பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கடவுளே “சின்னமாவிற்கு பேச்சு கொடு” என்ற கோஷம் இனி தமிழகமெல்லாம் ஒலிக்கும்

மறுபடியும் அடிமைகள் மண்சோறு, அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல் போன்ற பக்திகளில் மூழ்க வாய்பிருக்கின்றது எதற்கு? பொதுகுழு எனும் பட்டத்து யானை மாலை சூட்டிய பின்னும் சின்ன அம்மாவிற்கு பேச்சு வரவில்லை என்றால் என்ன செய்ய? அதுதான் வழி, விரைவில் பால்குடம் எடுக்க கிளம்புவார்கள் சின்னமாவிற்கும் ஆலோசனை கொடுப்பார்கள் சின்னம்மாவும் சரஸ்வதி சபதம் சிவாஜி கணேசனாக இப்பொழுது தெய்வத்திடம் முறையிட்டு கொண்டிருப்பார் இனி அந்த தெய்வமே வந்து “செல்வம், கல்வி,கட்சி மக்கள் செல்வாக்கு என்பதை […]

அரசியலில் யாரையும் நம்ப கூடாது….

காமராஜர் தமிழக காங்கிரஸ் தலைவராக அதாவது தனக்கு எதிரான கட்சியின் தலைவராக இருந்தபொழுது அவரின் ஒவ்வொரு அசைவினையும் விமர்சித்த கலைஞரை எம்ஜிஆர் கட்சியின் பொதுசெயலாளராகும்பொது நடிகர் கட்சி, அட்டை கத்தி என்றெல்லாம் வாட்டிய கலைஞரை ஜெயா ஜாணகி என பிரிந்து நின்றபொழுது நிமிடத்திற்கொருமுறை அறிக்கை அனுப்பிய கலைஞரை ஜெயா ஆட்சியினையும், கட்சியினையும் கைபற்றும்பொழுது அம்மையார் என சொல்லி சொல்லி விமர்சித்த கலைஞரை சசிகலா பொறுப்புக்கு வரும்பொழுது காணவே இல்லை, அவருக்குத்தான் வயதாகிவிட்டதென்றால், அடுத்த வாரிசாவது சில கருத்தோ, […]

மலேசிய முன்னாள் பிரதமர் துன்.டாக்டர் மகாதீர்

  அந்த காட்சி மறுபடி மறுபடி கண்ணில் வருகின்றது அந்த மாலைபொழுதில் கோலலம்பூர் இரட்டை கோபுர உள்வளாகத்தில் சுற்றிகொண்டிருந்தேன், ஒரு சிறு கூட்டத்தின் நடுவே அந்த முதியவர் புன்னகை பூக்க ஆட்டோகிராப் கொடுத்துகொண்டிருந்தார், அவரின் இரு மெய்காப்பாளர்கள் மட்டும் இருந்தார்கள், அந்த கூட்டத்தில் 10 பேர்தான் இருப்பார்கள், கையெழுத்து வாங்கியதும் பெரும்பாலும் அவரை அடையாளம் கண்ட வெளிநாட்டவர்கள். நெருங்கி பார்த்தால் அவர் மலேசிய முன்னாள் பிரதமர் துன்.டாக்டர் மகாதீர் அவர்கள் ஒரு கணம் மயக்கமே வந்தது, எப்படிபட்ட […]

மோடி இன்றிரவு என்ன பேச போகின்றாரோ ?

இப்பொழுதெல்லாம் மோடி டிவியில் பேசபோகின்றார் இந்தியாவில் என்றால் ஒரு வித அச்சம் அப்படியே ஆட்கொள்கின்றது சொல்லாமல் கொள்ளாமல் நள்ளிரவில் வந்து ரூபாய் செல்லாது என அறிவிப்பவர், மிகுந்த தயாரிப்போடு பேசவந்தால் எப்படி இருக்கும்? உண்மையில் மோடிக்கு சிக்கலான காலம், ரூபாய் நோட்டுகள் பிரச்சினை எல்லா நாட்டிலும் இருப்பதுதான், கள்ளநோட்டுக்களோ பதுக்கலோ எல்லை மீறினால் அந்நாடுகள் உயர் மதிப்பு கரன்சிகளை வங்கிகளில் சமர்பிக்க சொல்லி, வேறு பாதுகாப்பான அதே நோட்டுக்களை வழங்கும் அப்பொழுது கருப்புபணமும் வெளிவரும், கள்ளநோட்டும் செல்லாததாகும், […]

சின்னம்மா.. சின்னம்மா….

சின்னம்மாவினை விமர்சிக்காதே விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என சிலர் மிரட்ட தொடங்கிவிட்டார்கள் பொதுவாழ்க்கைக்கு வந்த யாரும் விமர்சனங்களுக்கு தப்ப முடியாது, அதுவும் கட்சிக்கு ஒரு பணியும் செய்யாமல் சொய்ங்ங்ங்கென்று வந்து அமர்ந்தால் எல்லோரும் விமர்சிப்பார்கள் நாமாவது நாகரீகமாக சொல்கின்றோம், இன்னும் பலர் சொல்வதை சசிகலா காண நேர்ந்தால் மன்னார்குடிக்கே ஓடிவிடுவார் இப்பொழுது என்ன விமர்சித்துவிட்டார்கள்? அந்த சசிகலா , ஆளும் கட்சியின் பொதுசெயலாளராகிவிட்ட சசிகலா வாய்திறந்து ஒரு வார்த்தை பேசினால்தான் என்ன? ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தினால்தான் […]

ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்

ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம் இது என்ன பைத்தியக்காரதனம்? ஊழல் செய்தவர்கள் ஹெலிகாப்டரில் போகாமல் ஆட்டோவிலோ போவார்கள்? அவர்கள் அப்படித்தான் பறப்பார்கள், கீழே ஹெலிகாப்டருக்கும் சேர்த்து வணக்கம் செலுத்தவேண்டும், அதுதான் ஜனநாயகம் எங்கள் தமிழகத்தில் அப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம் பிலிப்பைன்ஸில் முன்பு எமல்டா மார்கோஸ் எனும் பெண் அதிபர் இருந்தார், பெரும் ஊழல்புகார் அவர் மீது எழும்ப அவர் ஓட விரட்டபட்டார். அதன் பின் அவர் தோழி, வேலைக்காரி, தோட்டக்காரி […]

இஸ்ரேலிய தலைவிதி அப்படி, தமிழக தலைவிதி இப்படி …

பிரதமர் மீதான இரு ஊழல் வழக்குகளை விசாரிக்க இஸ்ரேல் அட்டார்னி ஜெனரல் உத்தரவு, பதவி இழக்கின்றார் பிரதமர் நேதன்யாகு யாராக இருந்தாலும் வழக்கு என வந்துவிட்டால் கடாசி விடுகின்றார்கள் இஸ்ரேலில், முன்பு முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட்டும் சிறைக்கு அனுப்பபட்டார். இஸ்ரேலிய தலைவிதி அப்படி. இங்கு தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் பதவி ஏற்க அழைக்கின்றார்கள் தமிழக தலைவிதி இப்படி ஊழலை ஒரு பொருட்டாகவே தமிழகம் நினைக்கவில்லை, மனதளவில் இன்னும் மன்னராட்சியாகவே அது ஜனநாயகத்தை அணுகுகின்றது, இது […]

சசிகலா இன்னும் வாய்திறந்து பேசவில்லை, பேச போவதுமில்லை

  ஸ்டீபன் ஹாக்கிங் என்றொரு விஞ்ஞானி இருக்கின்றார், இன்றைய தேதியில் அவர்தான் மிக சிறந்த விஞ்ஞானி , ஐன்ஸ்டீனுக்கு பின் அவரிடம் விஞ்ஞானம் கொட்டி கிடக்கின்றது, விண்வெளி குறித்து அவர் காட்டும் வழிதான் இன்றைய விஞ்ஞானிகளுக்கு பாதை. மிக ஆச்சரியமான விஞ்ஞானி அவர், அவர் சொல்லும் கருத்துக்களும் கணிப்புகளும் பெரும் பரபரப்பானவை ஆனால் பாவம் அவரால் பேசவோ எழுந்து நடமாடவோ முடியாதபடி ஒரு வகையான பக்கவாதம், அதனால் அவர் விழிதிரையில் இயங்கும் ஸ்பெஷல் கம்பியூட்டர் ஒன்றை பயன்படுத்துகின்றார், […]

மிஸ்டர் சைமன், வாட் ஆர் யு டூயிங்?

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் பொதுக்கூட்டம் : சீமான் வீரவணக்கம் மிஸ்டர் சைமன், வாட் ஆர் யு டூயிங்? இந்த வீரபெரும்பாட்டி என்ன செய்தார்?, முன்பொரு காலத்தில் வடுக நாட்டின் அரசன் திப்புசுல்தானோடு சேர்ந்து வெள்ளையனை எதிர்த்தார், தமிழகத்தில் அவர் போராடியபொழுது அவரோடு சில நாயக்க பாளையக்காரரும் இருந்தார்கள் இப்படி வடுகர்களுடம், வந்தேறிகளுடனும் இணைந்து வெள்ளையனுடன் போராடிய வேலுநாச்சியாருக்கு எப்படி வீரவணக்கம் செலுத்தலாம்?? அப்படி அஞ்சலி செலுத்த சென்றால் வடுக மக்களுடன் அல்லவா செல்லவேண்டும்? இன்னொன்று தெரியுமா? இந்த வேலுநாச்சியார் […]

ஜெவிற்க்கு நோபல், மகசேச, பாரத் ரத்னா விருதுகள் : அதிமுக பொதுக்குழு

பொதுகுழு தீர்மானத்தை ஏற்றார் சசிகலா, பொதுசெயலாளர் ஆக சம்மதம். அட அட அடடா…. இவர்கள் வாசிப்பிற்கும், அவர்கள் அசைவிற்கும் அந்த காட்சிதான் நினைவுக்கு வருகின்றது “என்ன அமெரிக்காவுல‌ டிரம்ப் கூப்பிட்டாக, ரஷ்யாவுல புட்டீன் கூப்பிட்டாக, பாகிஸ்தான்ல பெனசிர் பார்ட்டில கூப்பிட்டாக‌ இலங்கையில ராஜபக்சே கூட கூப்பிட்டாக.. சீன கம்யூனிஸ்ட் கட்சில கூட தா.பாண்டியன் மூலமா கூப்பிட்டாக.. அத எல்லாம் விட்டு என் கிரகம், இங்க வந்து மாட்டிகிட்டேன்…”  சரி இப்பக்கம் ராணி நிறுத்தபடுகின்றார், அப்பக்கம் எந்த சிப்பாய் […]