பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் நேரத்தில் சிக்கி இருக்கும் கண்டெய்னர் …

பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுரங்களை தகர்த்த பின், அமெரிக்காவில் அடுத்த தாக்குதல் எப்படி இருக்கலாம் என சிஐஏ மற்றும் எப்பிஐ போன்ற அமைப்புகள் எல்லாம் யாரிடம் விசாரித்தன தெரியுமா? ஹாலிவுட் டைரக்கடர்களிடம். ஆம், அவர்களின் கற்பனா சக்தியில் சில சாத்தியங்கள் உண்டு, அப்படியும் நடக்கலாம் என எல்லா ஹாலிவுட் படங்களையும் பார்த்துவிட்டு, பின் அவர்களிடம் விவாதித்தும் விட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தினார்கள் அதன்பின் இன்றுவரை அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கின்றது தமிழகம் இதுவரை சினிமாவில் இருந்து முதல்வர்களை எடுத்ததே […]

இளையராஜா எஸ்பி. பாலசுப்ரமணியம் ……

  எந்த பெரும் கலைஞனுக்கும் தன் வித்தையில் ஒரு கர்வம் இருக்கும், தன் வித்தையில் எந்த நிலையிலும் தன்னால் உயர்ந்து நிற்க முடியும் என்ற தன்னபிக்கை அது கலைஞர்கள் என்றல்ல, திறமையான எல்லோருக்கும் அவர்கள் துறையில் தன் இடம் என்ன என நிரூபிக்கும் ஒரு வெறி இருந்துகொண்டே இருக்கும், அதற்கு சோதனை வரும்பொழுதெல்லாம் அதனை நிரூபித்துகொண்டே இருப்பார்கள் இளையராஜா அதனை எத்தனையோ முறை நிரூபித்துவிட்டார், நிச்சயமாக தமிழ் திரைப்பட உலகில் அவர் ஒரு சகாப்தம், வரலாறு அவருக்கான […]

தூய தமிழ் பிரியர்களின் இம்சை தாங்க முடியவில்லை..

சில தமிழ்பிரியர்கள் இம்சை தாங்கமுடியவில்லை, புழக்கத்தில் இருக்கும் ஆங்கில பெயர்களுக்கு தமிழ் பெயர்கள் மாற்றுவதில் கடுமையாக உழைக்கின்றார்கள், 24 மணி நேரமும் சிந்திக்கின்றார்கள் உலகில் தன் மொழி சொற்களை 100% கொண்ட மொழி என எதுவுமில்லை. எல்லா மொழியிலும் எல்லா மொழி சொற்களும் கலந்தே இருக்கின்றன‌ இல்லாவிட்டால் அரசியலில் நேர்மையானவர்கள் அனாதை ஆவது போல பல மொழிகள் ஓரங்கட்டபடும் ஆங்கிலத்தின் ஸ்பெஷலே எல்லா மொழி வார்த்தைகளையும் கிரகித்து தன்மொழியாக்கி கொண்டதுதான் அது இருக்கட்டும்.. சில தமிழர்கள் இப்பொழுது […]

சதி செய்து என கணவனை பிரித்துவிட்டார் சசிகலா : தீபா கண்ணீர்

எனக்கெதிராக சதி செய்து என கணவனை பிரித்துவிட்டார் சசிகலா : தீபா கண்ணீர் அதிமுக தலமை எப்பொழுதும் அப்படித்தான், எம்ஜிஆர் பிரிக்காத ஜோடிகளா, குடும்பங்களா? அந்த தெலுங்கு நடிகரிடம் இருந்து கூட பிரதான நாயகியினை யார் பிரித்தார் என்பதெல்லாம் வரலாறு ஜெயா பிரிக்காத குடும்பங்களா? தாமரை கனியின் மகன் முதல் மு.க முத்துவரை எத்தனை பேரை குடும்பத்திற்கு எதிராக நிறுத்தினார்?? சசிகலாவினையே பிரித்து தன்னோடு வைத்திருந்தவர் அல்லவா அவர். அக்கட்சியின் பாரம்பரியம் அப்படி, கலாசாரம் அப்படி இன்று […]

திரைப்பட இயக்குனர்களில் மகா முக்கியமானவர் பாசில் ….

தென்னகத்து இயக்குனர்களில் மகா முக்கியமானவர் பாசில் பூவே பூச்சுடவா, பொம்மு குட்டி அம்மாவுக்கு , காதலுக்கு மரியாதை என மிக நுண்ணிய உணர்வுகளை வெளிபடுத்திய பிரமாதமான இயக்குநர் அவர் அழகான கதையினை அவர் தெர்ந்தெடுப்பதை விட அதற்கு பொருத்தமான நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்பதுதான் அவரின் திறமை. பூவே பூச்சூடவா பத்மினியும், பொம்முகுட்டி அம்மாவுக்கு சுஹாசினியும் என்றும் நிலைத்த பாத்திரங்கள்…. மானிட வாழ்வின் பாச உணர்வுகளை அப்படி அழகாக படமாக்கியவர்,அற்புதமான படங்களை கொடுத்த அவரை மறக்கவே முடியாது அதுவும் […]

