பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வடக்கு வாழ்கிறது , தெற்கு தேய்கின்றது

சென்னையில் இருந்து கொண்டு இந்தியா தமிழருக்கு என்ன செய்தது என கேட்பவர்கள் உண்டு, பல குரல்கள் ஒலிக்கும் வடக்கு வாழ்கிறது , தெற்கு தேய்கின்றது என்ற அந்த ரைமிங்கான குரல்களின் தொடர்ச்சி இது உண்மையில் இந்தியா தமிழருக்கு என்ன செய்ததோ இல்லையோ, வட இந்திய கிராமங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை, இன்று காங்கிரசிற்கு வடக்கே ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு அதுதான் காரணம் காங்கிரஸ் என்றல்ல, ஜனதா, ராஷ்டிரிய ஜனதா, பிஜூ ஜனதா, கன்ஷிராம் கட்சி எலலம் அப்படித்தான், பின்னாளில் பாஜகவும் […]

தமிழிசை பெரும் சிக்கலில் சிக்க போகின்றார்

தமிழிசை பெரும் சிக்கலில் சிக்க போகின்றார் அதாகபட்டது தேசவிடுதலை போராட்டத்தில் பங்குபெற்ற தியாகியும், பாகிஸ்தான் தளபதியியினை லாகூரில் புகுந்து சுட்டவருமான தேசபக்தன் ராக்கெட் ராஜா என்பவரை போலீஸ் கொல்ல தேடுகின்றதாம் அவர் நாடார் என்பதால், நாடார் சங்கங்களுக்கு எல்லாம் பெரும் கவலை, தேச பக்தர்களையும், தியாகிகளையும், பெரும் விஞ்ஞானிகளையும் இப்படி கொல்ல தேடும் போலிசை என்ன செய்ய? நாடார்களின் காவல்காரன் சரத்குமாரை காணவே இல்லை, இன்னும் பலர் பெரும் வியாபாரிகள், ரெய்டு வந்தால் ராக்கெட் ராஜா வந்தா […]

ராக்கெட் ராஜா பற்றி எந்த அறிவிப்பும் இல்லை

காவல்துறை ராக்கெட் ராஜா பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை, அவரை சுட்டுபிடிக்கும் உத்தரவோடு அலையவில்லை, அப்படி சுவரொட்டி எல்லாம் ஒட்டி அவரை தேடவில்லை ஒருவர் மீது காரணமின்றி போலிஸ் கொலைமிரட்டல் விடுத்தால், அவர் மீது குற்றமில்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம், முன் ஜாமீன் பெறலாம் ஏகபட்ட நடைமுறைகள் உண்டு,, இந்நாட்டு சட்டம் அப்படியானது, ஆனால் ராக்கெட் ராஜா என்பவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டாராம், காரணம் அவர் நாடாராம் இவருக்கு நாடார்கள் எனும் நாட்டை ஆளும் முதல்வர் […]

இந்த பேனருக்காகவே உலகம் பிரபாகரனை கொன்றிருக்கும் வாய்ப்பு உண்டு…

உலகமே சேர்ந்து புலிகளை ஏன் கொன்றதன் காரணம் இந்த பேனர்தான், இந்த காட்சியினை கண்ட பின்னும் விடுமா? இன்றும் ஐ.நா சபையில் ஈழபோர் விவகாரத்தை தூக்கி மூலையில் வைக்கவும் இதுதான் காரணம் இந்த அவமானத்தை ரஷ்யாவும் சீனாவும் தாங்குமா? சீனாவும் , ரஷ்யாவும் சிங்களனுக்கு ஏன் ஆயுதம் அள்ளி கொடுத்து அவசரமாக பிரபாகரனை கொன்றது எதற்கு என இப்பொழுது புரிகின்றதா? இந்த பேனருக்காகவே உலகம் பிரபாகரனை கொன்றிருக்கும் வாய்ப்பு உண்டு, அடுத்து இருப்பவர் கொஞ்சம் கவனமாக இருப்பது […]

“நாம் கிறுக்கர்கள்” என சொல்லாமல் சொல்லுகின்றனர்..

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மசூதிக்குள் நுழைந்து இஸ்லாமிய மக்களை கொன்ற புலிகளின் தலைவன் படம் பிடித்து அண்ணன் அண்ணன் என கத்துபவர் சீமான் ஆனால் இஸ்லாமியர்களின் தனிபெரும் அடையாளமான காயிதே மில்லத், அதுவும் திமுகவினை ஆதரித்த காயிதே மில்லத்திற்கு புகழ்வணக்கம் என சொல்பவரும் இவர்தான் “இஸ்லாமியரை கொன்றவனும் வாழ்க, இஸ்லாமியரை காத்தவனும் வாழ்க‌..” இப்படி ஒரு பெரும் தத்துவத்தை அங்கிள் சைமனை தவிர யாரால் சொல்ல முடியும்? “நாம் கிறுக்கர்கள்” என சொல்லாமல் சொல்லுகின்றனர்.    

நீங்கள் தமிழரா? வ‌டஇந்தியனா? சமஸ்கிருதக்காரனா?

