பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதுதாண்டா மொசாத் : 04

வெறியோடு அலைந்த மொசாத்திற்கு ஒரு தகவல் நார்வேயில் இருந்து வந்தது, பொதுவாக மொசாத்தின் தகவல்கள் 100% துல்லியமானவவை, ஆனால் அம்முறை ஒரு உளவாளி சொதப்பிவிட்டான். அவர் இன்று தினகரன் எடப்பாடி அணிக்குள்ளும், எடப்பாடி தினகரன் அணிக்குள்ளும், சிலர் சொல்வது போல சசிகலாவின் உளவாளிகள் திமுகவில் இருப்பது போல உளவாளிகளாக இருந்திருக்கவேண்டும். ஒரு மனிதனை போல உலகில் 7 பேர் இருப்பார்கள் அல்லவா? அப்படி மீதி 6 பேர் எங்கிருந்தார்களோ தெரியாது, ஒருவன் அபு ஹாசன் போல மொராக்கோவில் […]

மிஸ்டர் சைமன், நீட் தேர்விற்காக நீங்கள் ஏன் குதிக்கின்றீர்கள்?

மிஸ்டர் சைமன், நீட் தேர்விற்காக நீங்கள் ஏன் குதிக்கின்றீர்கள்? நீங்கள் தமிழன், தமிழனின் பெருமை அருமை எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். முப்பாட்டன் அகத்தியன் முதல், வள்ளுவன், இன்னும் ஏராளமான சித்தர்கள் எவ்வளவு மருத்துவ குறிப்புகளை சொல்லியிருக்கின்றார்கள்? தமிழக சித்தர்கள் சொல்லாத மருத்துவமா? தமிழனிடம் இல்லா மருந்தா? இந்த தமிழ் மருத்துவத்தைதானே வெளிநாடுகள் டெல்லி மூலம் அழிக்க ஆங்கில மருத்துவத்தை கொண்டு வந்தன‌. இந்த மேல்நாட்டு மருத்துவத்தால் தமிழின் எவ்வளவு மருந்துகள் அழிந்தன? பாட்டனும், முப்பாட்டனும், அப்பனும், […]

கிறுக்கு ராஜாக்கள் தொடர்

விகடனில் நண்பர் Mugil Siva கிறுக்கு ராஜாக்கள் தொடர் எழுதிகொண்டிருக்கின்றார், உலகமெல்லாம் இருந்த கிறுக்கு ராஜாக்களின் கதையினை எழுதுகின்றார். மிக நன்றாக, ஆழமாக வாசித்து எழுதுகின்றார், சூப்பரோ சூப்பர். உலகம் முழுக்க கிறுக்கா ராஜாக்கள் இன்றும் அதிபர்கள், பிரதமர்கள் என்ற வகையில் ஆண்டுகொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது வேறுவிஷயம் இதுவரை Mugil Siva க்கு சிக்கல் இல்லை, இனி இந்திய கிறுக்கு ராஜாக்கள் என சொல்லபட்டவர்கள் மீது இவர் கை வைக்கும்பொழுதுதான் அவருக்கு சிக்கல் வரலாம் இந்தியாவில் ஏகபட்ட கிறுக்கு ராஜாக்கள் உண்டு எனினும், […]

காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம்

தமிழகத்தில் நடக்கும் காட்சிகளை கண்டால் ஒன்று மட்டும் கேட்கலாம் காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் , சரி மூன்றாம் அணியாவது அகில இந்திய அளவில் அமைப்பீர்களா என்றால் சத்தமே இருக்காது. இரண்டிற்கும் மாற்றாக அகில இந்திய அளவில் உங்கள் கட்சியினை வளத்துவிட்டால் என்ன? என்றாலும் மூச்சே இருக்காது. திராவிட உரிமை, இந்திய எதிர்ப்பு என்றெல்லாம் முஷ்டி தூக்குபவர்கள் தனிநாடு கேட்டால் என்ன என்றாலும் சத்தமிருக்காது. அதாவது இந்தியாவோடு ஒட்டவும் மாட்டார்கள், தனிநாடு என கிளம்பவும் மாட்டார்கள். ஏதாவது […]

நீட் தேர்வை எதிர்த்து போர்க்கோலம் பூண்டிருக்கின்றது தமிழ்நாடு

நீட் தேர்வுக்காக பெரும் போர்க்கோலம் பூண்டிருக்கின்றது தமிழ்நாடு, ஆனால் டெல்லி கொஞ்சமும் இறங்கி வந்ததாக தெரியவில்லை. மாறாக தன் தமிழக அல்லக்கைகளை கொம்பு சீவிவிட்டு நிலமையினை சீரியஸாக்குகின்றது, மத்திய அரசு தன் பிடியில் இருந்து இறங்கி வருவதற்கான அறிகுறிகள் கொஞ்சமும் தென்படவில்லை. இப்பொழுது ஒரு விஷயம் ஆழ நோக்கினால் புரிகின்றது. அதாவது குலகல்வி திட்டம் என தமிழகம் பொங்கியபொழுது ராஜாஜி பதவி விலக டெல்லி அழுத்தம் கொடுத்தது, அதன் பின் இந்தி எதிர்ப்பில் தமிழக குரலுக்கு இறங்கி […]

அமெரிக்க தூதர் தலையில் அடித்து சிரிப்பார்

மியான்மர் முஸ்லிம்களின் படுகொலையை கண்டித்து த.மு.இ. அமெரிக்க தூதரகம் முற்றுகை பர்மா தூதரகத்தை முற்றுகையிடாமல் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடுவது எப்படி ஒரு அறிவான விஷயம்? அரேபியாவிலும், ஆப்கனிலும், மேற்காசியாவிலும் இஸ்லாமியரை கொன்றுகுவிக்கும் அமெரிக்கா பர்மாவில் மட்டும் இஸ்லாமியரை காக்குமா என்ன? இந்திய அரசினை கண்டித்தாலாவது ஒரு அர்த்தம் உண்டு, அமெரிக்க தூதரகம் முன்னால் குட்டிகரணம் அடித்து என்னாக போகின்றது? அமெரிக்க தூதர் தலையில் அடித்து சிரிப்பார்.

சம்பத் அண்ணாதுரையிடம் சொன்னது

இந்த சமூக நீதி, அரசியல் இன்னபிற விவகாரங்களை எல்லாம் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது சினிமாக்காரர்கள். இப்பொழுது கல்வியினையும் சேர்த்து எடுத்துகொண்டார்கள், நீட் என ஒரே சத்தம். அன்று திமுக எனும் உணர்ச்சிமிக்க‌ இயக்கம் இந்த சினிமா அல்ட்ராசிட்டிகளை கட்சியில் சேர்த்தபொழுது ஈவிகேஸ் சம்பத் அதனை கண்டித்தார். இந்த கூத்தாடிகள் அரசியல் பேசினால் அது தமிழ்நாட்டில் மாபெரும் அழிவினையும், குழப்பத்தையும் கோமாளிதனத்தையும் கொண்டுவரும் இவர்களை வளர்க்கவேண்டாம் என மன்றாடினார். இதனை கண்டித்து கட்சியினைவிட்டே வெளியேறினார், ஆனாலும் சினிமாக்காரர்களை வளர்த்துவிட்டார் […]

அனிதா சட்டம் என ஒன்றை இயற்றவேண்டுமாம்

தமிழக அரசில் நீட் போராட்டங்கள் நடக்க விடாமல் தடுக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு மிக அழகாக , ஆழ திட்டமிட்டு காய் நகர்த்துகின்றார்கள். நிச்சயம் இது கவிழவேண்டிய அரசு, அதிமுகவினர் கூட அந்த முடிவிற்கு வந்தாயிற்று, ஆனால் வலுகட்டாயமாக பிடித்து ஆளவைத்துகொண்டிருப்பது டெல்லி இப்பொழுது நீட் போராட்டத்தை நசுக்கும் உத்தரவினை சுப்ரீம் கோர்ட்டை சொல்ல சொல்லி பின் நிற்கின்றார்கள். (காவிரி நீர் கொடுக்கங்கள் என்றுதான் கன்னடத்திற்கு பலமுறை உத்தரவிட்டது சுப்ரீம்கோர்ட், கன்னடம் பணியவில்லைதான், பல […]

மாது உறைந்தாள் : மர்ம நாவல்

நண்பர் Nakkeeran Kaliyaperumal பொறியாளர், விஞ்ஞானி, எழுத்த்தாளர் என பல முகம் கொண்டவர், ஒரு திரில்லர் வகை நாவலை எழுதியிருக்கின்றார். படித்து பாருங்கள், அடுத்த நாவல் எப்பொழுது என நீங்களே கேட்பீர்கள்.   Nakkeeran Kaliyaperumal updated his cover photo. 5 September at 00:31 ·     

வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது!

வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது! – சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே அல்போன்ஸ் சுற்றுலா அரசுக்கு வருமானம் வரும் தொழில், பெரும் அந்நிய செலவாணியினை அது ஈட்டிகொடுக்கின்றது. பாரம்பரியமும் தாஜ்மஹால் போன்ற அழகான கட்டிடங்களும், கற்கோவில்களும் மாபெரும் கோட்டைகளும் அழகான இயற்கை காட்சிகளும் வெளிநாட்டவரை இந்தியாவிற்கு அழைக்கின்றன‌. அதாவது புது இந்தியாவினை பார்க்க வரவில்லை, அந்த பழம் இந்தியா எவ்வளவு பிரமாண்டமாக இருந்திருக்கின்றது என காண வருகின்றார்கள் அவர்கள் நாட்டில் 500 ஆண்டுகள்தான் ஆக பழமை, கல் கோவில் […]