பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருக்கின்றார் மு.க ஸ்டாலின்

தோன்றிற் புகழோடு தோன்றுக அல்லது புகழ்பெற்றவருக்கு மகனாய் தோன்றுக‌ எனும் வரிகளுக்கேற்ப பிறந்தநாள் கொண்டாடிகொண்டிருக்கின்றார் மு.க ஸ்டாலின் கட்சிக்கு அவர் உழைத்த உழைப்பினை விட அதிகமாக உழைத்தவர்கள் உண்டு, இன்னமும் உண்டு அன்பழகன் மேடையில் பேசிய காலங்களிலே அவருக்கு போஸ்டர் ஒட்டியவர் கருணாநிதி, அப்படி ஏராளமானோர் உண்டு இருந்தும் முக ஸ்டாலினுக்கே முடிசூட்டும் யோகம் அமைந்தது, அரசியல் அப்படித்தான், என்னதான் மக்கள் இயக்கம் என்றாலும் ஒருவகை ராஜநீதியில் தான் அது இயக்கபடமுடியும் இல்லாவிட்டால் நிலைக்காது இந்திய கட்சிகள் […]

கன்னட சேனல்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது!

கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஒரு வணிக வரிதுறையினர் வீட்டில் சோதனை நடத்தி 7 ஆயிரம் சேலைகளை பறிமுதல் செய்திருக்கின்றனர் அவை விலை உயர்ந்தவை என செய்திகள் சொல்கின்றன‌ சேலை பறிமுதல் செய்ததை சும்மா சொன்னாலும் பரவாயில்லை இன்னும் 3 ஆயிரம் சேலைகள் கூடுதலாக இருந்திருந்தால் ஜெயலலிதாவின் சாதனையினை அம்மணி முறியடித்திருப்பார் என குறிப்பிட்டு கன்னட மீடியாக்கள் சொல்கின்றன‌ ஆம் ஜெயா 10.500 சேலைகள் வைத்திருந்தார் என்பது குற்றசாட்டு ஜெயாவிற்கு ஏன் அவ்வளவு சேலைகள்?? சட்டசபையில் என் […]

செய்திகள் அங்கும் இங்கும்…

தனுஷுடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி சுசித்திரா கணவனை பிரிகின்றார் ஏற்கெனவே அமலாபால், விஜய் ஜோடி பிரிவிற்கு தனுஷ் தான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது சுசித்ராவின் வாழ்க்கையில் தனுஷ் விளையாடியதால் தான் இப்படியொரு விவாகரத்து சம்பவம் நடக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்புவினை மிக மிக நல்லவராக்க தனுஷ் ஒருவரே போதும் போலிருக்கின்றது சிம்பு பலபேரினை விட்டு பிரிந்தாரே அன்றி, அவர் யாரையும் பிரித்ததாக செய்தி இல்லை இந்திய அணியினை எப்படி வீழ்த்தினோம் என ஆஸ்திரேலிய கேப்டன் சொல்லி […]

இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன்

அதாகபட்டது கிறிஸ்து இயேசு சிலுவலையில் அறையபட்ட வெள்ளிக்கு முன்பாக 40 நாள் விரதம் இருப்பது கிறிஸ்தவ சம்பிரதாயம், ஏன் என்றால் கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார், அதனால் இந்த 40 நாளாவது நமது பாவங்களை நினைத்து மன்னிப்பு கேட்டுவிடலாம், என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மரபு அடுத்தால் செய்யபோகும் பாவத்திற்கு அடுத்த வருடம் 40 நாட்கள் மற்ற கிறிஸ்தவர்களில் சிலர் அனுசரிப்பார்கள், சிலர் பைபிளை படித்து, கரைத்து, உலுக்கி , கொட்டி பார்த்துவிட்டு பைபிளில் இதெல்லாம் இல்லை என […]

ஹைட்ரோ கார்பன் திட்டம்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பெரும் சர்ச்சை வெடிக்கின்றது தமிழகம் என்னவோ பூமியினை தோண்டாத மாநிலம் என்பது போலவும், முதன் முறையாக தோண்டபோகின்றார்கள் என்பது போல பெரும் குரல்கள் ஆபத்தான திட்டங்களை என்றோ கொண்டுவந்தாகிவிட்டது, கல்பாக்கமும், கூடங்குளமும் ஒரு வகை உறங்கும் எரிமலைகள். இந்த செயற்கை எரிமலைகளால் வாழ்விழந்த மீணவர்கள் எண்ணிக்கை என்ன? நெய்வேலி சுரங்கங்கள் பிரசித்தி பெற்றவை, அது ஒரு விவசாய கிணற்றில் இருந்தேதான் தொடங்கபட்டது என்பதும் வரலாறு, சுற்றுபக்கம் அத்தனை விவசாய நிலங்களையும் அது […]

உடன் பிறப்பே….

உடன்பிறப்பே மது குடித்த மந்தியாக, கல் பட்ட கரடியாக‌ சிலர் புலம்பி திரிவதை கண்டிருப்பாய், அவர்கள் பொய்யிலே அரசியல் நடத்துபவர்கள், பசப்பு முகங்களிலே பாஷானம் கொடுப்பவர்கள் என தெரிந்தது தான், ஆனால் பச்சை பொய்களை கொஞ்சமும் அச்சமின்றி , கூச்சமின்றி சொல்ல‌ வந்து விட்டார்கள் பார்த்தாயா? ஒருவர் திமுக தான் ஜெயா சாவுக்கு காரணம் என்கின்றார், இன்னொருவர் தமிழகம் வாழ இக்கழகம் அழியவேண்டும் என்கின்றார். வயிறு நிரம்பிய நரிகள் ஊளையிடத்தான் செய்யும், அதுவும் கூவத்தூரில் பெரும் விருந்தில் […]

ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடியாது

சங்கரரும், ராமனுஜரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும், கிருபானந்தவாரியார் போன்றவர்கள் இந்துமதத்தை பரப்பியது எல்லாம் சுத்த வேஸ்ட் இந்து மதம் என்பது ஜக்கி ஸ்டைலிலும், நித்தி ஸ்டைலிலும் பரப்பபட வேண்டும் என்கின்றார் ஜெயமோகன் மனிதருக்கு முற்றிவிட்டது என்பதை தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை கிறிஸ்தவ ஊழியங்கள் அப்படி நடக்கும்பொழுது, எங்களை போன்றவர்கள் இப்படித்தான் கிளம்புவோம் என சொல்ல வருகின்றார் அந்த கோஷ்டிகளை எப்படி கிறிஸ்தவர்கள் என உண்மை கிறிஸ்தவர்கள் ஒரு காலமும் ஒப்புகொள்ள போவதில்லையோ அப்படி ஜக்கியினையும் நல்ல இந்துக்கள் […]

எழுத்தாளர் சுஜாதா : நினைவு நாள்

தோற்றம் : 03-03-1935  :: மறைவு:  27-02- 2008 ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன? அதனை தமிழில் எழுதுவது எப்படி என தமிழகம் அறிந்துகொள்ளட்டும்..” என‌ உலகிற்கு சொல்ல , இறைவன் அனுப்பிய எழுத்தாளன் சுஜாதா ரங்கராஜன் நினைவு நாள் இன்று உலகின் எந்த துறையினை எடுத்தாலும் அதன் அடி ஆழம் வரை எழுதும் அறிவு அவருக்கு இருந்தது ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை, சங்க இலக்கியம் முதல் விண்வெளி வரை, கண மருத்துவம் முதல் கணிணி […]

டெல்லியில் எடப்பாடி , சென்னையில் சிஆர் சரஸ்வதி இன்னும் பிற…

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார். 3 நாள் பயணமாக டெல்லிக்கு செல்கிறார். காத்து கிடந்து கண்ணீர் விட ஒருநாள், தினகரன் கும்பல் எடுக்கும் வகுப்பில் கைகட்டி பாடம் கற்க மறுநாள், பிரதமரை சந்திக்க மூன்றாம் நாள் இப்படி 3 நாட்கள் கண்டிப்பாக தேவை.. டெல்லிக்கு செல்லும் முதல்வர் பழனிசாமிக்கு டெல்லி சூனியம் பலிக்காமல் இருக்க பழனியாண்டவர் உதவட்டும் எல்லா அடிமைகளும் நல்ல அடிமைகள்தான் தமிழகத்திலே, அவர் முழுக்க முழுக்க கெட்டவர் ஆவது டெல்லி சூனியத்திலே […]

தமிழகத்தில் பாஜக….

இப்பொழுதெல்லாம் தமிழக பாஜகவினர் நிறைய பேசுகின்றார்கள், முன்பு அடங்கிகிடந்த அவர்களிடம் பெரும் மாற்றம் தெரிகின்றது ஜெயா மறைந்து அதிமுக அரசினை தன் இஷ்டம் போல குட்டிகரணம் அடிக்க வைக்க மத்திய அரசு தொடங்கிய பின்னரே இவர்களின் பேச்சு 200% அதிகரித்திருக்கின்றது, மாநில அரசினை ஆள்வது மத்திய பிஜேபி என்பது அவர்களின் பேச்சிலே தெரிகின்றது மீத்தேன் எனும் பழைய கள்ளை, ஹைட்ரோ கார்பன் எனும் புது மொந்தையில் பாஜக நுழைக்கின்றது, திட்டம் அதே தான் இதில் பொன்னார், தமிழிசை, […]