பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கேள்வி கேட்கிறானாம் கேள்வி?

எவனோ ஒருவன் முகநூலில் போராட்டகாரர்களுக்கு 50 கேள்விகள் என அடுக்கிகொண்டிருக்கின்றான் அவன் 50 அல்ல 500 கேள்விகள் அடுக்கினாலும் ஒரே பதில்தான் தமிழகத்திலும் ஒரு பெரும் கூட்டம் எந்த தலைவனின் அழைப்புமின்றி கூடமுடியும் , அது முதல்வரை அலறி அடித்து ஓடவைக்க முடியும் , டெல்லியினை யோசிக்க வைக்க முடியும் காட்டினோமா இல்லையா? என்ன சொன்னாய்? போலிஸ் ஆதரவாக இருக்கின்றதா? கிட்டத்ட்ட 800 இடங்களில் திரண்டிருக்கும் மக்களை என்ன செய்து அடக்க முடியும்? உலகம் கவனிக்கும்பொழுது அது […]

என்னடா தளபதி பெரிய தளபதி?

பிரிவினை நிகழா கழகத்தின் அக்காலத்தில் அண்ணா அக்கழகத்தின் “தளபதி” என அறியபட்டார். எங்கும் தளபதி என ஒரே அழிச்சாட்டியம். எம்.ஆர் ராதா போன்றவர்களுக்கு அதில் எரிச்சல் வந்தது, வாய்பிற்காக காத்திருந்தார்கள் நாடகமே அவர்கள் பிராதனம், பின்பு அதனை ஆட்சியிலும் இன்றுவரை நடத்தி கொண்டிருக்கின்றார்கள் என்பது வேறுவிஷயம். அன்று மேடையில் நடத்திகொண்டிருந்தார்கள் , அந்த ஒத்திகைதான் இன்றுவரை கழகங்களுக்கு கை கொடுத்துகொண்டிருக்கின்றது கலைஞரும் எம்.ஆர் ராதாவும் நடித்த நாடகம் அது, தளபதி தளபதி என கலைஞர் புகழ்ந்துகொண்டிருந்தார் கலைஞர், […]

ஜெயா டிவியும் சின்னம்மாவும் ….

இந்தியாவும் உலகமும் தமிழக ஜல்லிகட்டு போட்டியினை வியப்பாகவும், பெருமையாகவும் பார்த்துகொண்டிருக்கும் பொழுது ஜெயா டிவி மட்டும் சசிகலாவினை பெருமையாக பார்த்துகொண்டே இருக்கின்றது அதாவது ஜல்லிகட்டு நடத்த சின்னம்மா பெரும் பாடு படுகின்றார், மக்களை சந்திக்கின்றார், மத்திய அரசின் முதுகில் சாத்துகின்றார் என ஏக இம்சைகள் ஆனால் சந்திக்கும் மக்கள் எல்லாம், சின்னம்மா ஜல்லிகட்டை நடத்த நீங்கள் பாடுபடுங்கள், நன்றிகடனாக நீங்கள் முதல்வாராக நாங்கள் பாடுபடுகின்றோம் என கண்ணீரை துடைகின்றார்களாம் இனி ஜல்லிகட்டு நடந்தால் அந்த டிவி என்ன […]

திருநாவுக்கரசர் வேதனை…. குஷ்பு சாதனை…

எம்ஜிஆருக்கு பின் ஆர்.எம் வீரப்பன் முதல்வராக இருந்த வாய்ப்பினை நானே கெடுத்தேன், அதன் விளைவால் தமிழ்நாடு நாசமாய் போயிற்று, அதிமுகவிற்கு யாரோ உரிமை கொண்டாடுகின்றான் : தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேதனை இவர் இப்பொழுது காங்கிரஸ் கட்சி அல்லவா?, பின் ஏன் கடந்த காலங்களை பற்றி இவ்வளவு கவலைபடுகின்றார். இவர் கெடுத்த கெடுதல் யாருக்கு தெரியாது? அதனால் அதிமுகவில் மீண்டும் இணைந்து அன்று செய்த அதே தவறை இன்று சரிசெய்தால் என்ன? செய்யலாம் அல்லவா? யார் […]

ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: முதல்வர், இன்னும் பிற …..

ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன், சென்னை ஏர்போர்ட்டில் முதல்வர் ஓபிஎஸ் மகிழ்ச்சி பேட்டி முதல்வராக இவர்தான் தொடங்கிவைக்க வேண்டும், ராமராஜனையா அழைக்க முடியும்? ஒருவேளை சின்னம்மா முந்திகொள்வார் என்ற அச்சம் இருக்குமோ? அவர் கவலை அவருக்கு. கொசுறு  பீட்டா அளித்த விருதை அவமானமாகக் கருதுகிறேன்: தனுஷ் இல்லை, மிகபெருமை என அறிக்கை விட்டு பாருங்கள், அதன் பின் தெரியும், மெரினா கூட்டம் தெரிந்திருக்கும் அல்லவா? மெரினா என்ன மெரினா சிம்பு வீட்டு முன்னாலும் ஒரு கூட்டம் உண்டு, […]

பீட்டா ஆதரவாளர் ராதா ராஜனின் கொச்சையான விமர்சனம்

மிக மிக சீரியசாக கண்டிக்க வேண்டிய விஷயம் இது, காமெடிக்கெல்லாம் இடமே இல்லை 100 பேருக்கு மேல் ஒரு கூட்டம் கூடவேண்டுமென்றால் சென்னையில் அங்குதான் கூட்டவேண்டும் அப்படித்தான் இந்த ஜல்லிகட்டு போராட்டமும் தொடங்கியது, அது வெற்றிபெறும் நிலையினை எட்டியிருக்கின்றது மொத்த தமிழகம் பொங்கியதும் மத்திய அரசே பின் வாங்கிற்று, இனி இந்த எழுச்சியினை உச்சநீதிமன்றமும் தடுத்துவிடமுடியாது, இந்த அவமானத்தில் முகம் தொங்க போட்ட பீட்டாவும், இறைச்சிக்கும் தோலுக்கும் விலங்குகள் கொல்லபடும்பொழுது கண்ணை மூடும் விலங்கு ஆர்வலர்களும் அரற்றுகின்றனர் […]

ஜல்லிகட்டு நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன

ஜல்லிகட்டு நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன, மத்திய அரசு இதில் தமிழக மக்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றது தகுந்த நம்பிக்கையான முடிவுகள் இன்றி முதல்வர் பன்னீர்செல்வம் அவசரசட்டம் பற்றி அறிவிக்க முடியாது, ஆக ஏதோ விரைவாக நடக்க இருக்கின்றது. இந்த‌ அரசும் இரும்பு கரம், அலுமினிய கரம் என இறங்காமல் மக்களை பற்றி சிந்தித்திருப்பது நீண்ட நாளைக்கு பின் மக்கள் சொல்வதை கேட்கும் அரசு அமைந்திருக்கின்றது என எண்ண வைத்திருக்கின்றது நிச்சயம் ஜெயா இருந்தால், எப்படி சிந்திப்பார் என்றால், அது […]

உச்சநீதிமன்றத்தில் தமிழகம் என்ன சொல்லவேண்டும்?

உச்சநீதிமன்றத்தில் தமிழகம் என்ன சொல்லவேண்டும்? நீதிமன்றங்களில் உண்மையினை சொல்லி என்ன செய்யமுடியும்? வழக்கறிஞர்களே பொய்யில் வாதாடுவார்கள் என்பது உலகறிந்தது. எல்லா நீதிமன்றங்களிலும் பொய்யான வாதமே வெல்லும் முன்பு ஜெயாவிற்கு ஜாமீன் கிடைத்தது போல‌ அதனை வள்ளுவன் பொய்மையும் வாய்மையிடத்து என எப்பொழுதோ எழுதிவைத்தும் விட்டான் வள்ளுவன் வழியிலே தமிழகமும் சொல்லலாம் “ஜல்லிகட்டு கலாச்சார பண்டிகை என்றால் வீட்டிற்கு வீடு பொங்கல் பானை வைப்பது போல காளை அடக்குவார்கள் அப்படி அல்ல‌ அது தமிழகம் முழுக்க அல்லாமல் மிக […]

முதலில் சட்டம் வரட்டும், அதன் பின் ஜல்லிகட்டு நடக்கட்டும்

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும்: டெல்லியில் ஓ.பி.எஸ். பேட்டி ஆக அவசர சட்டத்திற்கு முன்பே வாய்ப்பு இருந்திருக்கின்றது, ஆனால் உங்கள் புரட்சிதலைவி, இதய தெய்வம் அதனை செய்யவில்லை என்பதை ஒப்புகொள்கின்றீர்கள் அந்த தலைவி தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கின்றார் என்பதை உலகிற்கு அறிவிக்கின்றீர்கள் உங்கள் புரட்சி தலைவி பிறப்பிக்காத அவசரசட்டத்தை நீங்கள் பிறப்பிக்க போகின்றீர்கள் வாழ்த்துக்கள். ஆக இப்படி ஒரு வாய்ப்பு தமிழர்கள் பொங்கி எழுந்தால்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகின்றது அல்லவா? பாருங்கள் பன்னீர் செல்வம், […]

வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்!

ஜல்லிகட்டிற்காக ஏராளமானோர் கட்சி பாகுபாடின்றி தங்கள் முகநூல்படத்தினை மாற்றி இருக்கின்றார்கள் அது பாராட்டபட வேண்டிய விஷயம் , ஆனால் ஒரு விஷயம் கவனிக்கதக்கது கலைஞரை மிக கடுமையாக விமர்சித்தவன் எல்லாம் முரசொலியில் அவர் இலச்சினையாக வைத்திருந்த ஜல்லிகட்டு படத்தினை, அதாவது “வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என்ற வசனத்துடன் கூடிய ஜல்லிகட்டு படத்தினை வைத்திருக்கின்றார்கள் பெரும் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஏன் கொலைவெறி தாக்குதலுக்கும் இடையில் முரொசொலி பத்திரிகையினை கலைஞர் கிட்டதட்ட 74 வருடங்களுக்கு முன்பு தொடங்கி நடத்தினார் […]