பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆளுநருடன், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு

 ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வில்லை: அமைச்சர் ஜெயக்குமார் ஓஹோ..அப்படியானால் பன்னீரை விட பெரும் நிர்பந்தத்தை யாரோ கொடுத்திருக்கின்றார்கள், அன்னார் அதனைத்தான் சொல்லவருகின்றார். ஆளுநருடன், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு ஒரு சாதரண மனிதனுக்கே இதனை நினைத்தாலே கோபம் வரும், ஆளுநர் எப்படி நிதானமாக இருக்கின்றார்? மானமுள்ள ஆளுநர் என்றால் என்ன சொல்லவேண்டும்? “ஏம்பா அன்னைக்கு பன்னீர் செல்வத்தை முதல்வராக்கு என வந்தீர்கள் பின் அவரை நீக்குங்கள் என வந்தீர்கள் சசிகலாவினை முதல்வராக‌ […]

ஆபாச விளம்பர சர்ச்சையில் சிக்கினார் சன்னி லியோன்

ஆபாச விளம்பர சர்ச்சையில் சிக்கினார் சன்னி லியோன் ஆபாச பட‌ நடிகையினை நடிக்க வைத்தால் குணசித்திர பிரதிபலிப்பா கொடுப்பார், அவருக்கு என்ன வருமோ அதனைத்தான் நடிப்பார் இந்த இந்திய கலாச்சாரத்தை காக்கும் இந்திய தாலிபான்களை இந்த விஷயத்தில் எல்லாம் காணமுடியாது, பசுமாட்டுக்கு பொங்குபவர்கள் எல்லாம் இவ்விஷயத்தில் அதுவும் ஒரு “மிலேச்ச நாட்டு கணிகை” விஷயத்திற்கெல்லாம் அமைதி எல்லாம் வாத்சாயணர், ஜெயதேவர் உட்பட இந்து முனிவர்கள் சொன்னதுதான், ஆலய சிற்பங்களிலும் காணபடுவதுதான். அதனால் சன்னியினை கண்டித்து நாடுகடத்தினால் அது […]

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: காங்கிரஸ்

  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: காங்கிரஸ் மசூதி இடிக்கபடும்பொழுது மத்தியில் இவர்கள் தான் ஆட்சி செய்தார்கள், அந்த சலசலப்பு வரும்பொழுதே ராணுபடைகளை இறக்கி 4 பேரை சுட்டிருந்தால் மசூதி இருந்திருக்கும் அப்பொழுது அமைதி காத்துவிட்டு இன்று நியாயம் கேட்கின்றார்கள், முதல் குற்றவாளி இவர்கள்தான், அதன் பின்னால்தான் அத்வாணி வகையறா.. அது இருக்கட்டும் தமிழகத்தில் தா.கிருட்டினன் தன்னை தானே வெட்டி செத்தது போல, பாபர் மசூதியும் தானாகவே இடிந்துவிட்டது என நம்புவோம் அந்த […]

தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: பன்னீர்

தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: ஓ.பி.எஸ் எது? பேச்சு என்றவுடன் மன்னார்குடி குடும்பம் ஒதுங்கினால் போதும் என ஒப்புகொள்வதா? இதுவா வெற்றி மிஸ்டர் பன்னீர், நீங்கள் சொன்ன தர்மயுத்தம் எது? ஜெயாவின் சாவு விசாரிக்கபட்டு, குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்பது. அந்த தர்மயுத்ததில் நீங்கள் ஈடுபட்டுள்ளதாகத்தான் தமிழகம் நம்புகின்றது ஆனால் நீங்களோ அந்த நிபந்தனையினை மறந்து, உங்கள் தர்மயுத்தத்தை இரட்டை இலையினை மீட்டு, கட்சிக்குள் ஆதிக்கம் பெறுவதாக மாற்றி கொண்டீர்கள் நீங்கள் அரசியல்வாதி அல்லவா? மறந்துவிடுவது உங்கள் […]

அய்யாகண்ணுவினை சந்தித்தார் பொன்.ராதா கிருஷ்ணன்

அய்யாகண்ணுவினை சந்தித்தார் பொன்.ராதா கிருஷ்ணன் மோடியினை பார்த்தே தீருவோம் என அடம்பிடித்து, அம்மணம் பிடித்த அய்யாகண்ணு , குறைந்த பட்சம் வேளான் துறை அமைச்சரிடம் கூட உத்திரவாதம் வாங்காமல் ராதாகிருஷ்ணனிடம் சரண் அடைந்துவிட்டாரா? கவனித்தால் ஒன்று புரிகின்றதா? தமிழகத்தில் எரியும் கொள்ளி அணைந்தால், டெல்லியில் அய்யாகண்ணு கொதிப்பது தணிகின்றது மிஸ்டர் ராதா கிருஷ்ணனை தமிழகத்தில் பார்க்கமுடியாதா? டெல்லிக்கு சென்று அம்மணமாய் ஆர்ப்பாட்டம் செய்துதான் பார்க்கமுடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தாலும் கேட்க கூடாது ஆனாலும் மிஸ்டர் அய்யாகண்ணு, இனி […]

வெளிநாடுகளிலிருந்து மாநிலங்களுக்கு நேரடி கடனுதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வெளிநாடுகளிலிருந்து மாநிலங்களுக்கு நேரடி கடனுதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஆக தமிழ்நாட்டில் இனி வெளிநாட்டு வசூல் கொட்ட போகின்றது, நமது அமைச்சர்கள் சுதாரித்ததிலும் அர்த்தம் இருக்கின்றது இனி மன்னார்குடி குடும்பம் என்ன எம்எல்ஏக்களை வாங்குவது???, அமைச்சர்களே மன்னார்குடி குடும்பத்தை வாங்கிவிடலாம்..  

வடக்கும்… தெற்கும் …

அருணாச்சல பிரதேசத்தை, ‘தெற்கு திபெத்’ என அறிவித்தது, சீனா, இந்தியா கடும் கண்டனம் ஏன் கண்டிக்க வேண்டும்? சீன ஆக்கிரமிப்பு திபெத்தினை “வடக்கு அருணாச்சல பிரதேசம்” என அறிவித்து ஒரே போடாக போட்டால் தீர்ந்தது விஷயம் மிஸ்டர் சைமன், காங்கிரசை தமிழகத்திலிருந்து ஒழித்தவன் நான், பாஜகவினை விரட்டிகொண்டிருப்பவன் நான் என்றேல்லாம் முழங்கி கொண்டிருக்கின்றீர்கள். திமுக வெற்றியினை தடுத்தவன் நான் என சில இடங்களில் அட்டகாசமான கர்ஜனை.. திராவிட கட்சிகளை எல்லாம் ஒழிப்பேன் என முழங்கி கொண்டிருக்கின்றீர்கள்… எங்கே? […]

எல்லா தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமிப்பேன் : தீபா

எல்லா தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமிப்பேன் : தீபா அடிக்கிற காற்றில் மலையே பறக்கின்றது, இந்த இலவம் பஞ்சிற்கு என்னா பேச்சு? எல்லோரும் அது அண்ணா திமுக என்றபொழுது இவர் மட்டும் அத்தை திமுக என்றார் அத்தைக்கு இருந்த தன்னம்பிக்கைக்கு அர்த்தம் இருந்தது, அர்த்தம் இல்லா இந்த தன்னம்பிக்கைக்கு பெயர் பைத்தியகாரத்தனம்.. அதுவும் சரிதான் அத்தை கட்சி இப்பொழுது அப்படித்தான் சென்றுகொண்டிருக்கின்றது அடிக்கிற வெயிலில் அம்மணிக்கு இன்னும் கொஞ்சம் குழம்பியிருக்கின்றது

ஸ்டாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது

கலைஞர் நலமாக இருந்திருந்தால் நிச்சயமாக அதிமுகவின் ஒரு அணி இப்பொழுது திமுகவோடு கலந்திருக்கும் அவரின் ஆற்றல் அப்படி, டெல்லியின் ஆதிக்கம் பட்டவர்த்தனமாக தெரியும் பொழுது, அதன் ஆபத்து பற்றி சொல்லியே கரைத்திருப்பார், “நான் என்றே இரு கழகங்கள் இணைய பேசியவன் தெரியுமா?” என களமிறங்கியிருப்பார் “பன்னீர் எடப்பாடி அணிகள் இணைவதை விட , அண்ணா கண்ட திராவிடராய் நாமெல்லாம் இணைவதே இன்று முக்கியம்..” என அசத்தியிருப்பார், அரசியல் அரங்கம் அதிர்ந்திருக்கும்.. அவர் இல்லாத அரசியலில் சுவாரஸ்யங்கள் இல்லை, […]

ஆண்டவர் யேசு 2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி ….

“ஆண்டவர் யேசு 2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டது , இவரை கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால் பாலியல் கொலை வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை” : இலங்கை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த பிரேமானந்தா? அந்த‌ திருச்சி விராலிமலை பிரேமானந்தா , ஈழ அகதியாக வந்து இங்கு நித்தியானந்தாவிற்கு வழிகாட்டிய அந்த […]