பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கிரண் பேடி : பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வீரமிகு பஞ்சாபியர் நமக்கு தெரியும். ராணுவத்திலும் விளையாட்டிலும் அவர்கள் சாதனை நமக்கு தெரியும், ஆனால் பஞ்சாபி பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என உலகிற்கு சொன்னவர்கள் சிலர். அவர்களில் ஒருவர் கிரண் பேடி அவர் பெயர் கிரண், கணவர் பெயர் பிரிஜி பேடி. அதனால் கிரண் பேடி ஆனார். கணவரும் தந்தையும் தொழிலதிபர்கள் நிச்சயம் அவர் தொழிலதிபராக வந்திருக்கலாம், ஆனால் விளையாட்டும் அவரின் தைரியமான குணமும் பாதையினை மாற்றின‌ கிரண்பேடி இந்திய பெண்களின் தைரியத்தின் முகம். முதலில் அவர் […]

ரஜினியின் பலம் இதுதான், கதைக்காக அவர் படத்திற்கு யார் சென்றார்கள்?

கோடி கொடுத்தாலும் இந்த காலா படத்தை பார்க்க கூடாது என முடிவெடுத்திருந்தால் பாகம்பிரியாளுக்கோ பெரும் எதிர்பார்ப்பு அது கதை சரியில்லை, இயக்கம் சரியில்லையாம் என சொன்னால். ரஜினி படத்தில் என்று கதை இருந்தது? கதைக்காக என்று ரஜினிபடம் பார்த்தோம் என படாரென பதில் வருகின்றது ரஜினியின் பலம் இதுதான், என்று கதைக்காக அவர் படத்திற்கு சென்றார்கள்? எவ்வளவோ சொன்னாலும், தேர் எப்படி இருந்தால் என்ன சாமிதான் முக்கியம், அது ஊர்வலம் வரும்பொழுது சாமியினைத்தான் பார்க்க வேண்டும். மாலை […]

ஜூன் 12ஐ உலகம் எதிர்பார்த்துகொண்டே இருக்கின்றது

இன்னும் இரு நாட்கள்தான் இருக்கின்றது, உலகை மிரட்டும் இருவர் வருவதால் சிங்கப்பூர் கடும் பாதுகாப்பில் இருக்கின்றது நேற்று வெள்ளையாக குண்டாக வெள்ளை குடைமிளகாய் போல ஒருவர் சிங்கப்பூர் வந்திருக்கின்றார், பிடித்து வைத்து கடும் பரபரப்பினை ஏற்படுத்திவிட்டார்கள். வடகொரிய தரப்பு எங்கள் தலைவர் வடகொரியாவில் இருக்கின்றார் என உறுதிபடுத்தியபின்புதான் பரபரப்பு தீர்ந்தது இப்பொழுது வடகொரிய அதிபருக்கு புதிய பயம் வந்திருக்கின்றது, அதாவது தனக்கு உயிர் ஆபத்து என அவர் நினைத்துவிட்டார் வரலாறும் அதைத்தான் சொல்கின்றது, சோவியத் அதிபர்கள் தவிர […]

முஷாரப்பிற்கு பாஸ்போர்ட் முடக்கம் : செய்தி

முஷாரப்பிற்கு பாஸ்போர்ட் முடக்கம் : செய்தி கொஞ்ச நாளைக்கு முன்புதான் நாவாஸ் ஷெரிப்பினை மண்டையில் தட்டி வைத்திருக்கின்றார்கள். ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் பாகிஸ்தானில் சில விஷயங்கள் ஆச்சரியமானது, எந்த ஆட்சியாளரும் ஊழல் என வந்துவிட்டால் நிலைக்க முடியாது, கடாசி விடுவார்கள் அருமை இந்தியாவில் அதெல்லாம் சாத்தியமே இல்லை சுருக்கமாக சொன்னால் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் ஜெய காலத்து அதிமுகவினர் அல்லது அமைச்சர்கள் போல, யார்? எப்பொழுது? எங்கு அடிவாங்குகின்றார்கள் என்பதே தெரியாது ஆனால் இந்திய அரசியல்வாதிகள் திமுக தலைவர்கள் […]

எஸ்.வீ சேகரை கட்சியிலிருந்து விலக்கிவிட்டோம் : தமிழிசை

எஸ்.வீ சேகரை கட்சியிலிருந்து விலக்கிவிட்டோம் : தமிழிசை அக்கோவ், விஷயம் அவர் காணாமல் போனது பற்றியது. ஒரு ஹேவியஸ் மனுபோட்டு அவரை நேரில் கொண்டுவர கூடாதா? கட்சிக்காரன் காணாமல் போனால் இப்படித்தான் பதவி விட்டு விலக்கி கணக்கை முடிப்பீர்களா? பின் யார் கட்சிக்கு வருவார்? எப்படி தாமரை மலரும்?

பின் எங்கிருந்து தமிழகத்திற்கு விடியும்?

தான் கொட்டிய காப்பியினை தானே துடைத்தார் நெதர்லாந்து பிரதமர் என செய்திகள் வருகின்றன, பலர் அவரல்லவோ மனிதர் என உருகிகொண்டிருக்கின்றனர் இங்கும் அப்படியான நபர்கள் இருந்தார்கள், மாமனிதர் மகாத்மா காந்தி தனக்கான வேலைகளை தானே செய்தார் ஜீவா எனும் பொதுவுடமை போராளி தனக்கு இருந்த ஒரே உடையினை தானே துவைத்தும் கொண்டான் காஷ்மீருக்கு போய் நிலமையினை பாருங்கள் என நேரு சொன்னவுடன் தன்னிடம் குளிர் ஆடை இல்லை என்பதை சொல்லமுடியாமல் நின்றார் சாஸ்திரி காமராஜரின் எளிமை உலகறிந்தது, […]

பிரபாகரனின் தம்பி என்றால் சும்மாவா?

அந்த பிரபாகரனுக்கு அப்பொழுது 14 வயது இருக்கும், அப்பொழுதே அவர் போராளி. சிங்கள அரசினை எதிர்க்க ஒரு பஸ்ஸை எரிக்க வேண்டும் என அவரும் கூட்டாளிகளும் முடிவெடுத்தனர், ஆனால் பஸ் வந்ததும் ஓடிவிட்டனர் ஆனால் அமைதியாக திட்டமிட்டபடி வெகு சிலரோடு பஸ்ஸை எரித்துவிட்டு திரும்பினார் பிரபாகரன், போலிஸ் விசாரித்து வீட்டுக்கே வந்தது பின் வாசல் வழியாக தப்பி ஓடினார் பிரபாகரன், அதற்கு முன்பு என்ன செய்திருந்தார் என்றால் போலிஸ் தன் படத்தினை கைபற்ற கூடாது என முன்யோசனையில் […]

மாபெரும் அவமான அறிக்கை இரண்டை மிக அபத்தமாக வாசித்திருக்கின்றது பழனிச்சாமி அரசு

இன்றைய சட்டசபை நிகழ்வில் மாபெரும் அவமான அறிக்கை இரண்டை மிக அபத்தமாக வாசித்திருக்கின்றது பழனிச்சாமி அரசு முதலவாது மேட்டூர் அணை திறப்பு இல்லை என சொல்லிவிட்டு நிலத்தடி நீரை பயன்படுத்துங்கள் விதை தருகிறோம், மின்சாரம் தருகின்றோம், அங்கே கொஞ்சிவிளையாடும் வஞ்சியருக்கு மஞ்சள் அரைத்து தருகின்றோம் என்ற அளவில் மகா அபத்தமாக பேசுகின்றார்கள் 6 ஆண்டுகளாக மேட்டூர் அணை திறக்கபடவில்லை, காவேரி மணலையும் அள்ளியாயிற்று என்றால் நிலத்தடி நீர் என்ன ஜெயா கல்லறைக்கு அடியிலா கிடைக்கும்? அப்பொழுதும் உச்சநீதிமன்ற […]

மனுஷ்யபுத்திரன் ஸ்டைல்

தனக்கு கொஞ்சமும் தெரியாத அல்லது புரியாத விஷயம் என்றாலும் தலையினை சிலுப்பிகொண்டு சென்று கருத்து சொல்வது மனுஷ்யபுத்திரன் ஸ்டைல் அப்படி இப்பொழுது காலா விவகாரத்தில் ராவணன் திராவிடன் என கிளம்பிவிட்டார் மனிதருக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை, இவரை டிவி விவாதத்திற்கு அழைத்தவனை பரிதாபமாக நோக்க வேண்டி இருக்கின்றது ராம கதையின் மூலம் வால்மிகி, அவனிடமிருந்தே எல்லோரும் காப்பி அடித்தார்கள், அதற்கு கலாச்சாரத்திற்கு தக்கபடி மாற்றிகொண்டார்கள், அதில் கம்பன் குறிப்பிட தக்கவன் வால்மிகி ராமயணபடி ராமன் சத்ரியன் கருப்பன், […]

பிரதமரை கொல்ல சதியா?

மோடிக்கு ஏதும் ஆகிவிட்டால் இன்னொருவர் வந்து இந்தியாவினை வளப்படுத்திவிட மாட்டாரா? அதன் பின் பலமான இந்தியா உருவாகி மாவோயிஸ்டுகளை அழித்துவிடாதா?, மாவோயிஸ்டுகளுக்கு பாதுகாப்பே இப்படி ஒரு பேச்சு பிரதமர் இருப்பதுதானே அதனால் மாவோயிஸ்டுகள் அவ்வளவு முட்டாள்தனமாக எல்லாம் திட்டமிட்டிருக்க மாட்டார்கள், அவர்களுக்கு கொஞ்சமேனும் அறிவிருக்கும் என நம்பபடுகின்றது மோடி ஆட்சியினை தொடரவிடுவதை விட இத்தேசத்திற்கு என்ன பெரும் கெடுதல் செய்துவிட முடியும்? இந்த தேசத்தை நம்மை விட மோடி நன்றாக கெடுத்து கொண்டிருக்கின்றார் என்பது அவர்களுக்கு தெரியாதா? முதலில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications