பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உண்ணாவிரத அரசியல்…

அக்கட்சியினர் பெரும்பாலும் பொதுபிரச்சினைக்கு போராடமாட்டார்கள், பெரும் போராட்டமெல்லாம் நடத்தமாட்டார்கள், ஆனால் தேர்தலில் மட்டும் ஜெயிப்பார்கள் அவர்கள் பிதாமகன் எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருந்தது ஒருமுறை இந்திரா தமிழகத்திற்கு அரிசியினை குறைத்தார் என்பதர்காக‌ இன்னொருமுறை ஈழத்தில் படுகொலை நடந்தது என்பதர்காக. ஆனால் அவர்தான் முதல்வர், அவர் ஏன் பதவியினை ராஜினாமா செய்ய கூடாது என ஒருபயலும் கேட்கவில்லை, அவர் ஜாதகம் அப்படி 1993ல் ஜெயலலிதா ஒருமுறை உண்ணாவிரதம் இருந்தார், அது காவேரிக்காக, அப்போது அவர்தான் முதல்வர் அதன்பின் அக்கட்சியினர் உண்ணாவிரதம் […]

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்…

1908 – மார்ச் 8. நியூயார்க் நகர ஆலைகள் அனைத்தும் செயலற்று போயின, உலகம் அதுவரை கண்டிராத புதிய பரபரப்பு, இப்படியும் நடக்குமா? என வியந்த அதிசயம். காரணம் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வீதியில் திரண்டு ஊர்வலமாக போராட‌ புறப்பட்டனர். பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் வேண்டும், வேலை நேரத்தினை எட்டு மணி நேரமாக குறையுங்கள் , என்றெல்லாம் கோரிக்கை வைத்து உலக வரலாற்றிலே அதிரடியாக பெண்கள் புரட்சி நடந்தது. இந்த போராட்டத்தின் […]

அப்பல்லோவிற்கு மோடி ஏன் வரவில்லை?

2011ல் மோடி ஜெயலலிதாவினை கவனித்துகொள்ள நர்ஸ் அனுப்பினார் எனவும் அந்த நர்ஸ் விரைவிலே விரட்டபட்டார் எனவும் சில தகவல்கள் கசிகின்றன‌ அதனை தொடர்ந்து கோபமுற்ற மோடி உங்கள் உணவில் கவனமாக இருங்கள் என சொன்னதாகவும் செய்திகள் வருகின்றன. அவர் பொதுவாக அப்படி கூறினாரா அல்லது சில விவகாரங்கள் பற்றி தெரிந்த பின் அப்படி ஜெயலலிதாவை எச்சரித்தாரா என்பது பற்றி தெரியவில்லை என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகிறது. இதே 2011ல்தான் மன்னார்குடி கும்பலும் போயஸ்கார்டனில் இருந்து விரட்டபட்டதும் […]

தமிழகத்தில் பெண் சுதந்திரமும் சர்வதேச மகளிர் தினமும்..

பெண்களிடம் மிக பெரிய பொறுப்பினையும் கொடுத்து, அவர்கள் ஊழல் செய்யவும் அனுமத்தித்தோடு மட்டுமல்லாமல்.. இன்னும் அவர்களை அம்மா, சின்னம்மா, இளவரசியம்மா என வணங்கும் தமிழகத்தை விடவா பெண்களுக்கு உலகில் இன்னொரு இனம் மரியாதை கொடுத்துவிட்டது? நாட்டின் உச்சநீதிமன்றமே ஜெயா, சசிகலா, இளவரசி, கனிமொழி என தமிழக பெண்களை விசாரித்திருக்கின்றது பெரும் பொறுப்பு கொடுக்காமலா அவர்கள் மீது குற்றம் சாட்ட முடியும்? இதனை விடவா பெண்களை உலகம் பெருமைபடுத்திவிட்டது? அமெரிக்காவில், ரஷ்யாவில், ஜப்பானில், தென்கொரியாவில், அரேபியாவில் எங்காவது இப்படி […]

