பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர்

நடிகைகளை பற்றி இந்த இயக்குநர் சுராஜ் என்பவர் ஏதோ சொல்லிவிட்டாராம் உடனே நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர் இதுவரை இந்த நயனையும், தமணையும் பற்றி எழுதா பத்திரிகைகள் இல்லை, எவ்வளவோ எழுதினார்கள், இன்றும் எழுதுகின்றார்கள் அதெற்கெல்லாம் ஒரு சத்தமும் இல்லை இன்று இவர்கள் கிளம்பியிருப்பது ஒரு வகையான திசை திருப்பல் போலவே தோன்றுகின்றது, அதுவும் தன்னைபற்றி எழுதி கிழித்தவர்கள் மீது அமைதி காத்தவர்கள், இன்று பொங்குவதுதான் காமெடி. பத்திரிகைகள் எழுதினால் கிசுகிசுவாம் கண்டுகொள்ளமாட்டார்களாம், ஆனால் இயக்குநர் […]

தை வருது … ஜல்லிக்கட்டு எங்கே?

ஜல்லிகட்டில் மாடு கொடுமைபடுத்தபடுகின்றது என்கின்றீர்கள், கட்டை வண்டியிலும் , உழவிலும் மாடு என்ன இன்புறுகின்றதா? முத டிராக்டர் கொடுங்கள்..முதலில் எல்லா விவசாயிக்கும் டிராக்டர் கொடுங்கள்உழவு காளை மாட்டுக்கெல்லாம் ஓய்வு கொடுங்கள்.. வண்டி இழுக்க லாடம் எனும் பெயரில் மாட்டின் காலில் எப்படி எல்லாம் ஆணி அடிக்கின்றார்கள்?, அது கொடுமை அல்லவா? அதற்கு முதலில் எல்லா விவசாயிக்கும் ஒரு டெம்மோ கொடுத்துவிட்டு அந்த காளைகளை மீட்டுகொண்டு காலின் லாடத்தை பிடுங்குங்கள் கதற கதற மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போடுவதும், காலில் […]

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை..

  சென்னை கோட்டையினை வெள்ளையர் கட்டி வியாபாரம் செய்து, பின் ஆட்சிக்கு வந்தபின் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததானது, அன்று தென்னிந்தியாவின் தலமை செயலகம் அதுதான் அப்பொழுது 1700களில் தலமை செயலாளராக‌ வந்தவர் யேல், வந்து என்ன செய்தார்? வழிகாட்டினார், யாருக்கு? முன்னாள் தலமை செயலாளர் ராமமோகன் ராவிற்கு ஆம், சென்னை கோட்டையில் முதன் முதலில் ஊழலில் ஈடுபட்டவர் என வரலாறு அவரைத்தான் சொல்கின்றது, மிக கடுமையான ஊழல். ஆனால் ராம்மோகன் ராவ் போல சிக்கவில்லை அமெரிக்கா தப்பினார், […]

தமிழக புதிய ஆளுனர் …

தமிழகத்தின் ஆளுநராக கர்நாடகத்தை சேர்ந்தவரை நியமிக்க எதிர்ப்பு, பல கட்சிகள் கண்டனம் இதற்குத்தான் இந்த மத்திய அரசுக்கு விவரம் போதவில்லை என்பது, ஒரு கன்னட பெண் முதல்வராகும் பொழுது, ஒரு கன்னடர் சூப்பர் ஸ்டார் ஆகும் பொழுது, ஒரு கன்னடர் ஆளுநராக முடியாதா? முடியும் எப்படி? கன்னட அரசியல்வாதி இங்கு வரத்தான் பிரச்சினையே தவிர, கன்னட திரையுலகவாசி அல்ல‌ அப்படி சரோஜா தேவியினை தமிழக ஆளுநராக ஆக்கினால் ஒரு சர்ச்சை இருக்காது, எம்ஜிஆரின் ஆஸ்தான நாயகிகளில் ஒன்று […]

கிறிஸ்துமஸ் நாளில் தலைவர்கள்…

கிறிஸ்துமஸ் விழாவில் முக.ஸ்டாலின் பங்கேற்பு பக்ரீத், ரமான் சாய்பாபா, கிறிஸ்மஸ் வாழ்த்து என பகுத்தறிவிலிருந்து விலகிகொண்டே சென்ற திமுக விரைவில் கடவுள் ஏற்பு கொள்கைக்கு சாயலாம் இந்து மத பண்டிகைகளில் மட்டும் திமுகவினர் வாய்திறக்க மாட்டார்கள், என்ன சொல்லி சமாளிக்கலாம்? திராவிடநாடு கோரிக்கையினை காலம்பார்த்து கழற்றிவிட்டதை போல இந்த பகுத்தறிவு இம்சைகளையும் கழற்றிவிடலாம் எப்படி? அண்ணா காட்டிய வழியில் “திராவிட நாட்டு கொள்கையினை கைவிடுகின்றோமே தவிர, அதற்கான காரணம் அப்படியே இருக்கின்றது” என்றார் அண்ணா, அப்படியே “இந்துமத […]

மலேசியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

பாட்டி தாத்தாவோடு தன் வாழ்வின் முதல் கிறிஸ்துமஸை மகள் கொண்டாட துவங்குகின்றாள், அவளை பொறுத்தவரை மிக மகிழ்வான தருணம் வழக்கமான சனி, ஞாயிறு கிழமைகளில் மீன் பின்னாலும், கோழி பின்னாலும் ஓடிகொண்டிருக்கும் என்னை இந்த இரவில் பிடித்து சர்ச்சுக்கு இழுத்து சென்றார்கள் மலேசியாவில் கத்தோலிக்கர் அதிகம், கத்தோலிக்க ஆலயங்களும் அதிகம், ஆனால் பெரும் கூட்டம் இது சீனர்கள் அதிகமான பகுதி, சீனத்திலும் ஆங்கிலத்திலும் திருப்பலி உண்டு, நமக்கு இரண்டுமே புரியாது எனினும் ஆங்கிலம் கொஞ்சம் புரியும் என்பதால் […]

ஒரு மாமனித ஆச்சர்யம் இயேசு கிறிஸ்து

கடவுளின் அவதாரமாக கிறிஸ்தவர்களும், ஒரு இறைவாக்கினராக இஸ்லாமியரும், நாங்கள் எதிர்பார்த்திருக்கும் மெசியா அல்ல இது ஒரு இனதுரோகி என யூதரும், மற்ற மதத்தினர் எல்லாம் மாபெரும் தத்துவஞானியாகவும் பார்க்கபடும் ஒரு மாமனித ஆச்சர்யம் இயேசு கிறிஸ்து. புத்தமதத்தினர் கூட தங்கள் மதத்தின் உண்மையான தத்துவங்களை போதித்தவர் அவர் என அவரை உயர்த்தி பிடிப்பார்கள். அவரின் பிறந்தநாள் டிசம்பர் 25 என கொண்டாடபடுகின்றது, அவர் அந்த தேதியில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை (ஓலைசுவடி, பைப்ரஸ்புல்,கல்வெட்டு அல்லது மிருகத்தோல் […]

பெரியார் , எம்ஜியார் , வாஸ்கோடகாமா: மறைந்த நாள்

இன்று பெரியார் மறைந்த நாள், 96 வயதுவரை தன் மூத்திர சட்டியினை தூக்கிகொண்டு இந்த‌ சமூகத்தினை திருந்த அரும்பாடுபட்டு மறைந்த நாள். ஒரு காலத்தில் பெரியார் சீடன் என சொல்லிகொண்டு, திரையிலே புரட்சி செய்து பின் அதனை அரசியலிலும் செய்து, இன்று பன்னீர்செல்வம் கைகூப்பி வணங்கும் ம.கோ ராமச்சந்திரனும் மறைந்த நாள் ராமச்சந்திரனை விட்டுவிடலாம், தமிழகத்திற்கு தீரா தலைவலியினை உருவாக்கியதை தவிர அவர் ஒரு புரட்சியும் செய்யவில்லை ஆனால் இன்றைய நாளில் ஒருவன் வரலாற்று புரட்சியாளன் மறைந்தான், […]

2016 ஆண்டில் சிறந்தவர் யாரோ?

இதோ இந்த வருடம் முடியபோகின்றது, இந்த வருடத்தின் பெஸ்ட் எது என ஆளாளுக்கு லிஸ்ட் போட்டுகொண்டிருக்கின்றார்கள் சிறந்த திரைப்படம் எது? நடிகர் யார்? நடிகை யார்? அறிமுகம் யார்? டைரக்டர் யார்? காமெடி எது? இசை எது? பல வகை பட்டமளிப்புகள் அல்லது சிறந்த கிரிக்கெட்டர் யார் என அடுத்த இம்சை.. பத்திரிகையும் அதனைத்தான் செய்கின்றன, டிவிக்கள் செய்கின்றன, எதனை திறந்தாலும் இந்த் வருடத்தின் சிறந்த வகையில் திரையில் கிழித்தது எது? என்றே பெட் கட்டிகொண்டிருக்கின்றார்கள் ஒருவராவது, […]

கன்னடர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்கவில்லை

கர்நாடக தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கே வேலை புதிய சட்டத் திருத்தம் கொண்டுவருகிறது கர்நாடக அரசு அட பரிதாப கர்நாடகமே எத்தனை பன்னாட்டு கம்பெனிகள் அங்கு உண்டு, தொழில் தொடங்க யாரும் வரலாம் ஆனால் வேலையினை மட்டும் கன்னடன் செய்யவேண்டுமா? இது கன்னடம் அதனால் இந்த அமெரிக்க நிறுவண கிளையில் வாட்டாள் நாகராஜ் நான் தான் சி.இ.ஓ என அமர்ந்தால் என்னாகும்? நீங்களே வேலைதொடங்கி நீங்களே வேலைகொடுங்கள் என எல்லோரும் கிளம்பிவிட மாட்டார்களா?, டிரம்ப் வேறு […]