பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவல்துறை என்பது மாநில அரசின் அடியாள்

ஸ்னைப்பர் எனப்படும் தொலைவில் இருந்து மிக சரியாக போராட்ட குழுவின் முன்னணிநபர்களை மண்டையில் சுடுவதெல்லாம் இஸ்ரேல் பாணி சந்தேகம் வராமல் இருக்க சிலரை கூட சுடுவார்கள் பாலஸ்தீனத்தில் அது அனுதினமும் இதைத்தான் செய்கின்றது ஒருகாலமும் இந்த பூமியில் அச்சாயல் நடக்காது என இறுமாந்திருந்தோம் இங்கெல்லாம் வானத்தை குறிபார்த்து சுடுதல், கண்ணீர் புகை வீசுதல், நீர் அடித்து கலைத்தல், முழங்காலுக்கு கீழ் சுடுதல் என்றுதான் விஷயம் இருந்தது. பொதுவான விஷயம் அதுதான் அந்த நம்பிக்கை எல்லாம் தகர்கின்றன. ஸ்னைப்பர் […]

மக்கள் மாறாமல் எதுவும் மாறாது…

அந்த 12 பேருக்கும் அழுதாகிவிட்டது, கண்ணீர் அஞ்சலி செலுத்தியாகிவிட்டது இங்கு போராடினால் நியாயம் கிடைக்கும் என்ற அந்த மூட நம்பிக்கை அவர்களை கொன்றிருகின்றது. கொலை பாதக ஆட்சியில் கொல்லமாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையில் செத்திருகின்றார்கள் சுட்டவர்களும் ஏதோ சீன ராணுவத்தை சுட்டது போல சுட்டிருக்கின்றார்கள். ஆயுதம் இல்லா மக்களை மிரட்ட வானை நோக்கி சுடுதல், காலுக்கு கீழ் சுடுதல், ரப்பர் குண்டுகளால் சுடுதல் போன்ற சில விதிமுறை உண்டு அதை எல்லாம் விட்டுவிட்டு முகத்தில் சுட்டிருக்கின்றார்கள், கொடுமதியாளர்கள், இரக்கமில்லா […]

ஸ்டெர்லைட் வரலாறு என்ன?

கலைஞர் முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என கத்திய பயல் எவனையும் தூத்துகுடி பக்கம் காணவில்லை இங்கெல்லாம் வரமாட்டான், காரணம் கொன்றது பழனிச்சாமி அரசு என்பதால் மெழுகு பிடிக்க, நினைவேந்த ஒரு பயலும் இல்லை ஆனால் ஈழம் என்றால் வருவார்கள், காரணம் இந்திய எதிர்ப்பு ஸ்டெர்லைட் வரலாறு என்ன? இங்கு அதனை வரவேற்றவர் ஜெயலலிதா, ஆனால் சில கட்டுபாடுகளை விதித்தார் பின்னாளைய திமுக அரசு அதனை தளர்த்தியது, குறிப்பாக ஸ்பெக்ட்ரம் நாயகன் ஆ.ராசா, சுற்றுசூழல் அமைச்சராக இருந்தபொழுது ஸ்பெக்ட்ரம் பல […]

தமிழக துப்பாக்கி சூடு வரலாறு

துப்பாக்கி சூடு கலாச்சாரம் வெள்ளையனுக்கு பின் இங்கு பக்தவச்சலம் காலத்தில் வந்தது, திமுகவின் வீரம் செறிந்த போராட்டத்தை ஒடுக்க பக்தவச்சலம் துணை ராணுவபடையினை வரவழைத்தார் கிட்டதட்ட 64 பேர் செத்தார்கள், தமிழகம் கண்ட மாபெரும் துப்பாக்கி சூடு அது. ஆனால் அதுதான் இங்கு இந்தியினை விரட்டியது. சந்தேகமில்லாமல் ஆட்சியினை மாற்ற திமுகவிற்கு உந்து சக்தி ஆனது. மக்கள் மனதில் திமுக இடம்பெற்றது அதில்தான் அதன் பின் கலைஞர் ஆட்சியில் துப்பாக்கி சூடு எல்லாம் இல்லை, பொதுவாக எப்பிரச்சினை […]

கொல்றவனோட கஷ்டம் கொல்றவ்னுக்குத்தான் தெரியும்

மோடிஜி சின்ன தப்பு நடந்துட்டு, ஸ்டெர்லைட் போராட்டத்துல சுட்டுபோட்டங்க, 12 பேர் செத்துட்டாங்க. இதுக்கு போய் நாங்க பதவி விலகணும்னு சத்தம் வருது, அய்யா சமூகம் பார்த்துகோங்க‌ அரே பாய்ஸ், நம்பிள் குஜராத்ல நிறைய பேரை கொன்னுட்டு இப்போ பிரதமரா இருக்குது. இப்பவும் நிறைய கொல்லுதுன்னு நாடு சொல்லுது கவலைபடாதீங்கோ. கொல்றவனோட கஷ்டம் கொல்றவ்னுக்குத்தான் தெரியும் அவஸ்சரபட்டு நிம்பிள் 2 பேரும் போய்ட்டா நம்பிள் என்ன செய்வான்? உங்க்ளே மாத்ரி எவன் கிடைப்பான்?  

தொடரும் ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துகுடியில் நடந்து கொண்டிருக்கும் கொடூர நிகழ்விற்கு கலவரம் என்றும், அதை அரசு அடக்குகின்றது அதில் சிலர் பலி என செய்தி சொல்லிகொண்டிருக்கின்றார்கள் திருத்தபட வேண்டிய வரி இது, மக்கள் தங்களுக்குள் அடித்தால் மட்டுமே அது கலவரம், இது ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற மக்களின் குரலுக்கு அரசு தன் ஆயுதபடை மூலும் அரக்கதனமாக தடை செய்யும் கொடூர சம்பவம் அதாவது இது எங்களை கொல்லும் ஆலை என மக்கள் தடுத்தால், ஆலையால் சாவுங்கள் இல்லை தடுத்தால் நாங்கள் சுட்டுகொல்வோம் […]

கலைஞர் எத்தனையோ போராட்டம் நடத்தினார், கைதானார்

கலைஞர் எத்தனையோ போராட்டம் நடத்தினார், கைதானார் ஒரு இடத்தில் கூட நான் கைதாக மாட்டேன், முன் ஜாமீன் வேண்டும் என கேட்டதே இல்லை, அது அவமானம் என்பதும் அப்படி கேட்பவன் பொதுவாழ்விற்கு தகுதியற்றவன் என்பதும் அவருக்கு தெரியும் நள்ளிரவு கைது சர்ச்சையில் கூட நேரே நீதிபதி வீட்டிற்கு சென்று நீதிகேட்டாரே தவிர முன் ஜாமீன் பின் ஜாமீன் எல்லாம் கேட்கவில்லை ஒவ்வொரு போராட்டத்தையும் முன்னின்று நடத்தி முதல் ஆளாக சிறைக்கு சென்ற தலைவன் அவர் மிசா கொடுமையில் […]

800 தமிழ்பள்ளிகளை மூடபோகின்றார்களாம்

800 தமிழ்பள்ளிகளை மூடபோகின்றார்களாம் இது யார்காலத்தில் திறந்த பள்ளிகள் என்றால் காமராஜர் காலத்தில் திறக்கபட்டவை, தமிழ்வழி பள்ளிகள் திராவிடம் காக்க வந்த கட்சிகள் ஊரெல்லாம் ஆங்கிலபள்ளியினை திறந்து தாங்களும் தங்கள் கட்சியும் கல்லாகட்ட புறப்பட்டபின் இப்பள்ளிகள் வீழ்ச்சி அடைந்து இப்பொழுது மூடபடுகின்றன‌ மிக நுட்பமாக கல்வியினை தனியார்மயம் ஆக்கிவிட்டார்கள் இனி மீதமிருக்கும் தமிழ்பள்ளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மூடபட்டு தனியார் ஆங்கில பள்ளியே இனி எஞ்சியிருக்கும் தமிழும் செத்து, தமிழ்பள்ளிகளும் செத்தாயிற்று ஏதும் கேட்டால் உனக்கு திராவிட சிந்தனை […]

பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்: டெல்லி பேராயர்

பா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்”: பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம் தான் வாழ்ந்த காலத்தில் தன்னை ஆண்ட ரோமருக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசாதவர் இயேசு கிறிஸ்து தன்னை கொல்ல உத்தரவிட்ட பிலாத்துவிடமே “இந்த அதிகாரத்தை உனக்கு கொடுத்தது கடவுளே” என்றவர் அவர் கடவுளே அரசுகளை ஏற்படுத்துகின்றார், கடவுளே சரிக்கின்றார் என்றவர் கிறிஸ்து. உலகை கடந்த ஞான நிலை அது அப்படிபட்ட மகா பெரிய ஞான‌ அவதாரத்தின் சீட கோடிகள் இப்படி சுயநலகும்பலாக மாறிவிட்டது மாபெரும் சோகம் […]

நாம் நிச்சயம் திமுக அல்ல

நாம் நிச்சயம் திமுக அல்ல, ஆனால் ஈழவிவகாரங்களில் திமுகவினை சாடுவது சுத்தமாக ஏற்றுகொள்ளமுடியா விஷயம் என்றுதான் பதிவுகளில் சொன்னோம் நம் பதிவுகளால் பலருக்கு புதிய கோணம் கிடைத்ததாக சொல்கின்றார்கள், அப்படி யாரும் பெற்றிருந்தால் நல்லது இத்தேசத்தின் குடிமகனாக என்ன சொல்லவேண்டுமோ அதனைத்தான் சொன்னோம் சிலர் நீ இதனை புத்தகமாக எழுதினால் என்ன? என கேட்கின்றார்கள், இன்றல்ல 2010லே எழுதும் விருப்பம் இருந்தது ஆனால் அப்படி எழுதினால் உன் வீட்டின் முன் தீகுளிப்பேன் என பகிரங்கமாக மிரட்டினார்கள். கொளுத்துவோம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications