பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 09

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 09 “இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்பூரிப்ப துள்ளே சிவம்” இந்த குறளை பார்க்கும் முன் ஓளவ்வை முன்பு சொன்ன சில யோக ரகசியங்களை மீள புரட்டிகொள்ள வேண்டும் பூரகம் என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு ஒரு நாசியினை மூடி இன்னொரு நாசி வழியாக இழுப்பது, இழுத்த மூச்சை நிறுத்தி வைப்பது கும்பகம், பின் இன்னொரு நாசி வழியாக வெளியே விடுவது […]

சீனநாட்டு ஜிமிக்கி கப்பல்…..

ஒரு வழியாக இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் இருந்து கிளம்பியிருக்கின்றது சீனாவின் உளவு கப்பலான “யுவான் வாங்க் 5”, ஆகஸ்டு 22 மாலை 4 மணிக்கு அது வெளியேறியதாக தரவுகள் தெரிவிக்கின்றான் உளவு இல்லாமல் காவல் இல்லை, உளவுபடையும் அதுகொடுக்கும் தகவலும்தான் ஒரு ராஜ்ஜியத்தை காக்கும் என்பது சாணக்கியனும் வள்ளுவனும் சொன்ன விஷயம், அது அன்றி அரசபடைகள் இல்லை அவ்வகையில் மனிதவழி உளவு பார்க்கும் கலையினை (human Intelligence) தொழில்நுட்ப காலம் தொழில்நுட்ப உளவு (Signal Intelligence) என […]

ஈரோட்டு ராம்சாமி இல்லையென்றால்

ஈரோட்டு ராம்சாமி இல்லையென்றால்…. ஈரோட்டு ராம்சாமி இல்லையென்றால் கல்வி இல்லை, பெண் உரிமை இல்லை என சொல்லும் கோஷ்டி சொல்லிகொண்டேதான் இருக்கும், உண்மையில் ராம்சாமி என்ன கிழித்தது என்றால் ஒன்றுமே இல்லை வைக்கம் போராட்டத்தில் கூட ஏற்கனவே நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவராக கலந்துகொண்டாரே அன்றி அப்போராட்டத்தை ராம்சாமி தொடங்கவுமில்லை தலமையேற்று நடத்தவுமில்லை ஆங்கில அடிவருடியான நீதிகட்சியில் ராம்சாமி இணைந்தார், ஆனால் அக்கட்சி அவரை எந்த பதவியிலும் அமர்த்தவுமில்லை, மக்கள் பிரநிதியாக ராம்சாமி ஆட்சியில் இருந்து எந்த […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 66

“வள்ளன்மை யில்லா தான் செல்வத்தின் மற்றையோன்நல்குரவே போலு நனிநல்ல கொன்னேஅருளில னன்பிலன் கண்ணறைய னென்றுபலரா லிகழப் படான்” செல்வம் நிறைய வைத்து கொண்டு யாருக்கும் கொடுக்கும் மனமில்லாதவன் அதை வைத்திருப்பதை விட ஒன்றுமில்லாமல் வறுமையில் வாடுதல் நன்று. செல்வம் இருந்தும் பிறருக்கு கொடுக்காதவனை அருளும் அன்பும் இல்லாதவன், மனதில் இரக்கம் இல்லாதவன், பிறர் கஷ்டம் காணாத குருடன் என சொல்லும் உலகம் வறியவனை அப்படி சொல்லாது என்பது பாடலின் பொருள் ஈயாத செல்வந்தனை விட வறுமையில் வாடும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 08

“பூரித்து நின்ற சிவனைப் புணரவேபாரித்த தாகுங் கருத்து” பூரித்தல் என்றால் பெரும் மகிழ்ச்சி என பொருள், இங்கு பெரும் மகிழ்ச்சி என்பது யோகத்தின் உச்சியில் அடையும் பரவசநிலை என்றாகின்றது அந்த அதிஉச்ச யோக நிலையில் சிவனோடு ஐக்கியமானால், சிவனோடு இரண்டற ஆத்மா கலந்தால் ஒருவனின் மனம் விசாலமாகும் மிகபெரிய மனதுடன் இன்பம் துன்பம் நன்மை தீமை கடந்த பெரும் யோகி நிலைக்கு அவன் செல்வான் என்பது குறளின் பொருள் யோக பரவச நிலையில் சிவனோடு ஐக்கியமான யோகியின் […]

சென்னை நாள்…

அந்த பகுதி தொண்டை மண்டலம் என்றும் பின்னாளில் பல்லவ பகுதி என்றும் அழைக்கபட்ட இடம், மயிலாப்பூரும் , பூவிருந்த வல்லியும், திருவல்லிக்கேணியும் மிக பழமையான இடங்களாகத்தான் இருந்தன‌ அவை ஒரே ஊராக இருந்திருக்கவில்லை சுமார் 70 கிராமங்கள் பல்லாயிரம் ஏக்கரில் விரிந்து பரந்திருந்தன, அழகான ஆறுகள் பல ஓடி அதனை செழிப்பாக்கி கொண்டிருந்தன‌ சோழர்களும் பல்லவர்களும் அதனை வளம் கொழிக்கும் இடமாக மாற்றிவைத்தார்கள், ஏகபட்ட பாக்கங்கள் எனும் நீரும் நிலமும் நிரம்பிய இடமாக அது விளங்கிற்று நிலத்தால் […]

புதிய சிவ‌ப்பு புரட்சி..

இந்த வர்க்கபுரட்சி, செங்கொடி புரட்சி, அரிவாள் சுத்தியல் புரட்சி எல்லாம் இனி எடுபடாது என தெரிந்து “காதல் புரட்சிக்கு” வந்துவிட்டார்கள் கம்யூனிஸ்டுகள் இனி பாருங்கள் மார்க்ஸ் ஜென்னியின் காதல் கதை மட்டும் சொல்லி புரட்சி செய்வார்கள். சிகப்பு நிறம் என்பதே காதலர் உடலில் ஓடும் ஒரே ரத்தம் என அர்த்தம் கொள்ளபடும், காதலுக்கு குறுக்கே யார் வந்தாலும் அரிவாளும் சுத்தியலும் கொண்டு காதலை காக்க வேண்டும் என புதிய கீதம் பாடபடும் மார்க்ஸ் மாவோ இங்கர்சால் என […]

குருபரர் நீதிநெறி விளக்கம் : 65

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 65 “பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம்குலமகளே யேனையோர் செல்வம் – கலனழிந்தகைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயார்செல்வம் பயன்படுவ தில்” பொதுநலம் மிக்கோரின் செல்வம் பொதுமகள் போல எல்லோரும் இன்புற்றிருக்க பயன்படும், சுயநலம் மிக்கோரின் செல்வம் குலமகளின் சேவை கணவனுக்கு என்பது போல அவனுக்கு மட்டும் பயன்படும், கஞ்சரின் செல்வம் விதவை போல யாருக்கும் பயன்படாமலே போகும் என்பது பாடலின் பொருள் செல்வமானது நல்லோர் கையில் கிடைத்தால் எல்லோருக்கும் பயனாகும், சுயநலமிக்கோரின் கையில் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 07

“வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல்கூடகத்திற் சோதியோ டொன்று” உள்ளத்தை வீடு அதாவது முக்தி நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் ஜோதிவடிவான இறைவனுடன் மனதால் ஒன்றித்தல் வேண்டும் என்கின்றார் ஓளவையார் அதாவது உள்ளம் என்பது இறைவன் வாழும் ஆலயமாக வேண்டும் என்றால் ஜோதிவடிவான இறைவனுடன் ஆன்மாவில் ஒன்றிடல் வேண்டும் என்பது ஒளவை வலியுறுத்தும் போதனை

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 06

“கூடக மான குறியெழுத்தைத் தானறியில்வீடக மாகும் விரைந்து” இந்த குறள் “கூடகமான குறி எழுத்தை தானறியில் வீடகமாகும் விரைந்து” என பொருள் தரும் கூடகமான குறி எழுத்து என்பது குறில் எழுத்துக்கள் கூடிவருவதை சொல்கின்றது, ஓம் எனும் மூல மந்திரம் அ+உ+ம் என கலந்து வரும், இந்த ஓம் எனும் வார்த்தைதான் யோகத்தின் மூலம் இந்த எழுத்தின் சக்தியினை அறிந்து அதனை உச்சாடனம் செய்தால் மனமானது முக்தி எனும் வீடுபேற்றை அடையும், மனமே சிவன் வாழும் கயிலாயமாகும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications