பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இளநீர் திருவிழா நடத்தும் சீமான்…

அந்நிய குளிர்பானங்களை புறக்கணிக்க அன்னார் இளநீர் திருவிழா நடத்துகின்றாராம் தமிழக அரசு டாஸ்மாக் என்றொரு பான கடை வைத்திருக்கின்றதே, அது என்ன இயற்கை பொருளா? தமிழகத்தின் எல்லா மதுகடை முன்னும் சென்று அன்னார் இளநீர் திருவிழா நடத்துவாரா என்றால் இல்லை சரி முன்பு கள் தமிழரின் தேசியபானம் என்றார் அல்லவா?, அப்படி மதுக்கடை முன் கள் திருவிழா நடத்துவாரா என்றாலும் இல்லை. முன்புதான் வந்தேறிகள் ஆட்சியில் மது ஆறாக ஓடியது, இந்த பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியிலுமா […]

சிம்புவின் புதிய படம் AAA …

வழக்கமான தன் அல்ட்ராசிட்டி டைட்டிலுடன் டிரைலர் வெளியிட்டிருக்கின்றார் சிம்பு, படம் AAA என்னமோ என அவரே வைத்துவிட்டார் அது சென்சாரில் A வாங்கவேண்டிய படம் என அவரே ஒரு வசனமும் பேசுகின்றார் “இது பொண்ணுங்களே தொடாத டி.ஆர் படம் இல்லடா, பொண்ணுங்க உதட்ட பிச்சி எறியிற எஸ்.டி.ஆர் படம்” முகம் நிறைய தாடியும், வாய் நிறைய பஞ்ச் டயலாக்கும், 1000 டெசிபலில் சத்தமான டண்டனக்காவும், வைத்திருந்தால் எந்த நடிகையாப்பா டி.ஆர் பக்கம் வருவாள்?? இதில் டி.ஆர் பெண்களை […]

இளையராஜா போல வடிவேலுவும் பொங்கி எழுந்தால் ஆதித்யா டிவி திவாலாகிவிடும்

இந்த இளையராஜா போல வடிவேலுவும் பொங்கி எழுந்தால் ஆதித்யா டிவி திவாலாகிவிடும் மற்ற எல்லா டிவிக்களும் பெரும் தொகை கொடுக்க நேரும், இன்னும் ஏராளமான இன்றைய காமெடியன்கள் வடிவேலுவுக்கு வரிகட்ட வேண்டி வரும் பில்கேட்ஸினை விட வடிவேலுதான் பணக்காரராக இருப்பார்… செந்திலும், கவுண்டமணியும் அட்லீஸ்ட் அம்பானி அளவிற்காவது சென்றுவிடுவார்கள் என்பது உறுதி.. குஷ்பூ எவ்வளவு பெருந்தன்மையானவர், என் படங்களை என் அனுமதியின்றி பயன்படுத்தகூடாது என என்றாவது சொல்லியிருக்கின்றாரா? அப்படி சொன்னால் நாமெல்லாம் இந்த உலகத்தில் வாழத்தான் முடியுமா? […]

அங்கிள் பாய்ஸ், எங்கே சென்றீர்கள் ?

எப்படி தெலுங்கரான பால சுப்பிரமணியம் தமிழரான இளையராஜாவுடன் மோதலாம், தமிழ்நாட்டில் தமிழ் இசை அமைப்பாளருக்கும் சிக்கலா? விடமுடியுமா? அங்கிள் பாய்ஸ், எங்கே சென்றீர்கள் இதோ ஒரு தமிழன் தெலுங்கரால் பாதிக்கபட்டிருக்கின்றதாக சொல்லிகொண்டிருக்கின்றார். தமிழரான கங்கை அமரனின் வீட்டை ஒரு தமிழச்சி சசிகலா அபகரித்திருக்கலாம், அது தமிழர் பிரச்சினை என நீங்கள் விட்டுவிடுவீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இளையராஜாவுடன் மல்லுகட்டும் ஒரு தெலுங்கரை எப்படி விடுவீர்கள்? எங்கே உங்கள் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் மற்றும் வீர முழக்கங்கள்?? […]

மதவெறி எவ்வளவு கொடுமையானது…

கோவையில் ஒரு இஸ்லாமியர் சில சொந்த கருத்துக்களுக்காக தன் சொந்த மக்களால் கொல்லபட்டிருக்கின்றார் மதவெறி எவ்வளவு கொடுமையானது என அப்பட்டமாக தெரியும் நேரமிது தாலிபான்களும், ஐஎஸ் இயக்கமும் செய்வதை கோவை மண்ணிலும் பார்க்கும்பொழுது பகீர் என்றுதான் இருக்க்கின்றது, அவன் மதத்தை ஏற்றான் அல்லது நிராகரித்தான் என்பதை பொறுத்தா இந்த பூமியில் வாழும் உரிமை நிர்ணயிக்கபடும்??? சிங்கமும், புலியும், கரப்பானும் வாழும் பூமியில் ஒரு மானிடன் வாழகூடாதா? இவ்வளவு நடந்திருக்கின்றது, இஸ்லாமிய சங்கங்கள் கடும் அமைதி ஆனால் ஒரு […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ….

