ஹலோ ஸ்டாலின், கொஞசம் நிதானம்..
அன்று திருப்பூரில் திமுக கூட்டம் நடந்தது பலர் பேசினர், ஸ்டாலின் பேசும்பொழுது உணர்ச்சியில் கொடிகாத்த குமரன் பிறந்த ஊர் இது என முழங்கினார் இறுதியாக பேசிய கலைஞர், கொடிகாத்த குமரன் திருப்பூரில் பிறந்தவர் அல்ல, அருகிலிருக்கும் சென்னிமலையில் பிறந்தவர் என அழுத்தமாக சொன்னார் அதாவது ஒரு விஷயத்தை பேசவோ, விவாதிக்கவோ பொது இடத்திற்கு வரும்பொழுது சிறுபிசகும் வரகூடாது என்பது அவர் மறைமுகமாக சொன்னது ஸ்டாலினை அவர் முழுக்க புரிந்தே இருந்திருக்கின்றார், அவர் தயக்கத்திலும் ஒரு அர்த்தம் இருந்திருக்கின்றது. […]