பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிரியாவில் மாபெரும் மனித பேரழிவு நடக்கின்றது

சிரியாவில் மாபெரும் மனித பேரழிவு நடக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாட்டில் பலமான அரசு அமையாவிடால் இதுதான் நடக்கும் சிரியா பழம்பெருமை மிக்க நாடு, போர்கள் அதன் அன்றாட நிகழ்வு , தாவீது மன்னனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே அது ரத்தபூமி, அலெக்ஸாண்டர் காலம் முதல் அதன் அழிவு அதிகம், ரோமானியர் காலமும் அப்படியே சிரியா அமைதியான காலமெது என்றால் புனிதமான கலீபாக்கள் ஆட்சியும், அதனை தொடர்ந்த மாமன்னன் சலாவுதீன் ஆட்சியில் மட்டுமே […]

ஏழையாய் பிறந்துவிட்டால் எந்த பாதுகாப்பும் இந்நாட்டில் இல்லை…

அரிசி திருடினான் என்பதற்காக ஒரு கொடூர கும்பல் ஒரு ஏழையினை கொன்றதும் அக்கும்பலை பிடித்ததாக கேரள அரசு சொல்கின்றது இங்கோ அந்த விதவை தாயின் மகன் கொல்லபட்டு, தாயின் கண்முன்னே அந்த சிறுமி அலங்கோலபடுத்தபட்ட மாபாதகமும் நடந்திருக்கின்றது யாரை கைது செய்தார்கள்? யார் பிடிபட்டார்? அரசு என்ன நடவடிக்கை எடுத்தது வேறு யார் செய்திருந்தாலும் குதிக்கும் விழுப்புரம் ஏரியா பாதுகாவலர் ராமதாஸ் இதில் சத்தமே இல்லை. ஆளும் கட்சி, எதிர்கட்சி, மய்யம், சுழியம், ஆன்மீகம், தமிழ்தேசியம் என […]

அமெரிக்க இனபாகுபாடு கொடுத்த‌ கொடூர சிகிச்சை அது ….

ஸ்ரீதேவி நிறைய சர்ஜரி செய்தார், நிறைய ஆப்பரேஷன் செய்தார் அதுதான் அவர் உடல்நிலை கெட காரணம் என பலர் கிளம்பியாயிற்று அதில் உண்மையும் இருக்கலாம், எக்காலமும் ஒரே அழகுடன் இருக்க அவர் என்ன குஷ்புவா? ஸ்ரீதேவி இப்படித்தான் , மைக்கேல் ஜாக்சனும் இப்படித்தான் என பலர் சொல்கின்றார்கள் ஸ்ரீதேவி தன்னை நடிப்பில் நிரூபித்துவிட்டு, உச்ச இடம் சென்றுவிட்டு தன் அழகினை காக்க போராடி இருக்கலாம் ஆனால் மைக்கேல் ஜாக்சன் நிலைவேறு, கருப்பன் என்பதற்காக அவன்பட்ட அவமானம் கொஞ்சமல்ல, […]

சிறு குறு செய்திகள் ….

ரஜினி-கமல் செய்த சேவை என்ன? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி அன்னார் நாட்டிற்காக பல வருடம் சிறைசென்றவரும், தன் சேவை தொண்டால் ஐ.நா விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது மிஸ்டர் ராஜூ, ராமசந்திரனும் ஜெயலலிதாவும் கேமரா முன் என்ன தொண்டு செய்தார்களோ, அதற்கு சற்றும் குறையாதது ரஜினி, கமல் செய்த தொண்டுகள் ராமசந்திரன் ஜெயா, மஞ்சுளா போன்றோரோடு சேர்ந்து எப்படி அளப்பரிய தொண்டு செய்தாரோ அதனையே ஶ்ரீதேவி, ஶ்ரீபிரியாவுடன் சேர்ந்து இவர்களும் மாபெரும் சேவை செய்தனர் போதுமா? […]

மலேசியாவில் நடக்கும் தாய்மொழி தின மாநாட்டில் முக ஸ்டாலின்

மலேசியாவில் நடக்கும் தாய்மொழி தின மாநாட்டில் முக ஸ்டாலின் கலந்து கொண்டார் : செய்தி முக ஸ்டாலினை தவிர திமுகவில் மொழிப்போர் தியாகிகளே இல்லை, அட திமுகவில் மட்டுமல்ல தமிழகத்திலே இல்லை என நம்பிகொள்ளுங்கள் மொழிப்போரிலும் ஸ்டாலின் பெரியபங்கு ஆற்றியதில்லை, மொழிக்கு புத்தகமோ இல்லை ஆராய்ச்சி கட்டுரையும் எழுதியதில்லை, தமிழுக்கு அவர் என்ன செய்தார் என்பதே தெரியவில்லை ஆனால் அவர்தான் சென்றிருக்கின்றார். இதற்கு கனிமொழி சென்றால் கூட 10% ஏற்றுகொள்ளலாம், அம்மணி புரியாத கவிதை எனினும் சிலவற்றை […]

சவார்க்கர் என்ற சுதந்திர போராளிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

  அந்த மனிதர் நிச்சயம் நாட்டுபற்றாளர், தேசாபிமானி. இந்த தேசவிடுதலைக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற வெறியில் வாழ்வினை அர்பணித்தவர் அந்த சாவர்க்கர். மிக சிறிவயதிலே அப்படி தொடங்கியவர். இந்நாடு சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அப்போது இருந்த 30 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும். மொழியால் அவர்களை இணைக்க முடியாது, ஆட்சி என்றாலும் 600 சமஸ்தானம் இருந்தது. இம்மக்களை இணைக்க மதம் ஒரு வழி என கண்டார் திலகர் அப்படி மத கொண்டாட்டத்தில் தேசவிடுதலையினை கலந்து அவர் தொடங்கியதுதான் […]

காஞ்சிபுர மர்ம முதியோர் இல்லத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மத்தியில் ஆளும் கட்சிதான் மாநிலத்திலும் மறைமுகமாக ஆளுகின்றது, சந்தேகமில்லை ஆனால் அந்த காஞ்சிபுர மர்ம முதியோர் இல்லத்தில் இன்னும் பெரும் நடவடிக்கை எடுக்காததும், முறையாக விசாரிக்காததும் பெரும் கேள்விகளை எழுப்புகின்றன‌ நடிகையின் மரணத்திற்காக அஞ்சலியும் , கண்ணீரும் விடும் ஊடகங்கள் அந்த அனாதை முதியவர்களுக்கு என்ன செய்கின்றன என்றால் ஒன்றுமே இல்லை இதில் எடுக்கும் நடவடிக்கை எல்லாம் சிறுபான்மையினர் நலன் என்ற வகையில் வந்து, வோட்டு வங்கியினை எல்லாம் பாதிக்காது என தெரிந்தும் அரசுகள் ஏன் வேடிக்கை பார்க்கின்றன […]

என்று இவரை சத்ரியனாக தமிழகம் பார்த்தது?

என்று இவரை சத்ரியனாக தமிழகம் பார்த்தது? அற்புதமான கவிஞனாக‌ மட்டும் பார்த்தது, அதன் பின் நான் கவிஞன் அல்ல காமெடியன் என அவர் நிரூபித்ததும் தமிழகம் அதை ஒப்புகொண்டது சிம்பு வரவுக்கு பின் சிம்பு டி.ஆரை கெடுத்தாரா? இல்லை டி.ஆர் சிம்புவினை கெடுத்தாரா? என பட்டிமன்றம் வைத்து தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது இதில் இவர் இனி சாணக்கியர் என நிரூபிப்பாராம், எப்படி ஒரு வேளை நீண்ட கூந்தலை வளர்த்து தலைவிரி கோலமாய் அலைவாரோ? சாணக்கியன் சந்திரகுப்தனை அமைச்சராக்கினான், […]

அமெரிக்காவில் சிகிச்சை பெறுகின்றார் விஷால்

அமெரிக்காவில் சிகிச்சை பெறுகின்றார் விஷால் மனிதர் மீது ராதாரவி 7 கோடி ரூபாய் மோசடி புகாரை இருநாட்களுக்கு முன்புதான் வாசித்தார், பொதுவாக தமிழக அரசியல்வாதிகள் நெஞ்சை பிடித்துகொண்டு இங்குதான் மருத்துவமனைக்கு ஓடுவார்கள், இவர் அமெரிக்காவிற்கே ஓடியிருக்கின்றார் என்ன நடந்திருக்கும்? ஆர்.கே நகரில் அரசியலில் இறங்க சொல்லி மிரட்டியது போல கட்சி தொடங்க‌ யாரும் மிரட்டியிருப்பார்களோ? இந்த விஷாலை எப்படி வர வைக்கலாம்? “இந்த தமிழ்சினிமா சென்டிமென்ட் படி அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்ற கலை உலகினர் யாரும் […]

தமிழிசைக்கு கொலை மிரட்டல்

தமிழிசைக்கு கொலை மிரட்டல் , அரியலூர் உடையாளர் பாளையத்தில் இருந்து கடிதம் வந்தது : செய்தி அந்த உடையார் பாளையத்து மடையர்கள் கொஞ்சமும் ரசனை இல்லாதவர்களா? இல்லை அரசியல் அறியா பதர்களா? தமிழிசை வெண்மனதிற்கு சொந்தக்காரர், மனதை பட்டதை பேசிவிடுகின்றாரே தவிர , வஞ்சகமாகவோ சூதாகவோ அவருக்கு பேச தெரியாது, அந்த சிந்தனையுமில்லை. அரசியலில் ஒரு இடத்திற்கு போராடுகின்றார் அது ஒன்றும் தவறேன்று சொல்லமுடியாது தமிழகத்தில் பாஜகவிற்கும் விழும் வசவுகளை அவர்தான் சுமக்கின்றார், எப்பொழுதாவது வரும் நல்லபெயர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications