பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக பொதுக்குழு கூடியது

கனத்த இதயத்துடன் பதவியின ஏற்றுக்கொள்கிறேன்: மகிழ்ச்சியாக அல்ல: மு.க.ஸ்டாலின் உருக்கம் இது என்னடா கழகங்களுக்கு வந்த சோதனை? அங்கே சசிகலாவும் கனத்த இதயம் என்கின்றார், இங்கே இவரும் கனத்தை இதயம் என்கின்றார் அவ்வளவு கனமான விஷயம் என்றால், இதயம் சுமக்க முடியாத பொறுப்பு என்றால் கூட 4 தலைவர்களை வைத்துகொள்ளலாம் அல்லவா? அவ்வளவு ஏன் உடன்பிறப்பான அழகிரியோடு பகிர்ந்துகொண்டாலே கனத்த இதயம் லேசாகாதா? எதையும் தாங்கும் இதயம் உள்ள திமுகவினருக்கு பதவி கொடுத்தால் நெஞ்சு கனக்குமா? அவ்வளவு […]

சோதனை மேல் சோதனை… வருமான வரி சோதனை….

சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை சசிகலா பன்னீரை விரட்ட, மத்திய அரசு காயினை நகர்த்துகின்றது. ஆட்டம் சுவாரஸ்யமாக செல்கின்றது. கட்சி தலைவர்களும், பத்திரிகை அதிபர்களும், இன்னும் பெரும் பிம்பங்களும் சடாரென விழுந்து கிடக்கும் சன்னதியில் தொழிலதிபர்கள் மட்டும் விழாமலா இருந்திருப்பார்கள்? அதனால்தான் ரெய்டு அங்கே நடக்கின்றது. இவர்கள் இருவரும் ஆடும் சதுரங்கத்தில் காற்றில் பறப்பது எது? நிச்சயமாக தமிழக மானம் ஊழல் நிறைந்த ஒரு மாநிலமாக தமிழகத்தை உலகிற்கு அறிவித்துகொண்டிருக்கின்றார்கள், உண்மையும் அதுதான் என்பது […]

செய்தி அவியல்…

பெரும் ஆண்மீக தத்துவத்தை ரஞ்சிதாவினை தவிர மற்ற பெண் சீடர்களுக்கு சுவாமிகள் விளக்கிகொண்டிருக்கின்றார் ரஞ்சிதா ஏற்கனவே முக்தி நிலை அடைந்துவிட்டார், அதனால் தேவையில்லை படத்தில் ஒரு சிஷ்யையின் முகத்தில் ஆனந்த ஒளி அப்படி ஜொலிக்கின்றது சுவாமி மறுபடியும் படுக்கை அறை கேமராவில் சிக்கி இருக்கலாம், அதனால் இப்படியான படங்களை கசிய விட்டு சுவாமிஜிக்கு நெருக்கடி கொடுக்கின்றார்களோ என்னமோ? மிக ஆக்ரோஷமானவர்கள் அமைதியாகிவிட்டால் “நீ திரும்பி வரணும், பழைய பன்னீர் செல்வமா வரணும்” என சத்திரியன் டயலாக் பேசுவார்கள் […]

வித்தியாசமான நடிகர் நானா படேகர்

இந்தியில் வித்தியாசமான நடிகர் நானா படேகர், தமிழில் ஒரு படம் மட்டும் நடித்திருந்தார். நடிப்பினை விட கொண்டாட் வேண்டியது அவரின் மானிட நேயம் போராடி நடிகர் ஆனார், ஆனால் விவசாயிகளின் மரணம் அவரை பாதித்தது, எல்லா மாநில விவசாயியும் சாகும்பொழுது மராட்டியன் என்ன விதிவிலக்கா? மராட்டியத்தில் பருத்தி சாகுபடி விவசாயிகள் எல்லாம் தற்கொலை அதுவும் கூட்டு தற்கொலை செய்த காலம் அது. நானாவின் மனதினை அது பாதித்தது சினிமாவினை கூட பின்னர் பார்த்துகொள்ளலாம், சாகும் மக்களுக்கு ஏதாவது […]

விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசு காரணம் அல்ல : தமிழிசை

விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசு காரணம் அல்ல : தமிழிசை அதாவது தற்கொலை செய்த விவசாயிகளை அம்மணி பார்க்க சென்றிருக்கின்றார், சகட்டு மேனிக்கு கேள்விகளை வயலுக்கு அழைத்து சென்று கேட்டிருக்கின்றார்கள் அவரோ எனக்கு விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாது, ஆனால் மத்திய அரசு காரணம் அல்ல என சொல்லிவிட்டு ஓடிவிட்டாராம்? விவசாயம் மட்டுமல்ல காவேரி சிக்கல் கூட அம்மணிக்கு தெரியவில்லை காவேரி நடுவர் மன்ற தீர்ப்பினை இன்னும் செயல்படுத்தாமல், அரசு இதழில் அச்சிடாமல் இழுத்து வருவது மத்திய […]

ரிச்சர்ட் பீலே & ரிச்சர்ட் பீலே

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே பிரபல டாக்டர், ஆனால் அதுபோலவே இன்னொரு ரிச்சர்ட் பீலே அதே லண்டனின் உண்டு அவர் நடிகர், திரைபட மற்றும் சின்னதிரை நடிகர் ஜெயா புண்ணியத்தில் மருத்துவர் ரிச்சர்ட் பீலே இந்தியாவில் பிரபலமாகிவிட, பலர் நடிகர் ரிச்சர்ட் பீலேதான் அந்த மருத்துவர் என நினைத்து அவர் படத்தோடு பதிவுகளை இட்டுகொண்டிருக்கின்றனர் ஜெயாலிதாவோடு அந்த டாக்டர் ஒரு புகைபடம் எடுத்திருந்தால் இம்மாதிரி குழப்பம் வந்திருக்குமா? லண்டனில் நான் நடிகர் அல்ல என இவரும், […]

விந்தியா, ஆனந்தராஜ், நாஞ்சில் சம்பத் : அடுத்தது யாரோ ?

அந்த தலைவிக்காக மட்டும் அந்த கட்சியில் இருந்தவர்கள் விலகிகொண்டிருக்கின்றார்கள். தொழில்முறை அரசியல்வாதிகளுக்கு என்ன? யார் இருந்தாலும் ஏற்றுகொள்வார்கள் விந்தியா, ஆனந்தராஜ் என வரிசையாக கழன்றவர்கள் வரிசையில் நாஞ்சில் சம்பத்தும் சேர்ந்துகொண்டார். காரணம் ஏதும் பகிரங்கமாக சொல்லவில்லை, மயிலு.. வான் கோழி என 16 வயது சப்பாணி போல ஏதோ சொல்லிகொண்டிருக்கின்றார் இன்னும் சிலர் மகா அமைதி, அவர்களில் நிர்மலா பெரியசாமியும் ஒருவர் முன்பு கலைஞர் சட்டசபைக்கு வந்தால் அவர் வேட்டியினையா உருவிவிடுவோம் என பேசியவர், இப்பொழுது சத்தமே […]

காமராஜர் இருந்திருந்தால் என் முடிவுகளை வரவேற்றிருப்பார் : மோடி

காமராஜர் இருந்திருந்தால் என் முடிவுகளை வரவேற்றிருப்பார் : மோடி எழுதி கொடுத்தது யார்? உறுதியாக சொல்லலாம் தமிழிசை பொன்னாரும், தமிழிசையும் இருக்கும் கட்சியில் காமராஜர் இழுக்கபடுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌ ஆனால் பொதுவாக அந்த கும்பலுக்கு காந்தி, காமராஜரை அறவே பிடிக்காது, ஆனாலும் காமராஜர் பெயரினை முதன் முறையாக அவர்கள் உச்சரிப்பது தமிழகத்தில் “ஏதோ” செய்ய திட்டமிடுகின்றார்கள் என்பதை சொல்கின்றது நாடார்களை குறிவைத்து அவர்கள் அரசியல் நகரலாம் இனி என்ன செய்வார்கள்? ஒன்றும் செய்யமாட்டார்கள் அல்லது முடியாது. சரத்குமாரினை […]

முனைவர் சசிகலா ந…ட..ரா..ஜ…ன்ன்ன்ன்ன்ன்

மன்மோகன் சிங்கிற்கு அடுத்து 16 டாக்டர்கள் பட்டம் வாங்கி விட்டு, உலக வங்கியின் இயக்குநராக சில ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டு அமெரிக்காவும் லண்டனும் இருக்க சொல்லி கெஞ்சியும், மிரட்டியும் கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஜெயா இல்லாத‌ ஒரே காரணததிற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திலிருந்து நேரடியாக சென்னைக்கு வந்து பதவியேற்க இருக்கும் சின்னம்மா இவர்தான் முன்னதாக ஜப்பான் பல்கலைகழக பொருளாதார தலைவர் பதவி, கனடா பல்கலைகழக வேந்தர் பதவி எல்லாம் அன்னார் தூக்கி எறிந்தது குறிப்பிடதக்கது இவர் அமெரிக்காவினை விட்டு வெளியேறியதால் […]

ஜல்லிக்கட்டும் மல்யுத்தமும்..

மனிதனை மனிதன் போட்டு அடிக்கும் மல்யுத்தம் நடக்கலாமாம், அதில் ஒருவன் பதக்கம் வென்றால் கோடி கணக்கில் கொடுத்து உற்சாகபடுத்துவார்களாம். அதில் மனிதன் படும் வதை எல்லாம் கண்ணுக்கே தெரியாது, கொஞ்சமா வதைக்கின்றார்கள்? குத்துசண்டை எனும் கொடூர விளையாட்டில், சக மனிதனை ரத்தம் வரும் அளவிற்கு போட்டு அடிக்கலமாம். அதில் பதக்கம் இல்லை என்றால், ஏன் நீ அவனை சரியாக மூக்கிலே குத்தவில்லை என வருந்துவார்களாம் ஆனால் ஒரு மாட்டினை மனிதன் அடக்கி விளையாடினால் அது மிருகவதையாம், தடை […]