பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அம்மணி நீங்கள் ஒரு மருத்துவர்…

“நாட்டுமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை, வெளிநாடுகளில் ஒவ்வொருவருக்கும் ரூ.15லட்சம் போடும் அளவிற்கு கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது அதனை மீட்டு வருவோம் என்றே பிரதமர் மோடி கூறினார்” : தமிழிசை அப்படியே இருக்கட்டும் அக்கா, அந்த மொத்த கருப்பு பணத்தையும் மீட்டாரா இல்லையா? மக்கள் அவர் சொன்னதை நம்பி வாக்களித்தார்கள்? அவர் செய்திருக்க வேண்டுமா இல்லையா? இவ்வளவிற்கு அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துகொண்டே இருக்கின்றார், பணம் தான் வரவில்லை. வெளிநாட்டு பணத்தை மீட்பேன் என […]

தமிழகத்து சார்லி சாப்ளினுக்கு இன்று பிறந்தநாள்

தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கண்டிருந்தாலும் என்றும் மகா உச்சத்தில் தெரியும் கலைஞன் அவன். அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர். நாடகங்களில்தான் நடித்துகொண்டிருந்தார், அப்பொழுது ஒரு நாடகத்திற்கு தலமைதாங்க எம்ஜி ராமசந்திரனை அழைத்தார்கள், நாடகத்தில் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தில் சில நொடிகள் வந்தார் அந்த குண்டுராவ், ஆனால் அந்த வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்தார் அதனை ரசித்த ராமசந்திரன், பின்பு மேடைக்கே அழைத்து ஒரு கோப்பை வழங்கினார், அங்கேயே கேட்டார் குண்டு ராவ் […]

காலத்திற்கு ஏற்றவாறு நாடு மாறுவது அவசியம்…

ஒரு நாடு இயங்க மகா முக்கியமான விஷயம் போக்குவரத்து, அது எவ்வளவுக்கு எளிதாகின்றதோ அவ்வளவிற்கு நாடு முன்னேறும் காலத்திற்கு ஏற்றவாறு நாடு மாறுவது அவசியம், அதுவும் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மாறியே தீரவேண்டும். அதில் ஒரு விஷயம்தான் புல்லட் ரயில். மிக மிக வேகமான ரயில் அது, இந்தியாவில் என்றோ வந்திருக்க வேண்டிய விஷயம், ஆனால் இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, இதுவே தாமதம். எப்படியோ மோடி அறிமுகபடுத்தியிருக்கும் உருப்படியான திட்டம் இது. முதன் முறையாக மும்பை அகமதாபாத் இடையே […]

ரொஹிங்கியா : நடப்பது என்ன?

ரொஹிங்கியா அகதிகள் மீது இந்தியா இரண்டாம் படுகொலைகளை நிகழ்த்துவதாக விகடன் பத்திரிகை சொல்லியுள்ளது, ஷோபா சக்தி என்பவர் எழுதியிருக்கின்றார். நடப்பது என்ன? ரோஹிங்யா இஸ்லாமியர் உலகெல்லாம் தெரித்து ஓடுகின்றனர். பல நாடுகள் அகதிகளாக அடைக்கலம் கொடுக்கின்றன அதில் ஒன்று இந்தியா. இப்பொழுது உள்ள உலக சூழலில் யார் அகதி? யார் தீவிரவாதி என்பதே பெரும் குழப்பம். அகதிகள் பெயரில் தீவிரவாதிகள் ஊடுருவது மகா எளிது. ஈழ அகதிகளோடே புலிகளும் ஊடுருவியது ஒன்றும் ரகசியமல்ல‌ இன்று சிரிய அகதிகளை […]

பகத் சிங்கிற்கு வீர வணக்கம்…

மிக இளம்வயதிலே சுதந்திர இந்தியா பற்றி சிந்தித்து, போராடி வெறும் 23 வயதிலே தனது வாழ்க்கையை முடித்த தியாகி, நிச்சயம் நினைவுகூற தக்கவர். 1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன், அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று. சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் மன்றத்தில் […]

கலைஞர் நலமுடன் இருக்கின்றாரா?

கலைஞர் நலமுடன் இருக்கின்றார் எஎன சொன்னால் போதாதா? இந்த படத்தை பார்த்தால் தோன்றுவது என்ன? உண்மையான திமுகவினர் , கலைஞர் விரும்பிகள் நிச்சயம் இப்படத்தை விரும்புவதில்லை.  

மிஸ்டர் உதயகுமார், சொல்ல முடியுமா?

இந்த மனிதருக்கு கவலை என்ன கண்டீர்களா? தமிழக முதல்வருக்கு தனிமனித ஒழுக்கம் மகா முக்கியமாம், நல்லது. ஆனால் ஜெயா இருக்கும் வரை அதை பற்றி ஒரு வார்த்தை பேசாமல், இப்பொழுது கமலஹாசன் வரும்பொழுது அது நாற்றம் என சொல்வது எப்படி? அதற்கு முன்பு என்ன மணம் வீசியதா? இன்றைய பிரான்ஸ் அதிபர் தன்னை விட வயதில் மிக‌ மூத்த பெண்ணை திருமணம் செய்திருக்கின்றார். அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மனைவிகள் ஏராளம். ஆனானபட்ட நெப்போலியன் முதல் கென்னடி வரை […]

சென்னையில் டெங்கு பரவுகின்றது

பண்டிகைக்கால சிறப்புப் பேருந்துகள் குறித்த விவரங்கள் – விஜயபாஸ்கர் வெளியீடு சென்னையில் டெங்கு பரவுகின்றது, 4 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள், இன்னும் எத்தனை பேர் பாதிக்கபட்டிருக்கின்றார்களோ தெரியாது அரசு அதில் என்ன நடவடிக்கை எடுத்தது? எப்படி டெங்கினை தடுக்கின்றது என்பது பற்றி ஒரு அறிவிப்புமில்லை. டெங்கு என்பது மருந்தேயில்லாத நோய். தொடக்கத்தில் கட்டுபடுத்தலாம், முற்றிவிட்டால் அவ்வளவுதான். அப்படி மகா சிக்கலான நிலையில் சென்னை இருக்க, அமைச்சர் தீபாளிக்கு பஸ் விட்டுகொண்டிருக்கின்றார் ஒருவேளை டெங்கு பரவாமல் இருக்க சென்னையினை விட்டு […]

ராமசந்திரனுக்காவது ஒரு படம் வந்தது, ஜெயாவிற்கு அதுவுமில்லை

எம்ஜிஆர் சாகும்பொழுது பல சர்ச்சைகள் வந்தன, பல வதந்தியும் வந்தது. அதில் ஒன்று ராமசந்திரனுக்கு மோரில் விஷம் வைத்தார் ஜாணகி என முதல் சர்ச்சை வந்தது, கிளப்பிவிட்டது யாரென்றால் சாட்சாத் ஜெயலலிதாதான். இன்னொரு வதந்தி தமாஷானாது, அதாவது ராமசந்திரன சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலே தங்கிவிட்டு, தன்னை போல இருந்த ஒருவனை தமிழகத்திற்கு அனுப்பி தன் கட்சி நிலவரத்தை அறிந்ததாகவும், அவனை இவர்கள் கொன்றுவிட்டதாகவும் ஒரு வதந்தி. அப்படியானால் ஒரிஜினல் ராமசந்திரன் எங்கே? இங்கு வந்தால் கொன்றுவிடுவார்கள் என்று […]

உலகம் கொண்டாடும் ஒரு பொருளாதார மேதை

உலகம் கொண்டாடும் ஒரு பொருளாதார மேதை, உலகம் தடுமாறிய மந்தநிலை காலங்களில் இந்திய பொருளாதாரத்தை காத்து நின்ற பெரும் அறிவாளி இன்று இந்தியா காட்டும் பொருளாதார பாய்ச்சலுக்கு அன்றே அஸ்திவாரமிட்ட பெரும் சிந்தனையாளன் மாற்றுகட்சி ஆயினும் அவர்களும் வந்து ஆலோசனை கேட்கும்பொழுதும் நாட்டுமுன்னேற்றத்திற்காய் நல்ல ஆலோசனைகளை வழங்கும் பெருமகன் அவர் பதவிவகித்த காலங்களில் அவரை தேடிவந்து பாராட்டியவர்களே அதிகம் தவிர, அவர் தேடிசென்ற நாடுகள் குறைவு. காரணம் நல்ல அறிவும் சிந்தனையும் எங்கிருந்தாலும் தேடி வரும் உலகமிது, […]