தமிழகத்தை நேசிப்போர் அந்த பட்டினத்தார் சமாதியில் தியானம் செய்யலாம்…

தமிழகத்தில் ஜெயா, அண்ணா, எம்ஜிஆர் சமாதி என சுற்றிகொண்டிருக்கின்றார்கள், அதில் தியானம் எனும் இம்சை வேறு உண்மையில் தியானம் செய்யவேண்டிய சமாதி சென்னை திருவொற்றியூரில் உண்டு, பட்டினத்தாரின் சமாதி அது. பெரும் பணக்காரனான அவர், சொத்துக்களுக்கு ஆசைபட்ட உறவினர் பெண்ணின் நாடக‌ வாழ்வினை வெறுத்து ஞானியாகி பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தார் பெண்ணால் பெரும் அழிவுவரும் என சொன்னது அவர், அதனால் பெண்ணால் பாதிக்கபட்ட மன்னர்கள் எல்லாம் அவருக்கு சீடரானார்கள், பத்ருஹரி மகாராஜாவும் ஒருவர் இன்றும் பட்டினத்தார் பாடல்கள் செல்வத்தால் […]

தீபாவின் கணவர் புதுகட்சி தொடங்கினார்

தீபாவின் கணவர் புதுகட்சி தொடங்கினார் 1972 முதல் அது காமெடி கட்சிதான், ஆனால் இப்பொழுது உச்சகட்ட பெரும் காமெடி காட்சிகள் எல்லாம் நடக்கின்றன‌ 15 ஆண்டுகள் ராமசந்திரன் என்பவர் செய்த காமெடிகளும், அவரின் அண்ணாயிசம் கருத்துக்களும் பெரும் பிரசித்திபெற்றவை ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை புரிந்தாலும், ஒரு காலமும் எம்ஜிஆரை தவிர யாருக்கும் புரியாத கொள்கை அண்ணாயிசம் 1987ல் ஜாணகி எனும் பொம்மையினை வைத்தும் காமெடிகள் நடந்தன, ஜெயா எனும் எம்ஜிஆரின் வார்ப்பு ஒன்று பின் அந்த காமெடிகளை […]

இது கிறிஸ்தர்களுக்கு விரத காலமாம்…

இது கிறிஸ்தர்களுக்கு விரத காலமாம், பலர் விரதமிருக்கின்றனர், அதில் பாகம்பிரியாளும் ஒன்று கர்த்தராகிய இயேசு நமக்காக உயிர்விட்டார் என இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் விரதமிருக்கின்றார்கள், நல்லது ஆனால் ஆனானபட்ட இயேசுபிரானே எனக்காக உயிர்விட்டிருக்கின்றார் எனும்பொழுது, சில மீன்களும் கோழிகளும் ஆடும் எனக்காக உயிர்விட கூடாதா? இப்படி சொல்லிவிட்டு எல்லாம் தயார்படுத்தியாயிற்று.. இயேசு எனக்காக ஜீவன் விட்டார், இதோ பல உயிர்களும் எனக்காக ஜீவனை விட்டுகொண்டிருக்கின்றது எவ்வளவு பெரிய பாக்கியசாலி நான்.. “சந்தோஷம் பொங்குதே..சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் என்னில் பொங்குதே […]

நான் சொல்லும்படி கேட்டிருந்தால் குர்துகள் போல புலிகள் போராடி கொண்டிருப்பார்கள் : நார்வேயின் எரிக் சோல்ஹிம்

நான் சொல்லும்படி கேட்டிருந்தால் குர்துகள் போல புலிகள் போராடிகொண்டிருப்பார்கள் : நார்வேயின் எரிக் சோல்ஹிம் ஈழதமிழரை விட பெரும் சிக்கலான இனம் குர்து, ஈழத்தின் எதிரி சிங்களம், கொஞ்சம் ராஜதந்திரமாக முயற்சித்திருந்தால் ஈழம் என்றோ தன்னாட்சி பிரதேசமாக மாறியிருக்கும், புலிகளின் பிடிவாதம் அதனை அழித்தது, புலிகளும் அழிந்தனர் ஆனால் குர்து இனம் மூன்று நாடுகள் சந்திக்கும் முச்சந்தியில் சிக்கியது, சிரியா, துருக்கு, ஈராக் என முன்று நாடுகளை அவர்கள் சமாளிக்க வேண்டும் குர்து போராளிகள் இந்த மூன்றுநாடுகளுடனும் […]

கன்னத்துல கிஸ்ஸுங்கோ … … மொட்ட ஷிவாடா..கெட்ட ஷிவாடா..

https://youtu.be/4dt_jkFCq7c ஒரு பாடல் ஒலித்துகொண்டிருக்கின்றது “கன்னத்துல கிஸ்ஸுங்கோ கழுத்துல கிஸ்ஸுங்கோ வயித்துல கிஸ்ஸுங்கோ.. … ஜெஸ்ட் கொஞ்சம் மிஸ்ஸுங்கோ … … மொட்ட ஷிவாடா..கெட்ட ஷிவாடா..” பாடல் வரியிலே கெட்ட சிவா என்றபின் பாடல் இப்படித்தான் இருக்கும், படத்தின் ஆல் இன் ஆல் லாரன்ஸ் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை டாஸ்மாக்கில் சம்பாதித்து மக்களுக்கு கிரைண்டரும், மிக்ஸியும் இப்பொழுது ஸ்கூட்டியும் கொடுத்து ஏமாற்றிவிட்டால் அது அரசாங்கம் இப்படி ஒரு மாதிரியான பாடல்களை வைத்து, அதில் சம்பாதித்து அவ்வப்போது அதற்கி […]