தருமை ஆதீனத்தின் பாரம்பரிய

தருமை ஆதீனத்தின் பாரம்பரியமான, பல நூறு வருடங்களாக நடக்கும் அந்த பட்டின பிரவேச விழா நடக்க கூடாது என தடை விதித்திருப்பது சரியல்ல‌

மனிதனை மனிதன் சுமக்கலாமா எனும் பகுத்தறிவு கேள்வி எல்லாம் இங்கு எடுபடாது, உதாரணத்துக்கு கிறிஸ்தவ போப்பும், கிறிஸ்தவ ஆயர்களும் கொண்டாடபடுவது வழமை இதெல்லாம் மத உணர்வு

இங்கு தருமை ஆதீனம் யாரையும் அடிமை படுத்தி பல்லக்கை சுமக்க வைக்கவில்லை, காசு கொடுத்து பல்லக்கு தூக்க வைக்கவில்லை

இது குருவுக்கும் சீடர்களுக்குமான உறவு, அந்த சீடர்கள் தங்கள் குருவினை ஊர்வலமாக சுமந்து வருகின்றார்கள், சன்னிதானம் எனும் மகா குருவினை நேரடியாக காணமுடியா மக்கள் அவரை கண்டு தரிசித்து நம்மை வழிநடத்தும் அடியார் என வணங்கும் நிகழ்வு இது

இதற்கு பகுத்தறிவில் தடை என்பதெல்லாம் சரியான விஷயம் அல்ல‌

நவாப் ஆட்சி, வெள்ளையன் ஆட்சியில் கூட விழாத தடை. கருணாநிதி ஆட்சியிலும் விழாத தடை இந்த ஆட்சியில் விழுகின்றது என்றால் எங்கோ குழப்பமும் தவறான வழிகாட்டலும் இருக்கின்றது எனபதுதான் விஷயம்

குருவினை சீடன் கொண்டாடுவதும் தூக்கி சுமப்பதும் அவன் விருப்பம், குருவினை தெய்வ கோலத்தில் கொண்டாடும் விஷயம்

இந்த மண் முன்பெல்லாம் குருக்களை தேரில் வைத்து குதிரைக்கு பதிலாக சீடர்களே இழுத்துவந்த பாரம்பரியம் உடையது, இந்த பட்டின பிரவேசம் அதன் ஒரு பகுதியே

இங்கு படபெட்டியினை சினிமா ரசிகன் சுமக்கலாம், சினிமா நடிகனை சுமக்கலாம், அரசியல்வாதி வெற்றி பெற்றால் அவனை சுமக்கலாம் அதெல்லாம் அனுமதிக்கபடும் என்பதும், இந்து குருவினை அவன் சீடன் சுமந்தால் அதற்கு தடை என்பதும் மிக மிக முரண்பாடுகள், ஏற்றுகொள்ளமுடியா விஷயங்கள்

தருமை ஆதீனத்தின் பட்டின பிரவேசத்துக்கு தடை என்பது அரசு மறுபரீசிலனை செய்யவேண்டிய விஷயம் , அதை செய்வார்கள் என நம்புவோம்