பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நான் தமிழச்சி, ஜல்லிகட்டுக்கு எதிரானவள் அல்ல : திரிஷா

நான் தமிழச்சி, ஜல்லிகட்டுக்கு எதிரானவள் அல்ல : திரிஷா பாவம் அந்த புள்ள, “ஏறு தழுவல்” என்பது சினிமா மொழியின் ஏதோ “தழுவல்” என தவறாக அதற்கு புரிந்துவிட்டது போல‌ யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அதாவது படம் “தோல்வி தழுவுத‌ல்”, வாய்ப்பு “நழுவுதல்”, ஆடை “நழுவுதல்” போல ஏதோ ஒன்று என நினைத்து திரிஷா பொங்கிவிட்டது, யாரோ இது அந்த “தழுவுதல்” அல்ல, “மாட்டினை தழுவுதல்” என சொன்னபின் திரிஷா சமாதானம் ஆகி, அறிக்கை எல்லாம் […]

தமிழக அரசின் சின்னமாக போகும் எருமைக்கு வாழ்த்துக்கள்..

மாடு அறுப்பு கடைக்கு தமிழகத்தில் தடையில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் மாட்டிற்கு லாடம் அடிக்கவும், மூக்கணாங்கயிறு போடவுமாவது தமிழனுக்கு உரிமை உண்டா? என்பதுதான் தெரியவில்லை ஆக கிராமத்து தமிழர்களே உச்சநீதிமன்ற அனுமதி பெற்றபின் மூக்கணாங்கயிறை இடுங்கள், கழுத்தில் கயிறு கட்டுங்கள், மாடு மேய்க்கும்பொழுது கம்பால் அடியுங்கள் இல்லை என்றால் நீங்கள் லாடம் அடிக்கும்பொழுது கூட கைதுசெய்யபடலாம், மாடு மேய்க்க‌ கயிறு கட்டி இழுத்து சென்றாலும் போலிஸ் இழுத்து சென்றுவிடும் ஜாக்கிரதை மாடு அறுப்பு நிலையம் வைத்திருப்பவர்களுக்கு சிக்கலே […]

ஜல்லிக்கட்டு அரசியல்… பிதற்றல்கள் …

ஐடி, சிபிஐ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஜல்லிக்கட்டு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது: ஸ்டாலின் அரசியல் என்றால் அப்படித்தான், சிலவற்றை தாரைவார்த்தே தீரவேண்டும். முன்பு சர்காரியா கமிஷன், இன்னும் பல கமிஷன் சிக்கலால் காவேரி முதல் கச்சதீவு வரை பறிபோகவில்லையா? அரசியல் செய்ய பெரும் வாய்ப்பு கிடைத்தபோதும் ராமர்பாலம், ஈழவிவகாரம் முதல் பெரும் விஷயங்களில் எல்லாம் திமுகவின் கைகளை ஸ்பெக்ட்ரம் கட்டிபோடவில்லையா? வழிகாட்டி விட்டது யார்? இப்படி எல்லாம் அறிக்கை வாசித்து அரசியல் செய்யமுடியும் என இன்னும் நம்புகின்றாரா? கலைஞரின் […]

அத்வானியின் புது கவலை?

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நம்மிடம் இல்லாததால், இந்தியா முழுமை பெறவில்லை : அத்வானி கவலை. இது என்ன புதுகவலை? யார் கவலைபட்டாலும் இந்தியா தாங்கும், அத்வாணி கவலைபட்டால் தாங்காது. முன்பு ராமருக்கு ஒரு கோயில் இல்லையே என அவர் கவலைபட்டு ரதம் எல்லாம் ஏறி, இந்தியா எல்லாம் சுற்றி பெரும் கலவரம் வந்து மசூதி இடிக்கபட்டு ரத்த ஆறு ஓடியது பெரும் களங்க வரலாறு இப்பொழுது இந்தியா ஓரளவு அமைதியாக இருக்கும்பொழுது அன்னார் கவலை சிந்து மாகாணம் […]

அழகும் அறிவும் ஒரு சேர குவிந்த இடம்…

ஜல்லிகட்டிற்கு ஆதரவாக எத்தனை பேர் பேசினாலும், மிக தகுந்த கருத்துக்களுடன் பேசியவர் குஷ்பூ மட்டுமே மடகாஸ்கர் நாட்டு கரன்சியில் இருக்கும் ஜல்லிகட்டு படத்தினை பீட்டாவால் நீக்க முடிந்ததா? வெறும் 5 குற்றசாட்டுகளை முன் வைக்கும் பீட்டாவிற்கு 50 ஆயிரம் ஆதாரங்களை தர தயார் என அவர் வைக்கும் கருத்துக்கள் கை தட்டபடவேண்டியவை இன்றைய தேதியில் இப்படி அதிரடி கருத்துக்களை தமிழகத்தில் ஒரு தலைவன் சொன்னாரா? சொல்ல முடிந்ததா? குஷ்பூ கோடான கோடி மக்களை வசீகரித்துகொண்டிருக்கின்றார் என்றால் இப்படியான […]

ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்பேன்: சரத்குமார்

ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்பேன்: சரத்குமார் ஏற்கனவே இவர் எதிர்த்த எதிர்ப்புகள் எல்லாம் என்ன ஆயின? எதிர்த்து என்ன கிழித்தார்? கலைஞரை விமர்சித்துவிட்டு அங்கு தெண்டனிட்ட வரலாறும் உண்டு வெங்கடேச பண்ணையார் என்கவுண்டரின் போது, ஜெயா அரசு விமர்சிக்கபட்டபொழுது, நான் தூங்குறங்களை சுட்டுகொல்லும் போலீஸ் இல்ல என ஒரு படத்தில் வசனம் எல்லாம் பேசினார் ஜெயாவினை மிக கடுமையாக எதிர்த்த‌ இவர்தான் பின் அவர் காலிலே விழுந்து கிடந்தார், ரகசிய போலீஸ் போன்ற படங்களில் சுசீ […]

எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா…

குஷ்பு படங்களை ஒளிபரப்பாத டிவிக்களை வன்மையாக கண்டித்துவிட்டு, அவர் நடித்த பாடலான “பூ பூக்கும் மாதம் தை மாதம்” எனும் பாடலை மட்டும் இரு நாட்கள் பார்ப்பதாக முடிவு இதனை விட எப்படி பொங்கலை கொண்டாட முடியும்? எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றார்களாம், அதனால் சில டிவிக்களில் அவர் படமாக போட்டு தள்ளுகின்றார்கள் அதுவும் ஜெயலலிதா நடித்த படமாகவே பொறுக்கி எடுத்து போடுகின்றார்கள், சில படங்களில் வி.என் ஜாணகியும் தலைகாட்டுகின்றார் ஆக அக்கட்சியின 4 முதல்வர்களில் (நெடுஞ்செழியன் […]

மாட்டினை விட தமிழனுக்கு மானமும், அறிவும் குறைவு

ஜல்லிகட்டிற்கு ஆதரவாக நடந்த போராட்டங்களில் பலவிதமான கொடுமைகள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன‌ ஏற்கனவே சமீபத்தில் பொதுபிரச்சினைக்கு போராடிய‌ ஒரு பெண் தன்னை எப்படி எல்லாம் காவலர்கள் அவமானபடுத்தினார்கள் என சொல்லும்பொழுது மனம் பதறத்தான் செய்கின்றது இப்போது மதுரையில் மிக கடுமையான நிலையினை காவல்துறை எடுத்திருக்கின்றது, பல தலைவர்கள் கண்டிக்க தொடங்கியாகும் அளவிற்கு நிலமை அத்துமீறி இருக்கின்றது. காவல்துறை அப்படித்தான், உத்தரவிட்டால் அது அப்படி மூர்க்கமாகத்தான் பாயும், அதன் இயல்பு அப்படி சரி உத்தரவிட்டது யார்? தமிழக அரசு, […]

நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாம்…

நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாம் திருவள்ளுவர் பிறந்தநாளெல்லாம் அந்த சம்பவம் நினைவுக்கு வரும், ஊரில் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு வழக்கறிஞர் வெளியூர் வாசி, விடுமுறைக்குத்தான் ஊருக்கு வருவார் அவர் வந்துவிட்டால் பெரும் கூட்டம் அவருக்கு கூடும், காரணம் மனிதர் “தண்ணி”க்கு தண்ணீராக செலவழிப்பார். பின் ஏன் கூட்டம் கூடாது? இப்படியான கும்பல்கள் “அருள்” உச்சம் பெற்றபின் அவர்களை ரசிக்கவேண்டும், ஏராளமான காமெடிகள் அரங்கேறும் ஒரே நிபந்தனை நம் தலையில் அருள் இறங்கிவிட கூடாது, இன்னொன்று நமக்கெல்லாம் ஒரு சொட்டு […]

மகளின் தமிழ் திரைப்பட அறிவு

டிவியில் பொங்கல் ஸ்பெஷல் படங்கள் ஓடிகொண்டிருந்தன, மகளுக்கு இதெல்லாம் அவ்வளவாக பிடிக்காது, டிஸ்னி டிவி மட்டும்தான் அவளுக்கு பிடித்தது படம் தொடங்கியதும் விளையாட சென்றாள், அவ்வப்போது வந்து பார்த்து கொண்டாள், மிக அசால்ட்டாக இப்படி கேட்பாள், கேட்டுவிட்டு சென்றுவிடுவாள் “ஹீரோ வந்தாச்சா? ஆமாம்மா ஹீரோயின் வந்துட்டாங்களா? ஆமாம்மா லவ் ஆரம்பிச்சிட்டா? ஆமாம்மா சரி, சண்டை எல்லாம் முடிஞ்சி கல்யாணம் முடிஞ்ச உடனே என்கிட்ட சொல்லுங்க, ஏன்னா கல்யாணம் முடிஞ்ச உடனே படம் முடிஞ்சிரும், அப்புறமா நான் டிஸ்னி […]