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், வைகோ முடிவு தினகரன் தோற்பாரா இல்லையா என்பதை விட, திமுக வென்றுவிட கூடாது என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கின்றார்கள் பார்த்தீர்களா? இதுதான் மக்கள் நல கூட்டணி ஒரு கொள்ளை கும்பலிடம் இருந்து தொகுதியினை மீட்க வேண்டும் என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாத இவர்கள்தான், தமிழ்நாட்டினை காப்பாற்ற கிளம்பியவர்களாம்.. கடந்த தேர்தலில் இவர்கள் கூட்டணி எப்படி ஏற்பட்டது என்ற மர்மம் இன்னும் புரியாதவனெல்லாம் உத்திரபிரதேசம் செல்ல […]

இன்று உலக சிட்டுகுருவிகள் தினம்

 இன்று உலக சிட்டுகுருவிகள் தினம் தமிழர்கள் சிட்டுகுருவியை மிக மிக ரசித்தவர்கள், பல பழந்தமிழ் பாடல்களில் குருவியை புள்ளான் என குறிப்பிட்டுள்ளனர் அவர்களை விடுங்கள் செங்கால் நாரையை கூடத்தான் அழகாக கவிதையில் புனைந்திருப்பார்கள். சிட்டுகுருவிக்கு தனி இடம் கொடுத்தவர் நெல்லைக்காரர் மகாகவி பாரதி, கடனுக்கு மனைவி வாங்கிவந்த அரிசியை, கொல்லையில் குருவியை கண்டவுடன், தன் குடும்பத்து பசிமறந்து, “காக்கை குருவி எங்கள் ஜாதி” என ஆனந்தமாய் பாடி குருவிக்கு அரிசி வீசியவர். லௌகீக வாழ்வில் மிகவும் சலிப்புற்று […]

நீ கிறிஸ்தவனா? பைபிள் படிப்பவனா?

என்னிடம் வந்து நீ கிறிஸ்தவனா? பைபிள் படிப்பவனா, துரோகி , யூதாஸ் என சிலர் சொல்லி கொண்டிருக்கின்றார்கள் இந்த பரந்த உலகினையும், அதில் வாழும் எல்லா மக்களையும் எங்கோ மேற்காசியாவில் வாழ்ந்த மிக சிறுபான்மை இனத்தின் பைபிள் பைபிள் மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியுமென்றால் நான் கிறிஸ்தவன் அல்ல‌ இஸ்ரேலிய யூதனுக்கு அவன் புத்தகம் கொடுத்த கட்டளைகளை, எங்கோ மூலையில் இருக்கும் தமிழனாகிய நான் பின்பற்றவேண்டுமென்றால் நான் கிறிஸ்தவன் அல்ல‌ எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு, அந்த […]

திரு.மைக்கேல் பிரான்ச் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

வள்ளியூரின் பண்பாளர்களில் ஒருவரும், பழகுவதற்கு இனிமையானவரும், மக்களின் நன்மதிப்பினை பெற்றிருந்தவருமான திரு.மைக்கேல் பிரான்ச் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றோம். மறக்கமுடியாத மனிதர் ஒருவர் மறைந்திருக்கினார் வள்ளியூர் தன் பண்பான மைந்தனை இழந்திருக்கின்றது, பாத்திமா ஆலயம் தன் பெரும் பக்தனை இழந்திருகின்றது அவரின் குடும்பம் தன் வேரினை இழந்திருகின்றது ஆசிரியை சரோஜா அவர்களின் கரங்களை பற்றிகொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம், அண்ணன் அறிவரசு அவர்களுக்கும் நம் கண்ணீரை தெரிவித்துகொள்வோம் அவர் தினமும் வழிபட்ட பாத்திமா அன்னை அவரின் […]

உத்திரப்பிரதேச பாஜக அரசின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.

உத்திரப்பிரதேச பாஜக அரசின் புதிய முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். காவியும், நாமமும் பிண்ணணியில் ஏகபட்ட சர்ச்சைகளுடன் ஒரு சாமியார் பதவியேற்றிருப்பது எதனை காட்டுகின்றது? நாட்டிற்கு படித்தவனோ, சிந்தனையாளனோ தேவையே இல்லை சாமியார் மட்டும் போதும் எனும் பாஜகவின் ஆத்மார்ந்த கொள்கையினை காட்டுகின்றது. அடுத்து ஜனாதிபதி தேர்தல் வேறு வரப்போகின்றதாம், காஞ்சி சங்கராச்சாரி, சிருங்கேரி, காஞ்சி,துவாரக, மதுரை ஆதீனம் என‌ மட அதிபர்கள் எல்லாம் இனி குடியரசு தலைவர் கனவில் மிதக்கலாம் அவர்களை விட கங்கை கரையில் […]