பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சசிகலா வெற்றிபெற எளிதான தொகுதி எது : உளவுதுறையினர் கடும் ஆய்வு

சசிகலா வெற்றிபெற எளிதான தொகுதி எது : உளவுதுறையினர் கடும் ஆய்வு இந்த உளவுதுறையினருக்கு சம்பளம் வழங்குவது அரசு, அதாவது மக்கள் வரிப்பணம் ரகசிய உளவுநடவடிக்கைகளில் ஈடுபட்டு துப்பு துலக்குவது முதல் பெரும் கலவரங்களை தொடக்கத்திலே தடுப்பது, அந்நிய சக்திகள் ஊடுருவுவதை கண்டறிவது என அதன் பணி பெரிது. அதாவது இம்மாநில மக்களை ரகசியமாக காக்கும் அமைப்பு அது ராமஜெயம் கொலை போல ஏராளமான முடிவு தெரியா கொலைகள் உண்டு, புலிகள் போல ஐஎஸ் போல தமிழகத்தில் […]

“மண்டபம் வந்து விட்ட வசந்தசேனை” என விளாசியிருக்க மாட்டாரா?

அவர் இப்பொழுது பழைய நலத்துடன் இருந்திருந்தால் இந்நேரம் எப்படி எல்லாம் வரிகள் வரும் “மண்டபம் வந்து விட்ட வசந்தசேனை” என விளாசியிருக்க மாட்டாரா? வட்டமிட்ட கழுகு, வாய் பிளந்த ஓநாய், கீழ்நாட்டு கிளியோபாட்ரா, தென்னகத்து பூலன் தேவி என்றெல்லாம் வார்த்தை “கல்” சீறியிருக்காதா? அம்மையாருக்கு பதில் அம்மி கல்லா?, என்றெல்லாம் வார்த்தைகள் பறக்காதா? கையெழுத்து போட தெரியாதோருக்கு அரசு ஒரு கேடா? இவர்களோடு நாம் அரசியல் செய்வதா? மானம் காப்போம், பதவி துறப்போம், தமிழக மக்களிடமே தேர்தலில் […]

அப்போலா பீலே அல்லது பீலா ?

போகிற போக்கினை பார்த்தால் தமிழக போலி டாக்டர்கள் கூட பரவாயில்லை போலிருக்கின்றது ஜெயாவின் கடைசி காலங்களில் சிகிச்சை அளித்துவிட்டு கைவிரித்துவிட்டு காசை வாங்கிகொண்டு லண்டன் பறந்தவர் டாக்டர் பீலே இப்பொழுது வந்து அப்பல்லோவில் உடற்கூறு நிபுணர் போல் வகுப்பெடுத்து கொண்டிருக்கின்றார் ஜெயா சிகிச்சையின் பொழுதோ, அவர் மறைந்தபொழுதோ அன்ன்னார் ஏதோ சொல்லி சமாளித்தார் என்பது குறிப்பிடதக்கது இப்பொழுது இவர் இங்கு வந்து வகுப்பெடுக்க என்ன அவசரம்? இந்திய கோர்ட் அழைத்ததா? ஏதும் கமிஷன் அழைத்ததா? இல்லை டெல்லி […]

ஒரு வாரமாக அதிமுக எம் எல் ஏக்கள் தொகுதிபக்கம் செல்லவில்லை : செய்தி

ஒரு வாரமாக அதிமுக எம் எல் ஏக்கள் தொகுதிபக்கம் செல்லவில்லை : செய்தி அவர்கள் என்று தொகுதிபக்கம் சென்றார்கள்? அதுவும் கடந்த 2 மாதமாக சுத்தமாக இல்லை, எல்லாம் போயஸ்கார்டன் கட்சி அலுவலகம் என அலைந்துகொண்டிருக்கின்றனர் ஒரு இரவில் தொகுதிக்கு போய் சின்னம்மா பேனர் வைத்திவிட்டு விடியும்பொழுது சென்னையிலிருந்த எம் எல் ஏக்களும் உண்டு என்னவோ அவர்கள் தொகுதி மக்களுக்ளுக்காக உழைத்து கொண்டிருப்பது போலவும், இப்பொழுது 1 வாரம் லீவ் விட்டிருப்பது போலவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன‌ பல […]

வீ வாண்ட் எய்ம்ஸ் டாக்டர்ஸ் ரிப்போர்ட்..

பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே! இந்த ரிச்சர்ட் பீலே கடந்த 2 மாத காலமாக செவ்வாய்கிரகத்தில் இருந்தார் என்பதும், நேற்றுதான் பூமிக்கு வந்தார் என்பதும் குறிப்பிடதக்கது அந்த பீலேவிற்கு பதில் லண்டனில் ஸ்டார்பக்ஸ் காப்பி கலக்கிகொண்டிருந்த ஒருவனை பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தாலும் நமக்கெல்லாம் வித்தியாசம் தெரியவா போகின்றது? இந்த அப்பல்லோ காமெடி டாக்டர்களை விடுங்கள், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் பிரதமருக்கு கொடுத்த ஜெயாவின் உடல்நல அறிக்கை அல்லவா முக்கியம்? அதனை அவர்களும் கொடுக்கவில்லை, […]

சசிகலா மதுவிலக்கினை செய்வாரா?

சசிகலா மதுவிலக்கினை செய்வாரா? என்றொரு பேச்சு ஓடிகொண்டிருக்கின்றது தனக்கு எழுந்திருக்கும் பெரும் எதிர்ப்பினை அமைதியாக்க அவர் சில அதிரடி குளிர்விப்பு நடவடிக்கைகளை எடுத்தே தீரவேண்டும் என்பது அவர் விதி அப்படி அவர் மதுகடைகளை மூடவும் வாய்ப்பு உண்டு ஆனால் நாட்டில் கொஞ்சமா மது வாடிக்கையாளர் இருக்கின்றார்கள், மூடிய இரு வாரத்தில் பெரும் பிரளயமாக அவர்கள் வெடிப்பார்கள். மதுவிற்கு பழகிவிட்டவர்கள், திடீரென கடை அடைக்கபட்டால் வேறுவிதமான சிக்கலை எதிர்கொள்வார்கள், அது பெரும் சமூக சிக்கலாக மாறும். ஆக மதுகடைகளை […]

கீழ்நாட்டு கிளியோபாட்ரா..

முன்பு எகிப்தில் கிளியோபாட்ரா என்றொருத்தி இருந்தாளாம் , அவளின் ஆசைகள் மூன்று 1) எகிப்தின் ராணியாக தானே ஆளவேண்டும், 2) யார் குறுக்கே வந்தாலும் கொன்றுவிட்டு ஆளவேண்டும். 3)கொல்லமுடியாதோர் குறுக்கே வந்தால் எதை கொடுத்தாவது அவர்களையும், அவர்கள் தேசத்தையும் சேர்த்து ஆளவேண்டும் அப்படி உடன்பிறந்த தம்பியினை கொன்றாள், ஜூலியஸ் சீசரின் சாவுக்கு காரணமாயிருந்தாள், மாவீரன் ஆண்டனி மண்ணை கவ்வ அவளே காரணமாயிருந்தாள் கொஞ்சம் ரோமை மக்கள் அசந்திருந்தால், ரோமையின் ராணியாக உலகாள கிளம்பியிருப்பாள், உலகம் அவள் காலடியில் […]

எட்டு மாதத்தில் மூன்றாம் முதல்வர் !!!

ஜெயலலிதா எனும் ஒருவருக்குத்தான் தமிழக மக்கள் அந்த பெரும் ஆதரவினை அளித்து பெரும் வெற்றி கொடுத்தார்கள் அவர் இல்லா இடத்தில் இன்னொரு தேர்தல் வைப்பதுதான் முறையாகுமே ஒழிய, அவர் இடத்தில் ஒருவர் முகமூடி போட்டு அமர்வது சரி ஆகாது. கடந்த 8 மாதத்தில் 3ம் முதல்வரை பார்க்கபோகின்றதாம் தமிழகம் 8 மாதத்திலே 3 முறை என்றால், இன்னும் 4 ஆண்டுகளில் எத்தனை முதல்வரை பார்ப்போமோ தெரியாது சசிகலா மீதும் வழக்குகள் உண்டு, நாளையே தீர்ப்பு என்றால் இன்னொரு […]

த‌மிழகத்தை இருள் சூழ்ந்தது – குஷ்பு

த‌மிழகத்தை இருள் சூழ்ந்தது – குஷ்பு அந்த இருளை நீக்கும் வெளிச்சம்தான் குஷ்பூ, இந்த இருளை அவரால்தான் நீக்க முடியும். தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கின்றது என தைரியமாக சொல்லும் குஷ்பூவினை சுற்றி கோடான கோடி ரசிக கண்மணிகள் சூழ்ந்திருக்கின்றார்கள் என்பதை விரைவில் காலம் உணர்த்தும். தமிழக காங்கிரஸ் தலைவரே சீக்கு வந்த கோழிபோல முணங்கிகொண்டிருக்க, மிக அசால்டாக தன் எதிர்கருத்தினை சொன்ன குஷ்பூ பாராட்டுகுரியவர்.    

அரசியல் பாடம் இல்லாளுக்கு வேண்டவே வேண்டாம்…

சோனியா காந்தி மகாத்மா காந்திக்கு என்ன உறவு என கேட்டுகொண்டிருந்த பாகம்பிரியாளுக்கு அரசியல் செய்திகள் கற்றுகொடுத்தது பெரும் தவறாகிவிட்டது நிச்சயமாக வாழ்நாள் தவறு, இனி வருந்தி என்னாகபோகின்றது அதாகபட்டது அதிமுக வரலாற்றையும், சசிகலா அரசியலில் உச்சம்பெற நடராஜன் பெரும் சாணக்கிய அரசியலை பாடமாக நடத்தியதில் அவள் கேட்டுகொண்டே இருந்தாள். கேள்வியோ பதிலோ அல்லது முகத்தில் எக்ஸ்பிரஷ்ணொ ஒன்றும் இருக்காது. எல்லா சூழலுக்கும் அப்படியே முகத்தை வைத்திருக்கும் ஆர்யா போல அப்படியே இருப்பாள் அவளுக்கு அரசியல் உலக அறிவெல்லாம் […]