பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நடிகர் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் : எஸ்.ஏ சந்திரசேகர், மற்றும் குஷ்பு …..

நடிகர் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் : எஸ்.ஏ சந்திரசேகர் ஏன் வந்து பார்த்தால்தான் என்ன? பெரும் முதலை கட்சிகளே எப்படி அரசியல் செய்யலாம் என்ன மண்டையினை பிய்த்துகொண்டிருக்கும் பொழுது விஜய் வந்து என்ன செய்துவிடுவார்? விஜயகாந்த் படும்பாடு தெரிந்திருக்குமோ? திடீரென இவர் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என சொல்லவேண்டிய அவசியம் என்ன? அதுவும் இடைதேர்தல் நேரத்தில்? யாரும் பிரச்சாரத்திற்கு அழைத்திருக்கலாம், அதனால் பொதுவாக இப்படி இவர் சொல்ல வாய்ப்பிருக்கின்றது ம்ம்ம்ம் தேர்தல் முடிந்துவிடும், விஜய்படம் தொடர்ந்து வரவேண்டும் […]

கீழடி அகழாய்வு பணிகளை இத்தோடு மூடிவிடுவார்கள்: அமர்நாத் கவலை

கீழடி அகழாய்வு பணிகளை இத்தோடு மூடிவிடுவார்கள்: பணியிடம் மாற்றப்பட்ட அமர்நாத் கவலை இந்த தமிழகத்தில் எம்ஜிஆர் , ஜெயா வரலாற்று ஆய்வு மிக தீவிரமாக நடைபெறுகின்றது, அதுவும் 5000 வருடம் பழமையான ஜெயாவிற்கு வாரிசு யார் எனும் போட்டி நிலவுகின்றது இதில் கீழடியாம், ஆய்வாம். எந்த தமிழனுக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு? ஆளும் கட்சிக்கு அறவே இல்லை, கலைஞரின் மகனுக்கு அரசியலுக்காவது அதனை நோக்கும் எண்ணம் இல்லை. தமிழகத்திற்காக கட்சி நடத்துகின்ற யாருக்கும் இல்லை, எவருக்கும் […]

ஈழத்தில் ரஜினிகாந்தை வைத்து வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை – திருமாவளவன்.

https://youtu.be/3oaCCqw1y-s ஈழத்தில் ரஜினிகாந்தை வைத்து வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை – திருமாவளவன். ஆமாம், ஓடிசென்று பிரபாகரனை அண்ணா என இவர்தான் கட்டிபிடித்தார், பின்பு ஐயா என ராஜபக்சேயுடன் சிரித்தும் நின்றார் இப்படி இருவரையும் சந்தித்தால் அது சரி (இதனால் ஈழமக்களுக்கு என்ன நன்மை, ஒன்றுமே இல்லை) ஆனால் இருவரும் வேண்டாம், அழிந்த மக்களுக்கு வீடு வழங்கலாம், அவர்கள் அமைதியாக வாழட்டும் என ரஜினி சென்றால் அது ஏமாற்றுவேலை இந்த திருமா உண்மையான ஈழதமிழர் அனுதாபி என்றால் […]

சிரித்து மகிழ அடிக்கடி எம்ஜிஆர் படங்கள் பார்ப்பதுண்டு

சிரித்து மகிழ அடிக்கடி எம்ஜிஆர் படங்கள் பார்ப்பதுண்டு அதில் அவர் அடிக்கடி இம்மாதிரி மினிஸ்கர்ட்டில் வருவதுண்டு, பார்த்தால் குபீர் சிரிப்பு வரும் காட்சிகள் அவை ஹீரோயின்கள் எல்லாம் மூடிகொண்டு வரும் காட்சிகளில் அவர் மட்டும் நீச்சலுடை காட்சிகளில் வருவார்.தொடை தெரிய ஸ்கர்ட் போடுவதில் அவருக்கு அவ்வளவு ஆனந்தம், ஆனால் இந்த உடையில் அவர் வந்து நிற்கவும் பலருக்கு ரம்பா நியாபகம் வரலாம்,அப்படித்தான் தொடை தெரிய‌ வந்து நிற்பார் ஆனால் குஷ்பூ ரசிகனான நமக்கு கனவிலும் ரம்பா வர […]

இந்திய பாராளுமன்ற தாக்குதல் போலவே லண்டனினும் தாக்கியிருக்கின்றார்கள்

இந்திய பாராளுமன்ற தாக்குதல் போலவே லண்டனினும் தாக்கியிருக்கின்றார்கள் பெரும் அதிர்ச்சியினை கொடுக்கவேண்டும் என செய்யபட்ட தாக்குதல் அது, 4 பேர் உயிரிழ்ந்திருக்கின்றார்கள். நிலமை கட்டுப்பாட்டில் இருக்கின்றது, ஆனால் மிக கடுமையான காவல் யார் செய்தார்களோ தெரியாது, ஆனால் ஐஎஸ் இயக்கம் உரிமை கோருகின்றது, அது அப்படித்தான் மாரடைப்பில் செத்தவர்களை தவிர ஐரோப்பாவில் யார் செத்தாலும் நாங்கள்தான் காரனம் என சொல்லும், அதில் அதற்கொரு சந்தோஷம் விரைவில் பிக் பென் கோபுரத்தையும் இடிப்பார்களாம் சொல்லிகொள்கின்றார்கள் உலகெல்லாம் பெரும் தீவிராவாத […]

ஆர்கே நகர் அப்டேட்ஸ்…..

 ஆர்.கே நகரில் சரத்குமார் வேட்பாளர் மனு நிராகரிப்பு. இப்போதைக்கு தமிழகத்தில் மிக மகிழ்ச்சியான நபர் சரத்குமார்தான், “அப்பாடா..” என கண்டம் தப்பிய மகிழ்வில் இருப்பார் மனு ஏற்கபட்டிருந்தால் வென்றிருப்போம், இது திட்டமிட்ட சதி என அடுத்த தேர்தல் வரை ஓட்டிவிடமுடியாதா? இப்போதைக்கு சரத்குமாரின் நன்றிகுரிய கடவுள் மனுவினை நிராகரித்த அந்த அதிகாரிதான்..   ஆர்.கே நகரில் தினகரனை விட கவனமாக இருக்கவேண்டியர் மு.க ஸ்டாலின் அதிமுக சிதறுதேங்காயான இந்நிலையிலும் வெல்லமுடியவில்லை என்றால் அது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக […]

பன்னிரண்டு வயது கேரள சிறுவன்: இந்தியாவின் இளம் வயது தந்தை!

பன்னிரண்டு வயது கேரள சிறுவன்: இந்தியாவின் இளம் வயது தந்தை! குழந்தை பெற்ற பெண்ணிற்கு வயது 17, மரபணு சோதனை மூலமே பையன் சிக்கியிருக்கின்றான் இருவருமே மைனர்கள் என்பதால், குழந்தைகள் மீதான பாலியல் தடுப்பு சட்டபடி இருவரும் கைதுசெய்யபட்டிருக்கின்றார்களாம் இந்த இரு குழந்தைகளும் சேர்ந்து குழந்தைபெற்றபின்னும் இவர்கள் மீது குழந்தை பாலியல் வழக்கு போடபட்டிருக்கின்றது… நிலமை ஏன் இப்படி ஆனது? ஷகீலா “வசுல் ராணி” என கொண்டாடபட்ட கேரளாவில் இப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்… “ஷகீலா எபெக்ட்” எப்படி […]

வீடுகள் திறப்புவிழாவிற்காக யாழ்பாணம் செல்கின்றார் ரஜினி

லைக்கா நிறுவணம் தமிழர்களுக்காக கட்டியிருக்கும் வீடுகள் திறப்புவிழாவிற்காக யாழ்பாணம் செல்கின்றார் ரஜினி “கத்தி” படம் வரும்பொழுது நடந்த களபேரம் நினைவிருக்கின்றதா? அதாவது இந்த லைக்கா உரிமையாளர் சுபாஷ்கரன் என்பவர் ராஜபகசே கூட்டாளி எனவும், ராஜபகசேயின் பினாமி எனவும் ராஜபக்சேயின் பணமே தமிழக சினிமாக்களில் வந்தது, இதனை அனுமதிக்க முடியாது எனவும் உணர்வாளர் அமைப்புகள் கொந்தளித்தன விஜய் பட்டபாடு கொஞ்சமல்ல‌ ஆனால் பணம் பத்தும் செய்யும், சுபாஷ்கரனிடம் இருந்தால் 11ம் செய்யும், தமிழக நிலமைக்கு அது 12ம் செய்யும் […]

உடன் பிறப்பே, சில நினைவுகளில் நான்…

உடன் பிறப்பே சில நினைவுகளில் நான் மூழ்கியிருக்கின்றேன், அது ஒரு வசனகர்த்தாவாக நான் எழுத தொடங்கிய காலங்களை நினைத்து பார்க்கின்றேன் சேலம் மார்டன் தியேட்டர் அலுவலகத்தில் தொடங்கிய அருமை நண்பர் எம்,ஜி ராமசந்திரனின் நட்பு காலம் கண்ணில் தெரிகின்றது, 40 வருட நட்பு அது கழுத்தில் ருத்திராட்சமும், நெற்றியில் பட்டையும், கதரும் அணிந்து வந்த அந்த முகம் மறக்க கூடியதல்ல, பின்பு ஓரிலையில் உணவுண்டு, ஒரு பாயில் கண் அயர்ந்து, அன்னை அஞ்சுகம் கையாலும் இருவரும் உண்ட […]

போற்றி பாடடி பெண்ணே…அண்ணாச்சி காலடி மண்ணே

தூத்துகுடி கலெக்டர் அலுவலகத்தில் சர்ச்சைகுரிய கடிதத்தில் சிக்கியது விவி மினரல்ஸ், குடோன் சீல் வைப்பு அதாவது கலெக்டர் ஏற்றுமதிக்கு அனுமதி கடிதம் கொடுத்ததாக கம்பெனி நிர்வாகம் கப்பலில் சரக்கேற்ற கிளம்பியது, ஆனால் கலெக்டர் அப்படி ஒரு கடிதம் எழுதவில்லை என மறுத்ததாக சொன்னதை அடுத்து நடவடிக்கை எடுக்கபடுகின்றது. ஆழநோக்கினால் கையிலிருக்க்கும் சரக்கினை எப்படியாவது விற்றுவிட வேண்டும், அதன்பின் வருவதை சமாளிக்கலாம் என அண்ணாச்சி தரப்பு துடிப்பது தெரிகின்றது மெட்ரிக் டன்கள் அளவிற்கு அவர் குடோனில் பதுக்கபட்டிருக்கின்றது என்றால், […]