பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈழத்தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே….

இப்படி போஸ்ட அடித்திருப்பது ஈழத்து மக்கள்,. மானமுள்ளவர்கள் என்றால் இந்த திருமாவும், திருமுருகனும் இனியாவது வாயினை மூடட்டும்.. கலைஞனும், விஞ்ஞானியும், விளையாட்டு வீரனும் அரசியலை கடந்தவன் என்பது உலக உண்மை.. இதோ ஈழத்து மக்கள் அழைக்கின்றார்கள், இனியாவது ரஜினி சென்றால் என்ன? எப்படியோ ஈழமக்கள் போஸ்டர் அடிக்க ஆரம்பித்தாகிவிட்டது, திருமா, திருமுருகனை கண்டித்து யாழ்பாணத்தில் போராட்டம் வெடித்துள்ளது.. விரைவில் கடப்பாரை, உருட்டுகட்டை, சாக்குபை சகிதம் இந்த திருமா, திருமுருகன், சீமானை பிடிக்க வருவார்கள் நாம் முன்பே சொன்னது […]

ரஜினி , திருமா, அத்வானி ……

‘ரஜினி போனால் என்ன… மோடி போனால் என்ன? ஒரு பயனும் இல்லை!” – சீமான் இந்திய அரசு 5 ஆயிரம் வீடுகளை கட்டிகொடுத்திருக்கின்றது, மோடி அரசு யாழ்பாண விளையாட்டு மைதானத்தை சீரமைத்துகொடுத்திருக்கின்றது இன்னும் பல விவகாரங்களில் மத்திய அரசுதான் உதவுகின்றது உண்மையில் வைகோ, நெடுமாறன், திருமா கத்திதான் ஒன்றும் ஆகபோவதில்லை, அதில் அங்கிள் சைமனையும் சேர்த்துகொள்ளலாம் தான் கத்தி ஒன்றுமே ஆகவில்லை எனும் ஆதங்கத்தில் அங்கிள் ரஜினியினையும், மோடியினையும் சேர்த்துகொள்கின்றார்.. திருமாவுக்கும், வேல்முருகனுக்கும் பயந்து வீட்டோடு முடங்கி […]

தொப்பி தொப்பியான பொய்கள்..

காவேரி பிரச்சினைக்கு திமுகதான் காரணம் , அதனால்தான் விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளனர்: எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வீட்டில் மூட்டைபூச்சி கடித்தாலும் திமுகதான் காரணம் என கத்தும் அளவிற்கு நிலமை சென்றாயிற்று உண்மை என்ன? 1975 வரை காவேரியில் சிக்கல் பெரிதாக இல்லை, அதன் பின் கிட்டதட்ட 20 வருடங்கள் திமுக ஆட்சியிலே இல்லை கன்ன்டம் அணைகளை கட்டி தள்ளும்பொழுது இங்கு ஆட்சியில் இருந்தது யார்? அந்த தொப்பி தலையர் ராமசந்திரன் கன்னடன் அணைகட்டும் பொழுது இங்கு ராமசந்திரன் போட்டோவிற்கு […]

மழை யாருக்கு பிடிக்காது, எல்லோருக்கும் பிடிக்கும் …

பெய்யென பெய்யும் மழை என்பார்கள், பேயென பெய்யும் மழை இங்கு கொட்டிகொண்டிருக்கின்றது வருணனுக்கு நம்மீது மேல் என்ன கோபமோ தெரியவில்லை, ஊருக்கு அழைத்து பேசினால் தண்ணீர் பஞ்சம் பற்றி அவர்கள் சொல்லும்பொழுது அழுகையே வருகின்றது 600 அடிவரை தேடிபார்த்தும் ஒரு சொட்டு நீரினை காணவில்லை என கதறல்… போனை வைப்பதற்குள் இங்கு காதோரம் சர்ரென்று இறங்குகின்றார் வருணன், அதுவும் இந்திரனின் ஆயுதங்களோடு வந்து கடும் சீன். எல்லா வேதங்களையும் புரட்டியாயிற்று, வருணனை போற்றுவதற்கே வரிகள் இருக்கின்றதே தவிர, […]

ஆர்கே நகர் தேர்தல் துளிகள் …

ஒரு விளக்கு எம்ஜிஆர், ஒரு விளக்கு ஜெயலலிதா : மின் விளக்கு சிம்பத்திற்கு பன்னீர் செல்வம் விளக்கம் என்ன இது? இப்படியாக மொட்டையாக விளக்கம் கொடுப்பார்கள்? எம்ஜிஆரையும், ஜெயலலிதாவினையும் விளக்காக பிடிக்கின்றார் பன்னீர் என்பது பரவி மருவி, எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் விளக்கு பிடிக்கின்றார் பன்னீர் என்றால் என்னாகும் விஷயம்? பெரும் சிக்கல் ஆகாதா? அதனால் எம்ஜிஆர் ஒரு விளக்கு, ஜெயா ஒரு விளக்கு இருவரையும் சுமக்கும் கம்பம் நான் என சொன்னால் என்ன?.. என்ன விளக்குகளோ? இரண்டும் […]

டிரம்ப் கொஞ்சநாளைக்காவது தாங்குவாரா?

உலகில் ஒருமனிதரின் மூக்கு இருமாதமாக‌ உடைந்துகொண்டே இருக்கின்றது என்றால் அது டிரம்பின் மூக்குதான் பதவிக்கு வந்து 3 மாதம் கூட ஆகாதநிலையில் அவருக்கு நடக்கும் அவமானங்கள் கொஞ்சம் அல்ல,உள்நாட்டில் மட்டுமல்ல, உலகமெல்லாம் பெரும் எதிர்ப்பு வடகொரிய அதிபர், சீன அதிபர் உட்பட யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை , கத்திகொண்டே இரு என விட்டுவிட்டார்கள். சிரியாவிலும் ஒன்றும் புட்டீனை மீறி அவரால் செய்யமுடியவில்லை, அங்கும் தோல்விதான். உள்நாட்டிலாவது மதிக்கின்றார்களா என்றால்? சுத்தமாக இல்லை ஒபாமா கொண்டுவந்த இன்சுரன்ஸ் திட்டத்தை […]

மன்னார் & கம்பெனி.. கல்யாணப்பரிசு காமெடி..

ஜெயா டிவியில் கல்யாண பரிசு படம் ஓடிகொண்டிருக்கின்றது, நிச்சயமாக தங்கவேலு ஒரு தீர்க்கதரிசி “மன்னார்” & கம்பெனி என காமெடியில் பின்னிகொண்டிருக்கின்ரார் “மன்னார்”குடி என்றொரு தமிழக கம்பெனி பின்னாளில் உருவாகும் என அவருக்கு தெரிந்திருக்கின்றது, அப்படி ஒரு கம்பெனி உருவாகி, இப்பொழுது ஜெயலலிதாவின் அதிமுக என்றொரு கம்பெனியினை வாங்கி பிரமாதமாக வியாபாரம் செய்கின்றது இப்பொழுது ஆர்.கே நகர் தொகுதியில் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுத்து கொண்டிருக்கின்றது பெரும் கஷ்டமான வேலை எல்லாம் அல்ல, அம்மா வாழ்க, தினகரன் […]

ரஜினி இலங்கைக்கு செல்வதை ரத்து செய்துவிட்டாராம்…

சும்மாவே கால்நடுங்கிகொண்டிருக்கும் ஒருவனிடம் சிலர் கத்திகொண்டு ஓடிவந்தால் அவன் என்ன செய்வான்? அதனைத்தான் ரஜினி செய்துகொண்டிருக்கின்றார். இலங்கைக்கு செல்வதை ரத்து செய்துவிட்டாராம், ஏன் என்றால் அதுதான் ரஜினி. தொழிலை தவிர அவர் எல்லா விஷயங்களுக்கும் இப்படித்தான் கன்னடன் ரஜினி ஈழத்திற்கு செல்வதா? என பலர் பொங்குகின்றார்களாம் அட பதர்களா? மீணவனை சுட்டான் என நீங்கள் முறையிடும் சுஷ்மா சுவராஜூம், மோடியும், பிரணாப் முகர்ஜியும் தமிழர்களா? இலங்கைக்கு யாருமே செல்லவில்லையா? சென்னை திருச்சி மதுரை என எத்தனை விமானங்கள் […]

விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்) ஏன் தோற்றது?

https://youtu.be/fH4EAHou2vM பன்முக தன்மை கொண்ட எழுத்தாளன் எப்படி இருப்பான், எப்படி உலகினை நொடிநொடியாக கண்காணிப்பான், ஒவ்வொரு நொடியின் உலக நிலமைமையினையும் தன் மனதில் நிறுத்துவான் என்பதற்கு பெரும் உதாரணமான எழுத்தாளர் சுஜாதா விக்ரம் என்றொரு கமலஹாசனின் படத்தில் அவரின் பங்கு 90% இருந்தது, அப்படி ஒரு அட்டகாசமான கதை அது உலகம் ஏவுகனை யுத்தத்தை கண்டது வளைகுடா போரின்பொழுது மட்டுமெ, அதற்கு முன்பு வல்லரசுகளிடம் ஏவுகனை இருந்தாலும் அதனை பயன்படுத்தி யுத்தம் ஒன்றும் நடக்கவில்லை வளைகுடா யுத்தத்தில் […]

நெல்லையில் நகை கடையில் தங்கம் கொள்ளை

நெல்லையில் நகை கடையில் தங்கம் கொள்ளை போயிருக்கின்றது, ஆனால் வேலுர் பக்கம் தமிழக பொலீஸ் மீட்டுவிட்டது, தன் திறமையினை போலீஸ் நிலைநாட்டிற்று இப்பொழுது சிக்கல் என்னவென்றால் ஒரு பத்திர்கை 40 கிலோ எனவும், இன்னொரு பத்திரிகை 37.5 கிலோ எனவும் , இன்னொரு பத்திரிகை 60 கிலொ எனவும் எழுதுகின்றன‌ ஆக கடையில் இருந்த மொத்த தங்கத்தின் அளவு என்ன என்பதே தெரியவில்லை, என் தெரியவில்லை? என கேட்க கூடாது ஏதோ ஒரு படத்தில், எம்.ஆர் ராதா […]