பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இரோம் ஷர்மிளா தமிழகத்தில் குடியேறுகின்றார்

இரோம் ஷர்மிளா தமிழகத்தில் குடியேறுகின்றார் தமிழக போராளி பாய்ஸுக்கு ஒரு நபர் கிடைத்துவிட்டார், இங்கு அம்மணியினை எப்படி எல்லாம் தூண்டிவிடுவார்களோ தெரியாது, இந்தியா உடைக, ஒழிக, இந்திய ராணுவம் ஒழிக என கோஷமிடும் கும்பல் இவரை இங்கு நிச்சயம் சும்மா இருக்க விடாது. இங்கு அரசியல் பேசாதவரை அம்மணிக்கு நல்லது

கொடூர தலைமுறையா உருவாகிக் கொண்டிருக்கிறது?

அது முதலிலே வில்லங்கமான செய்தியாகத்தான் தெரிந்தது, அதாவது ஒரு மூதாட்டி மானபங்கபடுத்தி கொல்லபட்டிருந்தார், இடம் ஆரல்வாய்மொழி , அஞ்சுகிராமம் மலைப்பகுதி கைதானவர்கள் எல்லாம் 20 வயதிற்கு கீழ்பட்டவர்கள், இந்த மூதாட்டி கொலையில் அவர்களை விசாரிக்கும்பொழுது போலீஸ் அரண்டு நிற்கின்றது என்கின்றார்கள் பேரன் வயதிக்கும் அந்த கொடூரர்களிடம் நடக்க முடியாமல் பைக்கில் கொண்டு சென்றுவிட சொல்லியிருக்கின்றார் அந்த பெண், இவர்கள் மனதில் வரகூடாத எண்ணம் வந்து அந்த பாதகத்தை செய்திருக்கின்றார்கள் காட்டுமிராண்டிகள் கூட , ஏன் விலங்குகள் கூட […]

எந்த கொம்பனும் மறுத்துசொல்லமுடியாத உண்மை அது

தமிழன் இந்துக்கள் இல்லை என யாரும் சொல்லிவிடமுடியாது, தமிழ்கொடுத்த அகத்தியமுனிவனே சிவனடியார் என்றபின் சொல்ல என்ன இருக்கின்றது? நிலங்களை பிரித்து நிலங்களுக்கொரு கடவுள் என அவர்கள் பெயரிட்டதிலேயே இந்துமதம்தான் நிற்கின்றது தமிழர்கள் இந்துக்களாகத்தான் இருந்தார்கள், அவர்கள் சென்ற இடமெல்லாம் இந்துமதத்தினை பரப்பியிருக்கின்றார்கள், தமிழர் காலடி பட்ட இடமெல்லாம் இந்துமதம் பரவியிருக்கின்றது கிழக்காசியா முழுக்க ராமயணம், மகாபாரத கண்ணகி கதைகள் பரவியிருப்பது அப்படித்தான், பல இந்து ஆலயங்கள் எழும்பியதும் அப்படித்தான் தமிழனுக்கு மதம் இல்லை என்றால் கடல்கடந்த நாடுகளில் […]

தமிழர் முத்திரையும், பழமையும் கொண்டது தாமிரபரணி

நிறைய அபத்தங்கள் முகநூலில் வரும், அப்படி ஒன்று சுற்றிகொண்டிருக்கின்றது, அதிலொன்று சோழர்களே தமிழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை என சொல்லிகொண்டிருக்கின்றது பூம்புகாருக்கும் முந்தைய கடல்கொண்ட கபாடபுரத்தில் இருந்தது பாண்டியர்கள்தான், அவர்கள் அக்கடல்கோளினால்தான் வடக்கே வந்தார்கள் என்கிறது பழைய தமிழ் நூல் அலெக்ஸாண்டர் காலத்து தூதர்களும், ரோமானிய அரசின் தூதர்களும் பாண்டிய மன்னன் அவையில் வீற்றிருந்தனர் என்கின்றது இலக்கியங்கள் சேர , சோழ மன்னர்கள் அவைகளில் இம்மாதிரி காட்சிகள் வருமா என்றால் வராது அவர்கள் காவேரிபூம்பட்டினம் எனும் […]

இந்த சன்னி சிகா மணிகள்….

நாமெல்லாம் எவ்வளவு பரவாயில்லை என பெருமிதம் கொள்ளும் நேரமிது, நம்மை எல்லாம் மிக நல்லவர்களாக உயர்த்திவிட்டனர் இந்த சன்னி சிகா மணிகள் துத்திகுளம் என்ற ஊர் இனி “சன்னிலியோன் குளம்” என பெயர் மாற்றம் செய்யபடலாம். ஒருவேளை நீட் தேர்வு சோதனைகளில் பாதிக்காபட்ட மாணவர்கள் இப்படி ஒன்று சேர்ந்து சங்கம் தொடங்கியிருப்பார்களோ? ஆனால் இந்த மொகரகட்டைகளை பார்த்தால் 5ம் வகுப்பு தாண்டியவர்களாக கூட தெரியவில்லை. (சன்னி படத்தினை போட்டு , எந்த விழாவிற்கு அழைக்கின்றார்கள்? ஏதும் வில்லங்கம் […]

நீட் தேர்வு வந்தே விட்டது, அதில் சாதகம் என்ன? பாதகம் என்ன?