ஹேப்பி பர்த்டே விவியன் ரிச்சர்ட்ஸ்

கிரிக்கெட்டை நேசித்தால் அவரையும் நிச்சயமாக நேசித்தே தீரவேண்டும் இன்றைய டி20 மேட்ச்களை அன்றைய டெஸ்ட் மேட்சிலே ஆடியவர், அதுவரை ஸ்டைலாக மெதுவாக ஆடவேண்டிய ஆட்டம் என்றிருந்த கிரிக்கெட்டினை அதிரடி ஆட்டத்திற்கு மாற்றி காட்டியவர் அவர் ஆட வந்தபின்புதான் உலகம் கிரிக்கெட்டை ரசிக்க முடிந்தது, அவரை முன்மாதிரியாக கொண்டுதான் ஸ்ரிகாந்த், டெண்டுல்கர், லாரா மியான்டட், உல்ஹக், டோனி, கெயில் என எல்லோரும் உருவானார்கள் கம்பீரமான உருவத்துடன் கையில் மட்டையுடன் அவர் களமிறங்கினால், அவர் உருவத்திற்கு அது குச்சி போலிருக்கும், […]

ராமேஸ்வரமும் சிங்கமும் : 02

ராமேஸ்வரமும் சிங்கமும் : 02 உலகின் சில சுவையான மீன்கள் கிடைக்கும் பகுதி என இப்பகுதிக்கு பெயர், அதன் நில அமைப்பு அவ்வாறானது, குறிப்பாக இறால்,நண்டு வகைகள் அதிலும் சிங்க இறால் மற்றும் நீலக்கால் நண்டு மகா பிரசித்தி, எல்லாம் பெரும்பாலும் ஏற்றுமதி ரகம், சிங்கப்பூரின் நட்சத்திர விடுதிகளில் எல்லாம் இவைதான் அலங்கரிக்கும். இன்னொரு மகா முக்கியமான அம்சம் விஞ்ஞான மாற்றம், தரையினை எடுத்துகொள்ளுங்கள், சாலையிலே எவ்வளவு வாகனம். விவசாயத்திற்கு மோட்டார்,டிராக்டர், அறுவடை இயந்திரம் என வந்தாயிற்று, […]

ராமேஸ்வரமும் இலங்கையும் : 01

ராமேஸ்வரமும் இலங்கையும்  : 01 1970 வரை இது பெரும் பிரச்சினை அல்ல, கச்சத்தீவு (கச்சம் என்றால் ஆமை என பொருள்) எனும் மனிதர் வாழா தீவினை, (அங்கு நல்ல நீர் கிடைக்காது), இலங்கைக்கு கொடுத்தபின்னும் பெரும் பிரச்சினை இல்லை. இலங்கை மீணவர்களும், இந்திய மீணவர்களும் சந்திக்கும் இடமாகவே அது மாறிற்று, அதுவும் மீணவர்களின் பாதுகாவலர் எனநம்மபடும் புனித அந்தோணியாரின் திருவிழா அங்கு இருவராலுமே நடத்தபட்டது, மதங்களை தாண்டி. எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. 1980களில் தமிழக போராளிகள் […]

இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கின்றனர் சவுதி அரசர்

சவுதி மன்னருடன் 25 இளவரசர்கள், 10 அமைச்சர்கள், 100 பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம்1,500 பரிவாரங்கள் என 36 விமானங்களில் இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கின்றனர் சவுதி அரசர் ஏன் இப்படி மொத்த அரண்மனையோடு பயணித்தார்? ஒருவேளை தனியாக சென்றால், திரும்பி வரும்பொழுது யாரும் அடுத்த மன்னராக இருந்துவிடுவார்கள் என்ற அச்சமாக இருந்திருக்குமோ? மொத்த குடும்பத்தையும் மொத்தமாக அழைத்துசென்று கண்காத்திருப்பாரோ? ஆக சிம்மாசனத்தையும் கூடவே சுமந்துசென்றிருக்கின்றார் சவுதி மன்னர். இதுவும் ஒருவகை ராஜ தந்திரமாக இருக்கலாம்.. கூவத்தூர் செய்திகளை மன்னர் […]

அங்கிள் சைமன், எங்கே சென்று தொலைந்தீர் அய்யா?

இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு – தமிழக மீனவர் ஒருவர் பலி. படகினையும் இழுத்து சென்றனர் அங்கிள் சைமன், எங்கே சென்று தொலைந்தீர் அய்யா? முன்பு வந்தேறி முதல்வரால்தான் எல்லாம் சிக்கல் என்றீர்கள், இதோ பச்சை தமிழன் முதல்வராகி இருக்கின்றான். வந்தேறி முதல்வர் காலத்திலாவது படகினை விட்டுவிடுவார்கள் இலங்கையர். இதோ பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியில் தமிழ் மீணவனை சுட்டுவிட்டு, படகினையும் கொண்டுசெல்கின்றான் சிங்களன் முன்பு கலைஞர் கடிதம் எழுதினால் எப்படி எல்லாம் கொதிதீர்கள்?, இதோ பச்சை […]