வருங்கால டாக்டர்கள் எல்லாம் போராட்டம் நடத்துகின்றார்களாம்
வருங்கால டாக்டர்கள் எல்லாம் போராட்டம் நடத்துகின்றார்களாம் இவர்களுக்கு செலவழிக்கும் அரசாங்கம் கையினை பிசைந்துகொண்டிருக்கின்றது, அதாவது இந்நாட்டு மக்களை காக்கவேண்டிய மருத்துவர்களின் இந்த மருத்துவர்களின் போராட்டம் அர்த்தமற்றது, பொறுப்பில்லாதது ஓவ்வொரு நொடியும் தேவைபடுவது அவர்களின் சேவை, இப்படி மறுதலித்து நின்றால் ஏழைமக்களின் அவஸ்தை சொல்லமுடியாதது. மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்திருப்பவர்கள், உயிரை காக்கும் உன்னத பணி அவர்களுடையது. ராணுவமும், காவல்துறையும், மருத்துவதுறையும் ஓய்வெடுக்க முடியாதவை, அவை நின்றால் தேசம் இயங்காது யாரேனும் மருத்துவரின் அருமை தெரியாமல் அவமதித்திருந்தால் அவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்கள், […]