கவிஞரின் அந்த வரிகள் மன்னார்குடி கும்பலுக்கும் பொருந்தும்…
அக்கிரமக்காரர்களும் சர்வாதிரிகளும் சாதரணமாக ஓய மாட்டார்கள். அப்படி ஓய்ந்துவிட்டால் அவர்கள் சுயரூபம் யாருக்கு தெரியும்? தியாகிகள் ஆக மாட்டார்களா? அதனால் ஆண்டவன் அவர்களின் முழு உருவம் உலகிற்கு தெரியுமட்டும் சில ஆட்டங்களை ஆடுவான், அக்கிரமக்காரர்காள் அவர்களை அறியாமல் ஆண்டவன் வலைக்குள் சிக்குவார்கள் ஆண்டவனும் அதிகாரம் கொடுத்து அவர்களை ஆடவிட்டு ரசிப்பான். கொஞ்சகாலம் அதிகாரம் அவர்கள் கையில் சிக்கும், ஆடுவார்கள், அழிச்சாட்டியம் செய்வார்கள். ஆடித்தான் அடங்குவார்கள். உலகின் தர்மசக்கரம் அப்படித்தான் சுழன்றுகொண்டிருக்கின்றது. காலகாலத்திற்கும் வரலாற்றின் கருப்பு பக்கங்களில் இடம்பெறுவார்கள், […]