பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சைமனின் ஸ்கோர் எகிறும் நேரமிது

தமிழ் பேசினால் தமிழ் வாழாது, ராமசந்திரன் கொடுத்தது நல்லாட்சி என ரஜினி சொன்னாலும் சொன்னார், பாதாளத்தில் கிடந்த சைமனுக்கு வடம் கிடைத்தாயிற்று சர்ர்ரென மேலேறி வந்துவிட்டார் என்னது தமிழ் பேசினால் தமிழ் வளராதா? கன்னட புத்தி இது என சீறிவிட்டு ராமசந்திரன் உருப்படாத ஆட்சி கொடுத்தார் என வரிந்து கட்டுகின்றார் சைமன் ஆம், எங்கள் அண்ணன் அப்பொழுதே ரஜினியினை எச்சரித்தார் என மண்டியிட்டு ஆனந்த கண்ணீர் சிந்துகின்றன தும்பிகள் சைமனின் ஸ்கோர் எகிறும் நேரமிது ஆக ரஜினி […]

இப்படியும் ஒரு பார்வை…..

அண்ணே ராமசந்திரன் ஒரு வள்ளல், அவர் வீட்டுக்கு போனால் சாப்பிட வைக்காமல் விடமாட்டார் அப்படியா? ஆமாம் அவர் வீட்டுமுன்னால் தினம் 200 பேர் அவரை பார்க்க நிற்பார்களாமே, அவர்களை எல்லாம் அழைத்து சாப்பிட சொல்வாரா? இல்லை, அவரை சந்திக்க அனுமதிபெற்றவர்களை மட்டும் சாப்பிட சொல்வார் யாரெல்லாம்? ம்ம் தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், கட்சிக்காரர்கள், சினிமாகாரர்கள் இவர்கள் எல்லாம் சோற்றுக்கு இல்லாதவர்களா? இவர்கள் எல்லாம் ராமசந்திரனிடம் உதவிபெற்று ஊரெல்லாம் சொல்பவர்கள், ஆக அவர் செய்தது விளம்பரம் ம்ம் அப்படி அல்ல […]

லெனின் போன்றவர் சிலைகள் இங்கு இருக்க கூடாதாம்…..

இந்தியாவில் பிறந்த காந்திக்கும், விவேகானந்தருக்கும் உலகெல்லாம் சிலை இருக்கலாம் அதில் விவேகானந்தர் சிலையினை மோடியே மலேசியா போன்ற நாடுகளில் திறக்கலாம் ஆனால் லெனின் போன்றவர் சிலைகள் இங்கு இருக்க கூடாதாம் ஆப்கானிய தாலிபான்கள் புத்தரின் சிலையினை இடித்ததற்கும் இவர்கள் லெனின் சிலையினை உடைத்ததற்கும் வித்தியாசம் ஏதுமில்லை புனிதமான இஸ்லாம் மதம் காட்டுமிராண்டி கலாச்சாரம் கொண்ட ஆப்கானியரிடம் சிக்கி தன் பெருமைக்கு இழுக்கானது, அப்படியே அவர்களின் தொடர்ச்சியான வட இந்தியர்களிடம் சிக்கி மிக புனிதமான இந்துமதம் களங்கத்தை தேடிகொண்டிருக்கின்றது […]

எந்த மக்கள் போராட்டத்தை நடத்தினார் ரஜினி?

“ரஜினியிடம் என்ன குறை கண்டாய், நீ திமுக என்பதை ஒப்புகொள் , எம் தலைவனை நினைத்து அஞ்சுகின்றீர்களா ?” என்றெல்லாம் பல ரஜினியின் குஜிலன்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன‌ ரஜினியின் பலம் என்ன என்பது ராமதாஸ் கும்பல் பாபா படபெட்டி தூக்கும்பொழுதே தெரிந்தது. ஆனானபட்ட பிரபாகரனையே விமர்சித்த எமக்கு ரஜினி எல்லாம் கணக்கிலே இல்லை, எனினும் நீவீர் கேட்டதால் அதிருப்திகளை சொல்கின்றோம் ஒரு மனிதன் 24 வருடமாக அரசியலுக்கு வருவேன் என சொல்லிகொண்டே இருக்கின்றான், அவன் இப்பொழுது உறுதியாக […]

பெரியாரின் குரல் …..

“சிலை வெறும் கல், அதை வணங்குபவன் காட்டுமிராண்டி பயல்னு நான் தான் சொன்னேனுங்க. அதுக்காக இந்த பயலுக எல்லாம் உன் சிலை கல்லுதானே உடைப்போம்னு வந்துட்டானுக‌ இவனுக இந்த அளவு சிந்திச்சி அறிவோட வந்தது சந்தோஷமுங்க‌ ஆனா இதே பகுத்தறிவோட கோவில்ல இருக்க சிலை எல்லாம் உடைச்சிட்டு இங்க வந்து என் சிலைய இடிங்கடான்னா ஓடிரானுக‌ என் சிலைய இடிக்க பொங்கி வழியிற பகுத்தறிவு அவனுக சாமி சிலைய உடைகிறது இல்லீங்க, இதெல்லாம் கலவரம் நடக்கணும்னு செய்ற […]

வெற்றி.. வெற்றி.. மாபெரும்.. வெற்றி

வெற்றி.. வெற்றி.. மாபெரும்.. வெற்றி பெரியார் சிலை உடைப்பேன் என கருத்து பதிவு செய்த எச்.ராசா என்பவர் , எழுந்த பெரும் எதிர்ப்புக்கு அஞ்சி தன் கருத்தை நீக்கி பின்வாங்கிவிட்டார் பொங்கிய தமிழகத்தை கண்டு, அவருக்கும் கட்சி கருத்துக்கும் சம்பந்தமில்லை என தமிழிசை உட்பட பலர் கரிபூசிய பின் ராசா இப்படி பயந்து ஓடியிருக்கின்றார் இனி அவர் தமிழகத்தை விட்டு ஓடிவிடுவது அவருக்கு நல்லது, இல்லாவிட்டால் பெரியார் சிலையில் பிடித்து கட்டி வைத்துவிடுவார்கள் இந்த வெற்றிக்கு பெரும் […]

தலைவி பின்னுகின்றார், சங்கம் களி உவகை கொள்ளும் நேரமிது

தலைவி பின்னுகின்றார், சங்கம் களி உவகை கொள்ளும் நேரமிது. அமித்ஷாவும், மோடியும் இதற்கு பதில் சொல்லபோகின்றார்களா இல்லையா? தலைவியின் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லா அந்த இரட்டையர்களை கடுமையாக கண்டிக்கின்றோம். இதற்கு தகுந்த விளக்கமளித்து ராசாவினை மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் அல்லது தமிழக‌ பாஜக கட்சியினை கலைக்க வேண்டும் (அது இருந்தும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்) என சங்கம் மிக கடுமையான கோரிக்கை வைக்கின்றது. இதி நிறைவேற்றபடாவிட்டால் மிகபெரும் நெருக்கடியினை பாஜக சந்திக்க நேரும் வாழ்க தலைவி, […]

எங்களைத் தாண்டி பெரியார் சிலையின் நிழலைக் கூட தொட முடியாது : குஷ்பு ஆவேசம்

  அப்படி சொல்லுங்கள் ராசாத்தி இந்த முதல்வர், எதிர்கட்சி தலைவர் இன்னும் புதிதாக வந்த ரஜினி , கமல், அழிச்சாட்டிய திருமா கோஷ்டி என யாரும் தில்லாக பதில் சொல்லா நிலையில் மிக துணிச்சலாக சவால் விடுகின்றார் தலைவி தங்க தலைவி என ஏன் அவரை கொண்டாடுகின்றோம் என்றால் இதற்காகத்தான், இந்த மாபெரும் துணிச்சலுக்குத்தான் எங்களின் உயிரும் தமிழகத்தின் விடிவெள்ளியுமான தலைவியே அவர்கள் உங்களை மீறி சிலையினை தொடுவது இருக்கட்டும், முதலில் எங்களை தாண்டி அல்லவா உங்களிடம் […]

தலைவி மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்

ரஜினிபற்றி எழுதிவிட்டதால் அவரின் ரசிகர்கள் எல்லாம் வெளிநடப்பு செய்கின்றார்கள், சிலர் சொல்லிகொண்டும் பலர் சொல்லாமலும் ஓடுகின்றார்கள் இவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்றால் சைமன் ரஜினியினை கண்டித்து பேசிகொண்டிருந்தபொழுது நாம் ரஜினி நம்மில் ஒருவர் என சொன்னபொழுது ஓடிவந்தார்கள் இப்பொழுது ரஜினி ராமசந்திரனை பற்றி புளுகுமூட்டை அவிழ்த்ததை சொன்னதும் ஓடிவிட்டார்கள் ஓடட்டும், ஒரு பய இல்லாமல் ஓடிவிடவேண்டும் ஆமாம். மனதிற்கு சரி என பட்டதை பதிவோம், யாருக்காகவும் எதற்காகவும் கண்டிக்க வேண்டிய விஷயங்களை விட முடியாது, உண்மையினை உரக்க […]

இலங்கை கண்டி மாவட்டத்தில் கலவரம்

இலங்கை கண்டி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டாயிற்று, அடிதடி சாவு, ஊரடங்கு உத்தரவு என்ற நிலை வந்தாயிற்று. வழக்கமாக இலங்கையில் யாரும் தும்மினாலே இங்கு “டண்டனக்கா “ஆடுபவர்கள் யாரும் இப்பொழுது சத்தம் இல்லை ஏன்? இந்த சண்டை தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் சிங்களர்களுக்குமானது இவர்கள் இருவரையும் ஈழதமிழர்களுக்கு பிடிக்காது அதனால் இங்கு பூரண அமைதி இனி தமிழக‌ இஸ்லாமிய இயக்கங்கள் அவர்களுக்காக கொடிபிடிக்கலாம், பெரும் ஆர்பாட்டம் நடத்தலாம் அதற்கு இலங்கை தமிழரிடமிருந்து சுத்தமாக ஒரு வரவேற்பும் இருக்காது இவ்வளவிற்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications