பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நீட் ரத்து செய், அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்

நீட் ரத்து செய், அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம் இங்கு இந்திய அரசின் பணத்தில் படித்துவிட்டு, அமெரிக்காவில் வேலை செய்யும் டாக்டர்களும், பொறியாளர்களும் நீட்டை ரத்து செய்ய சொல்கின்றார்களாம் ஏதோ நீட் இல்லாததால் இவர்கள் படித்து இந்திய கிராமபுறத்தில் பணியாற்றுவது போலவும், நீட் தேர்வால் கிராமபுறத்திற்கு டாக்டர்கள் கிடைக்கமாட்டார்கள் போலவும் இந்தியாவிற்காக கொடிபிடிக்கின்றார்களாம் எங்கே? அமெரிக்காவில் அவ்வப்போது கொல்லபடும் இந்தியர்களுக்காக கொடிபிடிகட்டும் பார்க்கலாம், பாகிஸ்தானுக்கு நவீன விமானம் வழங்கும் அமெரிக்காவினை கண்டித்து குரல் கொடுக்கட்டும் பார்க்கலாம் அவ்வளவு ஏன்? […]

நதிகளை காக்க மிஸ்டுகால் கொடுங்கள் : ஜக்கி சாமி

நதிகளை காக்க மிஸ்டுகால் கொடுங்கள் : ஜக்கி சாமி இவர் தாடியினை இழுத்து வைத்து கவுண்டமணி பாணியில் கேட்க வேண்டும் “டேய் சாமி, நீ சிலைதிறக்க மோடி வருவார், முதல்வர் வருவார், கவர்ணன் எல்லாரும் வருவார் நடிகைகள் எல்லாம் வந்து டான்ஸ் ஆடுவார், கிரண்பேடி ஆடுவார். ஆனால் நதியினை காக்க இவர்களிடம் நீ சொன்னால் என்ன? அதை விட்டுவிட்டு நாங்க ஏண்டா மிஸ்டுகால் கொடுக்கணும், என்ன அட்டகாசம்டா இது????? மொதல்ல‌ அந்த ஆசிரம மலையில நீ அடைச்சி […]

பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் இக்காலத்திற்கு ஏற்றவை அல்ல : “டாக்” டர் கிருஷ்ணசாமி.

பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் இக்காலத்திற்கு ஏற்றவை அல்ல : “டாக்” டர் கிருஷ்ணசாமி. சமஸ்கிருதமும், மாட்டு மூத்திரமும், காவியும் மட்டும் இக்காலத்திற்கு பொருந்த கூடியதா? சாதிக்காக கவுரவ கொலைகளும், இன்னபிற அழிச்சாட்டியங்களும் இக்காலத்தில் நடக்கவில்லையா? மதங்களின் பெயரால் மானிடர்கள் சிதைக்கபடுவது என்ன நின்றுவிட்டதா? இக்காலத்திற்கு பெரியாரும், அம்பேத்கரும் தேவையில்லை என்றால், கமலஹாசனின் சண்டியர் எனும் பெயரும் இதிகாச பெயர் அதனால் இப்பொழுது சிக்கல் இல்லை என சொல்ல தயாரா? நீங்கள் போராடிய, கண்டதேவி தேர் தடையின்றி ஓடுமளவு […]

கூர்க் ரிசாட்டிற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

கன்னட மாநிலம் கூர்க் ரிசாட்டிற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் செல்லலாம் : செய்தி சின்னம்மா சிறையிருக்கும் வளாகத்தின் அருகே இவர்களை சிறைவைத்தால்தான் சரியாக இருக்கும் என்பது தினகரனுக்கு தெரிகின்றது, யாரும் முரண்டு பிடித்தால் கை காட்டி அதோ அந்த ரிசார்ட்டில்தான் சின்னம்மா இருக்கின்றார், வீடியோ எல்லாம் பார்த்திருப்பீர்கள், எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என மிரட்டலாம் சின்னம்மாவிற்கும் ஷாப்பிங் செல்வது போல சென்று கூட்டத்தில் கலந்துகொள்ள‌ வசதியாக இருக்கும். இந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் பின்னொரு நாளில் […]

டிவிட்டருக்கு திரும்பினார் குஷ்பூ

டிவிட்டருக்கு திரும்பினார் குஷ்பூ சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் டிவிட்டருக்கு திரும்பிய “தைரிய நாயகியினை”, “தமிழ்நாட்டு தங்க மகளை” சங்கம் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. இதனைவிட சங்கத்திற்கு மகிழ்ச்சி என்ன உள்ளது? ஏசப்பா… கோடான கோடி நன்றி ஏசப்பா.      

ரஜினி மார்ச் மாதம் அரசியலுக்கு வருவார்

துபாயில் ரஜினியின் எந்திரன் 2.0 பாடல்கள் வெளியிடப்படும் நவம்பரில் டீசர வரும் டிசம்பரில் டிரெய்லர் வரும் ஆக படம் பொங்கலுக்கு வரும். இதனை எல்லாம் விட நாமே அனுமானித்துகொள்ள வேண்டிய விஷயம் ரஜினி மார்ச் மாதம் அரசியலுக்கு வருவார் எனும் புரளியும் வரும், அதற்கேற்றபடி பக்காவாக நடிக்கும் உத்தி ரஜினிக்கு கை வந்த கலை, ரசிகர்களை உசுப்பேற்றும் வலை

நீட் தேர்வால் தமிழகத்துக்கு அதிக இடம் கிடைத்துள்ளது: தமிழிசை

நீட் தேர்வினை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியியை சபரிமாலா ராஜினாமா இந்த 39 எம்பிக்கள், 234 எம்.எல்.ஏக்களை செருப்பால் அடித்திருக்கின்றார் சபரிமாலா, வாழ்த்துக்கள் பாருங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, உங்களுக்கு கீழ் பணிபுரியும் ஒரு பள்ளி ஆசிரியைக்கு கூட தன்மானமும், சமூக பொறுப்பும் அதிகம் இருந்திருக்கின்றது. ஒருவேளை நீங்கள் முதல்வராக இருக்கும் அரசில் பணிபுரிவது அவமானம் என்று விலகிவிட்டாரோ? டிடிவி – கருணாஸ் ஆலோசனை: ஆளுநருடன் மதியம் சந்திப்பு இரு அறிவாளிகள் அடிக்கடி சந்தித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து […]

இதுதாண்டா மொசாத் : 03

எகுத் ஒல்மார்ட் குழுவினர் அப்பார்ட்மெண்டினை நெருங்கும் நேரம், எங்கிருந்தோ வந்த இளைஞன் அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தான், கொஞ்ச நேரம் பொறுமையாக அவ்வை சன்முகி பாணியில் பதிலளித்து கொண்டிருந்தனர். அப்பொழுது யாரோ கொலை கொலை என கத்தும் சத்தம் கேட்டது, ஆம் போராளி தலைவர்கள், கருப்பு செப்டம்பர் சம்பவத்தில் தொடர்புடைய தலைவர்கள் செத்து கிடந்தனர். அவரசமாக வெளியேறிய ஒல்மார்ட் குழுவினர் சில குண்டுகளை வீசி புகையினை ஏற்படுத்தினர். மற்றவர்கள் எல்லாம் சுதாரித்தனர் அதுவரை அங்கு ஹாய்,,டார்லிங், செல்லம் என […]

மோடி “புதிய மியன்மார்” பிறக்க வைத்துவிட்டார்

“மியன்மாரில் நடப்பது இனபடுகொலை அல்ல, அவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் மேல் நடத்தபடும் நடவடிக்கையினை உலகம் மிகைபடுத்துகின்றது” : ஆங்சன் சூகி உலக இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ரொஹிங்கியா விவகாரத்தை கையில் எடுத்து கண்டிக்க தொடங்கிவிட்டன, இஸ்லாமிய நாடுகளில் ஓரளவு வலுவான நாடான (பாகிஸ்தானை விடுங்கள், அது ஒரு அடிமை) துருக்கி அதிபர் போனில் சூகியிடம் கண்டிக்கும்பொழுதுதான் அம்மணி இப்படி பேசியிருக்கின்றார். எந்த ஆங்க்சன் சூகி? பர்மாவில் மக்களாட்சி வேண்டும் என போராடி, பல வருடங்கள் சிறையிலிருந்து பெரும் […]

மோடியின் பச்சை பொய்…

இந்திய பிரதமர்களிலே இப்படி ஒரு பச்சை பொய்யினை பகிரங்கமாக சொல்லும் பிரதமரை பாரதம் கண்டிருக்கின்றதா? பழைய இந்தியா கண்டதேயில்லை, புதிய இந்தியா கண்டுகொண்டிருக்கின்றது. மிஸ்டர் மோடி, செவ்வாய் கிரகத்தில் இப்படி பேசினால் கூட ஒரு லாஜிக், அண்டை நாட்டில் போய் இப்படி சொன்னால் உலகம் சிரிக்காதா?