பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நடிகையர் திலகம் சாவித்திரிக்கு கண்ணீர் அஞ்சலி

பல பெண்களின் விதி கொடுமையானது, அதுவும் நடிகைகளின் விதி மிகவும் கொடூரமானது , அந்த பெரும் அலையில் எப்படியோ நீந்தி, கிடைத்த கட்டையினை பிடித்து தப்பி சிலர் கரையேரலாம், சிலர் போராடிகொண்டே இருக்கலாம், சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக காற்றடித்து திசைமாறலாம் ஆனால் புகழின் உச்சத்தில் இருந்து, பெரும் செல்வாக்காய் வாழ்ந்து பின் குப்புற வீழ்ந்து வயதிலே பணமும், குடும்பமும் இன்றி குடிசை வாசியாக‌ செத்துகிடக்கும் விதி ஒரிரு நடிகைகளுக்கு அமைந்துவிடுகின்றது அந்த ஓரிருவரில் சாவித்திரியும் ஒருவர். 15 […]

சி.பா ஆதித்தனாரின் ஊடக எழுத்து நடை பாட திட்டத்தில் ….

சி.பா ஆதித்தனாரின் ஊடக எழுத்து நடை பாட திட்டத்தில் இடம்பெறும்: செங்கோட்டையன் எந்த வார்த்தை சொல்லி இவர்களை திட்டுவது எனபது புரியவில்லை, நிச்சயமாக நல்ல சொல் சிக்கவில்லை ஆதிட்தனாரின் ஊடக நடை எப்படி இருந்தது? “அழகி”, “உல்லாசம்”, “சதக் சதக்”, “படார், டமார்” என்ற ரீதியில் இருந்தது இதனை பாடமாக்கினால் வருங்கால தமிழகம் என்னாகும்? நிச்சயம் உருப்படா தமிழ் பேசிகொண்டிருக்கும் தமிழ்தாயின் மீது சத்தியாமாக சொல்லலாம், இவர்களுக்கு அந்த சசிகலா கும்பலும் தினகரனும்தான் சரி.

2004 சுனாமியால் கொல்லபட்ட அந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவோம்

லெமூரியா அல்லது குமரிகண்டம் ஒன்று இருந்தது, பல வகையில் அது சிறப்புற்றிருந்தது முழுக்க முழுக்க தமிழகபூமி, எல்ல்லோரும் தமிழர் என்றால் யாராவது கொல்லவரவேண்டும் அல்லவா?, யாரும் வரவில்லை அந்த வேலையய் கடல் பார்த்துகொண்டது. அந்த கண்டம் அப்படியே கடலால் விழுங்கபட்டு சுவடில்லாமல் ஆக்கபட்டது, இளங்கோவடிகள் அதனை சிலப்பதிகாரத்தில அப்படியே பதிந்துவைத்திருக்கின்றார், அதோடு கடலின் வெறி தீர்ந்ததா என்றால் இல்லை, சிலப்பதிகாரத்திலா என்னை பற்றி எழுதுகிறாய் என சீறி கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரத்தின் மையமான பூம்புகாரையும் அப்படியே விழுங்கிற்று. அப்படியே […]

அனுபவஸ்தர் இல்லாமல் தடுமாறுகின்றது திமுக‌

விருதுநகரில் காமராஜரை தோற்கடித்த திமுகவால் நாகர்கோவில் தொகுதியில் நெருங்கமுடியவில்லை அந்த தேர்தல்முடிவில் கலைஞர் தோல்வியினை மறைத்து சொன்னார், “நடந்தது நாடாளுமன்ற தேர்தல் அல்ல நாடார் மன்ற தேர்தல்” இப்பொழுது நலமாக‌ இருந்திருந்தால், ஆர்.கே நகர் தோல்வியினை சமயோசிதமாக திருப்பிவிட்டிருப்பார் “நடந்தது ஜெயாவின் அரசியல் வாரிசு என்பதற்கான தேர்தல், இதில் திமுக எப்படி வெல்ல முடியும்? ஜெயாவின் அரசியல் வாரிசு திமுக ஆகுமா? தினகரன் என்பவர் வெல்லாவிட்டால்தான் ஆச்சரியம், நியாயபடி ஜெயாவின் வளர்ப்புமகனான சுதாகரனே வென்றிருக்க வேண்டும், அவர் […]

தினகரனை சந்தித்து வாழ்த்தினார் சசிகலா புஷ்பா

தினகரனை சந்தித்து வாழ்த்தினார் சசிகலா புஷ்பா சசிகலா சொல்லி ஜெயா என்னை தாக்கினார், எனக்கு பாதுகாவல் வேண்டும் என பார்லிமெண்டில் அழுதவரும் இவர்தான், சசிகலா ஒரு வேலைக்காரி என முதலில் கைநீட்டி சொன்னவரும் இவர்தான் . இப்பொழுது தினகரன் நல்ல கட்சி “வேலைக்காரன்” என வாழ்த்த சென்றிருப்பதும் இவர்தான் ஜெயா சாவில் சசிகலா மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியவர் இந்த சசிகலா புஷ்பா ஆக பெண்களிலும் நாஞ்சில் சம்பத், வைகோ சாயல்கள் உண்டு, பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் […]

ஸ்டெல்லா புரூஸின் மறைவு

தமிழில் பல வகை எழுத்தாளர்கள் உண்டு, ஆரவாரமான சிலர் வெளியில் தெரிவார்கள், அமைதியான சிலர் தெரியமாட்டார்கள் ஆனால் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை எழுதி சம்பாதித்திருக்கவே மாட்டார்கள், தமிழில் எழுதி ஒரு பைசா சம்பாதிக்கமுடியாது என்பது பெரும் எழுத்தாளார்கள் ஒப்புகொண்டது விவசாயினை விட மோசமான நிலையில் இருப்பவன் தமிழ் எழுத்தாளன் அப்படி அந்த எழுத்தாளரும் இருந்தார், அவர் பெயர் ராம் மோகன் ஆனால் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதினார் கவிதை எழுதுவார், கதை எழுதுவார் ஆனந்த […]

வேலைக்காரன் : திரை விமர்சனம்

பொதுவாக பண்டிகை என்றால் வீட்டை விட்டு எங்குமே செல்ல கூடாது, நன்றாக சமைத்து உண்டு, குஷ்பு படம் மட்டும் பார்க்க வேண்டும் என்ற கொள்கையினை இதுகாறும் பின்பற்றி வந்தாயிற்று இதனால் யார் வீட்டு விருந்துக்கும் சென்றதில்லை, சர்ச் அமைப்பு, நண்பர்கள், மிக முக்கியமானவர்கள் அழைத்தாலும் செல்வதில்லை, நாம சமைக்காவிட்டால் என்ன பண்டிகை எனும் மனநிலை அது. இங்கு ஒருமாதிரி பார்ப்பார்கள், பார்கட்டும். நல்ல சாபாட்டிற்காகவே பண்டிகைகள் வருகின்றன என்பது நமது நம்பிக்கை. அப்படி உண்டுவிட்டு மல்லாக்க கிடந்தபொழுது […]

எங்கே போனது 6 ஆயிரத்து 500 வோட்டு? : சீமான் ஆதங்கம்

என் உழைப்பு என் தம்பிகளின் உழைப்பிற்கு குறைந்தது 10 ஆயிரம் வோட்டு விழுந்திருக்க வேண்டும், எங்கே போனது 6 ஆயிரத்து 500 வோட்டு? : சீமான் ஆதங்கம் கிடைத்த 3,500 வோட்டே கின்னஸ் சாதனை, இதில் இவருக்கு 10 ஆயிரம் வோட்டு வந்திருக்க வேண்டுமாம் ஆர்.கே நகரில் நாடார்கள் அதிகம் என்கின்றார்கள், கடந்த முறை தொப்பி சின்னத்தில் தினகரன் பிரச்சாரம் செய்தபொழுது தினகரனுடன் வைகுண்டராஜன் மற்றும் நாடார் சங்க பிரமுகர்கள் போஸ் கொடுத்த படங்கள் வந்ததே அதற்கு […]

தான் ஒரு 420 என்று தினகரனே என்னிடம் கூறியிருக்கிறார் : ஓபிஎஸ்

தான் ஒரு 420 என்று தினகரனே என்னிடம் கூறியிருக்கிறார் : ஓபிஎஸ் ஓஹோ ஒன்றாய் இருந்த காலத்தில் ஜெயா முன்னால் இப்படித்தான் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருப்பார்கள் போல, அதாவது ஏதோ ஒரு சினிமாவில் வடிவேலு தங்கை முன்னால் கவுண்டமணியும் செந்திலும் மாறி மாறி சொல்வார்கள் அல்லவா? அப்படி “அம்மா நான் ஒரு மொள்ளைமாறி அம்மா நான் ஒரு முடிச்சவிக்கி அம்மா நான் பயங்கர கொலைக்காரன் அம்மா நான் பயங்கரமான திருடன்” என மாறி மாறி சொல்லியிருப்பார்கள் […]

டெப்பாசிட் போனால் விமர்சிக்கதான் செய்வார்கள்

ஒரு பெரிய கட்சிக்கு டெப்பாசிட் போனால் விமர்சிக்கதான் செய்வார்கள், அங்கு வந்து என் தளபதி யார்? தவளைகுதி யார் தெரியுமா? எங்கள் கனிமொழி யார் மணிமொழி (Money Mozhi?) யார் தெரியுமா? என குதித்தால் ஒன்றும் பதில் சொல்ல முடியாது முதலில் இந்த திமுக காரனை எல்லாம் முகநூலை விட்டுவிரட்ட வேண்டும், பூரா பயலும் இங்கு தான் இருக்கின்றான், இங்கு இருந்துகொண்டு தவளைகுதி, மணிமொழி என ஸ்டேட்டஸ் போட வேண்டியது பின் மண்ணுக்குள் இருந்தா ஆர்.கே நகரில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications