பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நன்றிகெட்ட தமிழரடா பிரபாகரா..

நாளை அடிப்பொடிகள் மாவீரர் நாள் என கிளம்புவார்கள், அதாவது பிரபாகரன் நடத்திய கட்டபஞ்சாயத்து இயக்கத்தின் பெயர் போராட்டம், அதில் வேறு வழியின்றி வந்து உயிர்விட்டவர் மாவீரர் பிரபாகரனையும் அவரின் அடிப்பொடிகளையும் தவிர ஈழபோராட்டத்தில் கொல்லபட்ட இதர தமிழர்கள் சிவகுமார், குட்டிமணி குழு என்பதெல்லாம் மாவீரர் அடையாளம் அல்ல‌ பிரபாகரன் சொல்லி செத்தவர்கள் மட்டுமே மாவீரர்கள், அதாவது பிரபாரனை ஆதரித்தால் தமிழன், உணர்வாளன். அவர்களின் கட்ட பஞ்சாயத்து ரவுடியிசத்தை கண்டித்தவன் எல்லாம் வாழ தகுதியில்லா துரோகிகள். ஆனால் எத்தனையோ […]

மாவீரன் கிட்டு : முன்னோட்டம்

https://youtu.be/Ax6SWtL6egs பெரும் பிழைப்புவாதிகள் யாரென்றால் தமிழக சினிம்மாக்காரர்கள், அவர்கள் தொழில் அப்படி. கதையினை பணமாக்க எப்படி வேண்டுமானாலும் யோசிப்பார்கள் இப்பொழுதெல்லாம் அவர்கள் வசூல் கனவு வெளிநாடு, அதுவும் ஐரோப்பா கனடா அமெரிக்கா, அங்கே தமிழர்கள் யார் அதிகம் என்றால் ஈழதமிழர், போதாதா? அவர்களை குறிவைத்தே சில படங்கள் வருகின்றன‌ அதிலொன்று “மாவீரன் கிட்டு” கதை என்ன கருமாந்திரமோ தெரியவில்லை, தலைப்பு இம்மாதிரி, ஈழதமிழர் கொண்டாடுவார்களாம், அந்த கிட்டுவின் பெயராம் கிட்டு பற்றி அவரின் நன்றிகொன்ற தனம் பற்றி, […]

பாரத கர்ணனின் இன்றைய உருவம் மன்மோகன் சிங்

 முழு நல்லவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள், வந்தாலும் முழு நல்லவர்களாக இருக்கமாட்டார்கள், பெரும் சமரசம் செய்யவேண்டியது அரசியல் என்றான் ரூசோ அரசியல்னு வந்துட்டா ஆயிரம் சமரசம் செய்யணுமுங்க, அது நம்ம அடையாளத்த மறைச்சுபோடுமுங்க அதனால நா அரசியலுக்கு வரலீங்க என கொங்கு தமிழில் சொன்னார் பெரியார் இன்று மன்மோகன் சிங்கினை அப்படித்தான் பார்க்கவேண்டி இருக்கின்றது பெரும் பொருளாதார மேதை, கிட்டதட்ட 20 டாக்டர் படங்களை ஆய்விற்காக வாங்கியவர், அமைதியானவர், இந்தியாவின் தூண்களான சீக்கிய வம்சத்தின் பெரும் அடையாளம் என […]

சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார்

சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார் என ஏக அலப்பறைகள், அதில் முருகன் வெளிநாடு செல்ல இந்தியா வந்ததாகவும், சிவராசனை ஒரு ஏஜன்ட் என்ற முறையில் சந்தித்ததாகவும், இன்னும் ஏராளமான பொய்மூட்டைகளை அவிழ்த்திருக்கின்றார் இன்னொரு இடத்தில் பேரரிவாளனை காப்பாற்ற இவர் சொல்லியிருக்கும் ஒரு பொய், இவரது புத்தகத்தை அப்படியே தூக்கி தூர எறிய வைக்கின்றது அதாவது பேரரிவாளனும் புகைப்பட கலைஞனாம், அவனும் ஹரிபாபு போலவே குற்றமில்லாதவனாம், இதில்தான் வசமாக சிக்குகின்றார் நளினி பேரரிவாளன் சிறுவயது முதல் புலி […]

கரன்ஸி விவாதம் …

கரன்சி பிரச்சினை குறித்து பொதுவாக விவாதிக்க தயாரா என அருண்ஜெட்லி கேட்டிருந்தார், மன்மோகன் சிங்கினையே பங்கெடுக்க சொல்லுங்கள் என அவர் அழைப்பும் விடுவித்திருந்தார் மன்மோகன்சிங்கின் பேச்சினை கேட்க தேசமே ஆவலாக இருந்த பொழுது இன்று அவர் பேசினார் பெரும் பிரச்சினையில் மன்மோகனையே பேச அழைத்தார்கள், அவரும் பேசியாகிவிட்டது, நல்ல அரசியல் மாண்பு தெரிகின்றது சுருக்கமாக ஆனால் யதார்த்தத்தை பேசினார் மன்மோகன் சிங் அவர் பேச்சின் சாரம்சம் இதுதான் இந்த திட்டத்தினை வரவேற்கின்றோம், ஆனால் நிர்வாக தரப்பில் ஏற்பட்ட […]

இனிய நன்றி நல்கும் நாள் வாழ்த்துக்கள்…

இன்று நன்றி தெரிவிக்கும் நாளாம், நவம்பர் கடைசி வியாழ கிழமையினை அப்படித்தான் வெள்ளையர் சொல்கின்றனர் வெள்ளையர் சொல்லிவிட்டால் உடனே உலகம் கொண்டாட கிளம்பும் அல்லவா?, கிளம்பிற்று ஆளாளுக்கு நன்றி நன்றி என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் இந்த முகநூலில் என்னோடு வரும் எல்லா நண்பர்களுக்கும் நன்றி நன்றி என நாமும் சொல்லி கொள்வோம் என்னையும் மதித்து உற்சாகபடுத்துவதாலும், நண்பராக ஏற்றிருப்பதாலும் நன்றி சொல்லியே ஆகவேண்டும் சீமானின் அல்ட்ராசிட்டிகள் எல்லை மீறி செல்ல, அதன் உண்மை நிலையினை எழுத தொடங்கியபின் நண்பர்கள் […]

பத்திரிகையாளர்களை மோடி சந்திப்பதே இல்லையாம்….

பத்திரிகையாளர்களை மோடி சந்திப்பதே இல்லை, அதனை எதிர்கொள்ள அவர் பயப்படுகின்றார் என பலர் கிளம்பியிருக்கின்றார்கள் ஒரு பிரதமராக மோடி நாட்டு மக்களுக்கு அவ்வப்போது உரையாற்றுகின்றார், எல்லா நாட்டு சபைகளிலும் எல்லா நாட்டு அதிபர்களிடமும் பெரும் ஆலோசனைகளை நிகழ்த்தத்தான் செய்கின்றார் நாட்டு மக்களுக்கான உரைகளை அந்தந்த நேரங்களில் நிகழ்த்திகொண்டே தான் இருக்கின்றார் இதில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிகொண்டே இருக்க என்ன இருக்கின்றது? அரசின் அறிவிப்புக்கள் செய்திகளாக அவர்களுக்கு தரபடுகின்றன, இது இப்போதைய நிலைப்பாடு என அறிவிக்கபடுகின்றது பின் ஒவ்வொரு […]

புரிந்துகொண்டு வாருங்கள், ஒரு குழப்பமும் இருக்காது…

மனிதருக்கு என்ன சிக்கல் என தெரியவில்லை, கொஞ்சமேனும் ரசனை இருப்பதாகவும் தெரியவில்லை. ஒரு மாதிரி திரிகின்றார் இது கீழ்பாக்கம் கேஸா அல்லது கோபாலபுரத்தில் வாசலில் கட்டபட்டிருந்த ஜந்து சங்கிலி அவிழ்ந்து முகநூலுக்கு வந்ததா என்றே புரியவில்லை அதாகபட்டது அக்காலத்திலிருந்தே பெரும் போராட்டம் நடத்துவது கலைஞர் ஸ்டைல். அரசாணையினை எரிப்பது, எதிலும் கருப்பு மை பூசுவது என தீவிரமாக போராடிய போராளி அவர், அவ்வகையில் ரூபாய் நோட்டுகளையும் எரிப்பாரோ, கரி பூசுவாரோ என சொன்னால் ஒரு சராசரி மனிதனுக்குள்ள […]

காவேரி எனும்பொழுது வராத ஒற்றுமை…

காவேரி எனும்பொழுது வராத ஒற்றுமை, அணுவுலை எனும்பொழுது வராத ஒற்றுமை மீத்தேனுக்கு வராத ஒற்றுமை, கங்கை கரை திருவள்ளுவர் சிலை பிரச்சினைக்கு வராத ஒற்றுமை, முல்லை பெரியாருக்கு வராத ஒற்றுமை ஜல்லிகட்டுக்கு வராத ஒற்றுமை மீணவன் சுட்டுகொலை என்றால் வராத ஒற்றுமை, சேது சமுத்திர திட்டத்தில் வராத ஒற்றுமை தமிழக பெரும் தொழிற்சாலைகள் முடங்கும் போது வராத ஒற்றுமை மின்சாரமோ, குடிநீரோ, சாலை பிரச்சினைகளில் வராத ஒற்றுமை கேரளா, கன்னடம் போன்ற மாநிலங்கள் அழிச்சாட்டியம் செய்யும் பொழுது […]

கரன்சி பிரச்சினையினை கண்டித்து பல கட்சிகள் ஆர்ப்பாட்டம்

   மத்திய அரசின் கரன்சி பிரச்சினையினை கண்டித்து பல கட்சிகள் ஆர்ப்பாட்டம் இன்று திமுகவும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தபோகின்றதாம் அவர்கள் பெரும் போராட்ட குணம் படைத்தவர்கள். இந்தி ஆட்சிமொழி என்றால் அதன் ஆணை நகலை எரிப்பார்கள், இந்தியில் தார் பூசுவார்கள். மிசா காலத்திலே பெரும் போராட்டம் நடத்தியவர்கள் முன்பு ஈழ ஆதரவு போராட்டமென்றால் (1991க்கு முன்பு) மத்திய அரசு கொடும்பாவி கொளுத்துவார்கள், இன்னும் என்னவெல்லாமோ செய்வார்கள் ஆயிரம் கட்சிகள் தமிழகத்தில் போராடினாலும், திமுகவினரின் போராட்ட வரலாறே தனி […]