Rajathi Salmaஅவர்களுக்கு இன்று பிறந்தநாள்
மிக இறுக்காமான கட்டுபாடுகள் நிறைந்த சமூகத்தில் பிறந்து, அங்கிருக்கும் கட்டுபாடுகளையும் பெண் அடிமைத்தனத்தையும் தன் ஒரே நாவலில் மிக தைரியமாக கொண்டு வந்து பெரும் அதிர்வினை கொடுத்தவர் அவர்
அந்த எழுத்துக்கள் வங்கதேசத்து தஸ்ரிமா நஸ்ரினை போல் இருந்ததால் தமிழகத்து நஸ்ரிமா என்றே அழைக்கபட்டார்
பட்டம் வந்தால் சும்மா வருமா? மிரட்டல்களும் பின்னாலே வந்தது. மிக கடுமையான அச்சுறுத்தல்கள்
ஒரு பெண்ணாக இருந்து மிக தைரியமாக போராடிகொண்டிருந்த அந்த பெண் எழுத்தாளரை எல்லோரும் வோட்டு வங்கி இன்னபிற சிக்கல்களுக்கு அஞ்சி ஆதரிக்க தயங்கியபொழுது கலைஞர் மிக தைரியமாக ஆதரித்து கட்சியிலும் சேர்த்துகொண்டார்.
ஒரு எழுத்தாளரின் அருமை இன்னொரு எழுத்தாளனுக்கே தெரியும் என்பது அதுதான்
அதன் பின் அந்த எழுத்தாளருக்கான நெருக்கடிகள் குறைந்து, கவிதை தொகுப்பெல்லாம் வந்தது, இன்னும் பல நாவல்களும் வந்தது
அவரின் நாவல் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைகழகங்களில் இன்று மேற்கோள்காட்டும் புத்தகமாக இடம்பெற்றிருக்கின்றது. எத்தனையோ பல்கலைகழகங்கள் உலகெங்குமிருந்து அவரை அழைக்கின்றன
இங்கும் பெரியார் விருதெல்லாம் கொடுத்து திராவிட கழகமும் கவுரவித்தது
கலைஞர் செய்த உதவிக்காக அவர் இன்று திமுக மகளிர் அணியின் தூணாக நின்றுகொண்டிருக்கின்றார்
அந்த Rajathi Salmaஅவர்களுக்கு இன்று பிறந்தநாள்
திமுக மகளிராக சார்பாக மேல்சபை எம்பி ஆகும் எல்லா தகுதியும் அவருக்கு இருக்கின்றது.
தன் பிறந்தநாளில் எல்லாம் கலைஞரிடம் வாழ்த்துபெறுவது அவரின் பிராதன வழக்கம், காரணம் கலைஞர் அவர் கண்ட கடவுள்
அந்த கடவுளின் வாழ்த்தோடு, வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்.
இனி வருங்காலம் மிக பிரகாசமாய் அமையட்டும்