கிருஷ்ணார்பணம் – கோகுலாஷ்டமி
இந்த பூமி பிரபஞ்சத்தின் கட்டுபாட்டில் இயங்குவது, பூமியினை அந்த பிரபஞ்சம் இயக்குகின்றது, இந்த பிரபஞ்சம் பூமியின் எல்லா குரலுக்கும் செவி சாய்க்கின்றது அன்று அந்த காலம் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது, தர்மம் நாராய் கிழிந்து கிடந்தது, பாம்பினை கண்ட பறவை குஞ்சாய் ஒடுங்கி கிடந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரம கூட்டம் மிதமிஞ்சி ஆடியது கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். பெற்ற வரத்தை அதர்மத்தின் […]