில் ஒரு பெண் போராட்டம் அம்மணிக்கு உலகம் சுற்ற ஆசை வந்திருக்கின்றது, யாரை பிடித்தால் மிக வேகமாக உலகினை சுற்றிவிடலாம் என மிக சரியாக கணக்கிட்டிருக்கின்றார். பெண்களின் கணக்கு மிக மிக சரியாகத்தான் இருக்கின்றது. புரிந்துகொள்வதுதான் சிரமம். மோடியும் , யோகியும் சன்னியாச வாழ்க்கை வாழ்ந்தால் அந்த அமித்ஷாவும் பரதேசி கோலத்திலே வாழத்தான் வேண்டுமா? மனிதர் ஏதோ கொஞ்சம் சேர்த்திருக்கலாம், அதற்கு இந்த பத்திரிகைகள் பொங்குகின்றன‌ சாமிகளை காட்டி பூசாரிகள் வசூலிப்பது அங்கு […]

பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா?

மோடி அரசினை பாசிச அரசு என சொல்லி சிலர் கிளம்பியிருக்கின்றார்கள் மோடி ஒன்றும் சர்வாதிகாரி அல்ல, இன்னும் 1 வருடத்தில் அவர் ஆட்சி முடியும், மக்கள் தேர்ந்தெடுத்தால் அன்றி அவர் வரமுடியாது. சொல்பவர்கள் யார் என பார்த்தால் சில இஸ்லாமியர், திருமாவளவன் அந்த திருட்டு திருமுருகன் காந்தி இந்த திருமுருகன் காந்தி நேற்று சொன்னது, ராஜிவ் கொலையில் சிறையில் இருக்கும் அனைவரும் நிரபராதிகள். தேசதுரோகம், நீதிமன்ற அவமதிப்பு என பல வகைகளில் போட்டு சாத்தவேண்டிய திருமுருகன் காந்தி […]

வைகோவிற்கு பிரபாகரன் தந்த சயனைடு குப்பி

பிரபாகரன் உடலை சோதிக்கும்பொழுது அவரிடம் சயனைடு இல்லை : சிங்கள தளபதி எப்படி இருக்கும்? சந்திக்க போன தமிழக தலைவர்கள் சிலர் அவரை கட்டி பிடிக்கும்பொழுது களவாடி வந்திருக்கலாம் வைகோ , பிரபாகரன் தந்த சயனைடு குப்பி என்னிடமே இருக்கின்றது என பகிரங்கமாக சொன்னவர் ஆக பிரபாகரனின் சயனைடை பறிந்துவந்துவிட்டு அவர் சிங்களனிடம் சிக்கும்பொழுது சயனைடு இல்லாமல் உயிரோடு அவர் சிக்க இவர்கள்தான் காரணம் போல.. (எத்தனை ஆயிரம் பேர் புலிகளில் சயனைடு விழுங்கினர், ராஜிவ் கொலையினையொட்டி […]

கெத்தாக திரிகின்றார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன, எப்படியாவது அவரை விரட்டவேண்டும் என ஏராளமான புகார்கள் அப்படி ஒரு பெண்ணும் சொல்லிவிட்டார், “டிரம்ப் என்னை கையினை பிடித்து இழுத்தார்” அதாவது முன்பொரு காலத்தில் டிரம்ப் அந்த அம்மணியிடம் தன் விருப்பத்தை சொன்னாராம், அதனை இப்பொழுது சொல்கின்றார் அந்த புருக் ஷீல்ட் டிரம்ப் கிளிண்டன் பட்டபாட்டினை அறிந்திருக்கின்றார், அதனால் பொய் சொல்லவில்லை மாறாக‌ கூடுதலாக தமிழ் சினிமா பார்ப்பாரோ என்னவோ வடிவேலு ஸ்டைலில் போட்டு தாக்கிவிட்டார் “ஒரு இளைஞன் ஒரு […]

சே குவேரா : 50 வது நினைவு தினம்

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது. ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் […]

அட்டை கத்தி வீரன்

“ராமசந்திரனை புரட்சி நடிகர் என சொன்னது கருணாநிதி, நீ நல்லவன் என்றால் அவரை பிடித்து கேள், வீணாக எம் தலைவன் ராமசந்திரனை பற்றி பேசாதே..” என சில முதியவர்கள் ஒரே அழிச்சாட்டியம் கலைஞர் என்ன பட்டம் கொடுத்தார், நன்றாக கவனிக்கவும் “புரட்சி நடிகர்” என்றுதான் சொன்னார். எஸ்.எஸ் ராஜேந்திரனை “லட்சிய நடிகர்” என்றார். புரட்சி வேடத்தில் நடித்த நடிகனை புரட்சி நடிகன் என சொன்னது தவறா? பின்பு அவரை புரட்சி தலைவர் என அவரின் அடிப்பொடிகள் தான் […]

கமலஹாசனுக்கு அடுத்த தலைமுறை ரசிகை

பரதநாட்டியம் படிக்கும் மகளுக்கு திடீர் சந்தேகம் வந்தது, ” பாய்ஸ் எல்லாம் பரதநாட்டியம் ஏன் ஆடலப்பா?” என கேட்டுவிட்டாள் “யாரும் ஆடலாம்மா..” என்றேன், “எங்க கிளாஸ்ல எல்லோரும் கேர்ஸ்பா எங்க டீச்சர் கூட கேள்லப்பா, பாய்ஸ் ஆடி நான் பாத்த்தில்லபா..” “ஒருவர் ஆடியிருக்கிறார் பாக்குறியாம்மா என்றேன், சரிப்பா” என்றாள் கமலஹாசனின் சலங்கை ஒலி பாடலை காட்டியாயிற்று “அப்பா இது பிக்பாஸ் அங்கிள், ஆனா சூப்பரா ஆடுராங்கப்பா, இப்போ ஏம்பா ஆடுறதில்ல‌ இப்ப கூட விஸ்வரூபம் படத்துல ஆடினாரும்மா […]