பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வருங்கால டாக்டர்கள் எல்லாம் போராட்டம் நடத்துகின்றார்களாம்

வருங்கால டாக்டர்கள் எல்லாம் போராட்டம் நடத்துகின்றார்களாம் இவர்களுக்கு செலவழிக்கும் அரசாங்கம் கையினை பிசைந்துகொண்டிருக்கின்றது, அதாவது இந்நாட்டு மக்களை காக்கவேண்டிய மருத்துவர்களின் இந்த மருத்துவர்களின் போராட்டம் அர்த்தமற்றது, பொறுப்பில்லாதது ஓவ்வொரு நொடியும் தேவைபடுவது அவர்களின் சேவை, இப்படி மறுதலித்து நின்றால் ஏழைமக்களின் அவஸ்தை சொல்லமுடியாதது. மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்திருப்பவர்கள், உயிரை காக்கும் உன்னத பணி அவர்களுடையது. ராணுவமும், காவல்துறையும், மருத்துவதுறையும் ஓய்வெடுக்க முடியாதவை, அவை நின்றால் தேசம் இயங்காது யாரேனும் மருத்துவரின் அருமை தெரியாமல் அவமதித்திருந்தால் அவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்கள், […]

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்….

ஒரு விஷயம் புரிகின்றது, அதுவும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நன்றாக புரிகின்றது இந்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் யாரையும் வளர்த்துவிட நினைப்பதே இல்லை எம்ஜிஆர், கலைஞர், ஜெயா என எல்லோரும் அப்படித்தான் அரசியல் செய்தார்கள், இப்பொழுது ஸ்டாலினும் அதனைத்தான் செய்கின்றார் வைகோ, விஜயகாந்த் கட்சிகளில் யாருமே இல்லை என்பதால் அவர்களுக்கு இந்த சிக்கல் எல்லாம் இல்லை, சீமானுக்கும் அதே நிலை இப்போதுள்ள கோஷ்டிகள் இருக்கும் வரை காங்கிரசுக்கு நித்திய சமாதி, அது உருப்படாது. கோஷ்டிகளில் […]

தமிழக மீடியாக்களிடம் செய்தி பஞ்சம் நிலவுவது தெரிகின்றது.

தமிழக மீடியாக்களிடம் செய்தி பஞ்சம் நிலவுவது தெரிகின்றது. பட்ஜெட் முதல் பாராளுமன்றம் வரை கிழித்தெறிய எத்தனையோ விஷயங்கள் இருக்கும்பொழுதும் அவர்கள் என்ன செய்கின்றார்கள்? நடிகை கஸ்தூரியினை விரட்டி விரட்டி செய்தியாக்குகின்றார்கள் அம்மணி சொன்னதாக ஒரு செய்தி, அதன் பின் அந்த அம்மணி நான் அப்படி சொல்லவில்லை என ஒரு செய்தி பின் உண்மையினை சொல்கின்றேன் என அந்த அம்மணி மறுபடியும் ஒரு செய்தி ஆக 3 நாட்களாக இழுத்தாகிவிட்டது.. கவனித்தால் அந்த அம்மணி என்ன கடைசியாக சொன்னாரோ […]

பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து … கிரண்பேடி

பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து மிகப்பெரிய இயக்கம் உருவாக வேண்டும் : கிரண்பேடி பொதுவாக அப்படி ஒரு இயக்கம் உருவாகாது, காரணம் பெண்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை வராது, ஜெயா சசிகலா போல எல்லா பெண்களும் இணைந்திருக்கமாட்டார்கள் ஆனால் ஒருவர் நினைத்தால் தான் அப்படி எல்லோரையும் இணைத்து ஒரு இயக்கம் உருவாக்க முடியும் அவர்தான் சிம்பு அவர் ஏதாவது செய்தால் மட்டுமே இந்த மாதர்சங்கங்கள் எல்லாம் கொடிபிடித்து ஒன்றாய் கூடி கோஷமிடுவார்கள், மற்ற யார் என்ன செய்தாலும் […]

மாணவர் முத்துகிருஷ்ணனின் அஞ்சலிக்கு சென்ற பொன்னார் மீது செருப்பு வீச்சு…

மாணவர் முத்துகிருஷ்ணனின் அஞ்சலிக்கு சென்ற பொன்னார் மீது செருப்பு வீசபட்டிருக்கின்றது இது கண்டிக்க கூடிய விஷயம், சரியான ஆதாரம் இருப்பின் எறிந்தவரை தண்டிக்கவும் செய்யலாம் என்ன இருந்தாலும் அவர் ஒரு அமைச்சர், அதுவும் தேசிய கட்சியின் அமைச்சர். திருமணம் கூட செய்யாமல் இந்நாட்டிற்காக வாழும் ஒரு மனிதர் அவர் கட்சி மீது சர்ச்சைகள் இருக்கலாம், ஆனால் இந்த தேசத்தை தொடர்ந்து வாழும் வாய்ப்பினை அவர்களுக்குத்தான் இந்த தேசம் கொடுத்து வருகின்றது, அக்கட்சி அவரையும் அங்கீகரித்திருக்கின்றது முத்து கிருஷ்ணன் […]

கலைஞர் டிவியில் கலியுகம் என்ற நிகழ்ச்சி….

கலைஞர் டிவியில் கலியுகம் என்றொரு நிகழ்ச்சி ஓடுகின்றது, உலக வரலாற்றினை சொல்கின்றார்களாம் அப்படி சோவியத்யூனியனை சொல்கின்றோம் என அதன் பெருமைகளை மறைத்து, ஏதோ ஒரு அமெரிக்க அடிவருடி ஆசிரியர் எழுதிய புத்தகத்தை வாசித்துகொண்டிருக்கின்றார்கள். சோவியத் யூனியன் எனும் சமதர்ம பூமிமீது பெரும் நம்பிக்கையும், அபிமானமும் கொண்டிருந்தவர் கலைஞர், செருப்பு தைக்கும் தொழியாளியான ஸ்டாலினை அதிபராக்கிய அந்த சோவியத் அவருக்கு பிடித்திருந்தது, தன் மகனுக்கு கூட ஸ்டாலின் என பெயரிட்டார் அப்படி கலைஞர் மிக விரும்பிய சோவியத் யூனியனைத்தான், […]

ஆர்.கே.நகர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன்

ஆர்.கே.நகர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் பரவாயில்லை பாஜக கொஞ்சமாவது யோசித்திருக்கின்றது, தமிழகத்தில் கட்சியினை வளர்க்க முயற்சிக்கின்றது, ஒரு தேசிய கட்சி இந்த அளவில் முயற்சிப்பது வாழ்த்துகுரியது அதுவும் தான் பார்ப்பண இந்துத்வா எனும் அடையாளத்தை மாற்றி தமிழகத்தில் பொன்னார், கங்கை அமரன் என தாழ்த்தபட்டவர்களை முன்னிறுத்துவது அதன் தேர்தல் தந்திரம் கூட, எப்படியோ நல்லது நடந்தால் சரி. காங்கிரஸ் என்றொரு தேசிய கட்சி உண்டு, அது தமிழகத்திலும் உண்டு, அதில் ஏகபட்ட கோஷ்டிகளும் உண்டு. […]

தமிழக பட்ஜெட் 2017-18 : தட்டுங்கள்.. அடிமைகளே மேஜையினை ஓங்கி தட்டுங்கள்…

ரூ.42 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டம், தமிழக கடன் ஏற்கனவே தமிழகத்திற்கு ரூ.3.14 லட்சம் கோடி. 6 வருட அம்மா ஆட்சியின் சாதனையினை கண்டீர்களா? இந்த கடனை வைத்துகொண்டுதான் விலையில்லா டவுடர் முதல் விலையில்லா ஹேர்பின் வரை கொடுத்தார்களா? இவ்வளவு சிக்கலை வைத்துகொண்டுதான் ஸ்கூட்டி கொடுக்கவேண்டுமா? ஆக கடன்வாங்கி மக்களுக்கு கொடுத்துவிட்டு , அம்மா கனவு, சின்னம்மா வழிகாட்டல் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் ஆனால் இவர்களை கண்டிக்கின்றோம், எப்படி சொல்லியிருக்க வேண்டும்? அம்மாவின் தியாக வாழ்வின் […]

பட்ஜெட் உரையை ஜெ. நினைவிடத்தில் வைத்து நிதியமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி

பட்ஜெட் உரையை ஜெ. நினைவிடத்தில் வைத்து நிதியமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி ஏனோ பெங்களூர் சிறைக்கு எடுத்து சென்று சரிபார்க்க மறந்துவிட்டார் இப்படி ஒரு கொடுமை உலகில் எந்த மூலையிலாவது நடக்குமா? ஆனானபட்ட அமெரிக்கா பட்ஜெட் என்றாவது ஜார்ஜ் வாஷிங்டன் சமாதியிலோ, சீன பட்ஜெட் மாசேதுங் மசோலியத்திலோ வைக்கபட்ட வரலாறு உண்டா? சிங்கப்பூரின் பட்ஜெட் லி குவான் யூ சமாதியில் வைக்கபட்ட செய்தி உண்டா? இனியும் நாம் தமிழ்நாட்டு தமிழர்கள் என சொல்வது எவ்வளவு அவமானம்? இப்படி ஒரு […]

நெடுநாளைக்கு பின் ஒரு கடையில் கொள்ளு பார்க்க முடிந்தது

நெடுநாளைக்கு பின் ஒரு கடையில் கொள்ளு பார்க்க முடிந்தது, எங்கள் கிராமங்களில் அதனை காணம் என்பார்கள். குதிரைகளுக்கு அது பிராதான உணவு, இன்றைய மோட்டார்களாக அன்று குதிரைகள் இருந்தவரை அதற்கான விளைச்சல் தேவை இருந்தது அதாவது இன்றைய இஞ்சின் ஆயில்களாக அன்று கொள்ளு இருந்தது, அந்த இடத்தினைத்தான் இன்று எந்திர ஆயில்கள் பிடித்துகொண்டன‌ அக்காலத்தில் அது கிராமங்கள் தோறும் விளையும், ஒரு மழை பெய்துவிட்டால் புஞ்சை நிலத்தில் உழுது விதைத்துவிடுவார்கள், அவ்வப்போது பெய்யும் மழையினிலே அது விளைந்துவிடும் […]