பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மகளுக்கு இப்பொழுது அபிமான ஸ்டார் ரஜினிதான்

மகளுக்கு இப்பொழுதெல்லாம் ரஜினி படம் பிடிகின்றது, குழந்தைகள் அவரை ரசிப்பது ஆச்சரியமல்ல, அவரை எல்லா குழந்தைகளுக்கும் நிரம்ப பிடிக்கின்றது , இவ்வளவிற்கும் அக்கால படங்களில் அவர் கூலிங்கிளாஸ் எல்லாம் அணிவதே இல்லை அதனால் அந்த கண்கள் அழகாக தெரிகின்றன, அதில் ஒரு ஈர்ப்பும், கெத்தும் அழகாக தெரிகின்றது மகளுக்கு இப்பொழுது அபிமான ஸ்டார் ரஜினிதான், அதுவும் அன்னை ஒரு ஆலயம் போன்ற படங்கள் மிக பிடித்துவிட்டது அக்கால ரஜினியிடம் ஒரு துடிப்பும், ஈர்ப்பும் இருக்கின்றது. அவரை கண்டாலே […]

ஆர்.கே நகர் சூடு பிடித்திருக்கின்றது, பலருக்கு குளிர் எடுக்க ஆரம்பித்திருக்கின்றது

ஆர்.கே நகர் சூடு பிடித்திருக்கின்றது, பலருக்கு குளிர் எடுக்க ஆரம்பித்திருக்கின்றது சில கட்சிகள் வழக்கம் போல சீ சீ இந்தபழம் புளிக்கும் என ஒதுங்கிவிட்டன, வைகோ, ராமதாஸ் அப்படியானவர்கள் கோப்பை கிடைக்காது என தெரிந்தும் களம் காணும் கென்யா, ஜிம்பாப்வே போல சில கட்சிகள் களம் வந்திருக்கின்றன‌ திருமா கட்சி அப்படியானது, நாம் நிச்சயம் தோற்போம், சந்தேகமில்லை ஆனால் திமுகவின் வோட்டுகளில் 2 பிரிந்தால் கூட அது வாழ்நாள் வெற்றி என தேமுதிக களமிறங்கியிருக்கின்றது அதிமுகவிற்கு இது […]

பெரம்பலூரில் ஒரு மந்திரவாதி கைது…

https://youtu.be/G1PcnI9V0XA பெரம்பலூரில் ஒரு மந்திரவாதியினை போலிசார் கைது செய்திருக்கின்றனர் மனிதர் ஏராளமான மண்டையோடுகள், மை, தகடு இன்னபிற பொருட்களுடன் ஒரு இளம்பெண்ணின் சடலத்தையும் வைத்திருந்தாராம், அதாவது குடியிருப்பு நடுவே சுடுகாடு அமைத்திருக்கின்றான் அவரை கைது செய்யும்பொழுது அவன் சொன்னதுதான் பேரதிர்ச்சி “என்னை விடுங்கள், இது சசிகலா வெளிவருதற்கான உச்சகட்ட பூஜை. ஒருவாரம் செய்யவேண்டும், நான் வாக்குறுதி கொடுத்துவிட்டேன் இது சின்னமாவிற்கான பூஜை, உங்களை விடமாட்டோம்” என ஆடியிருக்கின்றார் கொஞ்சம் அரசியல் தெரிந்த மந்திரவாதி போலிருக்கின்றது, தப்பிக்க வழிதேடியிருக்கின்றான், […]

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதியில் ஆயிரம் சிக்கல்

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதியில் ஆயிரம் சிக்கல், அப்படி வகையாக சிக்கியிருப்பவர் ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை ராதாபுரம் தொகுதி அப்பாவு என்பவருக்கு குத்தகைக்கு விடபட்டிருந்தது, இதனை கணித்த கலைஞர் அவரை கட்சியில் சேர்த்தும்கொண்டார், ஆனால் கடந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் அப்பாவு உதயகுமார் இரோம் ஷர்மிளாவிற்கு அன்றே தோற்று எச்சரிக்கை செய்தார், ஷர்மிளாதான் கவனிக்கவில்லை இன்பதுரை வெற்றியினை தக்கவைக்க பெரும் போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயத்தில் கடும் உழைப்பினை கொடுத்தார், யார் வாட்சப்பில் பொதுபிரச்சினைக்கு தொடர்பு […]

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி அதாவது அன்னார் முதல்வர் பதவிக்கு நகர்கின்றார், இவர் வென்றுவிட்டால் பழனிச்சாமி தொகுதியில் அடுத்த இடைத்தேர்தல் எதிர்பார்க்கலாம் தமிழகத்தில் இப்படி முதல்வருக்கான இடைத்தேர்தலை அதிமுக ஆரம்பித்து வைத்து வெற்றிகரமாக நடத்தியும் வருகின்றது வாக்குகள் சிதறிகிடக்கும் வேளையில் , கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில் அன்னார் ஏன் இந்த விஷபரீட்சையில் இறங்குகின்றார் என தெரியவில்லை. தோற்றால் நிம்மதியாக சிங்கபூர் ஓடிவிடலாம் எனும் ஐடியாவும் இருக்கலாம் ஆனால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன் […]

பெரும் வறட்சியில் தமிழகம் …..

பெரும் வறட்சியில் தமிழகம் சிக்கியிருக்கின்றது, அரிசி விளைச்சலின்றி ரேஷனில் கூட இலவச அரிசி கொடுக்கமுடியா நிலை ஏற்பட்டிருக்கின்றது 1965களில் இம்மாதிரியான சிக்கலில்தான் தமிழகம் சிக்கி இருந்தது, அரிசி கட்டுப்பாடு, தட்டுப்பாடு எல்லாம் இருந்தது அதனை அரசியலாக்கித்தான் திமுக பெரும் ஆட்டம் ஆடியது, காமராஜரும், பக்தவச்சலமும் கொடுங்கோலர்கள் எனும் அளவிற்கு அதன் வீரிய தாக்கம் இருந்தது இன்றும் அதே சிக்கல் வந்தாகிவிட்டது, ஆனால் ஆட்சி யாருடையது? மத்தியில் பாஜக, இங்கு அதிமுக‌ ஏதாவது ஒரு சத்தம் எங்கிருந்தாவது வரும் […]

மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு……

மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும் – மத்திய அரசிற்கு சீமான் வலியுறுத்தல் இதுவே காங்கிரஸ் ஆட்சியென்றால், தமிழனை டெல்லி கொல்கின்றது என குதியோ குதிப்பார், கலைஞர் ஆட்சி என்றால் அய்யய்யோ கலைஞரின் தமிழின துரோகம் பாரீர், தமிழனை காக்கமுடியாத பதவி அவருக்கு எதற்கு என பொங்குவார் ஆனால் பாஜக அரசு என்றால் மத்திய அரசு என்பதோடு நிறுத்திகொள்வார், அதிமுக அரசு என்றால் மாநில அரசு, மாநில முதல்வர் என முணகுவதோடு சரி இதனைத்தான் அங்கிள் […]

விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை….

  விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை: : ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல் காவேரி டெல்டா பொய்க்கும்பொழுதே இனி இலவச அரிசி சாத்தியமில்லை என யூகிக்கமுடிந்தது, அது நடந்தும் விட்டது கங்கை நதிபுறத்து கோதுமை பண்டம், காவேரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம் என சொன்னான் பாரதி, கோதுமை கிடைத்துவிட்டது கொடுக்கத்தான் நம்மிடம் வெற்றிலை இல்லை, வெற்றிலை கொடுக்க காவேரியே இல்லை.. அரிசியினை வைத்து ஆட்சியினை பிடித்த கழக ஆட்சியில் தமிழக அரிசி உற்பத்தி சரிந்து, வடநாட்டு கோதுமை கொடுக்கின்றார்கள் […]

டிடிவி தினகரனை இன்று காணவில்லை …..

யாரும் கேட்காமலே, தானாகவே ஸ்டாலினை விடமாட்டேன், ஸ்டாலின் ஒழிக, ஸ்டாலின் கனவு காண்கின்றார் என தூக்கத்திலும் புலம்பிகொண்டிருந்த டிடிவி தினகரனை இன்று காணவில்லை மனிதர் சோர்ந்துவிட்டார் போலும் சீமான், வைகோ போன்றோர்ர்கள் கத்தாத கத்தா? வைக்காத கேள்விகளா? சீறாத சீற்றமா? அவர்களுக்கெல்லாம் என்றாவது திமுக பதில் சொல்லியிருக்கின்றதா? கதற கதற கத்தியும் சீமானுக்கோ, வைகோவிற்கோ இன்னும் பலருக்கும் திமுக பதில் சொன்னதே இல்லை, கண்டுகொள்ளாமல் விடுவதை விட உலகில் பெரும் தண்டனை இல்லை பதில் சொல்லாமல் புறக்கணிப்பது […]

லாரன்ஸின் வேதனை….

https://youtu.be/cPSlKV53KOc ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன் என்று லாரன்ஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தால், எப்படி படம் எடுத்தாலும் ஓடும் என நினைத்துவிட்டார் போல‌ இவரின் சமீபத்திய படம் தோற்றதால் அன்னார் வேதனையில் இருக்கின்றார், இதில் ஜல்லிகட்டுக்கு முன் அல்லது பின் என பிரிக்க என்ன இருக்கின்றது? தமிழர்களே, ஜல்லிகட்டிற்கெல்லாம் ஆதரவு தெரிவுத்துள்ளேன், என் படம் குப்பையாய் இருந்தாலும் நீங்கள் ஆதரவு தெரிவித்தாகவேண்டும் என சொல்ல வருகின்றாரோ என்னமோ?…   […]