பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிரியா போர்க்களம் ….

சிரியாவில் ரஷ்ய ஆயுதம் எப்படி வேலை செய்யும் என சோதிக்க அட்டகாச யுத்திகளை பயன்படுத்தியிருக்கின்றது அமெரிக்க‌ கோஷ்டி ஆளில்லா விமானங்களை பயன்படுத்தித்தான் தாக்குதல் நடத்தும் திட்டம் இருந்தது, ஆனால் உக்ரைன் போரிலே மேல்நாட்டு டிரோன்களை ஜாம் செய்யும் நுட்பம் ரஷ்யரிடம் இருந்ததால் அதனை அனுப்பவில்லை நள்ளிரவில் திடீரென புகுந்து குண்டுகளை வீசிவிட்டு வந்தன விமானங்கள், அதன் பின் விழித்துகொண்டது சிரிய தரப்பு இதன்பின் நிலமையினை சோதிக்க அமெரிக்க தரப்பு ஏவுகனைகளை வீசியிருக்கின்றார்கள், சிரிய தரப்பு பல ஏவுகனைகளை […]

இம்ரான்கானை குறிவைத்து அடிக்கின்றார்கள்

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் உண்டு, வோட்டு வங்கியில் சிறுபான்மையும் முக்கியம் அல்லவா? இது இம்ரான்கானையும் விடவில்லை, பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பழமையான சிவன்கோவில் பாதுகாக்கபட வேண்டும் என இம்ரான் சொல்லபோக அங்கு உடனே “பாகிஸ்தானின் பரம‌சிவனே” என அல்லக்கைகள் போஸ்டர் அடித்துவிட்டன‌ உதயநிதிக்கு வாய்த்த அல்லக்கைகள் போல பாகிஸ்தானிலும் இருக்கின்றன‌ விஷயம் பற்றி எரிகின்றது, இந்து கடவுளை கேவலபடுத்துகின்றார் இம்ரான் என சர்ச்சை வெடிக்கின்றன‌ தமிழகத்தில் சினிமாவில் ரஜினி, கமல் என பலரும் சிவன் வேடத்தை போட்டுவிட்டதால் […]

மறைமலை அடிகளார் தெரியாதா?

கலைஞருக்கு முன்பு மறைமலை அடிகளார்தான் தமிழருக்கு புத்தாண்டு தைமாதம் என சொன்னார் என்றால் அது யார்? என கேட்கினர் சிலர் அட பதர்களா? மறைமலை அடிகளார் தெரியாதா? திமுகவின் தமிழ்வெறிக்கும் போராட்டத்திற்கும் முதலில் வழிகாட்டியதே அவர்தான், அவர் போட்ட பாதைதான் பின்னாளில் அண்ணா கலைஞர் எல்லாம் தமிழுக்காக போராடவும், இது தமிழ்நாடு என உருவாகவும் காரணமாயிற்று அந்த பெருமகன் பெயர் வேதாச்சலம், நான் தமிழ்பெயர்தான் வைப்பேன் என தன்னை மறைமலை அடிகள் ((வேதம் = மறை, அசலம் […]

தமிழிசைக்கு இப்பொழுது ஏன் நினைவு வந்தது

அது 1977ம் வருடம் ராமசந்திரன் ஆட்சிக்கு வந்திருந்தார். நெருக்கடி நிலை இன்ன்பிற செயல்களால் இந்திய மக்களின் அபிமானத்தை இழந்திருந்த அவர் அதை மீட்டெடுக்க மாநிலமெங்கும் சுற்றுபயணம் செய்தார் அப்படித்தான் 20.10.1977ல் மதுரைக்கும் வந்தார். மிசா கொடுமையில் பெரும் சிக்கலை சந்தித்த திமுக , சிட்டிபாபு , சாத்தூர் பாலகிருஷ்ணன் போன்றோரை இழந்திருந்த திமுக அந்த வடுக்களின் நினைவாய் கருப்புகொடி போராட்டம் அறிவித்தது கலைஞர் முரசொலியில் இப்படி எழுதியிருந்தார் “ஒரு கையால் மிசாவில் பட்ட அடிகளினால் ஏற்பட்ட காயத்தை […]

சென்டிமென்ட் வேலை செய்கின்றது

பனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் அரசியல் வாழ்க்கைக்கு ஆயுள்கால தடை விதித்திருக்கின்றது பாகிஸ்தானிய உச்சநீதிமன்றம் பெரும் எதிரி என்றாலும் பங்காளி நாடு சில அட்டகாச முன்னுதாரணத்தை கொடுத்திருக்கின்றது, பாகிஸ்தானிடமிருந்து இப்படி நல்ல விஷயங்களை கற்பது ஒன்றும் தவறல்ல‌ ஒருமுறை திடீரென பாகிஸ்தானில் இறங்கி நவாஸை வாழ்த்தினார் மோடி, சென்டிமென்ட் வேலை செய்கின்றது சசிகலாவினையும் தலையில் கைவைத்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடதக்கது இந்த நவாஸ் சென்டிமென்ட் போலவே பழனிச்சாமியினை மோடி சந்தித்த சென்டிமென்டும் நடந்துவிட்டால் நன்றாக இருக்கும் […]

சிரிய யுத்தம் ஆரம்பம்

சிரிய யுத்தம் ஆரம்பித்தாயிற்று பிரிட்டனின் பி 52 ரக விமானங்கள் , பிரான்ஸின் மிராஜ் ரக விமானங்கள் டமாஸ்கஸ் மீது குண்டு வீச ஆரம்பித்தாயிற்று சற்றுமுன்புதான் குண்டு விழுந்தது என்கின்றன செய்திகள் சிரியா ரஷ்யாவின் ஏவுகனைகளை இன்னும் பயன்படுத்தவில்லை என்கின்றன இன்னொரு செய்தி விமான தாக்குதல் ஆரம்பித்து சில நொடிகள் ஆகின்றன, பெரும் யுத்தம் ஒன்று தொடங்கியாயிற்று செய்திகள் வர வர தருகின்றோம் சிரியாவின் மீதான அமெரிக்க கூட்டணி தாக்குதலை வன்மையாக சாடுகின்றது ஈரான் அது எந்நேரமும் […]

கம்பன் கண்ட சீதை

கம்பன் விழா பற்றி சொல்லும்பொழுது ஒரு தகவல் உறுதிபடுத்த முடிந்தது, கம்பன் விருது என ஒன்று தமிழக அரசால் உருவாக்கபட்டு தமிழ் அறிஞர்களுக்கு வழங்கபட்டு வருகின்றது கம்பனை தமிழக அரசு மறக்கவில்லை என்பது மகிழ்ச்சி கம்பன் விருதை தமிழறிஞரில் சிறந்தோருக்கு வழங்கலாம், ஆனால் “கம்பன் கண்ட சீதை” விருதை தலைவியினை தவிர யாருக்கு வழங்க முடியும் கம்பன் கண்ட சீதை தங்க தலைவி குஷ்பு சங்கத்தின் சார்பாக, இன்று கொண்டாடியே தீருவோம் என அடம்பிடிக்கும் தமிழருக்க்கு புத்தாண்டு […]

தமிழருக்கு தமிழ்புத்தாண்டு தைமாதம் என சொன்னவர் கலைஞர் அல்ல‌

தமிழருக்கு தமிழ்புத்தாண்டு தைமாதம் என சொன்னவர் கலைஞர் அல்ல‌ அவர் பிறக்கும் முன்பே இருந்த கருத்து அது. அக்கால தமிழறிஞர் பலர் அக்கருத்தை வற்புறுத்திகொண்டே இருந்தனர் தமிழருக்கு பருவகாலங்களை மாதமாக கண்டவர்கள் பருவ சுழற்சி வடிவிலே வருடத்தை சொன்னார்கள். தை என்றால் நாற்று அல்லது தொடக்கம் என பொருள். சித்திரை முதல் பங்குனி வரையான மாதங்களும். இந்த 60 சமஸ்கிருத பெயர்களும் தமிழ்பெயர் அல்ல‌ தைமாதம் தமிழ்புத்தாண்டு என்பது மறைமலை அடிகள் கூட்டம் போட்டு, பல தமிழறிஞர்கள் […]

இட ஒதுக்கீட்டை மறுபரீசீலனை செய்தே தீரவேண்டும்

“இட ஒதுக்கீடு இன்று தாழ கிடக்கும் குடும்பங்களை மேலே கொண்டுவரை செய்யபடும் முயற்சி. இது 3 தலைமுறைக்கு மேல் தொடர்ந்தால் குறிப்பிட்ட‌ இனமே தொடர்ந்து மே. எழும், மற்ற இனங்களுக்கு அவை சிக்கலை ஏற்படுத்தும் தாழ கிடக்கும் மக்கள் மேலேழும்பி வர இது ஒரு வாய்ப்பு, அப்படி எழும்பிவிட்டால் பின்னாளில் இட ஒதுக்கீட்டால் மட்டும் அவர்கள் வாழும் வாய்ப்பு இராது, எல்லா வாசலும் திறந்திருக்கும் அதனால் கொஞ்சகாலத்திற்கு பின் இட ஒதுக்கீட்டை மறுபரீசீலனை செய்தே தீரவேண்டும்” அம்பேத்கரின் […]

இரண்டாம் புத்தன் அம்பேத்கர்

இரண்டாம் புத்தன். இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான். தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது. அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த கொடுமையான […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications