பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மணிரத்னத்திற்கு இன்று பிறந்த நாள், அவருக்கு வாழ்த்துக்கள்

சினிமாவின் வெற்றி என்பது கதை சொல்லும் விதத்தில் இருக்கின்றது, பார்வையாளனை அப்படியே 2.5 மணிநேரம் கட்டி போடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல, அவ்வளவு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும் , ரசிகனை ஒன்ற வைக்க வேண்டும் படம் முடியும்பொழுது சோகமோ ஆனந்தமோ சில சொட்டு கண்ணீர் வரவேண்டும், மனம் கனக்க வேண்டும். அப்படிபட்ட படம்தான் வெல்லும் படத்திற்கு இயக்குநர்தான் எல்லாம் என்பதால் அவர் நிரம்ப படித்தவராக, மிக பெரும் கலை உள்ளம் கொண்டவாரக இருத்தல் வேண்டும், […]

தமிழிசைக்கு இன்று பிறந்தநாள் : வாழ்த்துக்கள்

உண்மையில் அவர் ஒரு அப்பாவி, மனதில் பட்டதை ஆண்டவனே தடுத்தாலும் தைரியமாக பேசும் ஒரு பலம் அவருக்கு உண்டு. அதை பயன்படுத்தி தமிழக அரசியலில் கல் வீசும் கலையினை பாஜக செய்து வருகின்றது இன்றைய தமிழக அரசியலில் அதிரடி, சுவாரஸ்யம், காமெடி விஷயங்களை மகா சீரியசாக சொல்லுவது என அவர் நிச்சயம் ஒரு அடாவடி பார்ட்டி அனுதினமும் அவரும் பேசுகின்றார், ஆளாளுக்கு அவரின் தலைமுடி முதல் செருப்பு வரை கலாய்க்கின்றார்கள் ஆனால் கொஞ்சமும் கலங்காமல் மிக தைரியமாக […]

அக்குடும்பம் ஒரு இசைகுடும்பம்

இளையராஜாவின் பிறந்தநாளில் டிவி முதல் ரேடியோ வரை அவரின் பாடல்களே ஓடுகின்றன, அற்புதமான பாடல்கள் இளையராஜா பற்றி குறிப்பிடும்பொழுது அவரின் சகோதர் கங்கை அமரனை குறிப்பிடாமல் இருக்க முடியாது, நிச்சயம் இளையராஜாவில் அவர் பாதி அவரில்லாமல் இளையராஜா முழுமை அடைய முடியாது, ஆனால் சூரிய வெளிச்சத்தில் நிலா தெரியாது என்பது போல கங்கை அமரன் வெளிச்சம் பெறவில்லை வரதராஜன், பாஸ்கர் போன்ற மற்ற சகோதரர்களும் இசைகலைஞர்கள் ஆனால் பெரிதும் வெளிதெரியவில்லை (இளையராஜாவின் சரிவு கங்கை அமரன் பிரிந்தபின்னே […]

இளைய ராஜா 75

1970கள் வரை தமிழக இசை குறிப்பாக திரைஇசை கர்நாடக சங்கீதத்திலேதான் சிக்கி இருந்தது, அதாவது கர்நாடக இசைவடிவிலேதான் பாடல்களும்,பிண்ணனி இசை எல்லாமே அமைந்திருக்கும், தவறென்று சொல்லுவதற்கில்லை. காரணம் இசை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது அக்காலம் வகுத்திருந்த விதி. 1975களில் இந்திதிணிப்பு தமிழகத்தில் தடுக்கபட்டிருந்தாலும், இந்திபாடல்கள் தாக்கம் ஆரம்பமானது, பெரியாரும் இல்லை,அண்ணாவுமில்லை. இந்தியை எதிர்த்தார்களே தவிர, இந்தி இசை வரவேற்பினை பெற்றகாலம். அப்பொழுதுதான் மக்களின் இசையாக, தமிழரின் ஆதி இசையின் பிரதிபலிப்பாக, உண்மையான கிராமத்து பண்ணாக அறிமுகமானார் […]

நாட்டில் ஒரு செய்தியினையும் நம்ப முடியவில்லை

நாட்டில் ஒரு செய்தியினையும் நம்ப முடியவில்லை, நான் நீங்கள் யார்? என ரஜினியினை கேட்கவே இல்லை என்கின்றான் சம்பந்தபட்டவன் பின் எங்கிருந்து இவ்வளவு வீடியோக்களும் அவசர செய்திகளும் வந்தன? உண்மை வாசலை தாண்டுமுன் பொய் ஊரை சுற்றிவிடும் என்பார்கள், நிலமை அப்படித்தான் இருக்கின்றது. துப்பாக்கி சூடு நடந்து ஸ்டெர்லைட்டும் மூடபட்டபின்னால் காவல்துறையினை சிலர் தாக்கிய கொடூர வீடியோக்கள் வருகின்றன‌ காவல்துறையினர் கொடூரமாக தாக்கபட்டிருக்கின்றனர் என்பது தெரிகின்றது எது உண்மை? எது பொய் என குழம்பினால் ஒரு மண்ணும் […]

இந்திராவிற்கு எதிராக மல்லுகட்டிய பெரும் வீரன்

இந்திராவிற்கு எதிராக மல்லுகட்டிய பெரும் வீரன் என வரலாறு சொன்னது அமைதிபடை, சிங்களபடை நடுவே துப்பாக்கி ஏந்தி கடல் கடந்தவன் நான் ராஜிவ் கொலையிலே நான் குற்றம்சாட்டபட்டேன், கலைஞரை கொலை செய்ய முயன்றேன் என என்னை கட்சியினை விட்டு விரட்டினார்கள் ராஜிவ் கொலை நடந்த பின் சிபிஐ விசாரணையில் அகப்படாமல் புலிகள் தமிழகத்தில் சயனைடு கடித்தபொழுது என்னிடம் சொல்லாமல் வீரசாவு அடைந்ததில்லை, அப்படி ஒரு மாபெரும் கொலை தளபதியாக இருந்தேன் இப்படி எல்லாம் பெரும் வீரனான என்னை […]

போராடிய பொதுமக்களை ரஜினி சமூக விரோதிகள் என சொல்லவே இல்லை : தமிழிசை

பட்டம் மேல் இந்தியா என எழுதி இருகின்றேன், என் ஆட்சியில் உயர்ந்திருக்கின்றது இந்தியான்னு நீங்க சொல்லணும் சரியா? அதை எங்க ஆட்கள் ஊரெல்லாம் சொல்லி சந்தோஷபடுவாங்க‌..” (பெட்ரோல் விலை உட்பட ஆயிரம் பிரச்சினை இருக்கும்பொழுது இவர் பட்டம் விட்டு விளையாடிகொண்டிருக்கின்றார் இந்தியா எரியும்பொழுது மோடி பட்டம் விட்டார் என இனி வரிகளை மாற்றிகொள்ளலாம்) போராடிய பொதுமக்களை ரஜினி சமூக விரோதிகள் என சொல்லவே இல்லை : தமிழிசை ரஜினிக்காக ரஜினி ரசிகர்கள் முட்டுகொடுப்பது நியாயம், சம்பந்தமே இல்லாமல் […]

ஓட்டம் பிடித்ததால் சென்னையில் பரபரப்பு

தங்கையை பெண் பார்க்க வந்தவர் திருமணமான அவரது அக்காவுடன் ஓட்டம் பிடித்ததால் சென்னையில் பரபரப்பு கே.பாலசந்தருக்கு கூட தோன்றாத சிந்தனை எல்லாம் இப்போது உள்ளவர்களுக்கு தோன்றுகின்றது அக்கா செட் ஆகிவிட்டார், தங்கையுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது, பின் எதற்கு அக்காவினை கூட்டி கொண்டு தனியே ஓட வேண்டும்? சுத்த விவஸ்தை கெட்ட மனிதராக இருப்பான் போலிருக்கின்றது…  

சேலைகட்டிய மோனலிசா

சேலைகட்டிய மோனலிசா இப்படித்தான் இருந்திருப்பாள் என பிரான்ஸ் உறுதிபடுத்திகொள்கின்றது ஷேக்ஸ்பியர் கண்ட டெஸ்டிமோனா இப்படித்தான் இருந்திருப்பாள் என ஐரோப்பா கண்ணால் கண்டு ஆச்சரியபட்டு கொண்டிருக்கின்றது… மானிட சாதியின் மாபெரும் கவுரவம் தலைவி…      

திருமுருகன் போன்ற பல திடீர் , குபீர் போராளிகளை எல்லாம் காணவே இல்லை

ஸ்டெர்லைட் போராட்டம் 13 உயிர்பலியோடு முடிந்திருக்க கூடாது என்பதுதான் சோகம், நிச்சயம் அப்பலி நடந்திருக்க கூடாது எனினும் இப்பொழுது ஸ்டெர்லைட் மூடபட்டாயிற்று அந்த அப்பாவிகள் 13 பேரும் ஸ்டெர்லைட்டை மட்டும் மூடப்பட சாகவில்லை, ஒரு சில முகங்களை அடையாளம் காட்டிவிட்டு செத்திருக்கின்றார்கள் அதனால் விழித்துகொண்ட உளவுதுறை மிக அட்டகாசமாக புள்ளிகளை குறி வைத்து கொடுக்கின்றது, அரசு தூக்குகின்றது வேல்முருகனை உள்ளே போட்டிருப்பதும், நாம் தமிழர் தும்பிகளை போட்டு சாத்த ஆரம்பித்திருப்பதும் இம்மாநிலத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் மக்கள் போராட்டம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications