பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குழப்பத்தின் உச்சத்தில் இருக்கின்றார் கமல் …

கமலஹாசனின் பேட்டி இப்பொழுதான் பார்த்தேன், மனிதர் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கின்றார், சில பதில்கள் உண்மையிலே உளறல் நான் கருப்புசட்டைக்காரன் என்கின்றார், ஆனால் இந்தியில் பிக்பாஸ் வந்தபொழுது ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை இந்தி தெரியாதோ என ஒரு மாதிரி குத்துகின்றார், கருப்புசட்டைகாரனுக்கு ஏன் இந்தி? இல்லை இவர் என்ன ஹாலிவுட், பாலிவுட் நடிகரா? தமிழ் நடிகர் அல்லவா? சேரி பிஹேவியர் எனும் வார்த்தையினை விட மோசமான வார்த்தைகள் இந்த சமூகத்தில் பேசபடுகின்றது என்கின்றார், அது யாருக்கு தெரியாது? உடலறவு கூடத்தான் […]

ராஜபக்சே ஸ்டைலில் பிக் பாஸ்

இது என்ன இந்த பிக்பாஸில் எல்லோரும் ராஜபக்சே ஸ்டைலில் வந்திருக்கின்றார்கள் இந்த சீமான் உட்பட தமிழின உணர்வாளர்கள் பொங்கியிருக்க வேண்டாமா? இது தமிழின விரோதி ராஜபக்சேவினை நினைவுபடுத்து கெட்டப் என கமிஷனரிடம் சென்றிருக்க வேண்டாமா எத்தனை ராஜபக்சேக்கள் வந்து நிற்கின்றார்கள்? ஒரு சத்தமுமில்லை தமிழ மக்களிடம் தான் உணர்வில்லை என சொல்லும் தமிழின உணர்வாளர்களிடமும் இப்பொழுது உணர்வு இல்லை போலும் இது என்ன இந்த பிக்பாஸில் எல்லோரும் ராஜபக்சே ஸ்டைலில் வந்திருக்கின்றார்கள் இந்த சீமான் உட்பட தமிழின […]

சைமன் சித்தர்

சில சித்தர்கள் சில பச்சையான வார்த்தைகளை பேசுவார்கள் என்பார்கள், அற்ப மானிடனே நீ என்ன பெரிய …டா? பு .. மகனே, ….. வழியாக வந்த அற்ப உடல்தான் இது? உனக்கென்ன ஆணவம்? என சொல்வார்களாம், இதனை சில சித்தர் பாடல்களில் நிரம்ப படிக்கலாம் . சில இடங்களில் பட்டினத்தார் கூட சொல்லியிருப்பார் அனுபவத்தால் நொந்து, மனம் வெறுத்து, வாழ்வினை வெறுத்தவர்கள் அப்படி சித்தர்களானார்கள், அப்படி தத்துவம் பேசினார்கள் அப்படி தமிழகதில் வாழும் முன்னாள் சேகுவேரா தம்பியாகவும், […]

அற்புத கவிஞனுக்கு குஷ்பு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கண்ணதாசன், வாலிக்கு பின் தமிழகம் கண்ட மிக அற்புத கவிஞர் வைரமுத்து, தமிழ் அவரின் நாவில்,பேனாவில் எல்லாம் அப்படி விளையாடும் எல்லா வகை உணர்வுகளையும் பாடலில் வடிக்கும் வரம் அவரது, அதுவும் கிராமத்து பாடல்கள் என்றால் இன்னும் அட்டகாசம் எத்தனையோ முறை தேசியவிருதினை வென்றிருக்கும் அற்புத கவிஞன், கற்பக கவிஞன் அவருக்கு இன்று பிறந்தநாளாம், வாழ்த்துவோம். அதற்கு பெரும் காரணமும் இருக்கின்றது அழியா பாடல்கள் , அற்புதமான கிராமத்து கதைகளை அவர் எழுதியதை விட நமக்கெல்லாம் பெரும் […]

ஜெயலலிதா சொத்து …. கமல் தடுமாற்றம்…. லஞ்சம் கொடுத்தாரா சசிகலா? ….

ஜெயலலிதாவின் 350 கோடி ரூபாய் சொத்து தொடர்பில் பூங்குன்றனிடம் டெல்லியில் விசாரணை அவர்களாக பிடித்து சென்று விசாரிகின்றார்களா, இல்லை இவராக சென்று அமர்ந்துகொண்டாரா என்பதுதான் தெரியவில்லை கொடநாடு கொலைகளை, மர்ம சாவுகளை கண்ட பூங்குன்றன் தானாகவே டெல்லிக்கு விமானம் ஏறியிருக்கும் வாய்ப்புகள் அதிகம் மனிதருக்கு சாந்தம் பொத்துகொண்டு வந்துவிட்டது கிரிக்கெட் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையான ஒன்று தான்: கமலஹாசன் கிரிகெட்டில் டோனி எந்த அளவு சம்பாதிக்கின்றாரோ, அந்த அளவு […]

சிவசேனா பாஜகவினை கலாய்க்கின்றது

“அமர்ந்தாத்தில் தாக்கிய கொலையாளிகளை கொல்ல பசுபாதுகாவலர்களை அனுப்ப வேண்டும். பயங்கரவாதிகள் கையில் பசுமாட்டுகறி இருந்தால் அவர்களை இவர்கள் எப்பொழுதோ கொன்றிருப்பார்கள் ” : சிவசேனா எப்பொழுதும் மிக சர்ச்சையான கருத்துக்களை சொல்லும் சிவசேனா, இப்பொழுதெல்லாம் மிக அழகான கருத்துக்களை சொல்ல தொடங்கிவிட்டது பிஜேபிக்கும் அதற்கும் எங்கோ முட்டிகொண்டபின் சிவசேனா கொஞ்சம் மாறிவிட்டது அவர்கள் சொல்லவரும் விஷயத்தில் நியாயம் இல்லமால் இல்லை இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அமர்ந்தாத் தாக்குதல் நடத்தபட்டிருந்தாலும் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை நாளை […]

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று பன்மொழி ஆற்றல், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம் தமிழகத்திற்கு அவர் […]

திலீப் எனும் மலையாள தாவுத் இப்ராஹிம்

பாவனா விவகாரத்தில் திலீப் எனும் மலையாள தாவுத் இப்ராஹிம் கைது செய்யபட்டிருப்பது ஏராளமான கேள்விகளை எழுப்பிவிட்டது, இனி பிரணாயி விஜயன் கூட சிக்கலில் மாட்டலாம் அதாகபட்டது கேரளாவில் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்களே தவிர, அரசியல்வாதிகள் துணையுடன் ரியல் எஸ்டேட் முதல் எல்லா தொழிலையும் செய்வார்கள், சமீபத்திய சரிதா நாயர் வரை ஏராள உதாரணம் உண்டு அப்படி திலீப்பும் அவர் முன்னாள் மனைவி மஞ்சுவாரியார், பாவனா எல்லோரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் செய்து ஏதோ சர்ச்சை வந்திருக்கின்றது, இதில் […]

முத்துகுமார் பதிவினை பிரசுரித்தவர்களுக்கு நன்றி

நமது பதிவுகள் பலரால் கவனிக்கபடுகின்றது போலும், முத்துகுமார் பதிவினை ஒரு தளத்தில் ஏற்றியிருக்கின்றார்கள் அவர்கள் யாரென தெரியவில்லை, நம்மிடம் கேட்கவுமில்லை, நம் பெயரை போட்டிருக்கின்றார்கள் நன்றி இப்பொழுது நமக்கு எழும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், முத்துகுமாரின் பதிவினை பிரசுரித்தவர்கள் ஏன் குஷ்பூ பற்றிய பதிவுகளை பதியவில்லை இதுபற்றி சங்கத்தின் பொதுசெயலாளர் Sadhu Sadhath அவரிடம் கேட்டபொழுது, இன்னும் அதிகமாக நிறைய அதிகமான குஷ்பூ பதிவுகள் வரவேண்டும் என்ற அபிப்பிராயம் சொன்னார் அதனை செயல் தலைவரகள் Surin Vijay, Venkatesh Mothilal ஆதரித்தனர் அதுவும் பரீசிலைக்கு […]

தடய‌வியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்

தடய‌வியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார் இந்நாட்டின் மிக பெரும் தடவியல் மேதை அவர், இந்நாட்டிற்கு தன் பணியால் பெரும் தொண்டு செய்தவர் உலகமே இதில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என சொல்லபட்ட ராஜிவ் கொலை வழக்கின் தடயவியல் சோதனையினை இவர்தான் செய்தார் அவர் ஒரு தமிழர், நாகபட்டினத்துக்காரர். ராஜிவின் கொலையினை செய்தது வெளிநாட்டு தமிழ் தீவிரவாதிகளாக இருந்தாலும் மிக நுட்பமாய் விசார்த்து உண்மையினை கொண்டுவந்தது கார்த்திகேயம், சந்திரசேகர் போன்ற இந்திய தமிழர்கள் Jebamani Mohanraj போன்ற காவல்துறை தமிழர்கள் […]