பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்..

வலம்புரி ஜாணின் நூல் ஒன்றினை வாசித்தேன், அற்புதமாக எழுதுகின்றார், பெரும் அழகான வார்த்தைகள், வார்த்தை சித்தர் எனும் பட்டம் அவருக்கு பொருந்த கூடியது ஆனால் அவரின் எழுத்து வார்த்தைகளை தாண்டி அனுமானம் இப்படித்தான் முடிகின்றது மிக சிறுபான்மையான இனத்தின் அறிவாளியான அவரை கலைஞர் கைதூக்கி விட்டிருக்கின்றார், எம்பியாகவும் கலைஞர் உயர்த்த முயன்றார்..உயர்த்தினார் ஆனால் சில சர்ச்சைகளில் கலைஞரை விட்டு, செய்நன்றி கொன்றுவிட்டு எம்ஜிஆருடன் ஐக்கியமாகின்றார், அவரும் இவருக்கு இதழ் எல்லாம் தொடங்கி கொடுக்கின்றார், அதிமுகவின் பிரதான நபராகின்றார் […]

போக்குவரத்து என்பது வாழ்க்கையின் உயிர்நாடி

இழுத்து இழுத்து விளையாட இது ஒன்றும் பழனிச்சாமி கோஷ்டிக்கும் பன்னீர் கோஷ்டிக்குமான பேச்சுவார்த்தை அல்ல‌ காலம் சென்றால் சரியாகும் என்பதற்கு மன்னார்குடி குடும்ப பிரச்சினையும் அல்ல‌ காலில் விழுந்து தப்ப இது வருமான வரி சோதனையோ அல்லது மத்திய அரசின் பிரச்சினையும் அல்ல. ஆளுக்கு 5 ஆயிரம் கொடுத்து ஆட்டோவில் அனுப்ப இது ஆர்.கே நகரும் அல்ல… மறைத்து தீர இது அப்பல்லோ மர்மமும் அல்ல‌, ஏய் சிங்களமே உன்னை கண்டிக்கின்றேன் என டெல்லிக்கு கடிதம் எழுத […]

போக்குவரத்து கழக ஸ்டிரைக்கினை முறியடிப்போம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

போக்குவரத்து கழக ஸ்டிரைக்கினை முறியடிப்போம்: அமைச்சர் விஜயபாஸ்கர் அட பரிதாபமே, இது தொழிலாளர் பிரச்சினை. பொதுவாக‌ அவர்களுடன் பேசி தீர்ப்போம் என்பார்கள், பிரச்சினையினை சுமூகமாக முடிப்போம் என்பார்கள். இவரோ முறியடிப்போம் என் போர் முரசு கொட்டுகின்றார். பேருந்துகள்தான் நகரின் ரத்த ஓட்டம் , அவை இன்றி தமிழகம் இயங்காது, ஒரு மாதிரியான பக்கவாத நிலைக்கு தமிழகம் சென்றுவிடும், யதார்த்தம் அதுதான் 6 ஆண்டுகளாக இவர்கள்தான் ஆள்கின்றார்கள், இதில் கடந்த ஆட்சியின் பிழை என எதனை சொல்லமுடியும்? ஆக […]

ஜெயா டிவிக்கு யார் ஞானம் கொடுத்தார்கள்?

ஜெயா டிவிக்கு யார் ஞானம் கொடுத்தார்களோ தெரியாது, அம்மா, சின்னம்மா, சித்தப்ப்பா, அம்மா சமாதி போன்ற செய்திகளில் இருந்து விடுபட்டுவிட்டது அதிமுக என்றொரு கட்சி இருப்பதாகவோ, அது தமிழகத்தை ஆளுவதையோ அது மறந்தே விட்டது திடீர் ஞானம் அதற்கு பிறந்துவிட்டது ஆச்சரியமாக உலக செய்திகளை பிபிசி, சிஎன்என் அளவிற்கு சொல்லிகொண்டிருக்கின்றது.. வைகோ வேறு சிறையில் இருக்கின்றார், ஜெயா டிவி வேறு இப்படியாகிவிட்டது, காமெடிக்கு தமிழகத்தில் இப்பொழுதுதெல்லாம் கடும் பஞ்சம்

தேவ அன்னை மரியாள்

கத்தோலிக்க கிறிஸ்துவத்தின் தனி இடம் பெற்றிருப்பர் தேவ அன்னை மரியாள். இயேசுவின் வாழ்வில் தனி இடம் பெற்றிருந்தவர் மரியாள் அவர் உலகில் பல இடங்களில் காட்சி கொடுத்திருந்தாலும், தனி இடம் பெற்ற இடங்கள் கொஞ்சம் உண்டு, அதிலொன்று போர்ச்சுக்கல்லின் பாத்திமா நகரமும் ஒன்று 100 ஆண்டுகளுக்கு முன்பாக மே 13ம் தேதி, அந்த ஊரின் 3 சிறுவர்களுக்கு காட்சி அளித்தார் மரியாள், அக்காட்சிகள் தொடர்ந்தன, அக்டோபர் வரை தொடர்ந்தது முதலில் அந்த சிறுவர்கள் சொன்னதை மக்கள் நம்பவில்லை […]

“நடிகன்” படம் ஓடதொடங்கியிருக்கின்றது

“நடிகன்” படம் ஓடதொடங்கியிருக்கின்றது சுவிட்சர்லாந்தில் பூத்த குல்முகர் பூ போல, காஷ்மீரின் குங்குமப்பூ போல இருக்கின்றார் குஷ்பூ இந்த படத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பவர் அவரே, இந்த படத்திற்கு “நடிகை” என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும், ஆணாதிக்க உலகம் இப்படித்தான் சத்யராஜ் மிக சிறந்த நடிகன், அதனால்தான் சமீபத்தில் கட்டப்பாவினை பாராட்டி குஷ்பூ சொல்லியிருந்தார், அவருடன் அதிக படங்களில் நடித்திருந்தேன் எனவும் சொல்லியிருந்தார் அதற்கு சத்யராஜினை போலவே சவாலான நடிப்பினை கொடுத்தவள் நான் என்றுதான் பொருள், குஷ்பூ […]

அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பில் புலிகளின் பங்கு என்ன?

அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பில் புலிகளின் பங்கு என்ன? என ஒரு கதை கசிய தொடங்கியிருக்கின்றது அது இப்பொழுது அல்ல, 1993ல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலிலே புலிகளுக்கு தொடர்பு இருந்தது என இப்பொழுது சொல்ல தொடங்கியிருக்கின்றார்கள் ஏன் இப்பொழுது சொல்ல வேண்டும்? புலிகளும் தீவிரவாதிகள், உலகில் இன்னொரு தீவிரவாத குழுவுடனான தொடர்பு இல்லாமல் அவர்களால் இயங்க முடியாது அப்படி சில குழுக்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது என அப்பொழுதே சொன்னார்கள் 2001ல் இரட்டை கோபுரம் தகர்க்கபட்ட […]

உலகம் முழுவதும் இணைய தாக்குதல்

உலகம் முழுவதும் இணைய தாக்குதல் தீவிரமாகின்றது, இங்கிலாந்தில் தொடங்கிய தாக்குதல் உலகெல்லாம் பரவியிருக்கின்றது இது விசித்திரமான தாக்குதல், பொதுவாக தகவல்களை திருட ஊடுருவுவார்கள் அல்லது குழப்ப ஊடுருவார்கள் இம்முறை விசித்திரமான விஷயம், அதாவது கம்பியூட்டர்கள் முடக்கபட்டு இவ்வளவு பணம் கொடுங்கள் உங்களை அனுமதிக்கின்றோம் எனும் மிரட்டல், சில விஷயங்களுக்கு 300 டாலர் வரை கொடுத்து அமெரிக்காவில் கம்பியூட்டரை திறந்திருக்கின்றார்களாம் திருடன் என்பவன் இனி கழுத்தில் கத்தி வைப்பவன் அல்ல, மாறிவிட்ட காலங்களில் இருந்த இடத்தில் இருந்துகொண்டே கொள்ளையடிக்க […]

ஜூன் 3 எதிர்பார்ப்புகள்

கானகம் காக்க சீறி நிற்கும் ராஜநாகம் தன் முதுமைகாலத்தில் நாகரத்தினத்தை வெளிகக்குமாம் அந்த வெளிச்சத்தில் கானகம் ஒளிகாணுமாம் அரை நூற்றாண்டாக திராவிடத்தை காத்து நின்ற எங்கள் ராஜநாகமே, ஒரு நாகரத்தினத்தை தந்துவிட்டு போ, இருண்ட இத்தமிழகம் நீங்காத ஒளியினை பெறட்டும் # ஜூன் 3 எதிர்பார்ப்புகள்.      

ஹாஜி மஸ்தான் ரஜினி காந்த்

ஹாஜி மஸ்தான் கதையினை பலமுறை படமாக எடுத்துவிட்டார்கள், சில சர்ச்சைகள் வந்தது, இப்பொழுது ரஜினியினை வைத்து எடுக்க கிளம்பி அடுத்த சர்ச்சை மஸ்தானின் வளர்ப்பு மகன் வடிவில் வந்திருக்கின்றது மஸ்தான்களில் பல மஸ்தான்கள் உண்டு, குணங்குடி மஸ்தான் எனும் அற்புதமான கவிஞன் உண்டு, இவர் ஹாஜி மஸ்தான் அதாவது மூத்த மஸ்தான் அல்லது பெரிய மஸ்தான் எனும் பெயரில் அழைக்கபட்டவர் ராமநாதபுரம் பனைகுளம்தான் சொந்தவூர், மருதநாயகத்தின் மண்ணும் அப்பகுதியே. விவசாயம் இன்று பொய்க்கதொடங்கியது அல்ல அது 1920களிலே […]