திருக்குறள் தமிழர் வள்ளுவரால் தமிழில் எழுதப்பட்டது ஆனால் இராமயணம் எழுதிய வால்மீகி வட இந்தியர், மகாபாரதம் சமஸ்கிருதத்தில் வடக்கத்திய வியாசர் எழுதினார் நீங்கள் தமிழரா? வ‌டஇந்தியனா? சமஸ்கிருதக்காரனா? இப்படி ஒரு அபத்த பதிவு சுற்றி வருகின்றது, இது அங்கிள் சைமனின் கோஷ்டியாகத்தான் இருக்கும் மின்சாரம் கண்டு பிடித்தவன் பாரடே லண்டன்காரன், கணிப்பொறி அமெரிக்க தயாரிப்பு, முகநூல் ஒரு யூதனுடையது முகநூலில் இப்படி எல்லாம் பதிவு எழுதும் நீ லண்டன்காரனா? அமெரிக்கனா? யூதனா? என பதிலுக்கு கேட்கலாம் தமிழன் […]

இன்று இரவு 10 மணிக்கு குஷ்புவின் அக்னி பரிட்சை புதியதலைமுறையில்…

வாழ்வில் எத்தனையோ அக்னி பரிட்சைகளை சந்தித்து , அதனில் அசால்ட்டாக வென்று வந்தவர் குஷ்பூ. அவர் பதிய தலைமுறையின் அக்னி பரீட்சையில் பேச செல்கின்றார் என செய்திகள் சொல்கின்றன. அவர் பேச்சை கேட்க உலகமே காத்திருக்கின்றது இது அக்னி பரீடசை நிகழ்ச்சிக்குத்தான் அக்னி பரீட்சையே அன்றி குஷ்பூவிற்கு அல்ல‌ இன்றைய தேதியில் தமிழகம் மிக மிக எதிர்பார்த்திருக்கும் நிகழ்ச்சி அதுதான்.   தமிழகம் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கின்றது, அந்த கிரிக்கெட் அரையிறுதிக்கு கூட அவ்வளவு  எதிர்ப்பார்பில்லை […]

சட்டசபை கூட்டத்தில் உச்சகட்ட காமெடி

இந்த சட்டசபை கூட்டத்தில் உச்சகட்ட காமெடி ஒன்று உண்டு, ஏதோ ஒரு அதிமுக உறுப்பினர் ஸடாலினை பார்த்து “சட்டையினை எப்போ கிழிப்பீங்க” என கேட்டு கலாய்த்துவிட்டாராம் உலகமே அடிமாடுகள் என கலாய்த்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தில் ஒருவர், இன்னொருவரை கலாய்க்க வந்துவிட்டாராம், எவ்வளவு பரிதாபம்? இதே கலைஞர் என்றால் பதிலுக்கு எப்படி கலாய்பார் தெரியுமா? “இரு காலும் இல்லாத முடவன் எதிரே நடந்து வந்தவனை பார்த்து நொண்டி என்றானாம், அப்படி இருக்கின்றது இவர்கள் சொல்வது, யார் பேசுவது என்றொரு […]

ஜிஎஸ்டி, மாட்டுகறி முதல் நாட்டில் ஏகபட்ட பிரச்சினைகள் உண்டு

ஜிஎஸ்டி, மாட்டுகறி முதல் நாட்டில் ஏகபட்ட பிரச்சினைகள் உண்டு, சட்டசபை கூட்டத்தில் அதுபற்றி எதிர்கட்சி விவாதித்திருக்கலாம் விவசாயிகளுக்கு இந்த அரசு என்ன செய்கின்றது? என மல்லுகட்டியிருக்கலாம், மதுக்கடை தொடர்பாக இந்த அரசின் திட்டம் என்ன என்பதை கேட்டிருக்கலாம் தமிழகத்திற்கு தேவையான அத்தியவாசிய திட்டங்களை சட்டசபையில் எடுத்து போட்டு விளாசியிருந்தால் பழனிச்சாமி முதல் சபாநாயகர் வரை ஓட்டம் பிடித்திருப்பார்கள் ஆனால் ஸ்டாலின் அதனை செய்யாமல் வீடியோ,பேரம் என எதனையோ பேசி அரசியல் செய்வதாக நினைத்து தடுமாறிவிட்டார் அந்த அதிமுகவினருக்கும் […]

திமுகவினர் அவையிலிருந்து வெளியேற்றம்

எம்.எல்.ஏ வீடியோ விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுப்பு, திமுகவினர் அவையிலிருந்து வெளியேற்றம் இந்த பிரச்சினையினை விவாதிக்காமல் தீபா தீபக் சண்டையினையா சட்டசபையில் விவாதிக்க முடியும்? என்ன சபாநாயகரோ? சபை நியாமோ? இன்னும் இந்த ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்பதே தெரியாது, மறுபடி இந்த அதிமுக உறுப்பினர்கள் தேர்வுபெறுவது என்பது அந்த ஜெயலலிதா திரும்ப வருவது போன்றது அதனால் இருக்கும் இந்த‌ கொஞ்சநாளில் அவையில் இருந்து பார்க்கட்டும், அதன் பின் வரவா போகின்றார்கள்?? திமுகவிற்கு என்ன? […]