பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியா டுடே மாநாட்டில் சசிகலா, பன்னீர் செல்வம்

இந்தியா டுடே மாநாட்டில் சசிகலா , பன்னீர் செல்வம் பங்கேற்பு என்ன சொந்த கருத்து சிந்தனையினை இவர்கள் அள்ளி தெளித்துவிடுவார்கள் என இவர்களை எல்லாம் மாநாட்டுக்கு அழைத்திருக்கின்றார்கள்? இருவருக்கும் எதாவது 4 வார்த்தை சொந்தமாக பேச தெரியுமா? நாட்டு நலனோ மக்கள் நலனோ பற்றி ஒரு வார்த்தை சுயமாக பேச தெரியுமா? இந்த கரன்சி பிரச்சினை அல்லது வறட்சி சமாளிப்பது என கேட்டால் இருவருக்கும் சத்தியமாக தெரியாது என்பது உலகிற்கே தெரியும். நாட்டை உலுக்கும் பிரச்சினைகள் பற்றி […]

இந்தியாவினை விற்றுகொண்டிருக்கின்றார்கள்…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் ஒரு விசித்திர அனுபவத்தை உணர்வதாக சொல்கின்றார்கள் அதாகபட்டது அவர்களிடம் பல கடைகள் மற்றும் ஹோட்டல்கள் அமெரிக்க டாலரில் பணம் செலுத்துமாறு கோருகின்றார்களாம் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வரவில்லை முதல் முறையாக இப்படி ஒரு நிலை வருகின்றது என்றால் அதன் விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும் ஏன்? உலகெல்லாம் அமெரிக்க கரன்சியின் பணம் புழங்க புழங்க அதற்கான தேவை அதிகரித்துகொண்டே இருக்கும், அவர்கள் கரன்சி வலுப்படும் பெரும் பணம் புழங்கும் […]

முகநூலுக்கு அவ்வளவு சக்தியா?

https://youtu.be/wdJWGj8wD_g   வயதான சுயநலவாதிகள் எல்லாம் கட்சிதலமைகள் காலில் விழுந்து கிடக்க, இளம்தலைமுறை யாரும் அழைக்காமலே மெரீனாவில் திரண்டிருக்கின்றது கட்சி இல்லை, தலைவர் அறிக்கை இல்லை,பேனர் இல்லை, கொடி இல்லை, ஒரு இம்சையும் இல்லை பிரியாணி இல்லை, குவார்ட்டர் இல்லை, கொண்டுவர லாரி இல்லை, தலைக்கு 500 ரூபாய் எனும் பேரமில்லை. ஆளுக்கு 100 ரூபாய் எனும் கமிஷனில்லை தமிழகத்தின் உரிமையினை மீட்டெடுக்க, ஜல்லிகட்டை நடத்த விட போராட குவிந்திருக்கின்றனர், மிக பெரும் கூட்டம் திரண்டிருக்கின்றது உண்மையில் […]

கலைஞர் இல்லா செய்திகள்…

கலைஞர் இல்லா செய்திகளை பார்க்க முடியவில்லை, சூரியன் இல்லா வானம் போல இருண்டு கிடக்கின்றது பத்திரிகை உலகம் நினைத்து பார்கின்றேன் அது எம்ஜிஆர் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுகொண்டிருந்த காலம், நோயினை வெளிகாட்டி பரிதாபம், மத்திய அரசுக்கு மண்டியிடுதல் என ஒரு மாதிரி அரசியல் செய்துகொண்டிருந்தார் எம்ஜிஆர் இந்திரா சாகாமலும், அமெரிக்க காட்சிகள் இல்லைஎன்றாலும் எம்ஜிஆரை வீழ்த்தி காட்டியிருப்பார் கலைஞர் பாக்கியராஜ், ஜெயா என களமிறக்கி பார்த்தாலும் திமுக வலுவான இடங்களை பெற்றிருந்தது அந்நேரம் தன் தோல்வி நெருங்கி […]

சசிகலா புஷ்பா சீற்றம்….

சசிகலா புஷ்பா இரு நாளைக்கு முன்பு பேசிய வீடியோவில் சீறிகொண்டிருக்கின்றார் கராத்தே செல்வின், வெங்கடேஷ் பண்ணையார் எல்லோரும் அண்ணன்கள், ராக்கெட் ராஜா என் தம்பி இவர்களுக்காக இந்த கூட்டத்திற்கு வந்தேன் சசிகலா புஷ்பா ஒரு எம்பி என்பது குறிப்பிடதக்கது செல்வின், வெங்கடேசன் எல்லாம் இந்த நாட்டிற்காக செத்தவர்கள் என்றும், அந்த ராக்கெட் ராஜா இப்பொழுது தீவிரவாதிகளை தேடி உயிரை பணயம் வைத்து பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்திகொண்டிருக்கின்றார் என்றும் நம்பிகொள்ளுங்கள் தாவூத் இப்ராஹிம் போன்றவர்கள் ரவுடிகள் என தேடுவார்கள், […]

சிம்புவின் சர்ச்சை பாடல் ….

“AAA” படத்தில் சர்ச்சை பாடல் எழுதி சர்ச்சையில் சிக்கினார் சிம்பு, பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒரு A என்றாலே வில்லங்கம், அதுவும் 3 A என பெயர் வைத்துவிட்டு, அதுவும் சிம்பு படம் என்றால் எப்படி இருக்கும்? இப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம் ஆமாம் சிம்பு ஏன் திருந்த வேண்டும்? ஆளும் அதிமுகவினர் கொஞ்சமும் திருந்தா மாநிலத்தில், பிரதமர் கொஞ்சமும் திருந்த யோசிக்காத‌ நாட்டில்… இன்னும் விஜய் போன்ற விக் பிரிய நடிகர்கள், காக்கா வலிப்பு போல ஆட்டம் […]

அன்புமணி அழைப்பு… சைமன் கட்சி பொதுக்குழு ???… இன்னும் பிற

நாடார்களும், வன்னியர்களும் ஒரே அணியில் திரளவேண்டும் : அன்புமனி அழைப்பு ஒரு நாளும் திருந்தாதவர்கள் வரிசையில் அன்புமணி சேர்ந்துவிட்டார் ஏன் சார்? இந்த வன்னியர்களும், நாடார்களும் ஒரு அணியில் திரண்டால், மீதி இருக்கும் முப்பது முக்கோடி சாதிகள் ஒரு அணியில் திரளாதா? மிஸ்டர் அன்புமணி, நாடார்களை அழைப்பீர்களா? எங்கே தமிழிசையினையும், சரத்குமாரையும் கொண்டு வந்துவிடுங்கள் பார்க்கலாம்.. எல்லோரும் பொதுகுழு கூட்டம் நடத்துகின்றார்களே, அங்கிள் சைமன் நம்ம கட்சியில் எப்பொழுது பொது கூட்டம்? கூட்டத்தில் ஜெயாவிற்கு அஞ்சலி செலுத்துங்கள், […]

தமிழக காங்கிரஸ் செயற்குழு கூடியது

தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது இது எல்லா கட்சிகளின் பொதுகுழுவும் கூடும் நேரம், அப்படி தமிழக காங்கிரசும் கூடிவிட்டது சிதம்பரம் மிக அழகாக பணபிரச்சினையினை எடுத்து பேசினார் என்கின்றார்கள், அவர் பேச்சு அர்த்தமுள்ளது இனி தேடி கேட்கவேண்டும் குஷ்பூ மிக அழகான கம்பீரத்துடன் அமர்ந்திருந்தார், காண இரு கண்கள் நிச்சயம் போதாது, நிறுத்திவிடலாம் இல்லை கம்பனுக்கு போட்டி காவியம் எழுதும் நிலை வரும் மேடையில் இந்திரா, காமரஜர் படங்கள் எல்லாம் இருந்தன‌ தவ வாழ்வு வாழ்ந்த […]

சசி சம்பத் பேரம்….

சசிகலாவை சந்தித்து  மறுபடியும் அதிமுக பிரச்சார பீரங்கியானார் நாஞ்சில் சம்பத் ஓஹோ கதை அப்படி போகின்றதா? அதாவது சசிகலா ஜெயாவின் நாற்காலிக்கு ஆசைபட்டால், இவர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டருக்கு ஆசைபட்டிருக்கின்றார் நாற்காலி உனக்கு, பறந்து பறந்து பேச ஹெலிகாப்டர் எனக்கு என இருவரும் முன்பு பேசியிருக்கலாம், பேரம் படியாததல் இவர் இன்னோவா சாவியினை வீசியிருக்கலாம் இப்பொழுது பேரம் எப்படி படிந்ததோ தெரியவில்லை ஒருவேளை ஹெலிகாப்டர் அல்ல‌, ஜெயாவின் சொகுசு கார் உனக்கு , நாற்காலி எனக்கு என மறு […]

பாவம் ஆண் பாவம்

தமிழகத்தில் இப்பொழுதெல்லாம் வேறுமாதிரியான சிக்கல்களை திருமணமான‌ ஆண்கள் சந்திக்கவேண்டி இருக்கின்றதாம் அரசியலில் இருக்கும் பெண்களின் கணவர்களும், இன்னும் பல இடங்களில் பணி செய்து பெண்களின் கணவர்களும் அப்பெண்கள் கொடுக்கும் வசவுகளில் காதை பொத்தி கொண்டு ஓடுகின்றார்களாம் அதாகபட்டது உள்ளாட்சி தேர்தலில் சேர்மன், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் பதவியினை குறி வைக்கும் பெண்களும் சரி பள்ளியில் தலமை ஆசிரியர் பணிக்கு குறி வைக்கும் பெண்களும், பிரிஸ்பல் பணிக்கு ஆசைபடும் பேராசியைகளும் கணவர்களை அப்படியே சொல்லி திட்டுகின்றார்களாம் எப்படி? “அவனவன் […]