பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அன்னையர் தின வாழ்த்துக்கள்

உலகெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடுகின்றார்களாம், அதனை கண்டுவிட்டு தமிழர்களும் முகநூலில் மிக தீவிரமாக எம்ஜிஆர் ஸ்டைலில் அம்மா அம்மா என உருகிகொண்டிருந்தார்கள். தாய்க்கு பாரதமும், தமிழனும் கொடுத்த உயர்வான இடத்தை விட யார் கொடுத்துவிட முடியும்? நிலம், ஆறு என சகலத்திற்கும் பெண் பெயர் இட்டு மகிழ்ந்த சமூகம் இது, தாயினை அது பெரும் இடத்தில் வைத்திருந்தது. இந்திய சமூக அமைப்பும், தாய்க்கு கொடுத்த இடம் அலாதியானது, ராமாயணமும், மகாபாரதமும் அதனைத்தான் சொல்கின்றன. ராமனும், பாண்டவர்களும் அப்படி […]

குஷ்பூவிற்காக‌ மட்டுமே வெற்றிபெற்ற படம் ‘மன்னன்’

டிவியில் மன்னன் படம் ஓடிகொண்டிருக்கின்றது, அப்படம் குஷ்பூவிற்காக‌ மட்டுமே வெற்றிபெற்ற படம் என்பது உலகிற்க்கே தெரிந்தது பண்டரிபாய் முன்னால் ரஜினியினை விட்டுகொடுக்கும் காட்சியில் அப்படி ஒரு தியாக நடிப்பினை குஷ்பூ கொடுத்திருந்தார், அதற்காகவே பத்ம பூஷன் விருது அவருக்கு கொடுக்கபட்டிருக்க வேண்டும், இந்த இந்தியாவில் எல்லாமே அரசியல், நாசமாய் போன அரசியல். ஆனானபட்ட சிவாஜி கணேசனுக்கே பிரான்சும், எகிப்தும்தான் முதலில் விருதுகள் வழங்கின, அப்படி விரைவில் பிரான்சின் செவாலியே விருது குஷ்பூவிற்கு கிடைக்கலாம் அதற்கு முன்பே குஷ்பூவால் […]

கலைஞர் வைர விழா : அழைப்பு யார் யாருக்கு?

திருச்செந்தூர் கோவில் வைரவேலுக்காக நீதிகேட்டு தமிழமெங்கும் நடந்த தலைவனின் வைரவிழாவிற்கு பரூக் அப்துல்லா முதல் எல்லா தலைவர்களையும் அழைத்திருக்கின்றார்களாம் அந்நாளில் ஈழபிரச்சினை டெசோவிற்காக கலைஞர் அழைத்ததும் ஓடிவந்த அகில இந்திய தலைவர்களில் பரூக் அப்துல்லா, பட்நாயக் என பெரும் வரிசை உண்டு, அவர்களை அழைப்பது வாழ்த்துகுரியது, ஆனால் ஒருவர் மிஸ்ஸிங் அவர் வாஜ்பாய், அந்நாளில் இந்திராவினையும் ராஜிவினையும் எதிர்த்து கலைஞர் நின்ற காலங்களில் எல்லாம் அவருக்கு துணை இருந்தவர் வாஜ்பாய் இனி ஈழதமிழரை தொட்டால் இந்தியா கொந்தளிக்கும் […]

மலையகத்தில் தமிழில் பேசினார் மோடி..

இலங்கையில் புத்தர் கோவிலில் வணங்கினார், மலையகத்தில் தமிழில் பேசினார் மோடி மலையகத்திற்கு இதுவரை சென்ற பிரபலங்களில் மகாத்மா காந்தி, மாவீரன் சேகுவாரா என இருவர்தான் இருந்தனர், அதாவது இரு அபூர்வ மனிதர்கள் அந்த அபலைகளை தேடி சென்றனர், சே நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு மூன்றாவது மனிதர் மோடி, மிகவும் நல்லது ஆனால் அங்கு தமிழில் பேசி தமிழ்வளர்க்க ஆசைபட்ட மோடி, தமிழகத்தில் இந்தியினை திணித்து தீர்வது என்ற முடிவோடு இருப்பதும், இங்கு மத நல்லிணக்கம் இருக்க […]

திருச்சி விமான நிலையத்து அனுபவம்…

அடிக்கடி வந்த சர்ச்சைதான், இப்பொழுது நெருக்கமானவர்கள் சொல்லும்பொழுது அந்த சர்ச்சை மிக உண்மையாகவும் இருக்கலாம் அதாகபட்டது திருச்சியில் ஒரு விமான நிலையம் உண்டு, அதில் ஏகபட்ட சர்ச்சைகளும் உண்டு, இப்பொழுது ஏர் ஏசியா, மலின்டோ எனும் பட்ஜெட் விமானங்கள் திருச்சிக்கு பறந்தபின் அந்த சர்ச்சை வலுக்கின்றது தமிழ்நாட்டின மைய நகர் அது, சென்னை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நகரம், அதனால் தெற்கே இருக்கும் மக்களுக்கு திருவனந்தபுரம் ஒரு வாய்ப்பு என்றால் பெருவாரியான மக்களுக்கு திருச்சி நல்ல […]

ராஜபக்சேவினை சந்தித்தார் மோடி இன்னும் பிற…

ஆட்சி பிடித்து 3 வருடம் ஆகின்றது, வாக்குறுதி படி ஒரு புல்லையும் புடுங்கமுடியவில்லை, அசுர பலம் கிடைத்தும் காவி இந்தியா அமையவில்லை, உலக யதார்த்திற்கு அது அமையவும் அமையாது, இது அக்கட்சியின் பலருக்கு அதிர்ச்சி, தாங்க முடியா அதிர்ச்சி இந்த அதிர்ச்சியில் பலருக்கு மனநிலையே இவ்வாறான பதிவுகளை எழுத சொல்கின்றன, மோடி அவசரமாக கட்ட வேண்டியது ராமர் கோவில் அல்ல, உலக தரத்தில் ஒரு மனநோய் மருத்துவமனை கலைஞருக்கு வைரவிழா, அதற்கு இந்த “கஸ்மால ராமன்” எப்படி […]

இன்னும் கொஞ்ச நேரத்தில் +2 ரிசல்ட் வரும்

இன்னும் கொஞ்ச நேரத்தில் +2 ரிசல்ட் வரும், அதன் பின் இரு நாட்களுக்கு ஊடகபக்கம் செல்ல முடியாது, எந்த ஊழலும் , எந்த அறிவிப்புக்களையும் அரசியல் கட்சிகள் செய்யலாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் எல்லோர் கண்களும் அந்த மாணவர்களின் செய்திகளின் மேல் இருக்கும். அவர்களும் பெரும் சாதனை படைக்கபோவதாக சொல்வார்கள், அதனை கூட பொறுத்துகொள்ளலாம் அவர்களின் பெற்றோர் இச்சாதனைக்காக செய்த தியாகங்களை பட்டியலிடுவார்கள், மாணவ மாணவியரின் இண்டர்வியூ பெற்றோர், பள்ளி, ஆசிரியர்கள் என தொடர்ந்து செல்லும் சென்றுகொண்டே […]

இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி: புத்த கோவிலில் வழிபாடு

இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி: புத்த கோவிலில் வழிபாடு நமது பிரதமர் இந்தியாவில் இருக்கும்பொழுது இந்து கோவில்களுக்கு மட்டும் செல்கின்றார் ஆனால் ஐரோப்பாவில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு செல்கின்றார், அரபு நாடுகளில் கசகஸ்தானில் மசூதிக்கு செல்கின்றார், ஜப்பானில் புத்த ஆலயங்களில் டிரம் அடிக்கின்றார் இப்பொழுது இலங்கையில் புத்த விகாரைக்கும் சென்றிருக்கின்றார் ஆக இந்தியாவினை தவிர எல்லா நாடுகளிலும் நல்ல மத நல்லிணக்கத்தில் இருக்கின்றார், அதனை இந்தியாவிலும் செயல்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அவருக்கும் ஆசைதான், ஆனால் அதனை மீறிய […]

ஜெயா யாரை திட்டியிருப்பார்?

இந்த விஷயம்தான் இப்பொழுது அரசியல் மர்ம கிசுகிசுக்களில் டாப் என்கின்றார்கள் சில மீடியாக்கள் அதாவது ஜெயா அப்பல்லோவில் இருந்தபொழுது சில வீடியோக்கள் எடுக்கபட்டிருக்கலாம் என்பது தெரிகின்றது, திவாகரனின் மகனே தன் முகநூல் பதிவில் அந்த வீடியோவில் ஜெயா பச்சை உடையுடன் எதிரிகள் பார்க்க கூடாத கோலத்தில் இருந்தார் என சொல்லியிருந்தார் இப்பொழுது இன்னும் பல விஷயங்கள் வருகின்றன, அதில் ஜெயா மெலிந்த தேகம், நரைத்த தலையுடன் யாரையோ திட்டியபடி இருப்பதாகவும் அந்த வீடியோ வெளிவந்தால் தமிழகம் பற்றி […]

மோடி இலங்கை சென்றுவிட்டார்….

மோடி இலங்கை சென்றுவிட்டார், இலங்கை விமான நிலையத்தில் மிக கடுமையான பாதுகாப்பிற்கிடையே அவரை இலங்கை பிரதமர் ரணில் வரவேற்றுள்ளார் அங்கு குழந்தைகளும் மோடிக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர், மோடியும் கொஞ்சமும் இமேஜ் பாராமல் குனிந்து வணங்கியுள்ளார் மோடியின் இந்த பணிவு உலகெல்லாம் புன்சிரிப்புடன் நோக்கபடுகின்றது, விரைவில் “நேரு மாமா” இடத்தை மோடி பிடிக்க திட்டம் இருக்குமோ என்னமோ? கொழும்பு சந்திப்புகளை முடித்துகொண்டு நாளை மலையகம் செல்கின்றார் மோடி கடும் பாதுகாப்புக்கிடையே மோடியினை எதிர்பார்த்து கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனர் மலையகத்தார் ராஜிவிற்கு […]