பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எல்லையில் வாலை ஆட்டுகின்றது சீனா

மறுபடியும் எல்லையில் வாலை ஆட்டுகின்றது சீனா, சாலை அமைக்கும் அதே நரிதந்திர வேலையில் கண்ணமூச்சி ஆடுகின்றது நமது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்கு நேரடியாக செல்ல முனைந்திருக்கின்றார், வாழ்த்துக்கள் ஆனால் மோசமான காலநிலை என அவர் அப்பகுதிக்கு இன்னும் செல்லமுடியவில்லை என செய்திகள் சொல்கின்றன. எப்படியோ நிர்மலாவின் அப்பயணத்திற்கு சல்யூட் அம்மணி பரவாயில்லை உலகின் மிக உயர்ந்த போர்களமான சியாச்சினிக்கு செல்கின்றார் , இப்பொழுது நாலந்துலா செல்கின்றார் உண்மையில் பாராட்டவேண்டிய பணி அந்த வீரர்களுக்கு […]

இன்று இந்திய விமான படையின் 85ம் ஆண்டு விழா

இன்று இந்திய விமான படையின் 85ம் ஆண்டு விழா வெள்ளையன் காலத்திலே 85 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கபட்டது நம் விமானபடை. அன்று இரண்டாம் உலகபோருக்காக வெள்ளையன் தொடங்கினான் சுதந்திர இந்தியாவில் அதுவும் சீன போருக்கு பின் நம் விமானபடை வலுபடுத்தபட்டது. இன்று மிக சிறந்த விமானபடை வரிசையில் இந்தியாவிற்கும் இடமுண்டு. கார்கில் போரில் இந்திய விமானபடையின் அபார நடவடிக்கையாலே வெற்றி கிட்டியது. அது கடந்துவந்த பாதை சிக்கல் நிறைந்தது. ரஷ்ய உதவியுடன் பலபடுத்தபட்ட நம் விமானபடை பின் […]

சமுத்திரகனிக்கு சமூக பொறுப்பு சுனாமியாய் பொங்கியிருக்கின்றது

சமுத்திரகனி என்பவருக்கு இப்பொழுதெல்லாம் சமூக பொறுப்பு சுனாமியாய் பொங்கியிருக்கின்றது அப்படி தொண்டன் எனும் படத்தில் பெரும் சுனாமியாக பொங்கியிருக்கின்றார், அரசியல்வாதி சட்டையினை பிடித்து தமிழ இழந்தது எவ்வளவு தெரியுமா என பொங்கியிருக்கின்றார், சந்தடிசாக்கில் ஈழத்தில் சாகும் போது என்ன செய்தீர்கள் என ஒரு வில்லன் நடிகனை போட்டு சாத்திகொண்டிருக்கின்றார் ஈழத்தில் நடைபெற்ற படுகொலைக்கும் காரணம் ஒரு தமிழன் என்பதை மட்டும் சமுத்திரகனி மறந்துவிட்டார் இப்படி தமிழ் உரிமை பேசிகொண்டிருந்தவர் திடீரென ஜல்லிகட்டு பக்கம் வந்தார். எத்தனை காளைமாடு […]

நடராஜனுக்காக கிட்ணி திருடபட்டதா: சர்ச்சை வெடிப்பு

தற்போதைய “தியாக தலைவியும்”, முன்பு தியாகம் செய்ய வாய்ப்பு மறுக்கபட்டு தற்போது தியாகம் செய்ய வந்திருக்கும் “வருங்கால தியாக தலைவியும்” முன்பொரு காலத்தில் எடுத்தபடம் அது ஒரு பெண் சிங்க காலம். சர்வாதிகார ஆட்டம் மகா உச்சத்தில் இருந்த காலம். அப்பொழுது எல்லாம் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றார்கள், எல்லா விழாக்களிலும் இவர்கள்தான் கும்பலாக ஆடியிருக்கின்றார்கள் என்ன செய்ய? கூட்டங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு அமெரிக்காவின் கலாச்சாரம் என்றுமட்டும் ஆகிவிட்டது. நடராஜனுக்காக கிட்ணி திருடபட்டதா: சர்ச்சை வெடிப்பு செத்தவனை கூட […]

அதுதானே அவர் பெயர் ?

செத்து 30 வருடம் ஆனாலும் இன்னும் சில ராமசந்திர அடியார்கள், இருப்பார்கள் போல. 300 ஆண்டுகளாக இன்னும் தொடரலாம். அதனால் ராமசந்திரனை பற்றி சொல்வதை பற்றி பலர் சீறுகின்றார்கள். நிச்சயம் திருத்தமுடியாது கொஞ்சம் பேசி பார்க்கலாம் என தோன்றிற்று நீ ஏன் தலைவரை ராமசந்திரன் என்கின்றாய் அதுதானே அவர் பெயர் அவரை அதிகம் கிண்டல் செய்கின்றாய், எச்சரிக்கின்றோம் ஆனானபட்ட காந்தி முதல் இன்றைய மோடிவரை கலாய்க்கும் உலகிது, இதில் இவருக்கு என்ன விதிவிலக்கு ம்ம்ம் கோமாளி என்றாயடா? […]

பா ராகவன் : இன்றைய தமிழ் எழுத்தாளரில் நம்பர் 1

இன்றைய தமிழ் எழுத்தாளரில் நம்பர் 1 அவர்தான். கிரீடம் நிரந்தரமாக சூட்டியாயிற்று. கண்ணுக்கு எட்டியவரையில் இன்னொருவன் அவர் இடத்தை நெருங்குவது இப்போதைக்கு சாத்தியமே இல்லை. ஆழ்வாரும் , அடியார்களும் , கண்ணதாசனும், கொஞ்சம் ஸ்டீப் ஜாப்ஸும், அதிகம் நளனும் கலந்த அற்புத எழுத்தாளர் அவர் Pa Raghavan எம்பெருமானுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெய்வமே, பல்லாண்டு வாழ்க, இன்னும் பலநூல்கள் எழுத. எமக்கெல்லாம் உலகினை திறந்து காட்ட‌ உண்மையில் நல்ல இஸ்லாமிய தலைவனும், நல்ல கிறிஸ்தவனும் தமிழகத்தில் […]

நான் இறக்கை விரித்து பறக்க இந்த முகநூல் நண்பர்களே காரணம்

சொந்த ஊர் என்பது யாராலும் மறக்க முடியாதது, திரும்ப திரும்ப நெஞ்சில் மோதும் நினைவு அலை அது. அப்படி எங்கள் கிராமத்திற்கும் ஒரு முகநூல் பக்கம் உருவாக்கினார்கள், நெஞ்சில் தேங்கி இருந்த நினைவுகளை எல்லாம், அந்த ஊரின் வரலாற்றையும் , பல சம்பவங்களையும் அதில்தான் பதிந்திருந்தேன் இது யாரோ குறுக்குமூளைக்காரன் மூளையில் விபரீத சிந்தனைகளை ஏற்படுத்திவிட்டது. இவன் ஊரின் அமைதியினை குலைக்கின்றான், பெரும் கலவரத்திற்கு திட்டமிடுகின்றான், உடனே காவல்துறையில் சிக்க வைக்கவேண்டும் என சிலர் கிளம்பினார்கள். (இருப்பது […]

உண்மையில் மோடிக்குத்தான் வெற்றி

அந்த சோவியத் யூனியன்உலகை மிரட்டிகொண்டிருந்தது, உலகம் அது பெரும் சக்தி என நம்பியது. அந்த அளவு பணம், ஆயுதம்,விண்வெளி ஆராய்ச்சி என உலகை ஆட்டியது. எல்லாம் கார்பசேவ் ஆட்சிக்கு வரும் வரைக்கும். கோர்பசேவ் உண்மையினை உணர்ந்தார். பிரஷ்ணோவ் காலத்திலே சோவியத்தின் பொருளாதாரம் ஓய்ந்திருந்தது. கார்பசேவ் ஆட்சிக்கு வரும்பொழுது ஒன்றுமேயில்லை. உண்ண உணவில்லாத நிலையில்தான் அத்தேசம் வறட்டு கவுரவத்திற்காக யுத்தமும், விண்வெளி, அணுசக்தி செலவுகளும் செய்துகொண்டிருந்தது. கார்பசேவ் பல நடவடிக்கைகளை எடுத்தார், ஆனாலும் புரையோடிபோயிருந்த சோவியத்தி அவர் கொடுத்த […]

கேரளா கோயில்களில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பூசாரிகளாக தேர்வு

கேரளா கோயில்களில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பூசாரிகளாக தேர்வு கிட்டதட்ட 90 வருடங்களுக்கு முன்பு அந்த ஈரோடு சிங்கம் வைக்கம் கோவிலில் தட்டிய கதவு இப்பொழுது திறந்திருக்கின்றது. இந்த செய்தி கேள்விபட்டவுடன் அந்த கிழவனும் வைக்கம் கோவில் போராட்டட்திற்காக அவன் கண்ட சிறையும் நினைவுக்கு வந்தே தீரும் கோமாளி ராமசந்திரன்” புரட்சி தலைவராகவும்” , ஆட்டக்காரி ஜெயலலிதா “புரட்சி தலைவியாகவும்” கொண்டாட பட்ட கூட்டத்தில், ஒரு மர்மமான‌ கிரிமினல் “தியாக தலைவி” என கொண்டாடபடுவதில் என்ன […]

தியாகத்திற்கு அர்த்தமாவது தெரியுமா?

அடேய்.. இவர் தியாகி என்றால் இந்த காந்தி, நேரு, சாஸ்திரி, பட்டேல் , காமராஜர் எல்லாம் செய்ததன் பெயர் என்னடா? தியாகத்திற்கு அர்த்தமாவது தெரியுமா? சரி இந்த அம்மணி என்ன தியாகம்  செய்தது என்றாவது சொல்லி தொலையுங்கள். ஜெயிலுக்கு போனவர்கள் எல்லோரும் தியாகி என்றால் ஆட்டோ சங்கரும், பூலன் தேவியும் இவரை விட பெரும் தியாகிகள் . ஜெயலலிதாவிற்கு ஏன் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவில்லை : தமிழிசை திடீர் கேள்வி ஒரு நல்ல டாக்டருக்கு எந்த […]