பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நான் எந்த தவறையும் செய்யவில்லை : விஜய் மல்லையா

“அம்பி, பிரதமர் பதவி போல அதிகாரமிக்க பதவி எல்லாம் நம்மவா கிட்டதான் என்னைக்கும் இருக்கணும், ஆனா லோகத்த ஏமாத்த குடியரசு தலைவரா ஒரு சூத்திரன் தான் இருக்கணும், அதனால உனக்கு இனி பதவி இல்லண்ணு முடிவு பண்ணிட்டாள்…. இங்கே தமிழ்நாட்டுல கவர்ணர் போஸ்ட் காலியா இருக்குண்ணு சொல்றாள்.. இங்கே கவர்னரா வாரேளா?..”   நான் எந்த தவறையும் செய்யவில்லை : விஜய் மல்லையா அதனை ஏன் லண்டனில் இருந்து சொல்லவேண்டும்?, தவறு செய்யாவிட்டால் இந்தியா வந்து அப்படி […]

தன்னலமில்லா போராளி சே குவேரா

தன்னலமில்லா போராளி இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது. ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட […]

குமுதம் ரிப்போர்ட்டர் : விஷம் கக்கும் பத்திரிகை

அது அடிக்கடி விஷம் கக்கும் பத்திரிகைதான், குஷ்பூவினை சீண்டியபொழுதே மொத்த தமிழகமும் ஓங்கி அடித்திருந்தால் அது மீண்டும் இப்படி தீபாவினை கொச்சைபடுத்த துணியாது தீபா யாராகவும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு பெண். எப்படியோ அரசியலுக்கு வந்திருக்கும் பெண் பெண் என்ற ஒரே காரணத்தால் இப்படி எல்லாம் கொச்சைபடுத்துவது ஏற்றுகொள்ள முடியாது, இது சமூக சீர்கேடு, பத்திரிகை அதர்மம் இன்று தீபாவினை சீண்டும் அந்த பத்திரிகை அவ்வளவு தைரியமானது என்றால் தீபாவின் அத்தையினை எப்படி எல்லாம் சீண்டியிருக்கலாம் […]

தமிழக அரசியல் குழப்பங்களை மாற்ற போகின்றோம்..

தமிழக அரசியல் குழப்பங்களை மாற்ற போகின்றோம்.. தமிழகத்தை முன்னேற்ற போகின்றோம்.. என்ன கட்சியோ தெரியவில்லை, ஊழல் செய்தார்கள் என அவர்கள் மேலிடத்தை சுப்ரீம் கோர்ட் ஜெயிலுக்கு அனுப்பியது, அவர்கள் சிக்காத வழக்கு இல்லை, அவர்கள் மேல் பாயாத வருமானவரி குற்றசாட்டு இல்லை கண்டெய்னர் கணக்கில் சிக்கிய பணங்களும் அவர்கள் ஆட்சியில் தான் நடந்தது அப்பல்லோவில் அவர்கள் அள்ளிவிட்ட கணக்கு தெரியவில்லை தேர்தலுக்கு பணம் கொடுத்தார்கள் என சில தொகுதிகளில் தேர்தலே நின்றது, இந்தியாவிற்கே அது புதிது. மொத்த […]

மீத்தேன் திட்டத்தை கைவிடாவிட்டால் … : சீமான்

மீத்தேன் திட்டத்தை கைவிடாவிட்டால் புரட்சிக்கரமான போராட்டம் நடத்துவோம்: சீமான் அட அந்த புரட்சி போராட்டத்தை முதலில் நடத்துங்கள் அய்யா, அதன் பின் மீத்தேனை கைவிடுகின்றார்களா? இல்லையா? என பார்க்கலாம் இவர் வைத்திருப்பது பிரபாகரன் படம், , சிங்களன் கொஞ்சம் அயர்ந்த நேரம் அடித்துவிட்டு மக்களோடு மக்களாக பதுங்குவதுதான் அவர் செய்த புரட்சி. சீமான் அம்மாதிரி புரட்சி செய்ய வாய்ப்பில்லை, யாரை அடித்துவிட்டு எங்கே ஓளிவது? பின்னி எடுத்துவிடுவார்கள் வேறு என்ன புரட்சி போராட்டமாக இருக்கும்? அய்யாகண்ணு ஸ்டைலை […]

எம்.எல்.ஏக்களை விலை பேசிய வீடியோவால் பரபரப்பு : செய்தி

எம்.எல்.ஏக்களை விலை பேசிய வீடியோவால் பரபரப்பு : செய்தி இவ்வளவு களபேரம் நடக்கின்றது, யாராவது அம்மா கொடுத்த எம்.எல்.ஏ சீட் அவர் இல்லாததால் ராஜினாமா செய்கிறேன் என தூக்கி எறிந்திருக்கின்றாரா? ஒருவரும் இல்லை எதற்காக செய்யவில்லை? எதற்காக என்றால் வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளும் அளவிற்கா தமிழக மக்களுக்கு சிந்தனையில்லாமல் போயிற்று? இதனை வீடியோ காட்டித்தான் நிரூபிக்க வேண்டுமா? வவ்வால்கள் பழமரத்தில் தலைகீழாக‌ தொங்கும் என்பது யாருக்கு தெரியாது? சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில் இலங்கையினை ஓட‌ விரட்டியது பாகிஸ்தான் […]

புனித அந்தோனியார் தினம்

இன்று கத்தோலிக்க திருச்சபை ஒரு பெரும் புனிதரின் திருவிழாவினை கொண்டாடுகின்றது, புனிதர்கள் என்றால் இயேசுவின் பெயரில் சம்பாதித்து கல்லூரியும், பங்களாவும், எஸ்டேட்டும் சேர்த்தவர்கள் அல்ல‌ மாறாக கிறிஸ்துவிற்காக துறவு வாழ்க்கை வாழ்ந்து அவருக்காக உயிரையும் விட்டவர்களை, புனிதர்கள் என திருச்சபை ஏற்றிருக்கின்றது. அப்படி கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புனிதரானவர் புனித அந்தோணியார், ஐரோப்பாவில் ஏகபட்ட அந்தோணி உண்டு, காட்டில் இருந்த அந்தோணி, எகிப்தில் இருந்த அந்தோணி என ஏராளம், இவர் இத்தாலியின் பதுவாவில் வசித்ததால் […]

தமிழன் இளித்த வாயனா?

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக PTR பழனிவேல் தியாகராஜன் நியமனம். இந்த பதவிக்கு மிக மிக பொருத்தமான நபரை நியமனம் செய்த தமிழின தளபதி அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள்👏🏽👏🏽👏🏽👏🏽 இனிமே மாவட்ட அளவில் பதவிகள் போட படும்.நல்லா இணைய பணி செய்த சகோதரர்களுக்கு பொறுப்பு கிடைக்க வாழ்த்துக்கள்👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽💐💐💐 ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டம் ஜெய்சால்மர் எனும் ஊரில் தமிழக அரசு கால்நடைத் துறை அதிகாரிகள் கவ் ரக்ஷகர்களால் நேற்றிரவு தாக்கப்பட்டதும் காவல் துறை தகவல் […]

நம்மாழ்வார் என்ன போதித்தார்?

பிளாஸ்டிக் அரிசி சர்ச்சையில் நம்மாழ்வாரையும் சிலர் இழுத்து பேசுவதுதான் மிக பெரும் கொடுமை பிளாஸ்டிக் அரிசி நடப்பில் இல்லாவிட்டால் நல்லது, வதந்தி எனில் அது வந்த மூலத்தை தேடலாம், பிளாஸ்டிக் அரிசியினை எக்காலமும் இங்கு கொண்டுவரும்படி விழிப்பாய் இருக்கலாம், அது ஒன்றும் தவறில்லை நம்மாழ்வார் என்ன போதித்தார்? அன்றைய பயித்தொழில் இயற்கை சார்ந்திருந்தது, மனித குலம் பெருக பெருக வயல்களும், விளைநிலங்களும் பெருகின, அதாவது இயற்கை இவ்வளவுதான் விளைவிக்க முடியும் என்ற உச்சவரம்பு உண்டு, அதனை மீறி […]

தமிழகத்தின் விடிவு எப்போது?

உ பிரதேசத்தை தொடர்ந்து நேற்று மஹாராஷ்ட்ராவும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விட்டன. உ,பி செய்த மொத்த தள்ளுபடி 36000 கோடி ரூபாய். தமிழகத்தில் வறட்சியால் விவசாய கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொன்டோர் 400 பேர். தமிழக விவசாயிகள் பல முனை போராட்டங்களை டெல்லி வரையில் நடத்தி எந்த முடிவும் கிடைக்காத நிலையில் இன்னமும் தொடர்ந்து போராடுகிறார்கள்.  கடுமையான வறட்சி நிலவுவதும் விவசாயத் தொழிலே அழிவின் விளிம்பில் நிற்பதும் நம்மால் பார்க்க முடிகிறது. ஏன் […]