பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்க அதிபர் கென்னடி : ஓர் நினைவாஞ்சலி

 தோற்றம் : 20-05-2017      ::       மறைவு : 22-11-1963 எத்தனையோ அதிபர்கள் அமெரிக்காவில் வரலாம், ஆளலாம். ஆனால் கென்னடி அளவு ஒரு துணிச்சல் மிக்க தலைவர் அவர்களுக்கு கிடைக்கமாட்டார்கள் இன்றளவும் அமெரிக்கர்களின் கனவு தலைவர் அவர். அவர் காட்டிய பாய்ச்சல் அப்படி, அமெரிக்காவினை உலக அரங்கில் உயர்த்து காட்டிய பெரும் துணிச்சலான காரியங்கள் பிரசித்திபெற்றவை அன்றைய செம்பூதம் ரஷ்யா, ஹிட்லரை ஒழித்துகட்டி தானே உலகின் ராஜா என சொல்லிகொண்டிருந்தது, ஸ்புட்னிக் […]

செய்தி சிதறல்கள்…

ஒரு சிலர் கருப்பு பணம் பதுக்கியதற்காக நாங்கள் எல்லாம் சிரமபடவேண்டுமா என பல குரல்கள் மானிட யதார்த்தம் அப்படியானது, ஆதிகாலத்திலிருந்தே இது தொடர்கின்றது சகுனி எனும் ஒரே ஒரு அயோக்கியனால் உருவானது பாரதபோர், அழிந்தவர்கள் கோடான கோடி நல்லவர்கள் ஹிட்லர் எனும் ஒருவனால் போர் தொடங்கபட்டு அழிந்தது 5 கோடி பேர் அப்பாவிகள் பிரபாகரன் எனும் தனிமனிதனால் அழிந்த அப்பாவி ஈழமக்கள் ஏராளம் இப்படி ஒரு சிலரின் நடவடிக்கையால் பெரும் மக்கள் சமூகமே பாதிக்கபட்டது வரலாறெங்கும் நிரம்ப […]

பணம் பணம் பணம்….

இந்தியாவில் பெருமாற்றம் நிகழ்ந்துவிட்டது, 500 ஆண்டுகால வரலாறு ஒரு வாரத்தில் திரும்பிவிட்டது. எங்குபார்த்தாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுத்தான், 10, 100 ரூபாய் எல்லாம் யாரிடமும் இல்லை, அது ஏழைகளிடமல்லவா இருக்கும்? இப்பொழுது எல்லோரும் பணக்காரர்கள் அல்லவா? அதனால் எல்லோரிடமும் 2 ஆயிரம்தான் மினிமம். மளிகை கடைமுதல் ஜவுளிகடை வரை 2 ஆயிரம் நோட்டை கொடுத்துவிட்டு சில்லறையினை அடுத்தமாதம் வாங்கிகொள்கின்றோம் என சாவகாசமாக இந்தியர்கள் செல்கின்றார்களாம், திரும்பிய இடமெல்லாம் பழைய கரன்சிகள் தேடுவாரற்று கிடக்கின்றதாம், சில்லறை பணத்தினை […]

தமிழகமே தயாராகு, அம்மா திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது…

நீங்கள் என்னைக் கண்டித்தது என்பது, ஒரு தாய் தன் மகளைக் கண்டித்தது போலத்தான். நீங்கள் இல்லாத காலங்களில் என்னெல்லாம் நடந்தது தெரியுமா?” : முதல்வருக்கு சசிகலா புஷ்பா எம்பி நீண்ட கடிதம் அதாகபட்டது நீங்கள் என் அம்மா, நீங்கள் அடித்தெல்லாம் பாசமான அடி, அவ்வளவுதான். நீங்கள் இல்லா நேரம் ஒரு மகளாக உங்களை சுற்றி நடந்ததை சொல்கிறேன் என உருகியிருக்கின்றார் எம்பி என்னை என்ன செய்யமுடியும் என சவால் விட்ட எம்பி, பார்லிமென்டில் ஜெயா மீது பெரும் […]

தண்ணீரில் பிழைக்க வைத்தான்

 தண்ணீரில் பிழைக்க வைத்தான் உலகில் எத்தனையோ தொழில்கள் உண்டு, பிழைப்புக்கள் உண்டு. ஆனால் மிக ஆபத்தான தொழில் அக்காலமுதல் இக்காலம் வரை உண்டென்றால் நிச்சயம் மீணவதொழில். அது அக்காலம் முதல் இருந்திருக்கின்றது, மனித இனம் தோன்றிய காலமுதல் மீன்பிடி தொழில் இருந்திருக்கின்றது. பழம் தமிழகம் அதனை நெய்தல் என குறிப்பிட்டிருந்தது, பாண்டிய நாட்டின் கொடியே மீன் கொடிதான். மீணவ வாழ்வு எல்லா மத நூல்களிலும் அழுத்தமாக சொல்லபட்டிருக்கின்றது மீன் என்பது மருந்தும் கூட, பைபிள் சில இடங்களில் […]

2.0 : ஒரு முன்னோட்டம்…

https://youtu.be/NQZqbrO7ub8 ரஜினிகாந்தின் அடுத்த ரோபோ படம் வரபோகின்றதாம், வரட்டும் ஹாலிவுட் இயக்குநர்கள் எடுக்காத விஞ்ஞான ரோபோ படத்தினை ச‌ங்கர் எடுத்துவிடபோவதில்லை, சராசரி ஹாலிவுட் படங்களிலே ரோபோ முதல் ஏலியன்ஸ் வரை பார்த்துவிட்டு போகலாம். ரஜினியின் ரோபோ ஹிட் ஆக முதல் காரணமே வில்லன் ரஜினி, நிச்சயமாக ரஜினி மிகசிறந்த வில்லன் நடிகர். அப்படி ஒரு வில்லத்தனமான நடிகன் தமிழகத்தில் சாத்தியமில்லை, அவ்வகையில் சொல்லலாம் மிக சிறந்த வில்லன் நடிகர். அவரே 1980 களின் தொடக்க கால பேட்டிகளில் […]

தென்கொரிய மக்களின் எழுச்சி போராட்டம்…

  திரண்ட பெரும் மக்கள் தேசத்தை சீரழிக்கும் இரு பெண்கள் என தென்கொரியாவில் வலம் வரும் படங்கள், அமெரிக்க தேர்தல், மோடியின் நடவடிக்கை என நமது பத்திரிகைகள் அல்லோலபட்டுகொண்டிருந்தபொழுதே தொடங்கியது தென்கொரிய மக்களின் எழுச்சி போராட்டம், ஆனால் உலகம் டிரம்பினை பார்த்துகொண்டிருந்ததால் பார்வை பெறவில்லை ஆனால் இப்பொழுது உலகின் மிகபெரும் விவாதபொருளாக மாறிவிட்டது கடந்த 30 ஆண்டுகளில் மிக வளர்ச்சிபெற்ற நாடு அது, ஜப்பானை பின்னுக்கு தள்ளி எலக்ட்ரானிக்ஸ் துறையில் நம்பர் 1 இடத்தினை கைபற்றியது, சாம்சங், […]

அச்சம் என்பது மடமையடா : திரை விமர்சனம்

  வெகு நாளைக்கு பின் சிம்பு உருப்படியாக ஒரு படம் நடித்திருக்கின்றார், இப்படியே அடங்கி நடித்தால் நன்றாகத்தான் இருக்கின்றது கதை வெகு பிரமாதம் என்றேல்லாம் சொல்வதற்கில்லை, வழக்கமான கவுதம் படம். மனிதர் கேமரா இல்லாமல் படமெடுத்தாலும் துப்பாக்கியும் போலிசும் இல்லாமல் படமெடுக்கமாட்டார் அல்லவா? அப்படி தன் முந்தைய படம் பலவற்றை கலந்து கொடுத்திருக்கின்றார், போரடிக்காமல் செல்கிறது. குறிப்பிட்டு சொல்லக்கூடியது நாயகி மஞ்சிமா மோகன், சாயலில் கொஞ்சம் பழைய குஷ்பூவினை லேசாக நினைவுபடுத்துகின்றார், அதற்காக குஷ்பூ போல அழகு […]

பத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..

https://youtu.be/vkJknBKctzE பத்மநாபா படுகொலை சென்னையில் நடந்த போராளிகுழுக்களிடையிலான சண்டை, இது எப்படி இந்தியாவிற்கெதிரான புலி எதிர்ப்பாகும் என்கிறார் ஒருவர். பத்மநாபா இந்திய அமைதிபடையோடு சேர்ந்து இடைக்கால நிர்வாக மாகாண சபை அமைத்தவர், விடுவார்களா புலிகள் விரட்டினர். அமைதிபடை வெளியேறும்பொழுது அவர் சென்னை வந்தார் அப்பொழுது மத்தியில் விபிசிங் அரசும், தமிழகத்தில் கலைஞரும் ஆட்சியில் இருந்தனர். அந்த கலைஞர் புலிகளின் அபிமானி, முரசொலிமாறன் புலிகளின் இந்திய பிரநிதிபொலவே பேசிகொண்டிருந்தவர் சென்னை வந்த பத்மநாபா, கலைஞரிடம்தான் அடைக்கலம் கோரினார், அமைதிபடையினை […]

இந்திரா வரிசையில் மோடி ஒரு துணிச்சல் தலைவர்

பணமாற்றம் : கருத்துக்கள் பலவிதம்  இந்திரா வரிசையில் மோடி ஒரு துணிச்சல் தலைவர் என்றால், ஏய் மோடி கொலைகாரன், அயோக்கியன் அய்ய்கோ, யாருடம் யாரை ஒப்பிட்டாய் என பல ஒப்பாரி குரல்கள் இந்திரா மீதும் ஏக குற்றச்சாட்டு உண்டு, பஞ்சாப் அவரால் ரட்த்தகாடான வரலாறு உண்டு, இன்னும் காமராஜரை ஓரங்கட்டியது என உள்கட்சி தகறாறும் உண்டு ஆனால் அம்மகராசி செய்த பெரும்பான்மையான துணிச்சலான நடவடிக்கைகள் இந்நாட்டிற்கு பெரும் நன்மையினை, பாதுகாப்பினை கொண்டுவந்தன என்பதை மறுக்க முடியுமா? மோடி […]