நீட் தேர்வு வந்தே விட்டது, அதில் சாதகம் என்ன? பாதகம் என்ன? என்பது இன்னொரு விஷயம் ஆனால் பாதகம் என சொல்லபடும் விஷயங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பே இல்லை, எல்லோரும் முணுமுணுக்கின்றார்களே தவிர போராட யாருமில்லை உண்மையில் தமிழகத்திற்கு இன்று வழிகாட்டவோ அல்லது அதிரடியாக குரலெழுப்பி மக்களை திரட்டவோ யாருமில்லை, இது நிச்சயம் வீழ்ச்சி, மாபெரும் வீழ்ச்சி. எவ்வளவு பெரிய மகத்தான போராட்டங்களை நடத்தி இந்தியாவிற்கே வழிகாட்டியது தமிழகம், இப்படி ஒரு மானமுள்ள அல்லது உணர்ச்சியுள்ள தலைவன் இல்லாமல் […]

தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கு சரியில்லை

‘தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கு சரியில்லை’ என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளதாக சில தகவல்கள் கசிகின்றன‌ இதுபற்றி ஆதாரபூர்வமான அறிக்கை இல்லாவிடினும் சில சிக்னல்கள் இன்றி விஷயம் பத்திரிகைகளில் செய்தியாக வரமுடியாது ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் பழனிச்சாமி அரசு விரைவில் பழனியாண்டவர் கோலத்தில் நிற்கபோவது உறுதி, ஆம் ஆட்சி கலைப்பின் முதல் படி அந்தமாதிரி அறிக்கைதான் ஆக பழனிச்சாமிக்கு பஞ்சாமிர்த்தம் அரைக்க ஆரம்பித்தாயிற்று.. ஆச்சரியமாக […]

மோடி செய்தால் சத்தமே இருக்காது

முன்பு எப்பொழுதோ அம்மன் சிலை அருகே குஷ்பூ செருப்போடு அமர்ந்துவிட்டார் என குதித்தார்கள், அதனை பெரும் பிரச்சினையாக மாற்றினார்கள், அம்மனை குஷ்பூ அவமரியாதை செய்துவிட்டார் என இந்துத்வா கும்பல்கள் கொடிபிடித்தன, கத்தி தீர்த்தன‌ விஷயம் பற்றி எரிந்தது, வழக்கு வரை போட்டு பாடாய் படுத்தினார்கள். இப்பொழுது மோடி செருப்புடன் பிள்ளையாரை வணங்கிகொண்டிருக்கின்றார் ஒரு சத்தமுமில்லை அதாவது வேறு யாரும் செருப்பு அணிந்துகொண்டு ஆலயத்தில் வழிபாடே செய்யலாம், குஷ்பூ மட்டும் செருப்பு அணிந்துகொண்டு சினிமா மேடையில் கூட தெய்வ […]

ஆந்திராவிற்கு ஆளில்லா கார் வரப்போகின்றது

கூகுளின் ஓட்டுநர் இல்லா காரினை ஆந்திராவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர சந்திரபாபு நாயுடு விருப்பம், அமெரிக்காவில் கூகுள் அதிகாரிகளை சந்தித்தபின் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு ஆக ஆந்திராவிற்கு ஆளில்லா கார் வரப்போகின்றது தமிழகத்திற்கு என்ன வரப்போகின்றது தெரியுமா? 46 வருடங்களுக்கு முன்பு இரு சனியன்கள் நடித்து தொலைத்த “மாட்டுக்கார வேலன்” படம் மறுபடியும் ரீலிஸ் ஆகின்றதாம் எதற்கு என்றால் மத்திய அரசினை அனுசரித்து செல்லவேண்டும் என பழனிச்சாமியே கூட்டத்தில் அறிவித்ததாக சொல்லபட்டது, அனுசரித்து என்பதை விட மகிழ்வித்தால் என்ன […]

திரிகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருப்பது ?

அது கிட்டதட்ட 50 ஆண்டுகால பிரச்சினை , இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருப்பது எனும் பிரச்சினை காரணம் அதன் தன்மை அப்படி, மிக சிறந்த இயற்கை துறைமுகம், அதில் மட்டும் ஒரு ராணுவ தளம் அமைந்துவிட்டால் கிழக்காசியா முழுக்க நின்று ஆடலாம், அப்படியான இடம் அது இப்படியான இடத்திற்கு மசால் வடையினை தேடிவரும் எலிபோல அமெரிக்கா வராமல் இருக்குமா? அது காலூன்ற சுற்றி சுற்றி வந்தது. அது வந்தது சோவியத் முகாமிற்கு எரிச்சல் குறிப்பாக […]