பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பழ.நெடுமாறன் ஏன் பேசபோகின்றார்?

கலைஞர் உடல்நலத்தோடு இருந்தபொழுது ஏன் சட்டமன்றம் வரவில்லை என பழ.நெடுமாறன் கிண்டல் செய்கின்றாராம், அன்னாருக்கு கலைஞரை சீண்டுவதில் அபார பிரியம் அப்படி ஒருமுறை சொன்னார், தசரத மகராஜா கண்ணாடியில் தன் முகத்தை கண்டானாம், தன் தலைமயிரில் ஒன்று நரைத்திருப்பதை கண்டு, உடனே தனக்கு வயதாயிற்றென்று மகனுக்கு பட்டம் சூட விளைந்தானாம், கலைஞருக்கு ஏன் அப்படி தோன்றவில்லை” கலைஞர் மறுநாள் முரசொலியில் எழுதினார் “குன்றனைய குமரி அனந்தன் புகழ்மறைத்த துரோகி வரிபுலிமேல் அமர்ந்தவாறு உறிஞ்சி தின்னும் ஒட்டுண்ணி ….. […]

சென்னை ஐ.ஐ.டியில் மாட்டுகறி சமைத்ததால் சர்ச்சை

சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் மாட்டுகறி சமைத்ததால் சர்ச்சை நாட்டின் அறிவு கோவில்களாக கருதபடுபவை அந்த ஐஐடிக்கள், அரசு அதற்கு அள்ளிகொடுக்கும் பணமும், மாணவர்களுக்கு அதன் மீதான கனவும் சாமான்யமல்ல‌ உலகளவில் மதிக்கபடும் இந்திய அறிவுநிலையங்களில் அதுவும் ஒன்று அங்கு ஏன் அரசியல்? அங்கு ஏன் மாட்டுகறி அரசியல்? அந்த அறிவு கோவிலில் ஐன்ஸ்டீன் வாசகர் வட்டம், நியூட்டன் வாசகர் சதுரம், ராமானுஜம் வாசகர் முக்கோணம், கெப்ளர் ஆயிலர் வாசகர் கன சதுரம் […]

ஆண்டவன் கட்டளை படம் ஓடி கொண்டிருக்கின்றது

ஆண்டவன் கட்டளை படம் ஓடிகொண்டிருக்கின்றது சிவாஜி கணேசன் அப்படி ஒரு நடிப்பினை கொட்டியிருக்கின்றார், கல்லூரி பேராசிரியராகவும், ஒரு பாடலில் சாமியார் உடையிலும் கலக்குகின்றார் அற்புதமான நடிகன், சந்திரபாபு தன் உச்சகாலங்களில் நடித்த படம், பின்னியிருக்கின்றார் படம் நேரு மறைந்த பின் வந்திருக்கலாம், நேருவின் பெருமைகளை முடிவில் அழகாக சொல்கின்றார்கள், அக்கால படங்கள் அப்படி சமூக பொறுப்போடு வந்திருக்கின்றன‌ இனி இப்படி நல்ல தலைவர்கள் பெருமையினை சொல்லும் படங்கள் வரப்போவதே இல்லை படத்தில் மிக குறிப்பிடதக்கவர் தேவிகா அளவான […]

இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு

இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு : மீட்புபணிகளில் பல நாடுகள் களமிறங்கியிருக்கின்றன‌ இலங்கை நல்ல மழைபொழியும் நாடுதான், ஆனால் சிக்கல் மழையில் மட்டும் அல்ல என்கின்றார்கள் ஏகபட்ட ஆக்கிரமிப்புகளும், முறையில்லாமல் கட்டபட்ட கட்டிடங்களும், ஆபத்தான இடங்களில் அனுமதியின்றி கட்டபட்ட கட்டங்களே பெரும் ஆபத்தினை கொண்டு வந்திருகின்றது என்கின்றன செய்திகள் பொதுவாக வெள்ளையன் ஆண்ட நாடுகளில் எல்லாம் நல்ல சட்டதிட்டங்களும் வழிகாட்டலும் உண்டு, மலேயா சிங்கப்பூர் போன்றவை இன்றும் அதனை பின்பற்றி வளர்ந்துகொண்டே இருக்கின்றன‌ நமக்கும் அருமையான […]

அந்த ராகவேந்திரர் ரஜினியை ரஞ்சித்திடமிருந்து காக்கட்டும்

திருமுருகன் கைதான விஷயத்தில் அரண்டு போயிருக்கின்றார் சீமான், அவரோடு அவரை போல ஈழ கான சபா எல்லாம் அப்செட் எங்கே நம்மையும் கம்பிக்குள் வெளிச்சம் பார்க்க வைத்துவிடுவார்களோ என கச்சேரிக்கு பதில் ஒப்பாரியில் இறங்கியிருக்கின்றன‌ ரஜினியினை விமர்சிக்கும் குரல்கள் சற்று ஓய்ந்தன என்றால் இதுதான் சாக்கு என விஜயகாந்த் கட்சியினர் அடுத்து கல் எறிகின்றனர் அதாவது விஜயகாந்த் மகா நல்லவராம், ரஜினியினை விட மிக பெரும் நல்லவராம், அப்படி எல்லாம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் விஜயகாந்த் வடலூர் வள்ளலாருக்கும் […]

செய்தி அவியல் ….

வள்ளுவன் புலால் மறுத்தல் எழுதியிருக்கின்றான், பின்னும் ஏன் தமிழர் மாட்டுகறி பற்றி பேசுவது என சில பாஜக தரப்பு கிளம்புகின்றது நல்ல அரசும், நல்ல துறவியும் எப்படி இருக்க வேண்டும் என்று கூடத்தான் வள்ளுவன் சொல்லியிருக்கின்றான் அதனை நீங்கள் பின்பற்றி காட்டுங்கள். ராமர் , யோகா பற்றி எல்லாம் வள்ளுவன் சொல்லவே இல்லை ஆக அதனையும் விட்டுவிட்டு புலால் மறுத்தல் பேச வாருங்கள் பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை, முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கூறி கல்லால் […]

ஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது

ஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது என்கின்றது வெளிநாட்டு செய்தி, அது மருந்து இல்லா கொடூர நோய்.. இப்பொழுது இந்தியாவில் ஜிகா விஸ்வரூபமெடுக்கின்றது, ஆனால் அரசு இன்னும் கவனத்தில் கொள்ளவில்லை குஜராத்திலும் வட இந்தியாவிலும் பிறந்த குழந்தைகள் ஜிகா நோயால் பாதிக்கபட்டிருப்பது உறுதி செய்யபட்டிருக்கின்றது தொடக்கத்திலே கண்டறியபட்டும் அரசின் அஜாக்கிரதையோ அல்லது மறைத்துவிட்ட கொடுமையோ நடந்திருக்கின்றது, உங்கள் நாட்டில் இந்த நோய் இருந்தும் ஏன் அறிவிக்கவில்லை என இந்தியாவோடு உறவாடும் நாடுகள் கேட்கின்றன‌ அதாவது இங்கு ஜிகா […]

இந்தியாவின் நாட்டுபற்று மிக்க பெருமகன் கேபிஎஸ் கில் மறைந்துவிட்டார்

இந்தியாவின் நாட்டுபற்று மிக்க, பிரிவினை வாதிகளை எல்லாம் ஒடுக்கவேண்டிய வழியில் ஒடுக்கிய அந்த பெருமகன் கேபிஎஸ் கில் மறைந்துவிட்டார் ஒரு இந்தியன் எப்படி இருக்கவேண்டும் என சொன்ன அந்த கன்வார் பால் சிங் இனி இல்லை, கடந்த 26ம் தேதி இறந்திருக்கின்றார் மிக உறுதியான இந்தியர் அவர், அசாமில் கலவரங்களை ஒடுக்கியது அவரின் காவல்துறை வாழ்வில் பொறுப்பான துவக்கம் அக்காலங்கள் கடுமையானவை, சும்மவே மனதில் பொறுமிகொண்டிருந்த சீக்கியர்களுக்கு அந்த இந்தி திணிப்பும் இன்னும் சில புறக்கணிப்பும் பெரும் […]

திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் உண்டு

திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் உண்டு, அப்படி மெரீனா சம்பவம் கூடுதலான ஒரு வழக்கு பல வழக்குகள் பாயும் ஒருவன் குண்டர் சட்டத்தில் அடைபடுவது நடைமுறை, அதுதான் நடந்தது இது தெரிந்தும் ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் இந்த பிரிவினைவாதிகளை ஆதரிக்க தொடங்கியாயிற்று இனி திமுக புலிகள் உறவு எந்த அளவு இருந்தது? எந்த எல்லை வரை இருந்தது? ஏன் திமுகவினை உணர்வாளர்கள் துரோகி என சொன்னார்கள்??? இப்படி பல விஷயங்கள் உண்டு, கலைஞரின் பெயர் […]

இப்பொழுதெல்லாம் திமுகவினர் சறுக்குகின்றனர்

இப்பொழுதெல்லாம் திமுகவினர் சறுக்குகின்றனர் கலைஞருக்கு நியாபக மறதி ஏற்பட்டது என செய்தி வந்தது, திமுக அதனை மறுத்தது, உடல்நலம் சரியில்லை என்றது, அப்படியே விட்டிருக்கலாம் கலைஞர் தன் சுண்டுவிரலை அசைக்க முடிந்தாலும் எழுதும் ரகம், அவரது எழுத்து வரவில்லை என்றால் சகாப்தம் முடிந்தது விஷயம் என்பதுதான் அர்த்தம், இது எல்லோருக்கும் புரியும் ஆனால் அப்படி அல்ல என மறுத்துவிட்டு, விழா எடுத்து, பின் கலைஞருக்கு அழைப்பு எல்லாம் கொடுத்து அழிச்சாட்டியம் செய்தார்கள் இப்பொழுது நேற்றுதான் கலைஞர் பேசினார் […]