பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அசுரர் திருவிழா: தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்: கி.வீரமணி

அசுரர் திருவிழா: தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்: கி.வீரமணி பெரியார் என்ன சொன்னார்? “மோட்சம், நரகம், பாவம் , புண்ணியம், பரிகாரம் எல்லாம் மோசடிங்க . தேவர் அசுரர் என எல்லாமும் மோசடிதானுங்க.. அப்படி ஒன்றுமே இல்லைங்கே. எல்லாம் நம்மை அடிமைபடுத்தி அதன் மூலம் பார்ப்பான் நம்மை சுரண்ட செய்யபட்ட ஏற்பாடு, அதனால் நாம் நம்பகூடாதுங்க.. இந்த தீபாவளியே மோசடிங்க, சிந்தியுங்க…பூமி உருண்டைன்னு விஞ்ஞானம் சொல்லுதுங்க.. ஆனா இந்த நரகாசுரனுங்கிற பயல் அத பாயா சுருட்டினானுன்னு வேதம் […]

தமிழக கல்வி முறை : 1

எப்பொழுதுமே தமிழக மாணவனுக்கு 10ம் வகுப்பு வரை ஒரு குழப்பமும் இல்லை, அதனை தாண்டிய பின்னர்தான் உலகம் அவனை குழப்போ குழப்பு என்று குழம்பும், பிஞ்சாகவும் இல்லாமல் முழு பழமாகவும் இல்லாமல் , உலகினை புரிந்தும் புரியாமல், மலர்ந்தும் மலராதா ஒரு பருவம் அது. அப்பொழுதுதான் பலபேரும் வந்து ஆலோசனை சொல்கிறோம், வழிகாட்டுகிறோம் என மாணவனின் தோள்மீது ஏறி கண்ணை பொத்துவார்கள், காதினை திருகுவார்கள், இன்னும் பல அழிச்சாட்டியம் நடக்கும், அவனை சுயமாக யோசிக்க விடவே மாட்டார்கள், உதாரணம் […]

கிருஷ்ணசாமி செய்த அழிச்சாட்டியம் ….

1996களில் இந்த கிருஷ்ணசாமி செய்த அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல, அம்பேத்கரின் மறுபிறவி போல ஆடிகொண்டிருந்தார். அந்த அப்பாவி சமூகமும் அவரை நம்பியது. அதனால் இவர் செய்த இம்சைகள் கொஞ்சமல்ல. சில தேர்தல் முடிவுகள் கூட இவரால் பாதிக்கபட்டு அதிமுகவிற்கு சாதகமாக மாறின தலைவர்கள், தியாகிகள் பெயரில் இருந்த மாவட்ட பெயர்களும், போக்குவரத்து கழகமும் இவர் செய்த அட்டகாசத்தால் பெயரையும் அடையாளத்தை இழந்து இன்று மொட்டையாய் நிற்கின்றன. பாரதிராஜாவினை ஏதும் கேட்காமல் கமலஹாசனை மட்டும் இவர் குறிவைத்து அடித்த பொழுதுதான் […]

எங்கள் சகிப்புதன்மையை சோதிக்காதீர்கள்: தமிழிசை

எங்கள் சகிப்புதன்மையை சோதிக்காதீர்கள்: தமிழிசை தமிழகம் பாஜகவினை பார்த்து சொல்லிகொண்டிருப்பதை , தமிழிசை தமிழகம் நோக்கி சொல்கின்றாராம். தமிழிசை பெரும் இலக்கியவாதியின் மகள், டாக்டர் கூட. அதனால் ஏதும் உள்குத்து இல்லாமல் பேசமாட்டார். அக்கா தமிழிசை, உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதை நேரடியாக மோடியிடம் கேட்டால் என்ன? யாரையோ பார்த்து எங்கள் சகிப்பு தன்மையினை சோதிக்காதீர்கள் என ஏன் ஜாடையாக‌ கேட்க வேண்டும்? நதிகளை மீட்க பயணம் தொடங்கினார் ஜக்கி சுவாமிகள் அவரிடம் இருந்து மலையினை […]

இன்று ஓணம் பண்டிகை : இனிய ஓணம் அஷம்சுகள்

அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான‌ சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி. ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது? மன்னன் மாவீரனும் கூட இந்த லோகம், கீழோலகம், மேலோகம் என எல்லா உலகினையும் வென்று ஆண்டுகொண்டிருந்தான். ஆட்சி என்றால் பொற்கால […]

ஹைட்ரஜன் குண்டினை சோதித்தது வடகொரியா

ஹைட்ரஜன் குண்டினை சோதித்தது வடகொரியா, 6ம் முறையாக சோதித்து அதிர்ச்சி கொடுத்தது வடகொரியா அமெரிக்கா ஏராளமான பொருளாதார தடைகளை விதிக்க விதிக்க புதுவித குண்டுகளை பரிசோதித்து அமெரிக்காவிற்கு பதில் மிரட்டல் கொடுத்துகொண்டே இருக்கின்றது அது. டேய் மவன, சண்டைக்கு வாடா, வாடா வந்து பாருடா என அமெரிக்காவினை அழைத்துகொண்டே இருக்கின்றது வடகொரியா. மொத்த வடகொரியாவினை அழிப்பதை விட ஒற்றை மனிதனை அழித்தால் போதும் என்ற ரீதியில் அமெரிக்காவின் நகர்வு இருக்கின்றது. நான் அழிந்தால் அமெரிக்காவில் ஒரு பகுதியினை […]

நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புதுறை அமைச்சர் ஆனார்

நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புதுறை அமைச்சர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்த பதவி கிடைத்ததை வரவேற்கின்றோம், சக்திவாய்ந்த இந்த பதவி மூலம் ராமேஸ்வரம் மீணவர்களை வானதி காப்பாரா? அந்த கொடூரங்களுக்கு முடிவு கட்டபடுமா? என்பது இனிதான் தெரியும் தமிழர் ஒருவர் பாதுகாப்புதுறை அமைச்சராக இருக்கும் பொழுது அந்த எதிர்பார்ப்பு கூடவே செய்யும். ஆனால் கட்சிக்கு பெரும் உழைப்போ அல்லது பெரும் அடையாளமாகவோ இல்லாத நிர்மலா சீத்தாராமன், திடீரென உச்சம் பெற்றிருப்பது ஆச்சரியம்தான். பொன்னார் இனி பொற்காசு துறையினையும் […]

தமிழக போராட்டங்களில் வழக்கறிஞர்கள் பங்கு மறக்கமுடியாதது

பிரிட்டிஷ் இந்தியாவில் சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்தியது வழக்கறிஞர்கள். காந்தி, வ.உ.சி முதல் வெள்ளையனை சட்டபூர்வமாக எதிர்த்த எல்லோரும் வழக்கறிஞர்களே. சமூக உரிமைக்காக போராடிய நீதிகட்சி பன்னீசெல்வமும் வழக்கறிஞரே. ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயக சட்டம் ஆளும் நாட்டில் வழக்கறிஞர்களின் குரல் இன்றியமையாதது. முன்பெல்லாம் தமிழக போராட்டங்களில் வழக்கறிஞர்கள் பங்கு மறக்கமுடியாதது, பல போராட்ட வெற்றிகளின் காரணகர்த்தாக்கள் அவர்கள்தான். இன்று அவர்கள் அமைதியாகிவிட்டார்கள், அநியாய சாவுகள் அதிகரிக்கின்றன. வழக்கறிஞர்கள் உரிமைகுரல் எழுப்பாத எந்த‌ ஜனநாயக நாடு எதுவும் […]

இது தற்கொலை அல்ல, நிர்பந்த கொலை

அந்த அபலை அனிதா இனி இல்லை, தன் குடிசையில் இருந்தபடி பல ஆண்டுகளாக மருத்துவ கனவு கண்ட அவரின் கனவும் இனி இல்லை. தன் கூட்டில் ஒரு குருவி திரும்பி வரமுடியாத இடத்திற்கு சென்றதை எண்ணி அந்த கூடே அலறி துடிக்கின்றது, பார்க்க முடியா சோகமது. குனிந்த முதுகையும், உழைத்து ஓய்ந்த உடலையும் சுமந்து திரியும் அந்த கிராமம். இந்த மண்ணின் மகள் கல்வியால் உயர்வாள், பெருமை சேர்ப்பாள் என எண்ணியிருந்த அந்த அப்பாவி கூட்டம் தன் […]

ஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் : 2

அமெரிக்க படைகளுக்கெதிரான யுத்ததம் தொடங்கி 4 ஆண்டுகளில் ஹோ சி மின்னின் உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தது. 1945ல் ஜப்பானிய படைகளை விரட்டிய ஹோ செப்டம்பர் 2ம் தேதிதான் வியட்நாம் சுதந்திர பிரகடனத்தை வாசித்தார். அடுத்த 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்க யுத்த காலத்திலே செப்டம்பர் 2ல் வடக்கு வியட்நாமில் காலமானார் ஹோ. அவ்வளவுதான் அமெரிக்கா துள்ளி எழும்பியது இன்னும் 10 மணிநேரத்தில் வியட்நாம் யுத்தம் முடிந்துவிடும் என அறிவித்துவிட்டு கிளம்பியது, ஆனால் ஹோ உருவாக்கி இருந்த கொள்கையும் […]