பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கவிஞர் நா.முத்துகுமார் பிறந்துகொண்டே இருப்பார்..

காஞ்சியிலிருந்து வந்து அண்ணாவிற்கு பின் தமிழை வசப்படுத்திய அந்த கவிஞன் இனி இல்லை. 1990களில் அறிமுகம் ஆனவர் எனினும் , கடந்த 12 ஆண்டுகளாக அவர் உச்சத்தில் இருந்தார். காதல்கொண்டேன் படத்தில் ஆரம்பித்த அவரின் உச்ச நேரம், அவரின் இறுதி நொடி வரை தொடர்ந்தது. அவரின் பாடல்களில் வார்த்தைகள் வசப்பட்டிருக்கும், அருமையான சொற் உருவகங்கள் கண்ணதாசன் போலவே விளையாடியிருக்கும், உதாரணம் ஆனந்தயாழ் போன்றவை 12 ஆண்டுகளாக தமிழ்துறை பாடல்களில் தனக்கென ஒரு இடம் பிடித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். […]

தமிழகம் மிக விழிப்பாய் கவனிக்கபட வேண்டிய காலமிது

எல்லோரும் அமர்ந்தாத் தாக்குதலையே கவனித்துகொண்டிருக்கின்றோம், கண்டிக்கின்றோம் அது நிச்சயம் மகா கொடூரமானதும், கொஞ்சமேனும் மனிதாபிமானமில்லாத, அருவருக்கதக்க கோழைதனமான செயல் என்பதில் மாற்று கருத்தே இல்லை, கொலையாளிகள் மனித ஜென்மமே இல்லை அந்த கண்டனத்தில் ஒன்றை மறந்துவிடுகின்றோம் சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளன் கைது செய்யபட்டிருக்கின்றான், ஐஎஸ் இயக்கம் தொடங்கபட்ட காலத்தில் தமிழகத்தில் கூட சிலர் ஐஎஸ் இயக்க டிசர்ட் அணிந்து கொண்டு செல்பி எடுத்து ஆதரவு தெரிவித்த காட்சிகள் எல்லாம் முன்பு கண்டது தமிழகம் ஒன்றும் 100% […]

காலை மலர்கள் …

   பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேடானது, இதனால் தமிழக அமைதி கெடும் இந்த நிகழ்ச்சியினை தடை செய்து கமலஹாசனையும் கைது செய்யவேண்டும் : இந்து மக்கள் கட்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் “கமிஷணரய்யா நல்லாயிருப்பிய,  கமலஹாசனால பிரச்சினை இல்ல அவர விட்டுட்டு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் எல்லோரையும் பிடிச்சிட்டு போங்க‌ அப்படியே இந்த எச்.ராசா , அர்ஜூன் சம்பத் போன்றவர்களையும் தடை செஞ்சு பிடிச்சு உள்ளே போட்டா இன்னும் தமிழகம் அமைதியாக இருக்கும் இந்த பிராது […]

பிக் பாஸ் : குறை குடம் கூத்தாடும் காயத்திரி

பொது இடத்தில் பல்லாயிரம் பேர் பார்க்க ஒருவரை “சேரி பிஹேவியர்” என திட்டுவதுதான் பார்ப்பண பிஹேவியர் இப்படி பகிரங்கமாக சொல்பவர் மீது இந்த தீண்டாமை, வன்கொடுமை சட்டம் எல்லாம் பாயாதா? சில சர்ச்சைகுரிய வார்த்தைகளை மியூட் செய்வதுதான் மீடியாக்களின் வழமை, திரைப்படங்களில் கூட அப்படித்தான் சென்சார் போர்டு வழிகாட்டல்படி அமைதியாக்குவார்கள் ஆனால் விஜயடிவி மிக பகிரங்கமாக இதனை அனுமதிக்கின்றது சேரி என்பது நிச்சயம் தொடக்கத்தில் தாழ்த்தபட்ட‌ மக்களுக்கானது அல்லதான், சேர்ந்துவாழும் இடம் சேரி என்றானது, பின் குறிப்பிட்ட […]

பிக் பாஸ் : “பரணியே உள்ளே போ” , “உள்ளே போ”

கிரிக்கெட்டில் பேட் செய்யும் பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் பவுலர்களின் பந்துக்கு பயந்து வெளியே வந்தால் விடுவோமா? கையினை பிடித்து முதுகில் மிதித்து உள்ளே போ என தள்ளி விடமாட்டோமா? அப்படி இந்த பரணி என்பவரையும் கதற கதற பிடித்து பிக்பாஸ் வீட்டுக்குள்ளே தள்ள வேண்டும், எல்லாவற்றிற்கும் ஒப்புகொண்டுதானே உள்ளே சென்றார்? இப்பொழுது தப்பி ஓடினால் எப்படி? விடலாமா? நாம் இன்னும் 80 நாட்கள் இந்த இம்சையினை பார்த்து தொலைக்கும் இம்சை இருக்கும்பொழுது இவர் எப்படி தப்பலாம் “பரணியே உள்ளே […]

ஆபரேஷன் எண்டபே : 05

ஒரு தவறான தகவல் இணையமெல்லாம் பரவுகின்றது, அதாவது 2007ல் சிரியா வடகொரியா உதவியுடன் அணுகுண்டை செய்ததாகவும் அதனை இஸ்ரேல் கண்டுபிடித்து சிரியா அணுவுலைகளை அழித்ததாகவும் சில செய்திகள் சிரியா இஸ்ரேலோடு யுத்தம் நடத்திய நாடென்றாலும் அது அணு ஆராய்ச்சியில் எல்லாம் இறங்கவில்லை, பக்கத்து லெபனானும் இறங்கவில்லை   இஸ்ரேலிடம் அணுகுண்டு உண்டு, 1950களிலே உருவாக்கிவிட்டார்கள் ஆனால் வெளிகாட்டமாட்டார்கள். அவர்கள் நாடகம் அப்படி அதன் பின் சதாமிற்கு அணுகுண்டு ஆசை வந்தது, அது அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்த […]

எஸ்.வீ சேகர் கஜினி பற்றி என்ன சொன்னார்?

எஸ்.வீ சேகர் கஜினி பற்றி என்ன சொன்னார் என்பது நமக்கு தெரியாது சோமநாதபுர ஆலயத்தை காக்க செய்திருக்க வேண்டியது கைபர் , போலன் கணவாயில் ஒரு பெருஞ்சுவர், சீனா அளவிற்கு எல்லாம் அல்ல, 50அடி நீளத்தில் கட்டினாலே முடிந்திருக்கும் விஷயம் அதனை செய்யாமல் கஜினி வந்தான்,கோரி வந்தான் என ஒப்பாரி வைப்பது எல்லாம் சும்மா அதுவும் ஒருமுறை வந்தாலும் பரவாயில்லை, அவன் 18 முறை வந்தபொழுதும் அவன் வரும் வழியினை தடுக்க ஒரு யோசனையுமில்லை இன்று சோமநாதபுரத்தை […]

அழகுமுத்து கோன் மாவீரனுக்கு, வீரவணக்கம்

அந்த இந்தியா முகலாய வம்சத்தின் கடைசி காலங்களில் வித்தியாசமாக இருந்தது, அதாவது மொகலாய வம்சம் வீழ ஆரம்பித்த பின் ஆளாளுக்கு தங்கள் பகுதி அரசரானார்கள் புலிகள் இருந்த வரை வேலையாளாகவும் அவர்களுக்கு பின்னால் அந்த ஐரோப்பிய சொத்துக்களை அமுக்கியவர்கள் தொழிலதிபர்கள் ஆனது போலவும், இன்னும் 4 வருடம் கழித்து அதிமுகவில் 130 அணி உருவாக போக போவது போலவும் இருந்ந்தது நிலை தமிழகதிலும் நாயக்க ஆட்சிக்கு பின் வந்த‌ ஆர்க்காடு நவாபிடமிருந்து பலர் விடுதலை பெற்றதாக சொல்லிகொண்டார்கள், […]

மறுபடியும் சுஜாதாவினை சீண்டுகின்றார் ஜெயமோகன்

மறுபடியும் சுஜாதாவினை சீண்டுகின்றார் ஜெயமோகன், சுந்தர ராமசாமி என்பவர் சுஜாதா இலக்கியவாதி அல்ல, அவரிடம் சரக்கு இல்லை என என்னமோ சொல்லிவிட்டு செத்தாராம் சுஜாதா சுந்தர ராமசாமியிடம் மதிப்பு பெறவே இல்லையாம் , அதனால் செல்லாதாம் சுஜாதா சுந்தர ராமசாமி நடத்திய ஏதோ ஒரு அறிவான இதழில் எழுத முயன்றாராம், ஆனால் சு.ராமசாமி அவரை எழுத அனுமதிக்கவில்லையாம், ஆம் தரம் கெட்டுவிடுமாம் சிந்து சமவெளி படத்தில் ஜெயமோகனின் வசனத்தால் கெடாத தரம், சு.ராமசாமி பத்திரிகையில் சுஜாதா எழுதினால் […]

சட்டமன்ற கூட்டதொடரை எளிதாக நடத்திவிட்டது அதிமுக அரசு

சட்டமன்ற கூட்டதொடரை எளிதாக நடத்திவிட்டது அதிமுக அரசு, திமுக பெரும் சவால் எல்லாம் கொடுக்கவில்லை, வெளிநடப்போடு சரி குட்கா விவகாரம் உட்பட பல விஷயங்களில் திமுக கோட்டை விட்டது, அடித்து ஆடவேண்டிய அந்த விவகாரத்தில் திமுக சமாளித்து ஒதுங்கியது எல்லாம் ஹிஹிஹிஹ் ரகம்.. இன்னும் என்னென்ன விஷயங்களில் சறுக்குமோ தெரியவில்லை , இந்த இத்துபோன அரசுக்கே சவால் கொடுக்க தெரியவில்லை என்றால் என்ன சொல்ல? அன்றைய கலைஞர் திருச்செந்தூர் வைரவேல் உட்பட பல பிரச்சினைகளில் நடைபயணம் செய்து […]