பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அதிமுக கட்டுகோப்பினை கலைஞர்தான் காத்திருக்கின்றார்

எவ்வளவு பெரும் படையாக இருந்தாலும் பொது எதிரி இருக்கும் வரைதான் ஒன்றாய் இருக்கும், வெற்றி கிடைத்தால் தங்களுக்குள் மோதுவார்கள் இது அலெக்ஸாண்டர் காலத்திலே இருந்து அவனும் தன் அரசை எல்லாம் பிரித்துகொடுத்துவிட்டுத்தான் செத்தான், வரலாறெங்கும் இந்நிகழ்வு காண கிடக்கின்றது ஈழப்போரில் கூட சமாதான காலத்தில் புலிதளபதிகளுக்குள் சண்டை வருகின்றது, போர்தொடங்காமல் இந்த சண்டை தீராது என்றுதான் அவசரபட்டு பிரபாகரன் சண்டை தொடங்கி புலிகள் அழிந்தனர் இந்த இந்தியா கூட முன்பு பிரிட்டனுக்கு எதிராக பொங்கி அவன் சென்றதும் […]

ஓவிய ராஜா ரவிவர்மன்

ஓவிய கலையில் பண்டைய இந்தியா சிறந்திருந்தாலும் , தென்னிந்தியாவில் அது சிற்ப கலையாகவே வளர்ந்து நின்றது. கல்லில் வடிக்கும் ஓவியங்கள் காலத்திற்கும் நிலைக்கும் என தமிழரின் கலை அதை நோக்கியே இருந்தது சோழ சாம்ராஜ்யம் கொடிகட்ட பறந்த காலங்களில் பசி ஒழிந்து செல்வம் நிறைந்து, பாதுகாப்பும் நிறைந்த காலங்களில் தஞ்சை கலைகளின் தலைநகரமாயிற்று. அப்பொழுது கரை நாடக இசை, சிற்பம், பாடல், ஓவியம் , கட்டட கலை என அது மிக உச்சத்தில் இருந்தது அப்பொழுதுதான் தஞ்சாவூர் […]

உலகம் நிம்மதியாய் இருக்கவே கூடாது : அமெரிக்கா

உலகம் நிம்மதியாய் இருக்கவே கூடாது என்பதில் அமெரிக்காவிற்கு அக்கறை என்றுமே அதிகம், அதன் பங்களிப்பு இன்றி கடந்த 70 வருடங்களில் நேரடி போரும் இல்லை, மறைமுக போரும் இல்லை பாகிஸ்தானை வளர்த்ததே அவர்கள்தான், அவர்கள் மட்டும் இல்லையெனில் இன்று பர்மா வங்கதேசம்போல பாகிஸ்தான் எனும் மேற்கு இந்தியா பராரி தேசமாகியிருக்கும் அப்படிபட்ட அமெரிக்கா வடகொரியா தென்கொரியா சமாதனமாக போக தொடங்கியிருக்கும் பொழுது முதலில் வாழ்த்தினாலும் பின்பு பல்லவியின மாற்றுகின்றது அணுகுண்டு இல்லை என்றாலும் வடகொரியா மீதான பொருளாதார […]

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் பார்க்க போகலியா?

தம்பி மதுரையில் மீனாட்சி திருகல்யாணமாம், பார்க்க போகலியா? அட போங்கண்ணே நீங்க வேற ஏண்டா? “மீனாட்சிக்கெல்லாம் வருஷம் வருஷம் தவறாம கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க அங்க ஒரு பயலும் இல்லண்ணே, நான் என்ன வருஷா வருஷமுமா கேக்க போறேன்?, ஒரு வாட்டிதாண்ணே கேக்குறேன். இத சொன்னால் நான் பெரியாரிஸ்ட்ன்னு அடிக்க வாராங்கண்ணே” எல்லா பகுத்தறிவும் அவனவனின் சொந்த பிரச்சினையிலே பிறக்கின்றது எனபது தம்பி  Omm Prakash என்பவரோடு பேசும் பொழுது புரிந்தது மதுரை, […]

சீனா சொல்லவரும் விஷயம் இரண்டு, அன்று மாவோ சொன்னவைதான்

அரசியல் சந்திப்புகள் நடக்கும் இடங்கள் எப்பொழுதுமே கவனிக்கபடுபவை முன்பு அராபத் அமெரிக்காவின் கேம்ப் டேவிட் எனப்படும் இடத்தில் சந்தித்து பாலஸ்தீன பிரச்சினை பற்றி பேசுவார், கேம்ப் டேவிட் என்றால் தாவீதின் இல்லம் என பொருள் தாவீது அரசர் யூதர்களின் ஹீரோ என்பதால் இது எங்கள் வீடு என்பது போன்ற அர்த்தத்தில் அந்த கூட்டம் நடந்தது எல்லாம் பழம் கதை இப்பொழுது யுனான் நகரில் ஜின்பெங்கும் மோடியும் சந்திக்கின்றார்கள் ஏன் பீஜிங்கில் மோடியினை சந்திக்காமல் யுனானில் சந்தித்தார் ஜின்பெங் […]

ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?

ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?, பேராசிரியர் முருகனின் மனைவி ஆவேசம் இந்த நிம்மி ஆண்டி சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யபடுகின்றனர், அப்படி நிம்மிக்கு உதவினார் என இன்னொரு பேராசிரியரும் கைதாகி இருக்கின்றார் அவர் பெயர் முருகன் முருகன் மாணவிகளுக்கு போன் எல்லாம் செய்யவில்லை என்றாலும், நிம்மிக்கு உதவினார் என விசாரிக்கின்றார்கள் முருகனின் மனைவி கொதிக்க தொடங்கிவிட்டார், யாரையோ பாதுகாக்க தன் கணவனை பலிகொடுக்கின்றார்கள் விடமாட்டேன் என பொங்கிவிட்டார் கண்ணகி பிறந்த மண் என்றால் சும்மாவா? […]

சிரியா வேறு வகை

அமெரிக்காவின் முக்கிய குறியில் லிபியா, வடகொரியா, ஈரான் என மூன்று நாடுகளும் அமெரிக்காவின் குறியாக இருந்தன, காரணம் 3 நாடுகளும் அணுகுண்டு பெற தலைகீழாக நின்றவை சிரியா வேறு வகை இதில் வடகொரியாவின் அணு நுட்பமும், ஏவுகனை நுட்பமும் ஈரானுக்கு உதவியாக இருந்தவை என்பதால் வடகொரியா மேல் அவ்வளவு கோபம் இருந்தது லிபியா விவகாரத்தை கடாபியினை கொன்று முடித்துவிட்டார்கள், இல்லை என்றால் இந்நேரம் கடாபியும் அணுசோதனை எல்லாம் நடத்தி இருக்கலாம் இப்பொழுது வடகொரியா தன் தலைக்கு முழுக்கு […]

அஸ்ராம் பாபு சாமியார் அட்டகாசம் ஓயவில்லை

இந்த அஸ்ராம் பாபு சாமியார் அட்டகாசம் ஓயவில்லை, அவருக்கும் பிரேமானந்தாவிற்கும் ஒரே ராசி பிரேமானந்தா இலங்கையிலிருந்து வந்தார்,இந்த அஸ்ரம் பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தார். சாமியாராகிவிட்டால் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் அல்லவா அப்படியே இருவரும் சம்பாதித்தனர் சம்பாதித்துவிட்டு என்ன செய்ய வேண்டும்? பெண் தொடர்பில் மாட்ட வேண்டும் , அதை இருவரும் சமத்தாக செய்தார்கள் இப்போது அஸ்ரம் சாமி சிறையிலிருந்து தன் பக்தர்களுக்கு ஆறுதல் மொழி சொல்லிகொண்டிருக்கின்றார் அது வாட்சப்பில் எல்லாம் வருகின்றதாம் சிறையிலிருந்து சாமியார் […]

ஐநாவுக்கு வைகோ கடிதம்

காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை: ஐநாவுக்கு வைகோ கடிதம் ராஜிவ் கொலையில் வைகோவிற்கு பங்கு இருக்கின்றதா என விசாரிக்க நாமும் இன்டர்போலுக்கு கடிதம் எழுதிவிடலாம் அந்த 1500 கோடி விவகாரத்தை எந்த நாட்டு போலிசுக்கு எழுதுவது? ஏற்கனவே ஈழ விவகாரத்தில் வைகோ ஐநாவில் நீதியினை நிலை நாட்டி ராஜபக்சேவினை கட்டி வைத்து அடித்ததால் இன்று இரவே காவேரி வர வாய்ப்பு உண்டு இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும். துருக்கிக்கும் ஈராக்கிற்கும் என பெரும் நாடுகளுக்கு இடையிலான […]

கோஹினூர் வைரம் போல குஷ்பூ

தலைவிக்காக ஆறுகால பூஜையும், சங்கத்தின் அன்றாட பணிகளும் மிக நன்றாக சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் ஒரு சிக்கல் வந்தாயிற்று அவர் பெயர் குஷ்பு இல்லையாம், நக்கத் கான் என்பதாம். ஆக சங்கத்து பெயரை மாற்றுவீர்களா என ஏகபட்ட கேள்விகள், குழப்பங்கள் பெயரில் என்ன இருக்கின்றது? தலைவி குஷ்பு தன் பெயரினை ஆணித்தரமாக நக்கத் கான் என சொல்லிவிட்டார். அவர் நக்கத் என்பது யாருக்கு தெரியாது? “நீ ஒரு இஸ்லாமிய பெண், உன் பெயர் நக்கத்” என பக்தாள்ஸ் சொன்னபொழுது, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications