பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாதியில் எழுந்து தனுஷ் எங்கே சென்றார்?

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வாயைப் பொத்திக் கொண்ருந்த கமலஹாசன் இப்போது மட்டும் பேசுவது ஏன் என அமைச்சர்கள் கேள்வி கேட்கிறார்களே, நீங்களும் ஜெயலலிதா இருந்தபோது வாயை மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அதானே, ஜெயா முன்பு நாக்கை கடித்து சீறிய ஒரே தைரியசாலி நம் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த தைரியம் ஓவர் தைரியமானதுதான் அவரின் வீழ்ச்சி.. வீடியோ சர்ச்சை குறித்த கேள்விகள்: பேட்டியின் பாதியில் வெளியேறிய தனுஷ் : […]

ஆறுகுட்டி எம்.எல்.ஏ பழனிச்சாமி அணியில் இணைந்தார்

பன்னீர்செல்வம் அணியின் ஆறுகுட்டி எம்.எல்.ஏ பழனிச்சாமி அணியில் இணைந்தார். திருச்சி அதிமுக மாநாட்டில் ஜெயா முன்னிலையில் கட்சியில் இணைந்தவர் நமீதா, பிரச்சாரம் எல்லாம் செய்தார், அதன் பின் சத்தமே இல்லை அம்மா ஆதரவு பெற்ற நம்மீதாவினை ஆதரிப்பீர் என அரசியல் செய்யும் ஆசை பன்னீருக்கு இருந்திருக்கலாம், ஆறுகுட்டி குட்டிகரணம் அடித்து ஓடியபின் ஆதரவினை பெருக்க பன்னீரும் நமீதாவினை கொண்டுவந்தால் என்ன என யோசித்திருக்கலாம் எல்லாம் நேற்றோடு போயிற்று, நமீதா அப்படி பேசிய பின்னும் பன்னீர் சேர்ப்பாரா? ஒருவேளை […]

கமலஹாசா..காயத்திரி தாசா இனியாவது திருந்திவிடு

ஓவியாவினை சில இடங்களில் கண்டித்த கமலஹாசன் மிக சர்ச்சையான வார்த்தைகளை சொன்ன காயத்திரியினை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, கமலஹாசன் காயத்திரியினை போட்டு தாக்கும் வாய்ப்பு இருந்தும் தவிர்க்கின்றார், அவரை காப்பாற்றுகின்றார் என்ற சர்ச்சை வெடிக்கின்றது ஓவியா பண்ணி என சொன்னது குற்றமாம், ஆனால் காயத்திரி சேரி பிஹேவியர், மீன் காரன் என சொன்னதெல்லாம் குற்றமில்லையாம் என கமலை நோக்கி பாய்கின்றன ஓவியா படைகள். இன்னும் சபையில் பேசகூடாத ஏராளமான வார்த்தைகள் உண்டு,அவற்றில் நிறைய காயத்திரி பேசினாலும் கமலஹாசனிடம் […]

தமிழகம் ஒன்றும் பாதுகாப்பான மாநிலம் அல்ல

வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு தமிழ்நாட்டு முதல்வர் பழனிச்சாமி என்ன ஹீரோயிசமா காட்டிகொண்டிருக்கின்றார், இதெல்லாம் அங்கிளுக்கு தெரியாதா? தெரியும் ஆனால் அன்னார் அதிமுகவினை பகிரங்கமாக எதிர்க்கமாட்டார் புதுச்சேரி பக்கம் சென்று அங்கிள் அதனை மீட்டு, தமிழகத்தோடு சேர்த்து அகண்ட தமிழகமாக மாற்றும் போரில் இறங்கிவிட்டார் என்பது புரிகின்றது. ஆனால் புதுச்சேரி மக்கள் தமிழகத்தோடு இணைவார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி? அதனால் என்ன? இழுத்து வந்து இணைத்துவிடுவார் அங்கிள் சைமன். ராமநாதபுரம் அருகே […]

கருப்பு ஜூலை : 02

அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் “இனபடுகொலை”, நடந்த கொடூரங்கள் அப்படி. தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள். அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, அவர்களையும் கும்பல் மனதில் வைத்திருந்தது. […]

கருப்பு ஜூலை : 01

1983ல் இதே காலங்களில் கொழும்பு எரிந்துகொண்டிருந்தது, தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லபட்டிருந்தனர், இங்கே முள்ளிவாய்க்காலுக்காகவும், மாவீரர் நாளுக்காகவும் மல்லுகட்டும் இன உணவாளர்கள் எல்லாம் இந்நாளில் மல்லாக்க படுத்தாயிற்று ஆனால் அந்த கொடூர நிகழ்வு மறக்க முடியாதது, இந்தியா ஈழவிவகாரத்தில் தலையிட இதுதான் காரணம், அந்த தமிழர்களுக்கு இந்த உணர்வாளர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்த வரமாட்டார்கள். பிரபாகரனுக்காக செத்தவர்கள் அல்லது பிரபாகரன் சொல்லி செத்தவர்கள் தான் இவர்களுக்கு தமிழர்கள் 34 ஆண்டுகளுக்கு முன்னால் கொல்லபட்ட அம்மக்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு […]

கொளத்தூர் மணி, தமிழச்சி ஏன் தேவரை கொச்சைபடுத்துகின்றார்கள் ?

எத்தனையோ விமர்சிக்க இருக்க, மிக சரியாக முத்துராமலிங்க தேவரை கொளத்தூர் மணி விமர்சிப்பது ஏன்? காரணம் அவரின் தேசிய உணர்வு அப்படி, அவர் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஏராளமான குற்றசாட்டு இருக்கலாம் ஆனால் இத்தேசத்தையும், இந்து மதத்தையும் மனதார நேசித்த மனிதர் அவர், அதனை யாரும் மறுக்க முடியாது. பரிசுத்தமான தேசியவாதி மத நல்லிணக்கத்திலும் அவரின் வழி நன்றாகத்தான் இருந்திருக்கின்றது, தலித்துகளுக்கு எதிராவர் என சொல்லபட்ட தேவர்தான், மதுரை ஆலயத்தில் தலித்துக்கள் நுழைய போராடியவர் என்பதும் […]

இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி

இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து கோப்பையினை தவற விட்டிருக்கின்றது. யாருக்கு வேண்டும் கோப்பை? இறுதிவரை மிக பெரும் போராட்டத்தை நடத்திவிட்டு, இதுதான் நாங்கள் என நிரூபித்து நின்ற மகளிர் அணி அலெக்ஸாண்டரை எதிர்த்த போரஸ் மன்னனின் தீரத்தினை போல உயர்ந்து நின்றது. கோப்பையினை தவற‌ விட்டாலும் கோடிகணக்கான ரசிகர்களின் மனதை வென்றுவிட்டனர் அந்த பெண் சிங்கங்கள். வாழ்த்துக்கள் சகோதரிகளே, இந்த தேசம் பெரும் மகிழ்ச்சியுடன் உங்களை பேருமையுடன் வரவேற்கின்றது. அந்த சீமை சிறுக்கிகளை இங்கு […]

ராதிகா Come On…

சிஏஜி அறிக்கை ராணுவத்தின் வெடிபொருள் யுத்தம் என வந்தால் 10 நாள் தாங்காது என சொல்லிவிட்டதாம், இது ஒரு வருடம் முன்பே வந்த செய்தி, இப்பொழுது அடுத்த ரவுண்ட் ஒவ்வொரு ராணுவமும் தன் ரகசியங்களை வெளியிடாது, இதோ வெடிபொருள் பற்றாகுறை எனும் தலைவரிடம் சரி எத்தனை அணுகுண்டுகள் தயாராக இருக்கின்றன?, எத்தனை ஏவுகனை வெகு சிறப்பான தயார் நிலையில் உள்ளது என கேளுங்கள் சொல்லமாட்டார்கள். இவை எல்லாம் வேறுவிதமான செய்திகள், அவ்வளவு பெரும் சிக்கல் இல்லை, சிக்கல் […]

வினோதமாக கவனத்தை ஈர்த்தவர்கள்

“வினோதமாக கவனத்தை ஈர்த்தவர்கள்” என்றொரு நீயா நானா நிகழ்ச்சியினை கோபிநாத் நடத்திகொண்டிருக்கின்றார் பல விதமான காமெடி கோஷ்டிகள் வந்து, நான் யார் தெரியுமா? என சீறிகொண்டிருக்கின்றன, சிரித்து முடியவில்லை சில நேரங்களில் சீரியசான நிகழ்ச்சியினை நடத்தும் கோபிநாத்திற்கு என்னாயிற்றோ தெரியவில்லை, தமிழக அமைச்சரவை போல காமெடி நிகழ்ச்சி நடத்த கிளம்பிவிட்டார், சபாநாயகர் தனபாலை விட காமெடியில் கலக்குகின்றார் இந்த பங்கேற்பாளர் முன்னால் சிரிக்காமல் இந்நிகழ்ச்சியினை நடத்துவது என்பதே பெரும் விஷயம் எம்ஜிஆருக்கு கட்சி தொடங்கி கொடுத்தவன் நான், […]