தீ குளிப்பதுதான் வழி என மக்கள் கிளம்பும் முன் அரசு விழித்துகொள்வது நல்லது
கந்துவட்டி கொடுமையின் உச்சத்தை தமிழகம் கண்டே விட்டது, இதனை போல இன்னும் பல கொடுமைகள் உண்டு அதில் தற்போது நடந்துகொண்டிருப்பது ஓடைகள் ஆக்கிரமித்தல், குளங்களை ஆக்கிரமித்தல், பொது பாதைகளை அடைத்தல் இந்த திருப்பணி இப்பொழுது தமிழகம் முழுக்க நடைபெற்றாலும் தென் தமிழகத்தில் மகா அமோகம் குளங்களின் ஓரங்கள், அதற்கு செல்லும் பாதைகள் எல்லாம் அதிகாரிகள் துணையுடன் மூடபடுகின்றன. அதில் கம்பிவேலி கட்டி அடைத்துவிடுகின்றார்கள் என்ன செய்துவிடமுடியும் மக்கள்? மூடிவிட்டு தெனாவெட்டாக சொல்லுகின்றார்கள், முடிந்தார் கோர்ட்டுக்கு போங்கள் கோர்ட்டில் […]