பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்னதான் நடக்குது…

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு # அமெரிக்க டாலருக்கு இந்திய சில்லறை கிடைக்கவில்லை என்பதனை சொல்ல வந்திருப்பாரோ? # டிரம்ப் தேர்வானவுடன் அடித்து ஓடி இந்தியாவிற்கு வந்திருக்கின்றார் பில்கேட்ஸ் என்றால், ஏதோ புகைகின்றது தோல்வியால் துவண்டுவிட்டேன்: ஹிலாரி உருக்கமான பேச்சு. தோல்வியில் துவண்டு விட்டீரா அம்மா? இதற்குதான் தமிழகம் வரும்பொழுது கோபாலபுரம் வந்துவிட்டு செல்லவேண்டும் என்பது, அவரை கண்டு அரைமணிநேரம் பேசியிருந்தால் ஆயிரம் தோல்விகளை தாங்கும் பலம் வரும் சந்தேகமிருந்தால் சென்னை அமெரிக்க தூதரகத்தில் விசாரித்து […]

நிதியமைச்சரை பார்த்து ஆறுதல் அடையுங்கள்…

இரு நாட்களுக்கு முன்பு மோடி அழுதார், இப்பொழுது கரன்சி பிரச்சினை தொடர்பாக என்னை முறைப்படி கலந்தாலோசிக்கவில்லை என நிதியமைச்சரே கண்ணை கசக்குகின்றார் பாருங்கள் நாட்டின் நிதியமச்சருக்கே தெரியாமல் ரகசியம் காக்கபட்டிருக்கின்றது, 6 மாதமாக திட்டம் தீட்டினேன் என சொல்லும் பிரதமர் நிதியமைச்சரிடமே சொல்லவில்லையாம் நிதியமைச்சரே கலங்கும் நேரத்தில், சாதாரண குடிமகன் ஏடிஎம் மெஷின் முன்னால் கலங்காமல் என்ன செய்வான் ஆக எடிஎம் மிஷினிலோ வங்கியிலோ அழுபவர்கள், நிதியமைச்சரை பார்த்து ஆறுதல் அடையுங்கள் இப்படி நாட்டு நலனுக்காக (யாரும் […]

மோடிக்கும் ஜேட்லிக்கும் பணக்கசப்பு இல்லை மனக்கசப்பு

நாடே குழப்பத்தில் இருக்கிறதென்றால், அரசின் குழப்பம் அதனைவிட அதிகம் இருப்பது போல செய்திகள் வருகின்றன‌ அதாகபட்டது கரன்சி பிரச்சினையில் மோடிக்கும் ஜேட்லிக்கும் பணக்கசப்பு இல்லை மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டதாம், ஆரம்பத்திலே இது புகைந்தது, அதாகபட்டது அறிவிப்பு முறைப்படி நிதியமைச்சர் ஜெட்லியால்தான் முன்மொழியபட்டு பிரதமரால் நிறைவேற்றபட்டிருக்கவேண்டும் ஆனால் பிரதமர் இன்னும் அவரின் திடீர் ஆலோசகர்கள் என பலர் தாமாக வந்து அறிவிப்பு செய்யும் சமயம் அருண் ஜெட்லியினை காணவில்லை, அப்பொழுதே பல கண்கள் அவரை தேடின, ஆனால் காணவில்லை இப்பொழுது […]

பழைய கலைஞராக இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா?

 9 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்காதது வேதனைக்குரியது இவர்கள் ஆட்சியில் பால் விவசாயி கால்வாயில் ஓடியது, தேன் கிணற்றில் ஊறியது, தங்கள் விவசாயி நிலத்தில் விளைந்தது அரசியல் செய்பவர் இப்படியா செய்வார்? இதெல்லாம் இனி எடுபடுமா? இதே பழைய கலைஞராக இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா? 1000, 500 நோட்டுக்களை எங்காவது வங்கி முன் எரித்து, பெரும் போராட்டங்களை முன்னெடுத்து, எதற்கும் அஞ்சாமல் கல்லக்குடி போல களபேரம் செய்திருப்பார் காரணம் அந்த போராட்ட குணத்தினை […]

ஜெமினி கணேசன் : மிக விசித்திரமானவர்

https://youtu.be/moToRGHE204 தோற்றம் : 17-11-1920    ::     மறைவு : 22-03-2005 தியாகராஜ பாகவதர் முதல் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், மிக சிலர் உச்சம் தொட்டார்கள், மிக எச்சரிக்கையாக வாழ்ந்த சிலர் அடையாளமிட்டார்கள் வகையில்லாமல் வாழ்ந்த பலர் அழிந்தே போனார்கள் இவர்களில் மிக விசித்திரமானவர் ஒருவர் உண்டென்றால் நிச்சயம் ஜெமினி கணெசன் கிட்டதட்ட மகாராஜாக்கள் பாணி வாழ்க்கை அவருடையது, எந்த கட்டுப்பாடுகளும் அவருக்கு இருந்ததாக தெரியவில்லை. ஏகபட்ட திருமணம் பல காதல்கள் என ஏராளமான […]

பண மாற்றம் அமைதியாகத்தானே நடக்கிறது….

இந்தியாவில் எத்தனை கலவரம் வெடித்தது, எத்தனையாயிரம் பலிகள் நடந்திருக்கின்றன‌ எல்லை பிரிவினை, காஷ்மீர், பொற்கோயில் கலவரம், சஞ்சய்காந்தி அழிச்சாட்டியம், இந்திரா கொலைக்கு பின் டெல்லி கலவரம், போபால் விபத்து, ராஜிவோடு 17 பேர் பலி, பத்ம்நாபா படுகொலை பாபர் மசூதி இடிப்பும் கலவரம், மும்பை கலவரம், மும்பை குண்டுவெடிப்பு என பெரும் வரிசை. இந்தி எதிர்ப்பு என தூண்டிவிடபட்டு செத்தது 67 பேர். மிசா காலத்தில் நடந்த மரணங்கள் என்ன? ஈழத்தில் மட்டும் உயிர்விட்ட இந்திய ராணுவத்தார் […]

நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இந்தியா வருகிறார்…

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இந்தியா வருகிறார். சரி ஏன் அவசரமாக வருகின்றார்?, இனி பாகிஸ்தான் கள்ளநோட்டு அடிப்பது சிரமம், அப்படி அடித்தாலும் இந்தியா எப்பொழுது இப்படி அறிவித்து நிலமையினை சிக்கலாக்கும் என தெரியாது, ஒருவேளை அந்த நிலையினை ஆராய வருவாரோ?? பாகிஸ்தானியர் குதர்க்கமானவர்கள், பாகிஸ்தானிய பினாமிகள் பெயரில் இந்தியாவில் வங்கியே தொடங்கினால் என்ன? என சிந்தித்தாலும் சிந்திக்கலாம். பாகிஸ்தான் பினாமிக்கு ஆட்களா இல்லை , தேசம் பற்றி சொன்னால் […]

பிரபாகரனால் ஒரு காலமும் ஈழம் அமைந்திருக்காது…

தமிழீழம் அமைவதை பிரபாகரன் போன்றதொரு பைத்தியக்காரன் வந்து அழித்துவிட்டான் : தலமை பித்த பிக்கு ஞானசார தேரர். அதாவது பிரபாகரனால் ஒரு காலமும் ஈழம் அமைந்திருக்காது, ஈழம் அமைவது அவனால்தான் தடுக்கபட்டது. இனி ஈழம் அமைய யாராவது தலையெடுத்தால் அது நடந்துவிடும், ஆகவே சிங்களர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும் என்று பேசியிருக்கின்றார் இது உண்மையும் கூட, பிரபாகரனோடு சண்டையிட்ட காலங்களில் ஒருவகை தந்திரமாக இப்படித்தான் நாட்களை சிங்களன் கடத்தினான், உலக நிலை மாறுமட்டும் இப்படித்தான் யோசித்தான் சிங்களன் […]

பின்பற்றத்தக்க கலைஞர் வழி….

கலைஞர் எவ்வளவோ சொல்லியிருக்கின்றார், சில விஷயங்கள் பின்பற்றதக்கது, அவர் குறிப்பிட்டு சொல்லும் வாழ்க்கை முறை ஒன்று உண்டு “உலகம் கண் விழிக்கும் முன் நம் வேலைகளில் பாதி முடிந்திருக்கவேண்டும்” அதிகாலை எழுந்து, தயாராகி அன்றைய தினத்தை மற்றவர்களை விட‌ முன்னமே சந்திக்கதயாராக வேண்டும் என்பார், சொல்லியது மட்டுமல்ல வாழ்ந்தே காட்டுகின்றார், 92 வயதிலும் அப்படியே. அவரின் வெற்றிக்கும், பெரும் வரலாற்றிற்கும் அதுவும் ஒரு காரணம். அன்று அதிகாலையிலே மக்களை புரட்டிபோட்டன என்றால் இப்படித்தான், இவ்வளவிற்கும் இன்றிருக்கும் வசதிகள் […]

நயந்தாரா எனக்கு விரோதியல்ல: சிம்பு

நயந்தாரா எனக்கு விரோதியல்ல, அவர் திருமணத்திற்கு என்னை அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் : சிம்பு அதானே, அவருக்குத்தானே இவர் விரோதி, இவருக்கு அவர் எப்படி விரோதி? இவர் என்னமோ கர்மவீரர் காமராஜர் போலவும், அவர் என்னவோ காமராசரை தோற்கடித்த சீனிவாசனைபோலவும், பின் சீனிவாசன் திருமணத்தில் காமராஜர் முதல் ஆளாக வந்து வாழ்த்தியதை போல இவர் நயனை வாழ்த்தபோவது போலவும் பேசிகொண்டிருக்கின்றார் நண்பர் Babu Rao இயங்கும் நயன் “மெய்காவல்” படையினை மீறி சிம்பு எப்படி நயனின் திருமணத்திற்கு […]